Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைவ உணவு சாப்பிட ஒதுக்கப்பட்ட இடத்தில் அசைவ உணவு; மும்பை ஐ.ஐ.டி மாணவருக்கு ரூ.10,000 அபராதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை ஐ.ஐ.டி கேன்டீனில் சைவ உணவு சாப்பிட ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்ட மாணவருக்கு, ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

 

மும்பை ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள கேன்டீனில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி சைவ உணவு சாப்பிடுபவர்கள் அமரும் இடத்தில், அசைவ உணவு சாப்பிடும் மாணவர்கள் அமர்ந்து சாப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த இடத்தில் `இது சைவ உணவு சாப்பிடுபவர்கள் இடம்' என்று பேப்பரில் எழுதி ஒட்டி வைத்தனர். இதனால் ஐ.ஐ.டி கேன்டீனில் உணவு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து கேன்டீன் நிர்வாகம் `பாரபட்சம் எதுவும் காட்டப்படவில்லை. சைவ உணவு, அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனித்தனியாக இடம் ஒதுக்கப்படவில்லை' என்று தெரிவித்தது. அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து கேன்டீன் கவுன்சில் கூடி விவாதித்தது.

இதில், கேன்டீன் 12,13,14 ஆகியவற்றைச் சேர்ந்த மூன்று மாணவர்கள், கேன்டீன் விதிகளை மீறி சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டதாகக் கூறி, அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவுசெய்யப்பட்டது.

 
 
 
மும்பை ஐஐடி
 
மும்பை ஐஐடி

முதற்கட்டமாகக் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில், 12-வது கேன்டீனைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மற்ற இரண்டு மாணவர்கள் யார் என்று அடையாளம் காண்பதற்கு, மாணவர் பிரதிநிதிகளின் உதவி கோரப்பட்டிருப்பதாக கேன்டீன் கவுன்சில் குறிப்பிட்டிருக்கிறது.

`செப்டம்பர் 28-ம் தேதி சம்பந்தப்பட்ட மாணவர்கள் திட்டமிட்டு விடுதியின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்தில், சைவ உணவு சாப்பிடுபவர்கள் அமரும் இடத்தில் சென்று அமர்ந்திருக்கின்றனர்' என்று கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 
சைவ உணவு சாப்பிட ஒதுக்கப்பட்ட இடத்தில் அசைவ உணவு; மும்பை ஐ.ஐ.டி மாணவருக்கு ரூ.10,000 அபராதம்!
 

மேலும் கேன்டீனில் அமைதியைப் பேண மாணவர்கள் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதோடு கேன்டீனில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்காக 6 டேபிள்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கடந்த வாரம் மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இது மாணவர்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இதற்கிடையே மாணவருக்கு அபராதம் விதிப்பது என்ற கேன்டீன் கவுன்சில் தீர்மானத்துக்கு அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்க்கிள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும், இதை எதிர்த்துப் போராடப்போவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

சைவ உணவு சாப்பிட ஒதுக்கப்பட்ட இடத்தில் அசைவ உணவு; மும்பை ஐ.ஐ.டி மாணவருக்கு ரூ.10,000 அபராதம்! | IIT-Bombay protester fined Rs 10,000 for eating non-vegetarian food at ‘veg-only’ table - Vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.