Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான பரீட்சார்த்த கப்பல் போக்குவரத்து நாளை ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கப்பல் ஒன்று நேற்று இரவு புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த கப்பல் இன்று நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கப்பல், நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடைந்ததும் நாளை காங்கேசன்துறை துறைமுகத்துக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து, சோதனை முறையில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து நிர்மாணப்பணிகளும் நிறைவுப்பெற்று ஜனவரி மாதம் முதல் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் சேவையை புதுப்பிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/275683

  • கருத்துக்கள உறவுகள்

நாகப்பட்டினம் – இலங்கை… பயணிகள் கப்பல்: இன்று சோதனை ஓட்டம்!

monishaOct 06, 2023 07:28AM

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு செல்வதற்கான பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. இதற்காக கடந்த மாதம் அமைச்சர் எ.வ.வேலு, நாகை துறைமுகத்தை ஆழப்படுத்தி தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் துறைமுகத்தை நவீனப்படுத்த ஒன்றிய அரசு வழங்கிய ரூ.3 கோடி நிதி கொண்டு நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் குடியுரிமை பெறுவது, மருத்துவப் பரிசோதனை செய்வது, பயணிகள் கொண்டு வரும் உடமைகளைப் பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வது என அனைத்திற்கும் தனித்தனியாக அறைகள் கட்டப்பட்டன.

இதற்கிடையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் பணியாற்றுவதற்காக பாஸ்போர்ட் சோதனை செய்வது, பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்வது எனப் பல்வேறு பணிகளில் பணியாற்றும் அதிகாரிகள் டெல்லி சென்று பயிற்சி பெற்றனர். பயணிகள் கப்பல் போக்குவரத்துத் தொடங்கியதும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இரண்டு கப்பல்கள் இலங்கைக்குச் சென்று வரும். இதில் ஒரு கப்பல், நாகப்பட்டினத்தில் இருந்து காலை 10 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகம் நோக்கி செல்லும். எதிர்திசையில் இலங்கையில் இருந்து மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகம் நோக்கி கப்பல் புறப்படும்.

இந்த நிலையில், “கேரளா மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம்துறைமுகத்துக்கு ஒரு கப்பல் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு இந்தக் கப்பல் வந்தடைந்ததும் சோதனை அடிப்படையில் இன்று (அக்டோபர் 6) நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சோதனை முறையில் நடைபெறுகிறது. அனைத்துக் கட்டுமான பணிகளும் நிறைவு பெற்று, ஜனவரி மாதம் முதல் முழுமையாகப் பயணிகள் கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்படும்” என்று கப்பல் போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ராஜ்

 

https://minnambalam.com/tamil-nadu/nagapattinam-to-sri-lanka-passenger-ship-test-run-today/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் போக்குவரத்து எப்போது ஆரம்பமாகும்?!

தமிழகத்தின் நாகப்பட்டிணத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை, எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கப்பலுக்கு ‘செரியாபாணி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல் சேவை நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

செரியாபாணி என்று பெயரிடப்பட்டுள்ள குளிரூட்டல் வசதியுடன் கூடிய இந்த பயணிகள் கப்பல் இன்றும் நாளையும் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை வருவதற்கு 6 ஆயிரம் லீற்றர் எரிபொருள் தேவைப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாகப்பட்டினத்திலிருந்து – இலங்கைக்கு பயணிக்க 6 ஆயிரத்து 500 இந்திய ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் தங்களுடன் 40 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவையின் மூலம் நாகப்பட்டினத்தில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கையை வந்தடைய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/276087

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இந்தியக் கப்பல்!

08 OCT, 2023 | 07:16 PM
image

இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 10 ம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு இடையை சேவையில் ஈடுபடவுள்ள குறித்த கப்பலின் சோதனை ஓட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (08.10.2023) இடம்பெற்ற நிலையில், இன்று மதியம் 1.45 மணியளவில் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையை வந்தடைந்தது. 

இவ்வாறு வந்தடைந்த கப்பல் 10ஆம் திகதி பயணிகளை ஏற்றியவாறு இந்தியா - நாகபட்டினம் நோக்கி பயணிக்கவுள்ளது.

கப்பலில் 150 பயணிகள் பயணம் செய்யமுடியும் என்பதுடன் இரு வழி பயணக் கட்டணமாக 53,500 ரூபாயும் ஒரு வழி பயணக் கட்டணமாக 27,000 ரூபாயும் அறவிடப்படவுள்ளது.

board-2.png

https://www.virakesari.lk/article/166404

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இந்தியாவுக்கு இடையில் கப்பல் ஓடுவது நல்ல விடயம். இலங்கையர்கள் இந்தியாவுக்கு கப்பலில் செல்ல வீசா இலகுவில் எடுக்க முடியுமா? காங்கேசன்துறையில் கப்பல் ஏறுவதற்கு வீசா கொழும்பில் எடுக்க வேண்டுமா? யாழ்ப்பாணத்தில் இந்தியாவுக்கான வீசா எடுக்கலாமா? கப்பல் பயணம் மூன்று மணித்தியாலங்கள். வீசாவுக்கான பயணம் எவ்வளவு காலம்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கை இந்தியாவுக்கு இடையில் கப்பல் ஓடுவது நல்ல விடயம். இலங்கையர்கள் இந்தியாவுக்கு கப்பலில் செல்ல வீசா இலகுவில் எடுக்க முடியுமா? காங்கேசன்துறையில் கப்பல் ஏறுவதற்கு வீசா கொழும்பில் எடுக்க வேண்டுமா? யாழ்ப்பாணத்தில் இந்தியாவுக்கான வீசா எடுக்கலாமா? கப்பல் பயணம் மூன்று மணித்தியாலங்கள். வீசாவுக்கான பயணம் எவ்வளவு காலம்?

யாழில் உள்ள இந்திய துணை தூதரகம் ஊடக வீசா எடுக்கலாம்.

சிறீலங்கா கடவுச்சீட்டிற்கு ஒரு வருட eVisa இணையவழி மூலம் விண்ணப்பம் செய்யலாம். கட்டணம் $25.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக்கிற்கும் தமிழகத்திற்கும் இடையிலான கப்பல் சேவை தாமதம் !

Published By: DIGITAL DESK 3

10 OCT, 2023 | 09:59 AM
image
 

தமிழகத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது. 

தமிழகம் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கும்  யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான கப்பல் சேவை இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (10) முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதற்கான முதல் முயற்சியாக ஞாயிற்றுக்கிழமை (8) பரீட்சார்த்த பயணத்தை கப்பல் மேற்கொண்டு , காங்கேசன்துறைக்கு வந்து நாகப்பட்டினம் திரும்பியிருந்தது. 

இந்நிலையில் குறித்த கப்பல் சேவை செவ்வாய்க்கிழமை இடம்பெறமாட்டாது எனவும் , எதிர்வரும் 12ஆம் திகதியே இடம்பெறும் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, குறித்த பயணிகள் கப்பல் சேவையில் செரியாபாணி என்ற கப்பல், ஈடுபடவுள்ளதோடு இது ஏற்கனவே கடந்த இருநாட்களாக பரீட்சார்த்த பயணங்களை மேற்கொண்டிருந்தது. 

குறித்த கப்பலானது, 25 கோடி இந்திய ரூபா செலவில் கொச்சினில் தயாரிக்கப்பட்டதோடு மணித்தியாலத்திற்கு 36 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடியதாகும்.

14 ஊழியர்கள் மற்றும் 150 பயணிகளுடன் பயணிக்கும் வசதிகளை கொண்ட குறித்த கப்பலில், பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நாகைப்பட்டினத்துக்கும், காங்கேசன் துறைக்கும் இடையிலான 64கடல் மைல்களைப் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழி கட்டணமாக 26,750 ரூபாவும் இருவழி கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/166516

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.