Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை - பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

08 OCT, 2023 | 01:46 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விடயம் தொடர்பில் இருதரப்பு மீனவர்களும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு சனிக்கிழமை (7) வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இந்த விடயம் தொடர்பில் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது

கேள்வி- எமது இரு நாட்டு கடற்பரப்பிலும் வாழக்கூடிய தமிழ் பேசும் மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் மீனவ பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாதா? இதற்கு நிரந்தர தீர்வு என்ன?

பதில்- நீங்கள் கூறியது போன்று இருதரப்பிலும் தமிழ் பேசும் மீனவர்களே உள்ளனர். பிரச்சினை என்னவென்றால் மீன்களுக்கு எல்லையொன்று இல்லை. மீன்கள் எல்லாப் பக்கங்களும் செல்லக்கூடியன. மீனவர்கள் மீன்களை பின்தொடர்ந்து சென்று பிடிக்கிறார்கள். பாக்குநீரினை ஒரு சிறிய பகுதியாகும். இதுப்பற்றி விரிந்த பேச்சு வார்த்தைகள் நடத்துகின்றோம். தற்போது உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன. கைதான இந்திய மீனவர்கள் சிலர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை பிடிக்கப்படும் படகுகளும் விடுவிக்கப்படுகின்றன. வட பகுதியில் சிறந்த மீன்பிடி வளம் உள்ள பகுதியாகும்.

கேள்வி- இந்திய மீனவர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கி மீன் பிடிக்கக் கூடிய இந்தியாவின் முன்மொழிவுகள் பற்றிய உங்களது கருத்து என்ன?

பதில் - ஆமாம். அதைப்பற்றி பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டெல்லிக்கு விஜயம் செய்திருந்த போதும் பேசப்பட்டது.

கேள்வி- இந்த திட்டத்தை பரீசிலிக்க தயாராக இருக்கிறீர்களா?

பதில்- ஆம். பரிசீலிக்க தயாராகவே இருக்கிறோம். இருப்பினும் இந்த இரண்டு தரப்பு மீனவர்களின் ஒத்துழைப்புகளும் அவசியமாக உள்ளது. ஏனென்றால் இது அரசு தரப்பு சார்ந்த விடயம் மட்டுமல்ல. பிரதானமாக மீனவர்கள் சம்பந்தப்பட்டது. இந்த விவகாரத்தில் இருதரப்பு புரிந்துணர்வு கட்டாயம் இருக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/166378

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி அனுமதி கொடுக்கலாம். அதாவது இலங்கையின் தெட்க்கு கடடபரப்பில் மீன் பிடிப்பதில் எந்த ஆட்ச்சேபனையுமே  இருக்காது. 
 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2023 at 05:15, Cruso said:

அப்படி அனுமதி கொடுக்கலாம். அதாவது இலங்கையின் தெட்க்கு கடடபரப்பில் மீன் பிடிப்பதில் எந்த ஆட்ச்சேபனையுமே  இருக்காது. 
 

இவர் எட்டாம் கிளாசைப் பாடசாலையில் தாண்டியிருப்பாரா? கடல்சார் அறிவு கொஞ்சமும் கிடையாதுபோல இருக்கு இந்தாளுக்கு போற போக்கில அடிச்சு விடுகிறார். தமிழர் விடையத்தில் இந்தியா மூக்கைநுளைக்காமல் இருக்க இவர்கள் எதையும் காவுகொடுப்பார்கள்போல இருக்கு. இந்திய மேற்கு மாடத்தின் அதிகாரிகள் அந்த விசையத்தில கொஞ்சம் என்ன நிறையவே வீக் எனக்கேள்விப்பட்டன் ஆகையால் இவர்கள் தங்கள் வீட்டுப் பெண்டுகளையும் .............. போல் உள்ளது ஆனால் கவனம் கதை முடிந்ததும் அவன் கையை உதறிவிட்டுப் போய்விடுவான் பிறகு விட்ட இடத்தில இருந்து தொடங்க வேண்டியதுதான். ஏற்கனவே எங்கட ஊர் லஸ்ஸியா அங்க நாறிப்போய்க் கிடக்கு அப்பனையும் விழுங்கிப்போட்டு எல்லாரையும் அனாதையாக்கிவிட்டு நிக்குது. ஜனனி எனும் பெண் வேண்டாம் சாமி என ஊருக்குத் திரும்பி வந்துவிட்டது. இனிமேல் யாராவது பெட்டியைக் கட்டிக்கொண்டு போனால் இதே கதிதான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடி தொழிலில் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்ற பிரதமரின் கருத்துக்கு சிறிதரன் பதில்

Published By: VISHNU

10 OCT, 2023 | 12:46 PM
image
 

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடி தொழிலில் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்ற பிரதமரின் கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்றையதினம் பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

யுத்தத்துக்கு முன்னும் பின்னரும்  இந்தியாவின் ரோலர் படகுகள் பவளப்பாறை உட்பட மீன் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வடபகுதியில் உள்ள மீனவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். 

கச்சதீவில் கூட சுதந்திரமாக சென்று மீன் பிடிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், நெடுந்தீவு கடப்பரப்பில் கூட மீன் உற்பத்தியில் பெரும்  வீழ்ச்சிகண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதன் காரணமாக மீனவ குடும்பங்கள் தமது இலக்கை அடைய முடியாத நிலையில் காணப்படுகின்றதாகவும் தெரிவித்தார்.

தொழில் புரியும் பகுதிகள் அட்டைப்பண்ணைக்கு வழங்கப்பட்டு மீன் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளதாகவும், இந்த நிலையில் தமிழக சகோதரர்களுக்கு அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறுவது தமிழக மீனவர்களையும் இலங்கையில் உள்ள வடபகுதி தமிழ் மீனவர்களையும் அடி பட வைத்து தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான ஒரு விரிசலை உருவாக்கும் நோக்கிலும், இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியா தமிழர்களுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவை அறுத்தறியும் நோக்கில் நரி தந்திரபாயங்களில் ரணில் மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவித்தார்.

யுத்த காலத்தில் கருணாவை பிரித்தது போல தற்பொழுது இருக்கின்ற தமிழ் கட்சிகளைப் பிரிக்கின்றது போன்று ஜனாதிபதி ரணில் செயற்பட்டு வருகின்றார். 

எங்களுக்கு ஆதரவு தரக்கூடியவர்கள் மற்றும் எங்களோடு சேர்ந்து வரக்கூடிய அனைவரையுமே பிரித்து அவர்களுக்கிடையே கசப்பான உணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கிலே செயல்பட்டு வருகின்றார் எனவும், இந்திய மீனவர்களுக்கு எடுத்துரைத்து எங்களுடைய கடற்பரப்பில் எங்களுடைய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு இடையூறளிக்க வேண்டாம் என அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/166536

  • கருத்துக்கள உறவுகள்

மீன்கொள்ளையர்களுக்கு லைசன்ஸ்கொடுத்துவிட்டால் எப்படி இருக்கும்! சூப்பர்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.