Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு அதிகாலையில் கருப்பண்ணசாமி கோவிலை ஒட்டிய, வறண்டு கிடந்த காட்டோடைக்குள், சிறிது தூரம் ஓட்டப் பயிற்சி செய்து கொண்டிருந்த போது, எதிரே காலைக் கடனுக்காகத் தள்ளாடி நடந்து வந்த பொங்கிமுத்து, "அட்ரா சக்கை. அட்ரா சக்கை. அறிவு வந்திருச்சா" என்ற போது சிரித்துக் கொண்டேன். 

பிறகு பொங்கிமுத்துவும் நானும் அவருக்குச் சில பொருட்கள் வாங்கவும் எனக்கு கடலை, எள், தேங்காய் எண்ணையை ஆட்டவும் ஒட்டன்சத்திரம் வரை போனோம். பொங்கிமுத்துவிற்கு எண்பது வயதிற்கு மேல் இருக்கலாம். அவரைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறேன் அல்லவா?

இப்போது நடை அவருக்கு முற்றிலுமே சுருங்கி விட்டது. பெயரன் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு மட்டும் வண்டியில் வைத்து அழைத்துப் போவதாகச் சொன்னார். வீடு அதைவிட்டால் நந்தினி டீக்கடையில் போய் நாள்மூச்சூடும் அமர்ந்து கொள்வதாகவும் சொன்னார்.

இன்றைய ஒட்டன்சத்திரம் பயணம் அவருக்குச் சிறிய விடுதலை உணர்வை அளித்திருப்பதை அறிந்தேன். ஒருவகையில் சில மணி நேரங்களாவது, முடக்கத்தில் இருந்து தப்பித்து வந்துவிட்ட உணர்வும் அது. கார் கண்ணாடி வழியாகச் சாலையைப் புதிதாய்ப் பார்ப்பவரைப் போல உற்று நோக்கிக் கொண்டு வந்தார். சில இடங்களை அடையாளம் காண முடியாதளவிற்கு அவருக்கு நிதானம் தப்பி இருந்ததையும் கூர்ந்து கவனித்தேன்.

அவர் எத்தனையோ தடவை, ஒரு காளை மாட்டைப் போல, நடந்தோடிய சாலைதான் என்ற போதிலும் இன்றைக்கு ஏனோ அது அவருக்குப் புதிதாகத் தெரிந்திருக்கும் போல. வாய் வலிக்கிற மாதிரி நிறையப் பேசிக் கொண்டே வந்தார். அந்தப் பேச்சில் முழுவதுமே உடல்தான் ஆக்கிரமித்து இருந்தது.

கடிக்க முடியாததை, நெருக்கி அணைக்க முடியாததை, மெல்ல முடியாததை, தூக்க முடியாத நிலை குறித்தெல்லாம் விடாமல் பேசிக் கொண்டு இருந்தார். தேங்காய்ப் பருப்பு மூட்டை பதினைந்து கிலோ எடையுடையது. 

அதை இறக்கி வைத்ததும் அனிச்சையாய்த் தூக்கிக் கொள்ளப் போனார். "நடக்கவே முடியலையாம். எடை சுமக்கிற ஆசையைப் பாரேன்" என்றேன், நான் தோளில் தூக்கிக் கொண்டு. மூக்கினருகே சொறிந்து விட்டுவிட்டு, "மனசு தூக்கிரலாம்ணு சொல்லுச்சு. அப்புறம்தான் அறிவுக்கு அது முடியாதுன்னு தட்டுப்பட்டுச்சு" என்றார் சிரித்தபடி.

பிறகு எதையோ யோசித்து விட்டு, "ஒண்ணு சொல்றேன். கடைசியா இந்த ஒடம்பு மட்டும்தான் நெஜம். அதும் இந்த காலுக்கு பலம் இருக்கற வரைதான் எல்லா ஆட்டமும். நான் ஆடாத ஆட்டமும் இல்லை. நடந்து சுத்தாத எல்லையும் இல்லை இந்த பூமியில. ஆனா இன்னைக்கு குழி கணக்கு வச்சுத்தான் நகரவே முடியுது. எல்லாமே சட்டுனு சுருங்கின மாதிரி தெரியுது. ஆனைத் தடம் வேற. எறும்புத் தடம் வேற இல்லையா?" என்றார்.

அவர் சொன்னதை முற்றிலுமே உணர்ந்து கொண்டேன் என்பதைப் போலத் தலையை ஆட்டினேன். பிறகு அவர் சொன்னதை எல்லாம் ஒரு விளையாட்டுக்காரனாய் அசை போட்டுக் கொண்டும் வந்தேன். பெரும்பாலும் ஓய்வுபெறுகிற நிலையில் இருக்கிற விளையாட்டு வீரர்களும் நாற்பது வயதிற்குப் பக்கத்திலேயே இந்த உணர்வை எட்டுவார்கள்.

அவர்களால் மைதானத்தில் நன்றாக விளையாடி விட முடியும் என மனம் சொல்லும். ஆனால் அறிவுதான் நிதர்சனத்தை அறியும். அதைக் கேட்டவர்கள் மட்டுமே பெருமையுடன் மைதானத்தில் இருந்து விடைபெற்றும் போய் இருக்கிறார்கள்.

பொதுவாகவே மனம் என்பது மயக்குகிற மாயக்காரன். அந்த மாயக்காரன் விளையாட்டு என்பதைத் தாண்டியும், உடல் விஷயத்தில் சொல்கிற எதையுமே கேட்கக் கூடாது. உடல் என்பது அறிவை மட்டுமே பற்றிக் கொள்ள வேண்டும். அறிவுதான் உடல் என்கிற நாய்க்குட்டியை மிகச் சரியாக வழிநடத்துகிற உரிமைப்பட்டவன். ஆனாலும் மனம், ஏதேதோ வித்தைகள் காட்டி உடலைத் தனக்குத் தோதாகப் பலசமயங்களில் வளைத்தும் கொள்ளும்.

இந்தப் போராட்டத்தில் உடலின் விசையை அதன் முழுமையுடன் உணர்கிறவர்கள் மட்டுமே சீக்கிரமே தப்பித்துக் கொள்வார்கள் எதனிடம் இருந்தும். பொங்கிமுத்துவுமே தான் கடந்து வந்த பாதையை அவருக்குத் தெரிந்த மொழியில் இப்படித்தான், விதம்விதமாய் இந்தப் பயணம் முழுமைக்கும் சொல்லிக் கொண்டு வந்தார். முழுமையாய்ப் பயணத்தை முடித்தவர்களின் வார்த்தைகளுக்கு வலிமை கூடியும் விடுகிறது.

பொதுவாய் வயதானவர்களுடன் இருக்கையில் நமக்கு வயதாவதே இல்லை. அந்த உணர்வு எனக்கும் இன்று கிட்டியது. 

 

நன்றி https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0fREQLHB1XCsXs1i1i1snkiCkps8Pp7US3o899kRxJiwdYyVdzhABvW8YuVdAVz5Gl&id=100002947732385

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புலவரே பகிரவிற்கு.
இளமையில் முதுமையின் அனுபவம் இருப்பதால் புரிகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்......மனதில் இருக்கும் வலிமை உடலில் இருப்பதில்லை......ஆனால் அதை மனம் ஏற்க மறுப்பதுதான் கொடுமை......!  😁

நன்றி புலவர்.........!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.