Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக் கிண்ண ரக்பி போட்டிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ண ரக்பி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு 8 நாடுகள் முன்னேறியுள்ளன

Published By: VISHNU

12 OCT, 2023 | 07:27 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

உலகக் கிண்ண ரக்பி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு நடப்பு சம்பியனான தென் ஆபிரிக்கா, போட்டி ஏற்பாடு நாடான பிரான்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்து, வேல்ஸ், ஆர்ஜென்டீனா, அயர்லாந்து, நியூஸிலாந்து மற்றும் பிஜி ஆகிய 8 நாடுகள் முன்னேறியுள்ளன. 

டி குழுவுக்கான லீக் சுற்றில் ஆர்ஜென்டீனாவுடனான தீர்மானமிக்க போட்டியில் ஒரேயொரு ஆசிய நாடாக பங்கேற்றிருந்த ஜப்பான் 27 க்கு 39 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியைத் தழுவியிருந்தமையால் காலிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

கடந்த செப்டெம்பர் 8 ஆம் திகதியன்று பிரான்ஸில் ஆரம்பமான உலகக் கிண்ண ரக்பி போட்டித் தொடரில் ஏ,பீ,சீ,டீ ஆகிய 4 குழுக்களில் தலா 5 அணிகள் என்ற கணக்கில் 20 பங்கேற்றன.

இதில் குழு ஏ யில் பிரான்ஸ், நியூசிலாந்து, நமீபியா, இத்தாலி, உருகுவே ஆகிய அணிகளும், குழு பீ யில் தென் ஆபிரிக்கா, ஸ்‍கொட்லாந்து, டொங்கா, அயர்லாந்து, ருமேனியா ஆகிய அணிகளும் அங்கம் வகித்தன.

அத்துடன், குழு சீயில் அவுஸ்திரேலியா, பிஜீ, வேல்ஸ், ஜோர்ஜியா, போர்த்துக்கல் ஆகியனவும், குழு டீல் ஜப்பான், ஆர்ஜென்டீனா, இங்கிலாந்து, சிலி,சமாவோ ஆகியன இடம்பெற்றன. 

தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்துள்ள ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்து சுற்றான காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதன்படி, ஏ குழுவிலிருந்து பிரான்ஸ் (18 புள்ளிகள்) மற்றும் நியூஸிலாந்தும் (15 புள்ளிகள்), பீ குழுவிலிருந்து அயர்லாந்து (19 புள்ளிகள்) மற்றும் தென் ஆபிரிக்காவும் (15 புள்ளிகள்), சீ குழுவிலிருந்து வேல்ஸ் (19 புள்ளிகள்) மற்றும் பிஜீயும் (11 புள்ளிகள்), டீ குழுவிலிருந்து இங்கிலாந்து (18 புள்ளிகள்) மற்றும் ஆர்ஜென்டீனாவும் (14 புள்ளிகள்) முன்னேறின. இதில் குழு சீயில் பிஜீ, அவுஸ்திரேலிய ஆகிய அணிகள் தலா 11 புள்ளிகள் அடங்கலாக சம புள்ளிகளைப் பெற்றிருந்தபோதிலும் புள்ளிகள் வித்தியாச கணக்கில் பிஜீ (5) புள்ளிகளையும் அவுஸ்திரேலியா (-1) பெற்றிருந்த காரணத்தினால் பிஜீ அணி காலிறுதிக்கான தகுதியைப் பெற்றது.

ஏ,பீ,சீ,டீ ஆகிய ஒவ்வொரு குழுக்களிலிருந்தும் முறையே பிரான்ஸ், அயர்லாந்து, வேல்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகியன தத்தம் குழுக்களில் தோல்வியடைதாக அணியாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. காலிறுதிப் போட்டிகள் எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் நடைபெறவுள்ளன.

https://www.virakesari.lk/article/166732

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விளையாட்டு ஏன் இலங்கயின் தமிழ் பகுதிகளை சென்றடையவில்லை என்பது எனக்கு எப்போதும் ஒரு புரியாத புதிர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்திற்கும் நியூஸிலாந்திற்குமான ஆட்டமும், நேற்றய பிரான்சுக்கும் தென்னாபிரிக்கா விற்கான ஆட்டமும் மிக சுவாரஷ்யமான இருந்தன. அதுவும் நேற்றைய ஆட்டம் அபாரம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரக்பி உலகக் கிண்ண இறுதி போட்டிக்கு நியூசிலாந்து தகுதி

ரக்பி உலகக் கிண்ண இறுதி போட்டிக்கு நியூசிலாந்து தகுதி

2023 ரக்பி உலகக் கிண்ண இறுதி போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

அரையிறுதிச் சுற்றில், அயர்லாந்தை 24க்கு 28 என்ற கணக்கில் வீழ்த்தி அந்த அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதன்படி இறுதி போட்டியில் அர்ஜென்டினாவுடன் நியூசிலாந்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=178716

On 13/10/2023 at 23:22, goshan_che said:

இந்த விளையாட்டு ஏன் இலங்கயின் தமிழ் பகுதிகளை சென்றடையவில்லை என்பது எனக்கு எப்போதும் ஒரு புரியாத புதிர்தான்.

அண்ணை தரமான புற்தரை மைதானங்கள் இல்லாததும் ஆட்டத்தின் போது கீழே விழுவதும் ஒருவரை ஒருவர் தள்ளு முள்ளுப்படுவதும் தமிழ்ப் பெற்றோர் விரும்பமாட்டினம் தானே?!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

ரக்பி உலகக் கிண்ண இறுதி போட்டிக்கு நியூசிலாந்து தகுதி

ரக்பி உலகக் கிண்ண இறுதி போட்டிக்கு நியூசிலாந்து தகுதி

2023 ரக்பி உலகக் கிண்ண இறுதி போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

அரையிறுதிச் சுற்றில், அயர்லாந்தை 24க்கு 28 என்ற கணக்கில் வீழ்த்தி அந்த அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதன்படி இறுதி போட்டியில் அர்ஜென்டினாவுடன் நியூசிலாந்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=178716

அண்ணை தரமான புற்தரை மைதானங்கள் இல்லாததும் ஆட்டத்தின் போது கீழே விழுவதும் ஒருவரை ஒருவர் தள்ளு முள்ளுப்படுவதும் தமிழ்ப் பெற்றோர் விரும்பமாட்டினம் தானே?!

எங்கட புட்போல் மச்சில இல்லாத தள்ளுமுள்ளா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2023ஆம் ஆண்டு ரக்பி உலகக்கிண்ண அரையிறுதிக்கு தகுதி பெற்ற நடப்பு சாம்பியன்

2023 ரக்பி உலகக்கிண்ண 4ஆவது காலிறுதி போட்டி நேற்றய தினம் (15) பிரான்ஸில் உள்ள Stade de France வில் நடைபெற்றதுSouth Africa
South AfricaBBC
 
Published on 
16 Oct 2023, 12:40 pm

தற்போது இடம்பெற்று வரும் 2023ஆம் ஆண்டுக்கான ரக்பி உலகக்கிண்ண 4ஆவது காலிறுதி போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றியீட்டியது.

2023 ரக்பி உலகக்கிண்ண 4ஆவது காலிறுதி போட்டி நேற்றய தினம் (15) பிரான்ஸில் உள்ள Stade de France வில் நடைபெற்றது.

குறித்த போட்டியில் நடப்பு சாம்பியனான தென் ஆபிரிக்க அணியும் பிரான்ஸ் அணியும் மோதின .

குறித்த போட்டியானது இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? எனும் போட்டியாக அமைந்த நிலையில் தோல்வியடையும் அணி இந்த உலகக்கிண்ணதில் இருந்து வெளியேறும் .

4ஆவது தடவை உலகக்கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தென் ஆப்பிரிக்கா அணியும் முதல் தடவை உலகக்கிண்ணத்தை வெல்லவேண்டும் என்ற முனைப்புடன் பிரான்ஸ் அணியும் முட்டிமோதிக்கொண்டன.

போட்டி முடிவின் போது 29-28 என்ற முறையில் பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது தென் ஆப்பிரிக்கா அணி.

பிரான்ஸ் அணியால் நடப்பு சாம்பியனை வீழ்த்த முடியாமல் சொந்த ரசிகர்களுக்கு மத்தியில் தோல்வி அடைந்தது .

இந்நிலையில், அரையிறுதி போட்டியில் தென் ஆபிரிக்கா அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது .

இந்த இரு அணியுமே 2019 ஆம் ஆண்டு ரக்பி உலகக்கிண்ண இறுதி போட்டியில் மோதிய நிலையில் குறித்த போட்டியில் 32-12 என தென் ஆபிரிக்கா வெற்றி பெற்று சாம்பியன் ஆக மகுடம் சூடியமை குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/sports/2023/10/16/the-defending-champions-have-qualified-for-the-2023-rugby-world-cup-semi-finals

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ண ரக்பி காலிறுதிக்கு ஆர்ஜென்டீனா, தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து முன்னேறின

18 OCT, 2023 | 04:16 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

உலகக் கிண்ண ரக்பி போட்டியின் காலிறுதிப் போட்டிகளில் ஆர்ஜென்டீனா, தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய 4 அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

பிரான்ஸில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண ரக்பி போட்டியின் காலிறுதி சுற்றுப் போட்டிகள் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்றிருந்தன. இதன் முதலாவது காலிறுதிப் போட்டியில் பலம் பொருந்திய வேல்ஸ் அணியை ஆர்ஜென்டீனா அணி 29க்கு 17 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.

போட்டியின் 38ஆவது நிமிடம் வரை 10க்கு 0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்திய வேல்ஸ் அணியை, ஆர்ஜென்டீனா அணி சிறப்பாக எதிர்த்தாடியிருந்தது. இதில் 39, 44, 45 ஆகிய நிமிடங்களில் ஆர்ஜென்டீன அணிக்கு கிடைத்த 3 பெனால்டி வாய்ப்புக்களையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு 9 புள்ளிகளைப் பெற்று மீண்டதுடன், முதல் பாதி 10க்கு 9 என்ற புள்ளிகள் கணக்கில் வேல்ஸ் அணி முன்னிலை பெற்றிருந்தது. 

இதையடுத்து போட்டியின் இரண்டாவது பாதியில் (48ஆவது நிமிடம்) ஆர்ஜென்டீனாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை எமிலியானோ பொ‍வெல்லி ‍கடந்த 3 மூன்று முறைகளைப் போலவே 4ஆவது முறையாக கிடைத்த வாய்ப்பிலும் பந்தை  சரியாக இரண்டு கம்பங்களுக்கிடையே நேர்த்தியாக செலுத்தி 12க்கு 10 என்ற கணக்கில் முன்னிலை பெறச் செய்தார். 

அதன் பின்னர், 55ஆவது நிமிடத்தில் ட்ரை வைத்த வேல்ஸ் அணி, கொன்வேர்சனையும் பெற்று 17க்கு 12 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றபோதிலும், அதன் பின்னர் அவர்களுக்கு எதுவித புள்ளிகளும் பெற முடியாமல் போனது.

மறுபுறத்தில் ஆர்ஜென்டீனா, 68, 77ஆவது நிமிடங்களில் 2 ட்ரைகளை வைத்ததுடன், அதற்கான கொன்வேசன்களையும் சரியாக பயன்படுத்தி முழுமையான புள்ளிகளை பெற்றதுடன், 81ஆவது நிமிடத்திலும், மீண்டுமொரு பெனால்டி சாதமாக்கிக் கொண்டு 29க்கு 17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டி அரை இறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்தது.

இந்நிலையில், முதலாவது காலிறுதிப் போட்டியைக் காட்டிலும், ஏனைய 3 காலிறுதிப் போட்டிகளும் மிகவும் இறுக்கமான  போட்டிகளாகவே அமைந்தது. அதில், இரண்டாவது காலிறுதிப் போட்டியில் அயர்லாந்து அணியை நியூஸிலாந்து அணி  28க்கு 24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டி அரை இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனாவை சந்திக்கவுள்ளது.

3ஆவது காலிறுதிப் போட்டியில் தரவரிசையில் முதலிடத்திலும் நடப்புச் சம்பியனான தென் ஆபிரிக்காவை எதிர்கொண்ட போட்டி ஏற்பாட்டு நாடான பிரான்ஸ், போட்டியின் ஆரம்பத்தில் 20க்கு 17 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. எனினும், இரண்டாவது பாதியில் மீண்டெழுந்த தென் ஆபிரிக்கா புள்ளிகளைப் பெற்று போட்டியின் நிறைவில் 29க்கு 28 என்ற புள்ளிகள் கணக்கில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் இறுக்கமான வெற்றியை ஈட்டியது. 

நான்காவது காலிறுதிப் போட்டியின் முதல் பாதியில் 21க்கு 10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையிலிருந்து இங்கிலாந்து, போட்டியின் நிறைவில் 30க்கு 24 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று அரை இறுதியில் தென் ஆபிரிக்காவை எதிர்த்தாடவுள்ளது.

இப்போட்டியின் ஆரம்பத்திலிருந்து ஆக்ரோஷமாக விளையாடிய வேல்ஸ் அணி 14ஆவது நிமிடத்தில் ட்ரை ஒன்றை வைத்து புள்ளிக்கணக்கை தொடக்கியதுடன், அதற்கான கொன்வேர்சனையும் பெற்றது. 

அதன் பின்னர், 21ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியையும் சரிவர பயன்படுத்தி 3 புள்ளிகளைப் பெற்று 10க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது வேல்ஸ் அணி. 

எனினும், 39, 44, 45 ஆகிய நிமிடங்களில் ஆர்ஜென்டீனா அணிக்கு கிடைத்த 3 பெனால்டி வாய்ப்புக்களையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு 9 புள்ளிகளைப் பெற்றது. அதன்படி போட்டியின் முதல் பாதியில் வேல்ஸ் 10 புள்ளிகளையும், ஆர்ஜென்டீனா 9 புள்ளிகளையும் பெற்றிருந்தன.

இந்நிலையில், போட்டியின் இரண்டாம் பாதியில் தாக்குதல் ஆட்டத்தில் இறங்கிய ஆர்ஜென்டீனாவுக்கு, மீண்டுமொரு முறை பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு முன்னோக்கி நகர்ந்த ஆர்ஜென்டீனா, 68 மற்றும் 77ஆவது நிமிடங்களில் 2 ட்ரைகளை வைத்ததுடன், அதற்கான கொன்வேஷன்களையும் சரியாக பயன்படுத்தி முழுமையான புள்ளிகளை ஈட்டி 26க்கு 17 என்ற புள்ளிகள் கணக்கில் ஆர்ஜென்டீனா முன்னிலை வகித்தது. 

ட்ரைகளை வைப்பதற்கு வேல்ஸ் அணியினர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை ஆர்ஜென்டீனா தடுத்திருந்ததுடன், 81ஆவது நிமிடத்தில் கிடைத்த மற்றுமொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி 29க்கு 17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

https://www.virakesari.lk/article/167169

  • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2023 at 12:40, ஏராளன் said:

ரக்பி உலகக் கிண்ண இறுதி போட்டிக்கு நியூசிலாந்து தகுதி

ரக்பி உலகக் கிண்ண இறுதி போட்டிக்கு நியூசிலாந்து தகுதி

2023 ரக்பி உலகக் கிண்ண இறுதி போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

அரையிறுதிச் சுற்றில், அயர்லாந்தை 24க்கு 28 என்ற கணக்கில் வீழ்த்தி அந்த அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதன்படி இறுதி போட்டியில் அர்ஜென்டினாவுடன் நியூசிலாந்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=178716

 

இது தவறான செய்தி. நியூஸிலாந்து அரை இறுதிப்போட்டிக்குத்தான் தெரிவாகி உள்ளது. அது அர்ஜென்டினா அணியை நாளை எதிர்கொள்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2023 at 12:31, Eppothum Thamizhan said:

அயர்லாந்திற்கும் நியூஸிலாந்திற்குமான ஆட்டமும், நேற்றய பிரான்சுக்கும் தென்னாபிரிக்கா விற்கான ஆட்டமும் மிக சுவாரஷ்யமான இருந்தன. அதுவும் நேற்றைய ஆட்டம் அபாரம்!

வார‌ கிழ‌மை நீங்க‌ள் வ‌சிக்கும் நாட்ட‌வ‌ர் கோப்பையுட‌ன் மீண்டும் நாடு திரும்புவின‌ம் ந‌ண்பா
நானும் ப‌ல‌ ம‌ச்சுக்க‌ள் பார்த்தேன்...........நேற்று இங்லாந் கூட‌ தென் ஆபிரிக்க‌ சிர‌ம‌ ப‌ட்டு வென்ற‌தை நினைக்க‌ சிறு டவுட்

வார‌ கிழ‌மை முழு திற‌மையை தென் ஆபிரிக்கா அணி நியுசிலாந் அணிக்கு எதிரா வெளிக்காட்டினால் இர‌ண்டாவ‌து த‌ட‌வை தொட‌ர்ந்து உல‌க‌ கோப்பைய‌ த‌க்க‌ வைக்க‌லாம்

அக‌ன்ரினா ப‌ல‌ம் இல்லாத‌ அணி அவ‌ர்க‌ள் சிமி பின‌லுக்கு வ‌ந்த‌து ஆச்ச‌ரிய‌ம்............

  • கருத்துக்கள உறவுகள்

@Eppothum Thamizhan

போன‌ கிழ‌மை சொன்ன‌து போல் நீங்க‌ள் வ‌சிக்கும் நாட்ட‌வ‌ர்க‌ள் கோப்பை தூக்குவின‌ம் என்று சொன்னேன் அத‌ன் போல் ந‌ட‌ந்து விட்ட‌து............நியுசிலாந் வீர‌ர் ஒருவ‌ருக்கு ந‌டுவ‌ர் சிவ‌ப்பு அடை கொடுத்த‌து நியுசிலாந் அணிக்கு பெரிய‌ பாதிப்பு

 

நிறைய‌ புள்ளிக‌ள் இறையான் விளையாட்டில் வ‌ர‌ வில்லை ந‌ண்பா.............................

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4 ஆவது தடவையாக றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது தென்னாபிரிக்கா !

29 OCT, 2023 | 07:12 AM
image

2023 ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்று 4 ஆவது தடவையாக றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

உலகக் கிண்ண றக்பி தொடரின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (29) பிரான்ஸில் இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின.

இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி 12: 11 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

அத்துடன், தென்னாபிரிக்க அணி றக்பி உலகக் கிண்ணத் தொடரை கைப்பற்றும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த 1995 ஆம் ஆண்டிலும் 2007 ஆம் ஆண்டிலும் 2019 ஆண்டிலும் தென்னாபிரிக்க அணி றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/167976

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

4 ஆவது தடவையாக றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது தென்னாபிரிக்கா !

29 OCT, 2023 | 07:12 AM
image

2023 ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்று 4 ஆவது தடவையாக றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

உலகக் கிண்ண றக்பி தொடரின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (29) பிரான்ஸில் இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின.

இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி 12: 11 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

அத்துடன், தென்னாபிரிக்க அணி றக்பி உலகக் கிண்ணத் தொடரை கைப்பற்றும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த 1995 ஆம் ஆண்டிலும் 2007 ஆம் ஆண்டிலும் 2019 ஆண்டிலும் தென்னாபிரிக்க அணி றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/167976

இந்த‌ உல‌க‌ கோப்பை பின‌லில் தென் ஆபிரிக்கா ஒருக்கா த‌ன்னும் 7புள்ளி எடுக்க‌ வில்லை

கிடைத்த‌ 12புள்ளியும் ப‌னாட்டி மூல‌ம் கிடைத்த‌வை

நியுசிலாந்துக்கு சிவ‌ப்பு அட்டை கிடைக்காட்டி கோப்பையை நியுசிலாந் தூக்கி இருக்கும்

தென் ஆபிரிக்காவின் விளையாட்டு பின‌லில் ப‌டு சுத‌ப்ப‌ல்............அதிஷ்ட‌த்தான் மீண்டும் வென்று விட்டின‌ம்

தென் ஆபிரிக்கா அணிக்கு வாழ்த்துக்க‌ள்🥰🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.