Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையும் இரட்டைவேடமும்-பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலையும் இரட்டைவேடமும்-பா.உதயன் 

அமெரிக்காவும் அதன் நண்பர்களும் அடுக்கடுக்காய் பொய் சொல்லுவதில் வல்லவர். அன்று ஒரு நாள் இராக்கில் இரசாயன குண்டுகள் இருப்பதாக சொன்னது போல் இப்போ இஸ்ரேல் போடவில்லை குண்டுகள் மருத்துவ மனையில் என்று மறுபடியும் பொய். இப்படி எத்தனை பொய்கள் உலகத்துக்கு தெரியும். அண்ணன் சொல்லி விட்டார் இனி அவர் தம்பிமாரும் தொடருவார்கள். நீதி நியாயம் எதுகும் இல்லா உலகமாகிவிட்டது. 

அண்மையில் நோர்வீய ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் நடை பயணம் போகும் போது காணமல் போய் விட்டான் போலீஸ் மக்கள் உட்பட அனைவரும் தேடினார்கள் நாம் எல்லோருமே அவன் உயிரோடு திரும்பி வரவேண்டும் என்றே மன்றாடினோம் ஆனால் துர்அதிஸ்டமாக அவர் இறந்து விட்டான். இது பெரும் அவலம் நோர்வே கூட அழுதது. ஒரே ஒரு சிறுவனுக்காக நோர்வே மக்கள் அழுதார்கள் இது தான் மனிதம் மனித தர்மம் மனித உயிர்கள் மகத்தானது பெறுமதி மிக்கது.

இதே போலவே தான் அன்று முள்ளிவாய்க்கால் போல் இன்று பாலஸ்தீனத்திலும் பல்லாயிரம் குழந்தைகள் படுகொலை செய்யப்படுகின்றனர் ஆனல் இன்று இவை எல்லாம் இவர்கள் பார்வையில் மதிப்பு குறைந்த மனிதர்களாக பார்க்கப் படுகின்றனர். எல்லா உயிர்களுமே பெறுமதியானவை. உலகம் முழுவதும், முடிவில்லாத வெறுப்பும், வன்முறையும், மனித அழிவுகளுமாக உள்ளது. நாடுகள் சமூக சீர்கேட்டில் உள்ளன, பொருளாதார பிரச்சினைகள் யுத்தம் பசி பட்டினி என்பது  சமூகங்களை அச்சுறுத்துகின்றன, மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர், மற்றும் இனங்கள் அழிவுக்கு தள்ளப்படுகின்றன. நம் உலகம் துன்பத்தில் உள்ளது.

நாகரீகம் கொண்ட உலகில் எங்கேயோ ஒரு மூலையில் மனிதர் மரணித்தபடி பெரும் அவலத்தோடு இருக்க ஒன்றுமோ தெரியாது போல் லண்டன், ஜெர்மனி, பிரான்ஸ் என்று பல பலம் மிக்க நாடுகள் அமைதியாகவே இருக்கின்றன. ஐ.நாவின் பாதுகாப்பு சபை கூட அமெரிகாவினதும் அதன் நண்பர்களினதும் நிகழ்ச்சி நிரலிலும் அவர் சார் நலனின் ஊடாகவே பயணிக்கிறது. நோபல் சமாதான பரிசு வழங்கும் நோர்வே கூட பார்த்திருக்கிறது இவர்களோடு சேர்ந்தே. ஜனநாயக வாதிகள் மனிதாபிமானிகள் என்று தம்மை கூறிக் கொள்ளும் இவர்களது இரட்டை வேடத்தை காட்டுகிறது. 

சமாதானம் விரும்பிகள் என்று சொல்வோரும் ஐ,நா வினால் கொண்டு வரப்பட்ட இஸ்ரேல் பலஸ்தீனம் இடையிலான யுத்த நிறுத்தத்தை ஆதரிக்காமல் யுத்தம் தொடருவதை ஆதரித்தனர். இதே நாடுகள் தான் தமது நலனுக்கும் ஆயுத விற்பனைக்கும் ஏற்றபடி யுத்தத்தை ஆதரிப்பதுமாக இருக்குகின்றனர். உலகில் மானுடத்திற்கு எதிரான கொலைகள் புரிபவர்களை விட அதை பார்த்துக் கொண்டு இருப்பவர்களே அவர்களை விட கொடியவர்கள். இது (Genocide and hypocrisy) இனப்படுகொலைகளை ஆதரிப்பதற்கும் இரட்டை வேடம் போடுவதற்கும் சமமாகும் இது பெரும் வெட்கம். it’s shame! ஒவ்வொரு மனிதனும் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும்.

 Every human being must be treated humanely.

பா.உதயன் ✍️


பா.உதயன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.