Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் ஏற்பட்ட இரு பெரும் பஞ்சங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் உடலை சந்தைக்கு விற்றுப் பிழைக்கும் அரசுகள் - அன்றும் இன்றும்

தவறாமல் பார்க்க வேண்டிய காணொளி இது

பிரித்தானிய காலனியாதிக்கத்தினால் இந்தியாவில் ஏற்பட்ட இரு பெரும் பஞ்சங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் நமது உடலை இன்சுலினை சரிவர பயன்படுத்த இயலாததாக மாற்றிவிட்டது என எப்பிஜெனடிக்ஸ் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேற்கத்தியர்களை விட தெற்காசியர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் நீரிழிவு நோயாளிகள் ஆகிறார்கள். 100 வயது வாழ வேண்டியவர்கள் இன்று 60-70 வயதிற்குள் மிக மோசமான வியாதிகள் வந்து துன்புற்று சாகிறார்கள். 20 வயது குழந்தைகள் 40 வயதினரைப் போல இருக்கிறார்கள். இதைச் சொன்னால் மாற்றம் முன்னேற்றம் அன்புமணிகள் வந்து 19ஆம் நூற்றாண்டில் இருந்த ஆயுளை விட இன்று அதிகரித்திருக்கிறது என்பார்கள். ஆனால் இன்று திட்டமிட்டு நம் ஆரோக்கியம் அழிக்கப்படுவதை விமர்சிக்க மாட்டார்கள். அதை விமர்சிக்கிறவர்களை இந்த மாற்றம் முன்னேற்றம் அன்புமணிகள் பழமைவாதிகள் என அழைப்பார்கள்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு பாரம்பரிய வாழ்க்கை முறைக்குத் திரும்புவதே என கார்டியன் சொல்கிறது.

அதாவது மேற்கத்திய உணவுகளை, உறையிலிட்ட உணவுகளைத் தவிர்ப்பது, விரதம் இருப்பது, குறைவான நேரம் உண்பது, மாலை ஆறு மணிக்கு மேல் சாப்பிடாதிருப்பது, கறிவகைகளை குறைவாக உண்பது, அதிக காய்கறிகளை எடுத்துக் கொள்வது.

முதலில், அரசு ஏழு மணிக்கு மேல் செயல்படும் உணவகங்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும். விலையை உயர்த்தி மக்கள் இரவில் வெளியே உண்பதைக் குறைக்க வேண்டும். ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் 7மணிக்கு மேல் செயல்பட தடைவிதிக்க வேண்டும். மதுக்கூடங்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே மக்களின் ஆயுளை 30 ஆண்டுகள் கூட்ட முடியும்.

அடுத்து உறையில் இடப்பட்ட துரித உணவுகளை சந்தையில் இருந்து குறைப்பதை அரசு தன் இலக்காக அறிவிக்க வேண்டும். இது ஏதோ சர்வாதிகாரம் என உங்களுக்குத் தோன்றலாம், ஆனால் இதைப் போன்ற விதிமுறைகளை சிங்கப்பூரில் உள்ளன.

உணவுச் சந்தையை கட்டுப்படுத்தாத அரசு அரசல்ல தீவிரவாத அமைப்பு. காசுக்காக நம் மக்களை 20 வயதில் நீரிழிவும் 40 வயதில் மாரடைப்பும் வர வைக்கும் இந்த அரசு நம் உடலை சந்தைக்கு விற்கிறார்கள். இவர்களுக்கும் காலனியாதிக்கவாதிகளுக்கும் என்ன வித்தியாசம். சிறுகுழந்தைகள் சாக்லேட்டுகளையும் பாக்கெட் சிப்ஸையும் மட்டுமே கையில் கொண்டு திரிவதைக் காணும் போது ஏன் நம் குழந்தைகளை நாமே விஷமூட்டி அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பறிக்கிறோம் எனத் தோன்றும். ஆனால் நம் அரசே இதை ஆதரிக்கும் போது நம்மால் என்ன முடியும், சின்னச்சின்ன அளவில் எதிர்ப்பதைத் தவிர்த்து!
Posted Yesterday by ஆர். அபிலாஷ்

http://thiruttusavi.blogspot.com/2023/10/blog-post_21.html

  • கருத்துக்கள உறவுகள்

அபிலாஷின் நுனிப்புல் மேயும் இயல்பால் வந்த இன்னொரு கட்டுரை இது. இக்கருத்துகளின் பின்னால் சிறிதளவு விஞ்ஞானமும் பெருமளவு அரசியலும் இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது விளக்குகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Justin said:

அபிலாஷின் நுனிப்புல் மேயும் இயல்பால் வந்த இன்னொரு கட்டுரை இது. இக்கருத்துகளின் பின்னால் சிறிதளவு விஞ்ஞானமும் பெருமளவு அரசியலும் இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது விளக்குகிறேன்.

சரி அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருக்கும் துளியளவு விஞ்ஞானத்தை முதலில் பார்ப்போம்:

எங்கள் ஜீன்களை உருமாற்றாமலே ஜீன்களின் தொழிற்பாட்டை மாற்ற முடியும்.  இது மேலாண் மரபியல் எனப்படுகிறது(Epigenetics - மேலாண் மரபியல் - இந்தக் கலைச்சொல் நான் உருவாக்கி, தற்போது தமிழ் நாட்டு அரசின் வலைத்தள சொற்குவையில் சேர்க்கப் பட்டிருக்கிறது) . இவ்வாறு தான், சூழல், உணவு போன்ற புறக் காரணிகள் எங்கள் ஜீன்களின் தொழிற்பாட்டை மாற்றுகின்றன. இத்தகைய மாற்றங்கள் பரம்பரை தாண்டியும் கடத்தப் படக்கூடியவை (heritable). இத்தோடு விஞ்ஞானம் முடிந்து "அரசியல் கலந்த போலி விஞ்ஞானம்" ஆரம்பிக்கிறது😎.

மேலாண் மரபியல் மாற்றங்கள் பரம்பரை தாண்டியும் கடத்தப் படக்கூடியவையாயினும், சந்ததி வாழும் சூழல், உணவு என்பவற்றைப் பொறுத்து மீண்டும் பழைய நிலைக்கு மாறி விடவும் கூடியது (reversible) - எனவே இது மீள இயலாத தளை அல்ல! இங்கே தான் ஆங்கிலேயர் கால பஞ்சம், இந்தியாவில் நீரிழிவு போன்றவை இன்று ஏற்படக் காரணம் என்பது தவறாகிறது. இவர்களின் கூற்றுக்கு அடிப்படையான ஆய்வுகள் எத்தனை இந்தியாவில் செய்யப் பட்டிருக்கின்றன? எதுவும் இல்லை.

வேறெங்காவது செய்யப் பட்டிருக்கின்றனவா? ஆம் - பகுதியளவில்.  

நெதர்லாந்திலும், சீனாவிலும் 1945, 1960 ஆகிய ஆண்டுகளில் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் கருவில் இருந்த அல்லது பிறந்தவர்களில் ஆய்வுகள் செய்து, சில நீரிழிவோடு மறைமுகமாகத் தொடர்பான ஜீன்களில் மேலாண் மரபியல் மாற்றங்கள் இருந்ததைக் கண்டறிந்திருக்கிறார்கள். இதனை பல தலைமுறை கடக்கும் மாற்றங்கள் (trans-generational) என்பதை விட பிறப்பிற்கு அண்மித்த சூழலால் (perinatal), ஒரு சந்ததியில் ஏற்பட்ட மாற்றங்கள் என்று தான் இந்த ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த இரு ஆய்வுகளையும் வாசித்த சில இந்திய தேசிய உணர்வு மிகுந்த "விஞ்ஞானிகள்" உருவாக்கிய கருதுகோள் தான் "பஞ்சங்களால் இன்று இந்தியர்களின் நீரிழிவு அதிகரித்திருக்கிறது" என்ற எண்ணம். இதை கேள்வியில்லாமல், ஆய்வு இல்லாமல் ஏற்றுக் கொண்டு பரப்ப, அபிலாஷ் போன்றோரின் இந்திய தேச பக்தியும் உதவுகிறது என நம்புகிறேன்.
 
இதில் இன்னொரு போலித் தகவலும் மறைந்திருக்கிறது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்பட்ட உணவுப் பஞ்சங்களில் 1 மட்டும் தான் ஆங்கிலேயரின் கொள்கை காரணமாக ஏற்பட்டது: 1943 வங்கதேசப் பஞ்சம் அது. அதற்கு முன்னர் ஏற்பட்ட எல்லாப் பஞ்சங்களுக்கும் மழையின்மையும், வரட்சியும் தான் காரணங்கள். எனவே, ஆங்கிலேயர் பஞ்சத்தை உருவாக்கவில்லை. அப்படியானால், இன்றைய இந்திய மேற்கு வங்கத்தில் நீரிழிவு எப்படி இருக்கிறது? எனக்குத் தெரிந்த வரையில், மேற்கு வங்க நீரிழிவு நோயாளிகள் வீதம், இந்திய தேசிய சராசரியை விடக் குறைவு. எனவே, மேற் சொன்ன நெதர்லாந்து , சீன மொடலின் படியான விளைவு கூட 1943 இல் ஏற்பட்ட பஞ்சத்தினால் ஏற்படவில்லை என்று தான் ஊகிக்கிறேன்.

அப்படியனால் ஏன் இந்தியாவில் நீரிழிவு அதிகம்?

இங்கே தான் நாம் தேச பக்தியைத் தூக்கிப் போட்டு விட்டு, விஞ்ஞானத்தை நாட வேண்டும். சிசுவின் பிறப்பின் போதான நிறை (birth weight) குறைவாக இருந்தால் அது வளரும் போது பல நோய்கள் - நீரிழிவு உட்பட- உருவாகும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் நிரூபிக்கின்றன. நிறை குறைந்த குழந்தைகளின் வீதம் இந்தியாவில் மிக அதிகம் - ஒரு கணிப்பின் படி இது 17%. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வந்த கடந்த 20 ஆண்டுகளில் கூட இந்த நிறை குறைந்த சிசுக்களின் வீதம் மாறவில்லை என்கிறார்கள். இதன் அடிப்படைக் காரணம், அதிகரிக்கும் ஏழை பணக்காரன் ஏற்றத் தாழ்வும், பொருளாதார வளர்ச்சி சாதாரண மக்களைச் சென்றடைய விடாமல் தடுக்கும் ஊழலும் என்பது தெளிவு. இதை அப்படியே அபிலாஷ் போன்றோர் மறைத்து விடுவர் - தேசபக்தி கண்ணை மறைப்பதால்!

நிறை குறைந்த பிறப்பு வீதம் மட்டும் தான் காரணமா?

நிச்சயமாக இல்லை. தென்னாசியர்களின் ஜீன்களில் (genotype) வேறுபாடுகள் இருக்கின்றன, அவையும் காரணம். ஜீன்கள் ஒழுங்காக இருந்தாலும், சோறும், தேங்காயெண்ணையும், மாட்டுப் பால் நெய்யும் அதிகரித்தாலும் இந்த அனுசேப நோய்களெல்லாம் வரும் வாய்புகள் அதிகரிக்கும்.

தரவுகளின் படி, இந்தியாவிலும் இலங்கையிலும் நகர்வாழ் மக்களிடமும், வசதியான மத்திய தர வர்க்கத்தினரிலும் தான் நீரிழிவு அதிகம். இது எதைக் காட்டுகிறது என்று யோசித்தால் மிகை போசணையும், குறைந்த உழைப்பும் என்று உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும்.

இதையெல்லாம் ஒதுக்கி விட்டு, ஒரு வீடியோவில் யாரோ படம் கீறி கதை சொல்வதைப் பார்த்துக் கட்டுரை எழுதுவது ஒரு  பேராசிரியரான அபிலாஷ் என்பது ஆச்சரியமாக இருக்கிறது!

பி.கு: கட்டுரையில் இருக்கும் ஏனைய நீரிழிவுத் தடுப்பு முறைகள் சரியானவை என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.  
  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.