Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் மீள்குடியேற்றம் 3 வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3    24 OCT, 2023 | 10:31 AM

image

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் அடுத்த மூன்று வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  

இடம்பெயர்ந்த 274,120  குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 917,143 பேர் அந்த மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இன்னும் 1701 குடும்பங்களைச் சேர்ந்த 4,999 பேர் மாத்திரமே  மீள்குடியேற்றப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மன்னார் - எருக்கலம்பிட்டி 'குவைத் ஸகாத்' வீடமைப்புக் கிராமம் - இரண்டாம் கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

125 வீடுகளைக் கொண்ட இந்த வீடமைப்புக் கிராமம் 'குவைத் ஸகாத் ஹவுஸ்' நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு 18 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

முதற்கட்டமாக 75 வீடுகள் முன்பு திறக்கப்பட்டன. அதற்காக செலவிடப்பட்ட தொகை 105 மில்லியன் ரூபா ஆகும். முப்பது வருடகால விடுதலைப் புலிகளின் யுத்தத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீட்டுத் தேவை 20,276 ஆகும்.

யுத்த காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த 3828 குடும்பங்களைச் சேர்ந்த 9683 பேர் தற்போது தாய்நாடு திரும்பியுள்ளனர். இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகளை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அந்த குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்கு அவர்களுக்கு குடிநீர், மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

மோதல் சூழ்நிலையினால் இடம்பெயர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களை அவர்களது பூர்வீக கிராமங்களில் மீள்குடியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்கமைத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்றப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.

https://www.virakesari.lk/article/167620

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள, முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றத்தை அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

சிங்கள, முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றத்தை அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

தமிழர்களின் வீடுகளில் இருக்க ஆள்களில்ல...மனிதர்களில்லை  பூனைகள் நாய்கள் ஆடுகள் மாடுகள்   அந்த வீடுகளில் வாழ்கின்றன     🤣உறவுகளையும்  இருக்க விடமாட்டார்கள்     வீடுகள் இல்லாத தமிழர்கள் கூட யாழ்ப்பாணத்தை விட்டுவிடக்கூடிய நிலையில் இல்லை  அதாவது கிளிநொச்சி வவுனியா முல்லைத்தீவு   போன்ற பகுதிகளில் வீடுகள் கொடுத்தாலும் போய்யிருக்கப்போவதில்லை   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

தமிழர்களின் வீடுகளில் இருக்க ஆள்களில்ல...மனிதர்களில்லை  பூனைகள் நாய்கள் ஆடுகள் மாடுகள்   அந்த வீடுகளில் வாழ்கின்றன     🤣உறவுகளையும்  இருக்க விடமாட்டார்கள்     வீடுகள் இல்லாத தமிழர்கள் கூட யாழ்ப்பாணத்தை விட்டுவிடக்கூடிய நிலையில் இல்லை  அதாவது கிளிநொச்சி வவுனியா முல்லைத்தீவு   போன்ற பகுதிகளில் வீடுகள் கொடுத்தாலும் போய்யிருக்கப்போவதில்லை   

கந்தையா அண்ணை…
இதுக்கு என்ன தீர்வு என்ன என்பதையும் நீங்களே சொல்லி விடுங்கள். 😂

(கதையோடை கதையாய்…  கருவேப்பிலை விதைகள் முளைத்து விட்டதா?
என்னுடையது  ஒன்றும் முளைக்கவில்லை.)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2023 at 08:38, தமிழ் சிறி said:

கந்தையா அண்ணை…
இதுக்கு என்ன தீர்வு என்ன என்பதையும் நீங்களே சொல்லி விடுங்கள். 😂

(கதையோடை கதையாய்…  கருவேப்பிலை விதைகள் முளைத்து விட்டதா?
என்னுடையது  ஒன்றும் முளைக்கவில்லை.)

தீர்வு காணக்கூடிய அதிகாரம்  பலம் என்னிடமில்லை  மேலும் நம்முடைய தீர்வை யார் ஏற்று நடைமுறைபடுத்துவார்கள். ?? படிப்படியாக நாடு சிங்கள மயமாக்குவதை தடுக்க முடியாது   

மற்றும் விதைகளை அனுப்பி வைத்தமைக்கு நன்றிகள் பல   ஆனால் அவை வயது போன விதைகள்  முளைக்கவில்லை   மரபணு. விதையோ தெரியவில்லை  இருந்தும் தண்ணீர் விட்டு கொண்டு தான் இருக்கிறேன்    முளைக்கும். என்ற நம்பிக்கையில் 🤣😂🤣🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.