Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேய்ச்சல் நிலம் இன்றி பாரிய பொருளாதாரத்தை இழக்கின்றோம் - மன்னார் அரச அதிபருக்கு மகஜர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   26 OCT, 2023 | 03:25 PM

image

மன்னாரில் மேய்ச்சல் நிலத்துக்காக மிக நீண்ட காலமாக பல்வேறு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எழுத்து மூலமும், நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் பயனற்றுப் போயின. ஆகவே அதிகாரிகள் உடன் இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என கோரி கால்நடை வளர்ப்போர் மகஜர் கையளித்துள்ளனர்.

3.JPG

வியாழக்கிழமை (26) மன்னாரில் கால்நடை வளர்ப்போர் நடாத்திய கவனயீர்ப்பு போராட்டத்தின்போது மன்னார் மாவட்ட செயலாளருக்கு கையளிக்கப்பட்ட மகஜரில் தெரிவித்திருப்பதாவது,

மிக நீண்ட காலமாக பல்வேறு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எழுத்து மூலமும், நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கைவிடுத்தும் பயனற்றுப் போயின.

ஒவ்வொரு வருடமும் மாந்தை மேற்கு இலுப்பைக்கடவை பகுதிக்கு எமது கால்நடைகளைக் கொண்டு போய் பல்வேறு விதமான துன்ப துயரங்களையும் கால்நடை இழப்புக்களையும், மனித இழப்புக்களையும் சந்திக்க நேரிடுவதுடன் பாரிய பொருளாதார இழப்பையும் சந்திக்கின்றோம். அப்பகுதியில் உள்ளவர்களுக்கும் எமக்கும் முரண்பாடும் ஏற்படுகின்றன.

எமது கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான்கண்டல் பகுதியை மேய்ச்சல் நிலமாக பிரகடனப்படுத்த வேண்டும் என பல வருடமாக கோரிக்கை விடுத்ததன் பிரகாரம் பலமுறை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் நடைமுறைச் சாத்தியமாகவில்லை.

கடந்த 12.10.2023 அன்று  வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்பது வேதனைக்குரிய விடயம்.

மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்குவது தொடர்பான விடயத்தில் அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே புலனாகிறது.

எனவே உடனடியாக எமக்குரிய மேய்ச்சல் நிலத்திற்கு தீர்வுகிடைக்காவிட்டால் விரைவில் நடைபெறவுள்ள காலபோகக் கூட்டத்திற்கு எதிராக இடைமறித்து போராட்டம் நடாத்துவதுடன் இவ்வருடம் மாந்தை மேற்குப் பகுதிக்கு கால்நடைகளை கொண்டு செல்ல மாட்டோம் என்பதையும் மிகவும் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆகவே உடனடியாக எமது வேண்டுகோளை நடைமுறைப்படுத்துமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கிறோம் என மன்னார் மாவட்ட செயலாளருக்கு கையளிக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

https://www.virakesari.lk/article/167796

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்கள் சொந்த மண்ணில்  எது எதற்கெல்லாம்  போராட வேண்டியுள்ளது......இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அங்கு மீள குடியேற முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர்கள் சொந்த மண்ணில்  எது எதற்கெல்லாம்  போராட வேண்டியுள்ளது......இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அங்கு மீள குடியேற முடியுமா?

முடியும். இழந்த நிலத்தையும் மீட்க முடியும். இந்த உலகின் இதை செய்துகாட்டிய இனங்கள் உண்டு.

ஆனால் எமது இனத்தால் முடியுமா என்பது கேள்வி குறிதான்.

 நாங்கள் பலஸ்தீனுக்காக யாழ்பாணத்தில் போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் வேளையில் மன்னார் முற்றாக கழவாடப்பட்டிருக்கும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது குறை மன்னாருக்கு இன்னும் அரச அதிபர் நியமிக்கப்படவில்லை. அரச அதிகாரிகள் என்பது மாத முடிவில் சம்பளத்தை எதிர்பார்த்து இருப்பவர்கள். மாடு மேய்ந்தால் என்ன, மக்கள் மேய்ந்தால் என்ன அவர்களுக்கு பிரச்சினை இல்லை.

அது சரி, மலைபோல பாராளுமன்றத்தில் அங்குள்ள இரண்டு பேர் இருக்கிறார்களே. தங்கள் வியாபாரம் எல்லாம் ஓகோ என்று செய்கிறார்களே. அப்ப எதுக்கு இவர்களை எல்லாம் அனுப்புகிறீர்கள். இனியாவது கொஞ்சம் மூளையை பாவியுங்கள். இப்படி சும்மா ஆர்ப்படடம் மட்டும் செய்வதால் ஒரு பிரயோசனமும் இல்லை.

மடடகளப்பிலாவது சிங்களவனின் வேறு விதமான தொந்தரவு இருக்கின்றது. இங்கு என்ன பிரச்சினை? கையாலாகாத அரசியல்வாதிகளும் , அரச உத்தியோகத்தர்களுமிருக்கும் வரைக்கும் ஈழம் என்ன, முழுஇலங்கையும் கொடுத்தாலும் ஒரு துரும்பையும் அசைக்க மாடடார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

மேய்ச்சல் தரையை உடன் விடுவிக்குக முசலிப் பண்ணையாளர்கள் நேற்றுப் போராட்டம்

1197913989.jpeg

மன்னார், கட்டுக்கரைக் குளத்துக்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேய்ச்சல்தரையை விடுவிக்குமாறு வலியுறுத்தி, நானாட்டான்டான்முசலி கால்நடை வளர்ப்போர் நேற்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளர்கள் தெரிவித்ததாவது;
புல்லறுத்தான் கண்டல் மேய்ச்சல் தரையை விடுவிக்குமாறு பல்வேறு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்ச்சியாக எழுத்துமூலம் வலியுறுத்தி வருகின்றோம். நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் மேய்ச்சல்தரை தொடர்பில் தீர்க்கமான எந்தப் பதிலும் இல்லை. கால்நடைகளை மேய்ச்சலுக்காக மாந்தை மேற்கு, இலுப்பைக்கடவை பகுதிகளுக்குக் கொண்டுசெல்ல வேண் டியிருக்கின்றது. இதனால் கால்நடை இழப்புகளை நாம் சந்திக்க வேண்டியி ருக்கின்றது. 

எனவே எமது இடர்பாட் டைக் கருத்திற்கொண்டு எமது கட்டுக்க ரைக்குளத்துக்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் பகுதியை மேய்ச்சல் நிலமாக பிரகடனப்படுத்தி அவற்றை உடன் விடு விக்கவேண்டும் என்றனர்.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணை யில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளு மன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மல நாதன். மெசிடோ நிறுவனத்தின் தலைவர். நானாட்டான் முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க அங்கத்த வர்கள். சிவில் சமூக அமைப்பினர். மதத்தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தின் ஒருபகுதியாக மாவட்டச் செயலகத்துக்கு மனுவும் கையளிக்கப்பட்டது.
 

https://newuthayan.com/article/மேய்ச்சல்_தரையை_உடன்_விடுவிக்குக_முசலிப்_பண்ணையாளர்கள்_நேற்றுப்_போராட்டம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.