Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

9 மாதங்களில், 120 பாடசாலை மாணவர்கள் தொழுநோயால் பாதிப்பு: கொழும்பு, மட்டு மாவட்டங்கள் முதலிரு இடங்களில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
01 NOV, 2023 | 11:46 AM
image

இலங்கையில் கடந்த 9  மாதங்களில், 14 வயதுக்கு உட்பட்ட 120 பாடசாலை மாணவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் கூறுகிறது.

அதிக எண்ணிக்கையான  மாணவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் அந்த எண்ணிக்கை 31 ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 பாடசாலை மாணவர்களும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 11 மாணவர்களும்  இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காலகட்டத்தில், முழு நாட்டிலும் 1150 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/168230

  • கருத்துக்கள உறவுகள்

தொழு நோய் ஏன் உருவாகின்றது. முன்பு இப்படி இல்லையே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தொழு நோய் ஏன் உருவாகின்றது. முன்பு இப்படி இல்லையே.

சுகாதாரமின்மை பிரதான காரணம் என்று நினைக்கிறேன் அண்ணை.

@Justin அண்ணையிடம் மேலதிக தகவல்களை எதிர்பார்க்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி @ஏராளன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் படித்த காலத்தில் தொழுநோய் பற்றி அதிக விழிப்புணர்வு தரப்பட்டது. சுகாதாரம் பாடத்தில் தொழுநோய் சம்மந்தமாக படித்தது உங்களில் பலருக்கு நினைவில் வரலாம். 

நீண்ட காலத்தின் பின் இப்படியோர் செய்தி பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/11/2023 at 05:38, ஏராளன் said:

சுகாதாரமின்மை பிரதான காரணம் என்று நினைக்கிறேன் அண்ணை.

@Justin அண்ணையிடம் மேலதிக தகவல்களை எதிர்பார்க்கலாம்.

 

தொழு நோய் காச நோயைப் (TB) போலவே மிக மெதுவாக வளரும் ஒரு (Mycobacterium) பக்ரீரியாவின் தொற்றினால் ஏற்படுகிறது. காச நோய்க்கெதிராகக் கொடுக்கப் படும் BCG தடுப்பூசி, தொழுநோய்க்கெதிராகவும் பகுதியளவில் பாதுகாப்பைத் தரும், ஆனால் 100 வீத பாதுகாப்பு கிடையாது. எனவே, அடுத்த சிறந்த பாதுகாப்பு வழி, தொழு நோய் இருப்போரைக் கண்டறிந்து, மருத்துவ மனையில் தனிமைப் படுத்தி குணமாக்குவது (இதற்கு நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் இருக்கின்றன, பல மாதங்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், அதன் பின்னர் நோயாளியில் இருந்து தொற்று இன்னொருவருக்குப் பரவும்  வாய்ப்புகள் குறையும்).

இலங்கையில், சில மாவட்டங்களில் தொழு நோய் தொற்றும் வீதம் ஏனைய இடங்களை விட அதிகமாகவே இருந்திருக்கிறது. கொழும்பு, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் எப்போதும் அதிக கேஸ்கள் உருவாகும் இடங்களாக இருந்தன. மட்டு நகரும் இப்போது அதிகரிக்கிறது போல.

ஏராளன் சொல்வது போல,  தனிப்பட்ட சுகாதாரம் காரணமாக இருக்கலாம். சிறு பரப்பளவில் அதிகம் பேர் வசிப்பது, கழிவகற்றலின் குறைபாடுகள், தொற்றுடையவர் மருத்துவம் செய்து கொள்ளாமல்  அருகாமையில் வசிப்பது, என்பன சமூகக் காரணிகளாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.