Jump to content

ஐ.பி.எல் 2024 - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூருவின் தொடர் வெற்றிகளுக்கு முடிவுகட்டிய ராஜஸ்தான் 2ஆவது தகுதிகாணில் ஹைதராபாத்தை சந்திக்கும்

Published By: VISHNU

23 MAY, 2024 | 12:33 AM
image
 

(நெவில் அன்தனி)

அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் புதன்கிழமை (22) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் நீக்கல் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட்களால் வெற்றிகொண்ட ராஜஸ்தான் றோயல்ஸ் 2ஆவது தகுதிகாண் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 6 தொடர்ச்சியான வெற்றிகளுடன் இந்தப் போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொண்டது. ராஜஸ்தான் றோயல்ஸ் 4 தொடர்ச்சியான தோல்விகளுடன் இந்தப் போட்டியை சற்று அவநம்பிக்கையுடன் எதிர்கொண்டது.

ஆனால் பெங்களூருவின் தொடர் வெற்றிகளுக்கு முடிவுகட்டிய ராஜஸ்தான் அவ்வணியை நொக் அவுட் செய்தது.

முதலாவது தகுதிகாண் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிகாண் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் எதிர்த்தாடும்.

இந்தத் தோல்வியின் மூலம் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவினதும் 17 அத்தியாயங்களிலும் அவ்வணிக்காக விளையாடிவந்த விராத் கோஹ்லியினதும் சம்பியனாகும் கனவு மீண்டும் காணல் நீராகிப்போனது.

ஆனால், அப்போட்டியின்போது ஐபிஎல் வரலாற்றில் 8000 ஓட்டங்களைக் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையை விராத் கோஹ்லி நிலைநாட்டினார்.

VIRAT_KOHLI_8000_runs.jpg

252 போட்டிகளில் 8 சதங்கள், 50 அரைச் சதங்கள் உட்பட 8004 ஓடட்ங்களை விராத் கோஹ்லி குவித்துள்ளார்.

இரண்டு 'றோயல்' அணிகள் மோதிய இந்தப் போட்டியில் அதிரடியின் பிரவாகத்தைக் காண முடியவில்லை. ஆனால், சமயோசிதத்துடனும் நிதானம் கலந்த வேகத்துடனும் ஓட்டங்கள் பெறப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

விராத் கோஹ்லி, பவ் டு ப்ளெசிஸ், ரஜாத் பட்டிடார், கெமரன் க்றீன் ஆகிய பெங்களூரு வீரர்களிடமும் யஷஸ்வி ஜய்ஸ்வால், சஞ்சு செம்சன், ரியான் பரக், த்ருவ் ஜுரெல் ஆகிய ராஜஸ்தான் வீரர்களிடமும்  துடுப்பாட்டத்தில் வழமையாக காணப்படும் விசுவரூபம் வெளிப்படவில்லை.

மாறாக இரண்டு அணியினரும் வெற்றியை மாத்திரம் குறிவைத்து விவேகத்துடன் விளையாடியதை அவதானிக்க முடிந்தது. இறுதியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது.

173 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 19 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

யஷஸ்வி ஜய்ஸ்வால், டொம் கொஹ்லர்-கெட்மோ ஆகிய இருவரும் 33 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். கொஹ்லர்-கெட்மோ 20 ஓட்டங்களுடனும் யஷஸ்வி ஜய்ஸ்வால் 45 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

தொடர்ந்து சஞ்சு செம்சன் 17 ஓட்டங்களையும் ரியான் பரக் 36 ஓட்டங்களையும் ஷிம்ரன் ஹெட்மயர் 26 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு தெம்பூட்டினர்.

18ஆவது ஓவரில் ரியான் பரக் , ஷிம்ரன் ஹெட்மயர் ஆகிய இருவரும் ஆட்டம் இழந்ததால் போட்டியில் திருப்பம் ஏற்படுமோ என எண்ணவைத்தது. அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

லொக்கி பேர்கசன் வீசிய 19ஆவது ஓவரில் ரோவ்மன் பவல் முதல் இரண்டு பந்துகளில் பவுண்டறிகளையும் கடைசிப் பந்தில் சிக்ஸையும் விளாசி ராஜஸ்தான் றோயல்ஸின் வெற்றியை உறுதிசெய்தார்.

அவர் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.

விராத் கோஹ்லி, அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் ஆகிய இருவரும் 28 பந்துகளில் 37 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில் பவ் டு ப்ளெசிஸ் 17 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார்.

மொத்த எண்ணிக்கை 56 ஓட்டங்களாக இருந்தபோது விராத் கோஹ்லி 33 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து கெமரன் க்றீன் (27), ரஜாத் பட்டிடார் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதுவே அணியின் சிறந்த இணைப்பாட்டாமாக இருந்தது.

அவுஸ்திரேலியர்களான கெமரன் க்றீன், க்ளென் மெக்ஸ்வெல் ஆகிய இருவரும் 12ஆவது ஓவரில் ரவிச்சந்திரன் அஷ்வினின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர். இந்த ஆட்டமிழப்புகள் பெங்களூரு அணிக்கு பலத்த நெருக்கடியைக் கொடுத்தது.

பட்டிடார் 34 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

மத்தியவரிசையில் மஹிபால் லொம்ரோர் 17 பந்துகளில் 32 ஓட்டங்களையும் தினேஷ் கார்த்திக் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆவேஷ் கான் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ரவிச்சந்திரன் அஷ்வின்.

https://www.virakesari.lk/article/184266

Link to comment
Share on other sites

  • Replies 257
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

SRH vs RR: பேட் கம்மின்ஸ் ஷாபாஸ், அபிஷேக்கை வைத்து போட்ட திட்டம் - சுழலில் சுருண்ட ராஜஸ்தான்

ஐபிஎல் 2024: SRH vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 44 நிமிடங்களுக்கு முன்னர்

“மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் சத்தத்தை நிசப்தமாக்குவதில் இருக்கும் மனநிறைவு வேறு எதிலும் இல்லை.”

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பாக, 2023, நவம்பர் 18ஆம் தேதி ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இப்படிப் பேசினார். மறுநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விராட் கோலி விக்கெட்டை கம்மின்ஸ் வீழ்த்தி மைதானத்தில் இருந்த ஒரு லட்சம் ரசிகர்களையும் நிசப்தமாக்கினார்.

“எங்களுக்கு ஐபிஎல் கோப்பையை வெல்ல உரிமை இருக்கிறது, அந்த நாட்களும் உள்ளன. அடுத்தடுத்து வெற்றி பெறுவோம்.”

ப்ளே ஆஃப் சுற்றில் கொல்கத்தாவிடம் தோற்றபோது 2024, மே 21ஆம் தேதி சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியது. பேட் கம்மின்ஸ் தான் கூறியதைச் செய்து காட்டும் பணியில் இறங்கிவிட்டார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தங்களின் குறைந்த ஸ்கோரை டிபெண்ட் செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி 3வது முறையாக பைனலுக்கு சன்ரைசர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன் 2016, 2018ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு சன்ரைசர்ஸ் அணி தகுதி பெற்றிருந்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு கோப்பைக்காக பலப்பரிட்சை சன்ரைசர்ஸ் அணி நடத்தவுள்ளது.

இதற்கு முன் 2016, 2017 எலிமினேட்டர் சுற்றுகளிலும் 2018ஆம் ஆண்டு 2வது தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும் கொல்கத்தா அணியை சன்ரைசர்ஸ் அணி எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது 5வது முறையாக கொல்கத்தா அணியை நாக்-அவுட்டில் சன்ரைசர்ஸ் சந்திக்கிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. 176 ரன்கள் இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 

ஹீரோ சுழற்பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டம்

ஐபிஎல் 2024: SRH vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனித்துவமான சுழற்பந்துவீச்சாளர்கள் யாருமின்றி பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து ராஜஸ்தான் கதையை முடித்துள்ளார் கேப்டன் கம்மின்ஸ்.

இந்த ஆட்டத்தில் பந்துவீசிய ஷாபாஸ் அகமது, அபிஷேக் ஷர்மா இருவரும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர்கள். அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற ஆட்டங்களில் பந்துவீசிய அனுபவம் இல்லாதவர்கள். ஆனால், இருவரையும் சரியாகப் பயன்படுத்தி, ராஜஸ்தான் பேட்டிங் வரிசையை கம்மின்ஸ் உலுக்கிவிட்டார். ஷாபாஸ், அபிஷேக் இருவரின் பந்துவீச்சு மீதும் கம்மின்ஸ் வைத்திருந்த நம்பிக்கையை இருவரும் காப்பாற்றினர்.

இருபது ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் 9 ஓவர்கள் வீசினர். இதில் ஷாபாஸ், அபிஷேக் தலா 4 ஓவர்கள், மார்க்ரம் ஒரு ஓவர் 3 பேரும் சேர்ந்து 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ராஜஸ்தான் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். அதிலும் ஷாபாஸ், அபிஷேக் இருவரும் ஓவருக்கு சராசரியாக 6 ரன்கள் மட்டுமே வழங்கினர்.

கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியும், கிளாசனுடன் கூட்டணி அமைத்து ஸ்கோர் உயர்வுக்குக் காரணமாக இருந்த ஷாபாஸ் அகமது ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

'இலக்கை அடைந்துவிட்டோம்'

ஐபிஎல் 2024: SRH vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

வெற்றிக்குப் பின் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், “2023ஆம் ஆண்டிலிருந்து சன்ரைசர்ஸ் அணி விளையாடி வருவதைப் பார்த்து வருகிறார்கள். எங்களின் இலக்கு இறுதிப் போட்டிதான் அதை அடைந்துவிட்டோம்."

"எங்கள் பேட்டிங் வலிமை, பந்துவீச்சு திறமை எங்களுக்குத் தெரியும். அதேநேரம், எதிரணியின் பலத்தையும் குறைவாக மதிப்பிடவில்லை. இறுதிப்போட்டி நிச்சயம் கடினமானதாக இருக்கும்," என்று தெரிவித்தார்.

பொய்யான ராஜஸ்தான் கணிப்பு

ராஜஸ்தான் அணி டாஸ் வென்றவுடன் சேப்பாக்கம் ஆடுகளத்தை தவறாகக் கணித்து இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்று எண்ணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.

அது மட்டுமல்லாமல் சேப்பாக்கத்தில் ஸ்குயர் பவுண்டரி அளவு 62 மீட்டராக சிறியதாக இருப்பதால் சேஸிங் செய்துவிடலாம், எளிதாக பவுண்டரி, சிக்ஸர் அடிக்கலாம் என்று ராஜஸ்தான் அணியினர் கணித்தனர். ஆனால், எதுவுமே ராஜஸ்தான் அணி நினைத்தது போன்று நடக்கவில்லை.

சேப்பாக்கத்தில் எதிர்பார்த்த அளவு நேற்று பனிப்பொழிவு இல்லாததால், பந்து காய்ந்தவாறே இருந்ததால் சுழற்பந்துவீச்சுக்கு சிறப்பாக ஒத்துழைத்தது. இதனால்தான் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர்கள் வீசும் பந்து நன்றாகச் சுழன்று, பேட்டர்களை திணறடித்தது. சேப்பாக்கத்தில் பனிப்பொழிவு நேற்று பெரிதாக இல்லாததால் ஆடுகளமும் வறண்டிருந்தது, பந்தும் காய்ந்திருந்ததால் சன்ரைசர்ஸ் அணி பெரிய அதிசயத்தை நிகழ்த்தியது.

 

சன்ரைசர்ஸ் வெற்றிக்குக் காரணம் என்ன?

ஐபிஎல் 2024: SRH vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

சன்ரைசர்ஸ் அணியின் நேற்றைய ஆட்டத்தில் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது கிளாசனின்(50) பொறுமையான பேட்டிங்கும், ஷாபாஸ் அகமது, அபிஷேக் ஷர்மாவின் பந்துவீச்சும்தான். இருவரும் சேர்ந்து ராஜஸ்தான் பேட்டிங் வரிசையின் முதுகெலும்பையே உடைத்துவிட்டனர்.

குறிப்பாக தமிழக வீரர் நடராஜன் 3 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். சன்ரைசர்ஸ் அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு தங்களின் ஸ்கோரை டிபெண்ட் செய்ய உதவியது.

அதிலும் இம்பாக்ட் ப்ளேயராக வந்த ஷாபாஸ் அகமது பேட்டிங்கில் 17 ரன்கள் சேர்த்து கிளாசனுடன் சேர்ந்து 45 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து ஸ்கோர் உயரக் காரணமாக அமைந்தார்.

அது மட்டுமல்லாமல் பந்துவீச்சில் ராஜஸ்தான் பேட்டர் ஜெய்ஸ்வாலை(41) செட்டில் ஆகவிடாமல் விக்கெட்டை வீழ்த்தி ஷாபாஸ் திருப்புமுனையை ஏற்படுத்தினார். 2022க்குப் பின் ஜெய்ஸ்வால் முதல்முறையாக சுழற்பந்துவீச்சில் தனது விக்கெட்டை நேற்று இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் ரியான் பராக், அஸ்வின் இருவரது விக்கெட்டையும் ஷாபாஸ் வீழ்த்தி ஆட்டத்தின் துருப்புச்சீட்டாக இருந்தார்.

ஐபிஎல் 2024: SRH vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

ஏப்ரல் 5ஆம் தேதிக்குப் பின் ஐபிஎல் தொடரில் பந்துவீச வாய்ப்பு பெறாத ஷாபாஸ் நேற்றுதான் பந்துவீசினார். ஆனால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார். அதேபோல அபிஷேக் ஷர்மா ஐபிஎல் தொடரில் 4 ஓவர்களை முழுமையாக 2வது முறையாக நேற்றுதான் வீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

அதிரடி பேட்டரும், பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான அபிஷேக் ஷர்மாவையும் கம்மின்ஸ் நேற்று நன்றாகப் பயன்படுத்தினார். அபிஷேக் ஷர்மா ஓரளவுக்கு பந்துவீசக் கூடியவர் என்றாலும் அவர் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் முழு ஓவர்களையும் வீசியதில்லை.

ஆனால், இடதுகை சுழற்பந்துவீச்சாளரான அபிஷேக் ஷர்மாவை சிறப்பாகப் பயன்படுத்தி 4 ஓவர்கள் வீச வைத்து 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த கம்மின்ஸ் காரணமாக அமைந்தார்.

பேட்டிங்கில் இரு தகுதிச்சுற்றுகளிலும் ஜொலிக்காத அபிஷேக் நேற்று பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டார். இந்த சீசனில் 15 இன்னிங்ஸ்களில் ஆடிய அபிஷேக் ஷர்மா 482 ரன்கள் குவித்து, 200 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

“இந்திய அணியின் சொத்தாக மாறிவரும் அபிஷேக்கை எவ்வாறு தேர்வாளர்கள் உலகக் கோப்பைக்கு தவறவிட்டார்கள் எனத் தெரியவில்லை” என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளார். அபிஷேக், ஷாபாஸ் இருவரும்ம் பந்துவீச வந்த பிறகு 33 பந்துகளாக ராஜஸ்தான் அணி ஒரு பவுண்டரிகூட அடிக்க முடியவில்லை. 4 விக்கெட்டுகளையும் இழந்தது.

 

கிளாசன் எனும் ‘கேம் சேஞ்சர்’

ஐபிஎல் 2024: SRH vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

ஹென்ரிச் கிளாசன் இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு சிறந்த பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும், ஃபினிஷராகவும் கிளாசன் இருக்கிறார்.

கிளாசன் நேற்று களமிறங்கியபோது, சன்ரைசர்ஸ் 99 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது கிளாசன் களமிறங்கி ஆங்கர் ரோல் செய்து, தனது வாய்ப்புக்காகக் காத்திருந்தார்.

இருபது பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து நிதானமாக ஆடிய கிளாசன், சஹல் ஓவரை குறிவைத்து 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என வெளுத்து 33 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

கிளாசன் அடித்த 50 ரன்கள் சன்ரைசர்ஸ் அணி கௌரவமான ஸ்கோரை பெறக் காரணமாக அமைந்தது. ஒருவேளை கிளாசன் ஸ்கோர் செய்யாமல் இருந்திருந்தால், சன்ரைசர்ஸ் அணி 150 ரன்களுக்குள்கூட சுருண்டிருக்கலாம். ஆகவே, கிளாசனின் ஆட்டம்தான் கேம் சேஞ்சராக இருந்தது.

 

ராஜஸ்தான் செய்த தவறுகள்

ஐபிஎல் 2024: SRH vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

ராஜஸ்தான் அணி, ஆடுகளத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்று எண்ணி சேஸிங் செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டது. தொடக்கத்தில் டிரென்ட் போல்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸை சுருட்ட வாய்ப்பை ஏற்படுத்தியும் அதைப் பயன்படுத்தவில்லை.

பேட்டிங்கில் ஜெய்ஸ்வால்(42), துருவ் ஜூரெல்(56) தவிர வேறு எந்த பேட்டர்களும் பங்களிப்பு செய்யவில்லை. ராஜஸ்தான் பந்துவீச்சைப் பொருத்தவரை டிரென்ட் போல்ட், சந்தீப் ஷர்மா, ஆவேஷ்கான் ஆகியோர் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்து சன்ரைசர்ஸ் அணியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

ஒரு கட்டத்தில் 120 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் தடுமாறியது. அந்தத் தருணத்தை இறுகப் பிடித்திருந்தால், நிச்சயம் ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் வந்திருக்கும். ஆனால், அதன் பிறகும் 55 ரன்கள் சேர்க்கவிட்னர்.

 

'ஆடுகளத்தை தவறாகக் கணித்தோம்'

ஐபிஎல் 2024: SRH vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்ஸன் கூறுகையில், “எங்களின் பந்துவீச்சாளர்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். பனிப்பொழிவு இருக்கும் என நாங்கள் கணித்துவிட்டோம். ஆனால், 2வது இன்னிங்ஸில் விக்கெட் வேறுவிதமாகத் திரும்பிவிட்டது."

"எங்களுக்கு எதிராகத் தரமான சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்தினர். அனைவருமே சிறப்பான பங்களிப்பைச் செய்தனர். இந்திய அணிக்கு செறிவு, திறமை மிகுந்த இளைஞர்கள் இந்தத் தொடரில் இந்திய அணிக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்," என்று தெரிவித்தார்.

சேஸிங்கில் சிறப்பாக ஆடக்கூடிய ராஜஸ்தான் அணி நேற்று சொதப்பியது. ஜாஸ் பட்லருக்கு பதிலாக வந்த காட்மோர் குறிப்பிடத்தக்க வகையில் ஆடவில்லை.

கேப்டன் சாம்ஸன் போட்டியின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தவறான ஷாட்டை அடித்து 10 ரன்னில் அபிஷேக் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். நம்பிக்கை நாயகன் ரியான் பராக் 6 ரன்னில் ஷாபாஸ் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். இதில் துருவ் ஜூரெல் மட்டுமே 35 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/c9xxlzy32k8o

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தா vs சன்ரைசர்ஸ்: ஐபிஎல் சாம்பியனை தீர்மானிக்கும் சென்னை ஆடுகளம் யாருக்கு சாதகம்?

KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 26 மே 2024, 03:05 GMT
    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு இறுதிப்போட்டியில் நடைபெறுகிறது.

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ள அணிகள் எந்த பாலபாடத்தையும் கற்காமல் இந்தக் கட்டம் வரை வரவில்லை. ஏறக்குறைய இரு மாதங்களாக நடந்த லீக் சுற்று ஆட்டம், கடும் வெயில் காலம், ஒவ்வொரு அணி நிர்வாகத்தையும், வீரர்களையும் பரிசோதித்து பார்த்துவிட்டது. அணியின் கலாசாரம், பெஞ்ச் பலம், பல்வேறு சூழல்கள், எதிரணிகளுக்கு எதிராக வியூகம், திட்டம் வகுத்தல் ஆகியவற்றை 2 மாத காலம் ஆய்வு செய்ய வைத்தது.

இதுவரையிலான சவால்களையெல்லாம் தாண்டி இறுதிப்போட்டிக்கு வந்துள்ள இரு அணிகளில் கோப்பை யாருக்கு? இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டால் யாருக்கு கோப்பை?

பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய கொல்கத்தா

கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து பேட்டர் ஜேஸன் ராய் விலகியதால் அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்டவர் பில் சால்ட். இங்கிலாந்து அணிக்கு விளையாட செல்லும் முன் கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு தூணாக இவர் இருந்தார். அவர் இல்லாத நிலையில் குர்பாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

சுனில் நரைன் இந்த சீசனில் பேட்டிங்கில் விஸ்வரூபமெடுத்து எதிரணிகளுக்கு சவால் அளித்து வருகிறார். இதுவரை 482 ரன்கள் சேர்த்து 180 ஸ்ட்ரைக் ரேட்டில் நரைன் பேட் செய்து வருகிறார். கடைசி இரு போட்டிகளைத் தவிர்த்து லீக் ஆட்டங்களில் மற்ற அணிகளுக்கு நரைன் பேட்டிங் சிம்மசொப்பனமாகவே இருந்தது.

KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடு வரிசையில் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ், நிதிஷ் ராணா மற்றும் பின்வரிசையில் ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸல், ராமன்தீப் சிங் என அடுத்தடுத்து பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய அணியாக கொல்கத்தா இருக்கிறது. இந்த ஆட்டத்தில் இம்பாக்ட் ப்ளேயர் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார். அந்த வகையில் நிதிஷ் ராணா, வைபவ் அரோரா ஆகிய இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக இருக்கலாம். முதலில் பேட் அல்லது சேஸிங்கைப் பொருத்து இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்படலாம். கொல்கத்தா அணியில் முதல் 7 வரிசை பேட்டர்கள் சுழற்பந்துவீச்சுக்கும், வேகப்பந்துவீச்சுக்கும் எதிராக 150 ஸ்ட்ரைக் ரேட்வைத்துள்ளனர் என்கிறது கிரிக்இன்ஃபோ வலைதள புள்ளிவிவரம்.

பந்துவீச்சில் மிட்ஷெல் ஸ்டார்க் முதல் தகுதிச்சுற்றில் தன்னுடைய பந்துவீச்சின் வீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை எளிதாக்கினார். அந்த தாக்கம் சன்ரைசர்ஸ் அணியில் இன்றும் இருக்கும். இது தவிர பந்தை நன்கு ஸ்விங் செய்யும் வைபவ் அரோரா, நடுப்பகுதி ஓவர்களில் பந்துவீச்சில் வேரியேஷன்கள் செய்யும் ஹர்ஷித் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல், தேவைப்பட்டால் பந்துவீச வெங்கடேஷ் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் புதிரான பந்துவீச்சாளரான வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் இருவரும் எந்த அணியையும் நடுப்பகுதி 8 ஓவர்களில் ரன் குவிக்க விடாமல் செய்து விடுகிறார்கள். இருவரின் பந்துவீச்சு கொல்கத்தாவுக்கு பெரிய பலமாகும்.

 
KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களும் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார்கள். கடந்த 5 போட்டிகளில் மட்டும் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் 47 விக்கெட்டுகளை சாய்த்து, 7.95 எக்னாமி வைத்துள்ளனர். முதல் 8 போட்டிகளில் 31 ரன்கள் சராசரி வைத்திருந்த கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் கடைசி 5 போட்டிகளில் 16 என முன்னேறியுள்ளனர்.

ஆதலால், கடந்த முதல் தகுதிச்சுற்றில் விளையாடிய அதே ப்ளேயிங் லெவன் மாறாமல் வர அதிக வாய்ப்புள்ளது.

சன்ரைசர்ஸ் மீது எதிர்பார்ப்பு

சன்ரைசர்ஸ் அணி பரிசோதனை முயற்சியாக ஷாபாஸ் அகமது, அபிஷேக் ஷர்மாவை ராஜஸ்தானுக்கு எதிராக பந்துவீசச் செய்து வெற்றி பெற்றது. ஆனால், அதே பந்துவீச்சாளர்களுடன் வலிமையான கொல்கத்தாவை எதிர்கொள்வது ஆபத்தானது.

அதேசமயம், கொல்கத்தா அணியில் சுனில் நரைன், வெங்கடேஷ், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் என 4 இடதுகை பேட்டர்கள் இருக்கிறார்கள். இவர்களைச் சமாளிக்க ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர் தேவை என்பதால், விஜயகாந்த் அல்லது மார்க்ரம் இம்பாக்ட் ப்ளேயராக வரலாம். கடந்த சில போட்டிகளாக மார்க்ரம் பந்துவீச்சு, பேட்டிங்கில் ஜொலிக்காததால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார். இந்த ஆட்டத்தில் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.

வேகப்பந்து வீச்சுக்கு உனத் கட்டுக்குப் பதிலாக யான்சென் அல்லது கிளென் பிலிப்ஸ் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.

KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், தொடர்ந்து 2 டக்அவுட் ஆகியிருக்கிறார். கடந்த போட்டியிலும் சொதப்பலாக பேட் செய்தது சன்ரைசர்ஸ் அணிக்கு கவலை தரும் விஷயம். அபிஷேக் ஷர்மாவும் கடந்த ஆட்டத்தில் சொதப்பிவிட்டார். ஆதலால் இருவர் மீதான எதிர்பார்ப்பு பைனலில் அதிகரிக்கும்.

ரஸ்ஸல் பந்துவீச்சுக்கு எதிராக அபிஷேக் ஷர்மா மோசமான ரெக்கார்ட் வைத்துள்ளார். ரஸல் பந்துவீச்சில் 12 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ள அபிஷேக் 2 முறை விக்கெட்டை இழந்துள்ளார். ஆனால், வருண், நரைனுக்கு எதிராக அபிஷேக் 175 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். ஆதலால், இன்று அபிஷேக்கை ஆட்டமிழக்கச் செய்ய தொடக்கத்திலேயே ரஸ்ஸல் கொண்டுவரப்படலாம்.

கொல்கத்தா அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பேட்டர் ஹென்ரிச் கிளாசன். ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் கிளாசன் திருப்பிவிடுவார். முதல் தகுதிச்சுற்றில் வருண், ஸ்டார்க் ஓவருக்கு எதிராக 200 ஸ்ட்ரைக் ரேட்டை கிளாசன் வைத்திருந்தார். சுனில் நரைனுக்கு எதிராக 166 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள கிளாசன் 42 பந்துகளில் ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார். கிளாசன் நங்கூரமிட்டால் சன்ரைசர்ஸ் அணிக்கு பெரிய பலமாகும், அதேநேரத்தில் கொல்கத்தாவுக்கு தலைவலியாகும்.

 
KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ்க்கு 2வது வாய்ப்பு

சன்ரைசர்ஸ் அணி இதுவரை 2016ம் ஆண்டு மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2018ம் ஆண்டுக்குப்பின் 3வது முறையாக பைனலுக்கு சன்ரைசர்ஸ் முன்னேறியுள்ளது.

2021ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கடைசி இடத்தையும், 2022ம் ஆண்டில் 8-வது இடத்தையும் சன்ரைசர்ஸ் பிடித்தது. கடந்த 2 சீசன்களிலும் கொல்கத்தா அணி 7-வது இடத்தைப் பிடித்தது. ஆனால், ஏலத்தில் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20 கோடிக்கு வாங்கி கேப்டனாக்கியது சன்ரைசர்ஸ்.

ஆனால், பதிலடியாக ஐபிஎல் ஏலத்தில் உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான மிட்ஷெல் ஸ்டார்க்கை ரூ.24 கோடிக்கு கொல்கத்தா வாங்கியது. ஸ்டார்க் 2015ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் தொடரில் விளையாடாத நிலையில் நம்பிக்கையுடன் அவரை கொல்கத்தா விலைக்கு வாங்கியது. ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர்(கம்மின்ஸ், ஹெட், ஸ்டார்க்) ஐபிஎல் தொடரில் இரு வெவ்வேறு அணியில் இடம் பெற்று அவர்களுக்குள் நடக்கும் யுத்தமாகவும் இந்த இறுதிப்போட்டி இருக்கப் போகிறது.

இந்த சீசனில் அதிவேகமாக ரன்களைச் சேர்த்த இரு அணிகள் என்றால் அது கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள்தான். இந்த இரு அணிகளுக்கு இடையே சாம்பியன் கோப்பையை கைப்பற்ற நடக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

கொல்கத்தா அணி கடந்த 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கவுதம் கம்பீர் கேப்டன்ஷியில் வென்றது. அதே கவுதம் கம்பீர்தான் இப்போது கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக வந்து, அந்த அணி வலுவாக உருவெடுத்து இறுதிப்போட்டி வரை வந்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

அது மட்டுமல்லாமல் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 2வது முறையாக தான் கேப்டனாக பொறுப்பேற்ற அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்துள்ளார். இதற்கு முன் டெல்லி கேப்டல்ஸ் அணியை பைனலுக்கு ஸ்ரேயாஸ் கேப்டன்ஷிப் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 2016ம் ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபின் 2வது முறையாக சாம்பியன் பட்டத்திற்காக மல்லுக்கட்டுகிறது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், தான் சார்ந்திருக்கும் ஆஸ்திரேலிய அணிக்காக ஆஷஸ் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றைப் பெற்றுக்கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக சன்ரைசர்ஸ் அணிக்கும் பொறுப்பேற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி?

சென்னையில் நேற்று மாலை திடீரென மழை பெய்ததையடுத்து கொல்கத்தா அணியின் பயிற்சி பாதியிலேயே முடிக்கப்பட்டது. ஆனால் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் மழை பெய்ய சிறிதளவு மட்டுமே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய கணிப்பு கூறுகிறது.

சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு மண் கொண்ட விக்கெட்டுக்குப் பதிலாக சிவப்பு மண் கொண்ட விக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஆடுகளம் பேட்டர்களுக்கு விருந்தாக இருக்கும். இரவு நேரப் பனிப்பொழிவை சரியாகக் கணித்து டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்ய வேண்டும்.

சேப்பாக்கம் மைதானத்தைப் பொருத்தவரை ஐபிஎல் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிகள் 49 வெற்றிகளைப் பெற்றுள்ளன, அதாவது 58.33 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொடரில் தடாலடி பேட்டிங்கால் எதிரணிகளை கலங்கடித்த சன்ரைசர்ஸ் அணி முதல் பேட்டிங் செய்தே அதிக வெற்றிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சேஸிங் செய்த அணிகள் 35 வெற்றிகளைப் பெற்று வெற்றி சதவீதம் 35 % ஆக இருக்கிறது. இந்த சிவப்பு மண் விக்கெட் பயன்படுத்தப்பட்டால் சராசரியாக 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும். ஒருவேளை கருப்பு மண் விக்கெட்டாக இருந்தால் 165 ரன்கள்தான் சராசரி.

KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதுவரை நேருக்கு நேர்

கொல்கத்தா அணியும், சன்ரைசர்ஸ் அணியும் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 18 வெற்றிகளும், சன்ரைசர்ஸ் 9 வெற்றிகளும் பெற்றுள்ளன. இன்று ஆட்டம் நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒருமுறை மட்டுமே கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகள் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணியே வென்றுள்ளது.

அது மட்டுமல்லாமல் கடைசியாக இரு அணிகளும் மோதிக்கொண்ட 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் கொல்கத்தா அணி வென்றுள்ளது, 2023, ஏப்ரல் 14ம் தேதி நடந்த ஆட்டத்தில் மட்டும் சன்ரைசர்ஸ் வென்றது. இந்த சீசனில் இருமுறை இரு அணிகளும் மோதிக்கொண்ட நிலையில் அதில் இரண்டிலுமே கொல்கத்தா அணிதான் வென்றது.

ஆக, சன்ரைசர்ஸ் அணியை கடந்த காலங்களில் இருந்து தனது பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் மூலம் கொல்கத்தா அணி ஆதிக்கம் செய்துவருகிறது என்பது தெரியவருகிறது.

இந்த சீசனில் கொல்கத்தா அணியிடம் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃபின் முதல் தகுதிச்சுற்றிலும் சன்ரைசர்ஸ் அணி தோற்று இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது. ஐபிஎல் வரலாற்றில் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃப் சுற்றிலும் ஒரு அணியிடம் தோற்ற அணி, பைனலில் வென்று சாம்பியன் பட்டம் ஒருமுறை மட்டும் வென்றுள்ளது. அது மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான். 2017ம் ஆண்டு புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியிடம் லீக், தகுதிச்சுற்றில் தோற்று பைனலில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.

இந்த முறை கொல்கத்தா அணியை சன்ரைசர்ஸ் அணி வீழ்த்தினால், அந்த வரிசையில் இடம்பிடிக்கும் 2வது அணி என்ற புகழைப் பெறும்.

 
KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

மழை பெய்தால் என்ன ஆகும்?

ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்காக நாளை ஒருநாள் (திங்கட்கிழமை) ரிசர்வ் டே-ஆக வைக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இன்று மழை பெய்து ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டால் நாளைய தினம் போட்டி விட்ட இடத்தில் அதாவது எந்த ஓவரில் போட்டி தடைபட்டதோ அதில் இருந்து அப்படியே தொடரும்.

ரிசர்வ் நாளிலும்(திங்கட்கிழமை) மழை பெய்தால் 5 ஓவர்கள் வீச வைத்து வெற்றியாளர் யார் என்பது முடிவு செய்யப்படும். ஒருவேளை 5 ஓவர்களும் வீச முடியாத அளவு காலநிலை இருந்தால், சூப்பர் ஓவர் வீசப்பட்டு வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார்.

ஒருவேளை சூப்பர் ஓவரும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், கொல்கத்தா அணிதான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தமையால், அந்த அணி சாம்பியனாக அறிவிக்கப்படும்.

https://www.bbc.com/tamil/articles/c511vew4781o

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Sunrisers Hyderabad FlagSunrisers Hyderabad     (18.3/20 ov) 113/10

SRH chose to bat.

Current RR: 6.10    • Last 5 ov (RR): 26/3 (5.20)

Win Probability:SRH 5.91%  KKR 94.09%

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IPL 2024 கிண்ணத்தை சுவீகரித்தது கொல்கத்தா நைட்ரைடஸ்

Published By: VISHNU

26 MAY, 2024 | 10:46 PM
image
 

இந்தியன் பிறீமியர் லீக் 2024 இருபது 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் அரங்கில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமானது.

கிண்ணத்தை தன்வசப்படுத்து நோக்கில் இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதியதில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து, 18.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றது.

114 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடஸ் அணி, 10.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

கொல்கத்தா நைட்ரைடஸ் அணி சார்பாக Venkatesh Iyer ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும், Rahmanullah Gurbaz 39 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழி வகுத்தனர்.

https://www.virakesari.lk/article/184561

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தா சாதனைமேல் சாதனை! கோப்பை வெல்ல காரணமான 6 அம்சங்கள்

KKR vs SRH

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

2015ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஃபைனல் ஆட்டம் போன்றே நேற்றைய 2024 சீசனின் ஐபிஎல் டி20 தொடரின் இறுதி ஆட்டமும் அமைந்திருந்தது.

2015ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் மெக்கலம் தலைமையிலான நியூசிலாந்து அணியின் பேட்டிங் முதுகெலும்பை மிட்ஷெல் ஸ்டார்க் தொடக்கத்திலேயே உடைத்து எறிந்தார். அதேபோன்ற சம்பவத்தை நேற்றைய இறுதி ஆட்டத்தை செய்து சன்ரைசர்ஸ் அணியை வதம் செய்துவிட்டார்.

கொல்கத்தா அணி ஏறக்குறைய 10 ஆண்டுகள் காத்திருப்புக்குப்பின் 3வது முறையாக ஐபிஎல் டி20 சாம்பியன்ஷிப் கோப்பையை கைகளில் ஏந்தி நேற்று மகிழ்ந்தது. கொல்கத்தா கோப்பையை ஏந்தும் தருணத்தில் முக்கியமான ஒற்றுமை என்னவென்றால், “ஜி.ஜி.” (GG)மட்டும்தான்.

2012ம் ஆண்டு, 2014ம் ஆண்டு கொல்கத்தா சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபோதும் ஜிஜி இருந்தார், 10 ஆண்டுகளுக்குப்பின் கோப்பையை வெல்லும்போதும் ஜிஜி அணியில் இருந்தார். ஆனால், வீரராக அல்ல “மென்ட்டராக” இருக்கிறார். “இவர் யாரென்று புரிகிறதா…தீ என்று தெரிகிறதா” என்பதைப் போல், கவுதம் கம்பீர்தான் கொல்கத்தா வெற்றிக்கு சூத்திரதாரியாக இருந்தார்.

இந்தியாவில் 3 முறையும் வெற்றி

கொல்கத்தா அணி இதுவரை 4 முறை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. அதில் 3 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் நடந்த ஐபிஎல் ஃபைனல்களில் கொல்கத்தா தகுதிபெற்ற 3 தொடர்களிலும் கோப்பையைக் கைப்பற்றியது. 2021ம் ஆண்டு ஃபைனல் துபாயில் நடந்தபோது, சிஎஸ்கே அணியிடம் கொல்கத்தா தோற்றது.

தென் மாநிலங்களுக்கும் கொல்கத்தாவுக்கும் ஒற்றுமை இருக்கிறது, இதுவரை கைப்பற்றிய 3 சாம்பியன் பட்டங்களும் தென் மாநிலங்களில் நடந்த ஃபைனலில் என்பது குறிப்பிடத்தக்கது. 2012(சென்னை), 2014(பெங்களூரு), மீண்டும் 2024(சென்னை) ஆகியவற்றில் கொல்கத்தா அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 114 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 57 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்து 3வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொல்கத்தா அணியின் சாதனைகள்

  • 2024ம் ஆண்டு சீசனில் கொல்கத்தா அணி மொத்தம் லீக் சுற்றில் 14 போட்டிகள், ப்ளே ஆஃப், ஃபைனல் என 16 போட்டிகளில் 3 ஆட்டங்களில் மட்டுமே தோற்று, சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. 2008ம் ஆண்டு முதல்முறையாக பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப்பின் குறைந்த போட்டிகளில் தோற்று கோப்பையை வென்ற அணியாக கொல்கத்தா அணி மாறியுள்ளது.
  • ப்ளே ஆஃப் போட்டியிலும், ஃபைனலிலும் அதிகமான பந்துகள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணி கொல்கத்தா அணிதான். ஃபைனலில் 57 பந்துகள் மீதமிருக்கையில் சன்ரைசர்ஸ் அணியை கொல்கத்தா வீழ்த்தியது.
  • இந்த சீசனில் மட்டும கொல்கத்தா அணி, தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட எதிரணிகளை 6 முறை ஆல்அவுட் செய்துள்ளது. ஒரு சீசனில் ஒரு அணி 6 முறை எதிரணிகளை ஆல்அவுட் செய்தது இதுதான் முதல்முறை. இதற்கு முன் 2008, 2010ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் 4 முறை எதிரணிகளை ஆல்அவுட் செய்திருந்தது.
  • கொல்கத்தா அணி இந்தியாவில் நடந்த 3 ஃபைனல்களிலும் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று 100% வெற்றியை உறுதி செய்துள்ளது. 2012, 2014, ஆகிய ஆண்டுகளுக்குப்பின் 2024ல் கோப்பையை கொல்கத்தா கைப்பற்றியுள்ளது.
  • இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் 56 டாட் பந்துகளை சன்ரைசர்ஸ் அணிக்கு வீசினர். ஐபிஎல் தொடரின் 17 ஆண்டுகால வரலாற்றில் இறுதிப்போட்டியில் ஒரு அணி 56 டாட் பந்துகளை வீசியது இதுதான் முதல்முறையாகும்.

'நாக் அவுட்' நாயகன் ஸ்டார்க்

இறுதிப்போட்டி பிசுபிசுத்து, ஒருதரப்பாக மாறியதற்கு மூல காரணமே கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க் மட்டும்தான். ஃபைனலில் ரன் மழையை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களை ஸ்டார்க் தனது அற்புதமான, மாயாஜால பந்துவீச்சால் ஏமாற்றி, வெறும் 29 ஓவர்களில் முடிக்கவைத்துவிட்டார்.

முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்ற மிட்ஷெல் ஸ்டார்க், இறுதிப் போட்டியிலும் 2 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருதை பெற்றார். ப்ளே ஆஃப் சுற்றில் 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற முதல் பந்துவீச்சாளராக ஸ்ட்ராக் உருவாகினார்.

 
KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரூ.24 கோடி கொடுத்தது சரிதான் என நிரூபித்த ஸ்டார்க்

ஐபிஎல் ஏலத்தில் ரூ.24 கோடிக்கு மிட்ஷெல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி வாங்கியபோது மென்ட்டர் கவுதம் கம்பீர் அனைவராலும் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாக்கப்பட்டார். 2015க்குப்பின் ஐபிஎல் தொடருக்குள் வரும் ஸ்டார்க் எப்படி பந்துவீசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

சிஎஸ்கே அணிக்கு எதிராக கொல்கத்தா அணி தோற்றபோது ஸ்டார்க் ஒருவிக்கெட் கூட எடுக்காதபோது அவருக்கான ஐபிஎல் விலை பெரிதாக விமர்சிக்கப்பட்டது. லக்னெள மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் ஸ்டார்க் மோசமான பந்துவீச்சு இன்னும் விமர்சனத்தை கூர்மைப்படுத்தியது.

ஆனால் மனம் தளராத ஸ்டார்க் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 'கம்பேக்' கொடுத்தார். அதன்பின் முதல் தகுதிச்சுற்றில் சன்ரைசர்ஸ் அணிக்கு பேரதிர்ச்சி அளித்து கொல்கத்தாவின் வெற்றிக்கும், இறுதிப்போட்டிக்கு செல்வதற்கும் ஸ்டார்க் பந்துவீச்சு முக்கியக் காரணமாக அமைந்தது.

இறுதி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் பேட்டிங் அஸ்திவாரத்தையே வேரோடு பிடுங்கி எறிந்ததுபோல் ஸ்டார்க்கின் துல்லியமான பந்துவீச்சு அமைந்தது. அதிலும் அபிஷேக் ஷர்மாவை க்ளீன் போல்டாக்கிய ஸ்டார்க்கின் பந்துவீச்சு இந்த சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும் என்று கூறலாம்.

தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தியதால், ஸ்ட்ரைக்கை அபிஷேக் வைத்திருந்தார். முதல்பந்தில் இருந்து லென்த்தை மாற்றாமல் பந்தை வெளியே ஸ்விங் செய்தார். அபிஷேக்கும் முதல் 3 பந்துகளில் பீட்டன் ஆகி, 4வது பந்தில் 2 ரன்கள் சேர்த்தார். ஆனால், 5வது பந்தில் நினைத்தது நடந்தது.

உண்மையில் முதல் தரமான டெஸ்ட் பந்துவீச்சு, இந்த சீசனில் மாஸ்டர்கிளாஸ் பந்துவீச்சு என்று சொல்ல வேண்டும். சரியான லென்த்தில் பந்து பிட்ச் ஆகி, அபிஷேக்கை நோக்கிச் சென்ற பந்து அவரின் அருகே சென்றபோது லேசாக அவுட் ஸ்விங் ஆகி அபிஷேக்கை ஏமாற்றி ஸ்டெம்ப்பை பதம்பார்த்து சென்றது.

இந்த ஒரு விக்கெட் மூலம் ஸ்டார்க் தனக்கு வழங்கப்பட்ட ரூ.24 கோடி சரியானது என்பதை நிரூபித்து வெற்றிக்கு அச்சாரமிட்டு சென்றார்.

 
KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொல்கத்தா சாம்பியன்ஷிப் வெல்ல காரணங்கள்

  • முதலில் மென்ட்டராக வந்த கவுதம் கம்பீர். ஏற்கெனவே கம்பீர் தலைமையில் 2 சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணி, அவரை மென்ட்டராக அமைத்ததில் இருந்து புதிய உத்வேகத்தைப் பெற்றது. லக்னெள அணி கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட கம்பீர் முக்கியக் காரணமாக அமைந்திருந்தார். கொல்கத்தா அணிக்கு மென்டராக கம்பீர் வந்தபின் அவரின் அணுகுமுறை, வீரர்களுக்கு வழங்கிய சுதந்திரம், கட்டுக்கோப்பு ஆகியவை வெற்றிக்கு முதல் காரணம்.
  • இரண்டாவதாக அணியின் ப்ளேயிங் லெவனில் பெரிதாக மாற்றம் செய்யாமல் அந்த “கோர் டீம்” ஒற்றுமையை, தொடர்ந்து பராமரித்து வந்தது. சில போட்டிகளில் வேண்டுமென்றால், வெங்கடேஷுக்குப் பதிலாக ரகுவன்ஷி களமிறங்கி இருக்கலாம். மற்ற வகையில் ப்ளேயிங் லெவனில் மாற்றமில்லாமல் சென்றது.
  • 3வதாக சுனில் நரைன், பில்சால்ட் கூட்டணி கொல்கத்தாவின் பெரும்பாலான வெற்றியை பவர்ப்ளே ஓவர்களிலேயே உறுதி செய்தனர். எந்த எதிரணியின் பந்துவீச்சையும் உடைத்தெறியும் அதிரடி தொடக்கக் கூட்டணியாக வலம்வந்தனர். இந்த சீசனில் இரு பெரிய அதிரடி பேட்டர்கள் வெற்றியின் சுமையை தங்களின் தோளில் சுமந்தது 3வது காரணமாகும்.
  • 4வதாக வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோரின் சுழற்பந்துவீச்சு. இருவரும் சேர்ந்து நடுப்பகுதி ஓவர்களில் அனைத்து அணிகளையும் ஆதிக்கம் செய்து, ஆட்டத்தை திருப்பிவிட்டனர். இருவரும் ரன்களை விட்டிருந்தாலும், நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டத்தை திசைதிருப்பும் மந்திரக் கோல்களை இருவரும் தங்கள் விரல்களில் வைத்திருந்தனர். வேறு எந்த சுழற்பந்துவீச்சாளர்களையும் நம்பாத கொல்கத்தா நிர்வாகம் இருவரை நம்பியே இந்த சீசன் முழுவதும் களமிறங்கியது. அதிலும் வருண் சக்ரவர்த்தி 2023 சீசன் தொடங்கியதில் இருந்து 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இந்த 2 சீசன்களில் அதிக விக்கெட்டுகளை எந்த சுழற்பந்துவீச்சாளர்களும், வேகப்பந்துவீச்சாளர்களும் வீசாத நிலையில் அந்த இடத்தை வருண் நிரப்பியுள்ளார். 27 இன்னிங்ஸ்களில் விளையாடிய வருண் 40 விக்கெட்டுகளை வீழ்த்தி, 8.16 எக்கனாமி வைத்துள்ளார்.
  • 5வதாக மிட்ஷெல் ஸ்டார்க் பந்துவீச்சு. ஆஸ்திரேலிய வீரர்கள் பெரும்பாலும் நாக்அவுட் போட்டிகள் என்றாலே 100 சதவீதம் தொழில்முறை கிரிக்கெட்டை விளையாடிவிடுவார்கள். எந்தவிதமான சமரசமும் ஆட்டத்தில் இருக்காது என்பதை ஸ்டார்க் நிரூபித்தார். 13 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்தான் ஸ்டார்க் வீழ்த்தி இருந்தாலும், கடைசியாக அவர் வீழ்த்திய 5 விக்கெட்டுகள் கேம் சேஞ்சிங் விக்கெட்டுகளாகும். முதல் தகுதிச்சுற்றில் ஸ்டார்க் வீழ்த்திய 3 விக்கெட்டுகள், இறுதி ஆட்டத்தில் வீழ்த்திய 2 விக்கெட்டுகள் கொல்கத்தாவுக்கு கோப்பையை உறுதி செய்தது.
  • 6-வதாக ஆந்த்ரே ரஸலை குறிப்பிடலாம். கொல்கத்தா அணிக்கு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வீரர்கள் பங்களிப்பு செய்திருந்தாலும், வந்து சென்றாலும், 2012ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நிலையான பங்களிப்பை பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அளித்து வருபவர் ரஸல். இறுதி ஆட்டத்தில் ரஸல் தனது பந்துவீச்சு வேரியேஷனில் எடுத்த 3 விக்கெட்டுகளும் சன்ரைசர்ஸ் பேட்டிங் முதுகெலும்பை உடைத்து எறிந்தன. தேவைப்படும் நேரத்தில் பேட்டர் அவதாரம், பந்துவீச்சாளர் அவதாரம் எடுத்து கொல்கத்தா அணிக்கு தூணாக இருந்து வருகிறார் ரஸல்.
 
KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

முழுமையான வெற்றி

கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் “இந்த வெற்றி முழுமையானது. இதைத்தான் வீரர்களிடம் கேட்டோம், அதை வழங்கியுள்ளனர். இந்த வெற்றியின் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நாங்கள் முதலில் பந்துவீசியது எங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். அனைத்துமே எங்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்த சீசன் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு வாழ்த்துகள். அதிக அழுத்தம் கொண்ட ஆட்டத்தில் ஸ்டார்க் சிறப்பாக செயல்பட்டார்.

இளைஞர்கள் வளரும் வீரர்கள் அதிகம் கற்க வேண்டும். எப்போதும் மந்திரக்கோலை கையில் வைத்துக்கொண்டு எப்போது பந்துவீச என ரஸல் என்னிடம் கேட்டுக்கொண்டே இருப்பார். பெரும்பாலான ஆட்டங்களில் திருப்புமுனையை ரஸல் தனது பந்துவீச்சால் ஏற்படுத்திக் கொடுத்தார். ஃபைனலில் எங்களுக்கான வெற்றியை வெங்கடேஷ் எளிதாக்கினார். ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்தனர். எந்த தனிநபரும் இதற்கு சொந்தம் கொண்டாட முடியாது, இது குழுவின் வெற்றி, முழுமையான வெற்றி” எனத் தெரிவித்தார்.

சன்ரைசர்ஸ் அணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பாராட்டு

சன்ரைசர்ஸ் அணி 2வது இடம் பெற்றதற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது எக்ஸ் தளத்தில் படத்தை பதிவிட்டு பாராட்டுத் தெரிவித்திருந்தது. அதில் “சன்ரைசர்ஸ் அணியை மதிக்கிறோம். ஒரு மோசமான ஆட்டம், ஒட்டுமொத்த அற்புதமான சீசனையும் எந்தவிதத்திலும் விவரிக்காது. 2024 ஐபிஎல் சீசனில் மறக்கமுடியாத சில பங்களிப்புகளை வழங்கினீர்கள், சீசனின் டாப் ஒன்னாகவும் இருந்தீர்கள்” என தெரிவித்துள்ளது.

KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

"எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை"

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “கொல்கத்தா அணியினர் சிறப்பாகப் பந்துவீசினர், நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். எங்களுக்கு எந்த வாய்ப்பையும் அவர்கள் வழங்கவில்லை. அதாவது ஆமதாபாத் ஆட்டம்போல் இதுவும் அமைந்தது. சேப்பாக்கம் விக்கெட்டை புரிந்துகொள்ள முடியவில்லை, 200 அடிக்கும் விக்கெட்போல் இல்லை. 160 ரன்கள்தான் சேர்க்க முடியும். 250 ரன்களுக்கு மேல் 3 முறை இந்த சீசனில் அடித்தது இந்த சீசனில் மறக்க முடியாதது. எங்களுக்கு இது மிகப்பெரிய சீசனாக அமைந்தது. இந்த அணி வீரர்களோடு, சப்போர்ட் ஸ்டாப்களுடன் அதிகமாக இதற்குமுன் பணியாற்றியதில்லை, ஆனால் சீசன் முடியும் தருவாயில் அவர்களின் நெருக்கம் அதிகமாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

மிரட்டலான அணியாக மாறிய சன்ரைசர்ஸ்

2024 சீசன் சன்ரைசர்ஸ் அணிக்கு மறக்க முடியாத சீசனாக அமைந்திருந்தது. இந்த சீசனில்தான் அதிகபட்ச ரன்களை(287) அடித்து, சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்தது. அதே சன்ரைசர்ஸ் அணிதான் ஃபைனலில் 113 ரன்களுக்குச் சுருண்டு குறைந்தபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தது.

பேட்டிங்கில் அசுரத்தனமாக செயல்பட்டு எதிரணிகளின் நம்பிக்கையை உடைக்கும் வகையில் சன்ரைசர்ஸ் அணி செயல்பட்டது. தொடக்கத்திலிருந்தே பேஸ்பால் கிரிக்கெட் உத்தியை கையில் எடுத்த சன்ரைசர்ஸ் அணி அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட்டை தயார் செய்தது. கொல்கத்தா அணிக்கு நரைன், சால்ட் எவ்வாறு வலுவான தொடக்கத்தை அளித்தார்களோ அதேபோன்ற தொடக்கத்தை இருவரும் வழங்கினர். இருவரின் பேட்டிங்கும் சன்ரைசர்ஸ் அணிக்கு நினைத்துப் பார்க்க முடியாத வெற்றிகளை வாரிக்கொடுத்தன.

சன்ரைசர்ஸ் அணியை நிர்வகிக்கவே, வழிநடத்தவே ரூ.20 கோடிக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸை வாங்கியது நிர்வாகம். பாட் கம்மின்ஸ் கேப்டன் பொறுப்பேற்றபின் ஆட்டத்தின் போக்கிலும், கேப்டன்ஷிப் உத்தியிலும் பல மாற்றங்கள் வந்தன. அந்த மாற்றம் ஒவ்வொரு வெற்றிக்கும் உதவியது. எந்த நேரத்தில் எந்த பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது என தெரிந்து சரியாக கம்மின்ஸ் செயல்பட்டார். குறிப்பாக ப்ளேயிங் லெவனில் பெரிதாக மாற்றம் செய்யாமல் சில மாற்றங்களுடனே கம்மின்ஸ் அற்புதமான கேப்டன்ஷிப்பை செய்து இறுதிப்போட்டிவரை அழைத்து வந்தார்.

சன்ரைசர்ஸ் அணிக்கு பெரிய பலமாக அமைந்து, நடுப்பகுதி ஓவர்களில் அணியை கட்டமைக்கும் பொறுப்பை கிளாசன் பார்த்துக்கொண்டார். கிளாசன் இருக்கும்வரை வெற்றி உறுதியில்லை என்று எதிரணி நம்பும் அளவுக்கு பேட்டிங் இருந்தது. இந்த சீசனில் எதிரணிகளை இரக்கமின்றி வதம் செய்யும் பேட்டராக கிளாசன் இருந்தார்.

ஆனால், டிராவிஸ் ஹெட், அபிஷேக் பேட்டிங்கில் தோல்வி அடைந்தபோது, ஒட்டுமொத்த அணியும் தோல்வி அடைகிறது என்ற ரகசியத்தை கொல்கத்தா அணி கண்டுபிடித்து அந்த அச்சாணிகளை பிடுங்கி சன்ரைசர்ஸ் வண்டியை கவிழ்த்தது. தகுதிச்சுற்றிலும், ஃபைனலிலும் இருவரின் விக்கெட்டுகளை கழற்றியபோதே, பாதி தோல்வியை சன்ரைசர்ஸ் ஒப்புக்கொண்டது.

 
KKR vs SRH

பட மூலாதாரம்,GETTY IMAGES

பரிசுத்தொகை எவ்வளவு?

சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஐபிஎல் 2024 கோப்பையை முன்னாள் வீரர் ரோஜர் பின்னி, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கினார்.

கொல்கத்தா அணியின் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றதற்கான நினைவுப்பரிசு பயிற்சியாளர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு வழங்கப்பட்டது, சாம்பியன்ஷிப் அணிக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பெற்றார். 2வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் அணிக்கு ரூ.12.50 கோடிக்கான காசோலையை அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பெற்றுச் சென்றார்.

யாருக்கு எந்த விருது?

  • வளர்ந்துவரும் வீரருக்கான விருது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு வழங்கப்பட்டது(ரூ.10 லட்சம் பரிசு).
  • 2024 சீசனில் 741 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தனது வசம் வைத்திருந்த விராட் கோலிக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. 2016ம் ஆண்டுக்குப்பின் 2வது முறையாக கோலி ஆரஞ்சு தொப்பி விருது பெற்றார்.
  • அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஊதா தொப்பி விருது பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர் ஹர்சல் படேலுக்கு(24) வழங்கப்பட்டது. இவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது.
  • 2024ம் ஆண்டு சீசனின் விருது(ரூ.10 லட்சம்), மதிப்பு மிக்க வீரர் விருது(ரூ.10லட்சம்) இரண்டையும் கொல்கத்தா ஆல்ரவுண்டர் சுனில் நரைன் பெற்றார்.
  • அதிக சிக்ஸர்கள் அடித்த விருது சன்ரைசர்ஸ் வீரர் அபிஷேக் ஷர்மாவுக்கு(ரூ.10 லட்சம்) வழங்கப்பட்டது.
  • அதிக பவுண்டரி அடித்த விருது சன்ரைசர்ஸ் வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு(ரூ.10 லட்சம்) வழங்கப்பட்டது.
  • சிறந்த ஸ்ட்ரைக் ரேட் விருது டெல்லி கேபிடல்ஸ் தொடக்க ஆட்டக்காரர் ஃப்ரேசர் மெக்ருக்கிற்கு(ரூ.10 லட்சம்) வழங்கப்பட்டது.
  • 2024 சீசனின் சிறந்த கேட்சுக்கான விருது கொல்கத்தா அணி வீரர் ராமன் தீப் சிங்கிற்கு(ரூ.10 லட்சம்) வழங்கப்பட்டது.
  • நேர்மையான அணிக்கான விருது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ரூ.10 லட்சம்) வழங்கப்பட்டது.
  • ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதான வடிவமைப்பாளர்களுக்கு சிறந்த ஆடுகளத்தை வடிவமைத்தமைக்கான விருது (ரூ.10 லட்சம்) வழங்கப்பட்டது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவுதம் கம்பீர்: 'வேகமும் விவேகமும்'  நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் ஆன கதை

கௌதம் கம்பீர்: ' வேகமும் விவேகமும்'  நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் ஆன கதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கௌதம் கம்பீர்
27 மே 2024, 11:15 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

மே 26 இரவு.

சென்னையில் வெப்பநிலை சுமார் 35 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இறுதிப் போட்டியைக் காண சேப்பாக்கம் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். பரபரப்பான சூழல் நிலவியது. மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வீரர்கள் அனைவரும் வியர்வையில் நனைந்திருந்தனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த இலக்கை கொல்கத்தா அணி நெருங்கிக் கொண்டிருந்தது. சுமார் 12 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகத் தெரிந்தது.

அவ்வபோது ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் பக்கம் ஊடக கேமராக்கள் திரும்பின. அவரது அணி விளையாடும் போதெல்லாம், கேமராக்கள் மைதானத்தை ஃபோகஸ் செய்வதைப் போலவே காவ்யா மாறனையும் ஃபோகஸ் செய்வது வழக்கம். கொல்கத்தா அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கவே, காவ்யா கேமராக்களுக்கு பை சொல்லிவிட்டு சிறிது நேரம் போகஸில் இருந்து விலகிச் சென்றார்.

கொல்கத்தாவின் ரிங்கு சிங் போன்ற பல வீரர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தனர். பார்வையாளர்கள் பக்கம் அமர்ந்திருந்த கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் முகத்திலும் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. ஆனால் ஒருவர் மட்டும் அமைதியாக இருந்தார். வெற்றி 100% உறுதியான பிறகு சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் என்பது போன்று அவர் அமைதியாக அமர்ந்திருந்தார்.

அவர்தான் கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர்.

கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அடித்த ஷாட், ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தது. அதுவரை அமைதியாக இருந்த கவுதம் கம்பீர் இப்போது இருக்கையில் இருந்து எழுந்து நின்று வீரர்களைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அடுத்த பந்திலேயே வெங்கடேஷ் அடித்த ஷாட் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 'ஐ.பி.எல் 2024’ சாம்பியன் ஆனது.

கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீரை சுனில் நரைன் கட்டிப்பிடித்து நன்றியுணர்வை வெளிப்படுத்தி உற்சாகத்துடன் அழைத்துச் சென்றார். வாணவேடிக்கைகளால் வானம் ஒளிர்ந்தது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொல்கத்தா அணி இதுவரை மூன்று முறை பெற்றுள்ளது.

கொல்கத்தா அணி மூன்று முறை சாம்பியன் ஆனதற்கு பின்னணியில் இருக்கும் சக்தி - 'கௌதம் கம்பீர்’.

கொல்கத்தா அணி வென்றதும் கவுதம் கம்பீர் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில், "யாருடைய எண்ணங்களும் செயல்களும் உண்மையாக நேர்மையாக இருக்கின்றனவோ, அவர்களின் தேர், ஸ்ரீ கிருஷ்ணரால் இயக்கப்படும்," என்று பதிவிட்டார். 

கவுதம் கம்பீரின் வழிகாட்டுதலின் கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் 2024-இல் சாம்பியன் ஆனது எப்படி?

 
கௌதம் கம்பீர்: ' வேகமும் விவேகமும்'  நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் ஆன கதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கொல்கத்தா அணியுடன் கெளதம் கம்பீர்

கொல்கத்தா அணி, கவுதம் கம்பீர் மற்றும் டீம் இந்தியா

கொல்கத்தா முதன் முதலில் 2012-ஆம் ஆண்டு ஐ.பி.எல் சாம்பியன் ஆனது. அப்போது கவுதம் கம்பீர் அந்த அணியின் கேப்டனாக இருந்தார். 2014-ஆம் ஆண்டு கொல்கத்தா இரண்டாவது முறையாக ஐ.பி.எல் சாம்பியன் ஆன போதும் கெளதம் தான் கேப்டனாக இருந்தார்.

தற்போது கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐ.பி.எல் சாம்பியனாகியுள்ள நிலையில், கவுதம் கம்பீர் ஆலோசகராக உள்ளார். மேலும் கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி மூன்று முறை பிளே-ஆஃப் சுற்றுகளை எட்டியது.

முன்னதாக, 2022, 2023-ஆம் ஆண்டுகளில் ஒரு ஆலோசகராக, லக்னோ அணியை இறுதிப் போட்டிக்கும் மூன்றாவது இடத்திற்கும் அழைத்துச் சென்ற பெருமை கம்பீரையே சேரும். 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றதைத் தொடர்ந்து, கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்குப் போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.பி.எல் வெற்றிக்குப் பிறகு, கம்பீரின் கடந்தகால வெற்றிகளையும் ரசிகர்கள் நினைவு கூர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

2007-இல் நடந்த டி20 உலகக் கோப்பையில் கவுதம் கம்பீர் முக்கியப் பங்கு வகித்தார். இப்போட்டியில் இந்தியா சார்பில் அதிக ரன் குவித்தது கெளதம் கம்பீர் தான். 2011-இல், பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி உலக சாம்பியனான போதும், அப்போட்டியில் கம்பீரின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது.  2011 சர்வதேச ஒருநாள் உலகக் கோப்பையில் (ODI) கம்பீர்,  9 போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் 43.66 சராசரி மற்றும் 85.06 ஸ்டிரைக் ரேட்டில் 393 ரன்கள் எடுத்தார். இதில் 4 அரை சதங்களும் அடங்கும்.

முதல் ஓவரில் இருந்து 42-வது ஓவர் வரை நின்று ஆடிய கம்பீர், 97 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், சிலர் இந்த வெற்றிக்கு கேப்டன் மகேந்திர சிங் தோனியை காரணம் காட்டியதும், கம்பீர் வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

 
கௌதம் கம்பீர்: ' வேகமும் விவேகமும்'  நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் ஆன கதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2012ல் கம்பீர் மற்றும் ஷாருக் கான்

கொல்கத்தா அணிக்குத் திரும்பிய கம்பீர்

கம்பீர்  2023-ஆம் ஆண்டின் இறுதியில், ஒரு ஆலோசகராக மீண்டும் கொல்கத்தா அணிக்குத் திரும்பினார். கம்பீர் மீண்டும் கொல்கத்தா அணிக்கு திரும்பியதால், அதில் பல்வேறு  மாற்றங்களை செய்வார் என்று கருதப்பட்டது.

கம்பீரின் உத்தி என்னவெனில், பில் சால்ட்டுடன் இணைந்து சுனில் நரைனை ஆரம்ப இன்னிங்ஸ் விளையாடச் செய்வது தான். இந்த உத்தி அந்த அணிக்குப் பெரிதும் பயனளித்தது. அணி 8 முறை 200-க்கு மேல் ரன் குவித்தது.

ஒரு அலோசகராக, ஆலோசகராக கம்பீரின் அணுகுமுறையை அணி வீரர் நிதிஷ் ராணாவின் வார்த்தைகளிலிருந்து  புரிந்து கொள்ள முடியும். நிதிஷ் ராணா கூறுகையில், “கௌதம் கம்பீர் எங்கள் அலோசகராக முடிவு செய்தபோது, அவருக்கு நீண்ட குறுஞ்செய்தி அனுப்பி என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். அதற்கு கம்பீர் அளித்த பதில் என்னை ஊக்கப்படுத்தியது. 'நம் அணி மேடையில் நின்று கோப்பையை உயர்த்தும்போது தான் உண்மையில் எனக்கு மகிழ்ச்சியான தருணம்’ என்று  கம்பீர் சொன்னார். கம்பீரின் இந்த வார்த்தைகள் என்றைக்கும் என் மனதில் நிற்கும்,” என்றார்.

கவுதம் கம்பீரின் வியூகத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள நாம் சில மாதங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

டிசம்பர் 2023.

ஐ.பி.எல் வீரர்களின் ஏலம் நடந்த சமயம். அந்த நிகழ்வின் போது மேசையில் கௌதம் கம்பீர் அமர்ந்திருந்தார்.

அப்போது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24 கோடியே 75 லட்சத்துக்கு கொல்கத்தா வாங்கியது. ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு அணி இவ்வளவு விலை கொடுத்து ஒரு வீரரை வாங்கியது இதுவே முதல் முறை. இந்த முடிவு குறித்து அந்த சமயத்தில் சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால் தற்போது அந்த முடிவு சரி என்பது போல், கொல்கத்தா சாம்பியன் ஆனதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சமூக வலைதளங்களில், மிட்செல் ஸ்டார்க்கை தேர்வு செய்ததற்காக கவுதம் கம்பீருக்கு மக்கள் தற்போது நன்றி தெரிவித்து வருகின்றனர். சிலர் ஸ்டார்க்கின் படத்தை வைத்து மீம்ஸ் ஆக பகிர்ந்து வருகின்றனர்.  24 கோடி ரூபாய் வீணாகி விட்டது என்று யாரெல்லாம் சொன்னீர்கள்? என்று கேள்வி எழுப்புவது போன்று மீம்ஸ் பகிரப்படுகிறது.

ஸ்டார்க் மீதான இந்த அன்புக்கு காரணம் - பந்துவீச்சில் மூன்று ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தத் தொடரில் ஸ்டார்க் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்த ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி 14 ஆட்டங்களில் விளையாடியது. ஒன்பது வெற்றி, மூன்றில் தோல்வி. 20 புள்ளிகளுடன் கொல்கத்தா சாம்பியன் ஆனது.

கௌதம் கம்பீர்: ' வேகமும் விவேகமும்'  நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் ஆன கதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கௌதம் கம்பீர் மற்றும் ஷாருக்கான்

கொல்கத்தா அணியும் கெளதம் கம்பீரும்

வெற்றிகளை வசப்படுத்தும் கௌதம் கம்பீரிடம் மந்திரக்கோல் எல்லாம் எதுவும் இல்லை ஆனால் அவர் வகுக்கும் வியூகம்  மிக முக்கியமானது. கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த ஏழு சீசனிலும் கம்பீரின் தலைமைத்துவத்தை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள்.

ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழ் தனது கட்டுரையில் "கொல்கத்தா அணி  சில கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொண்டது. ஆனால் கவுதம் அதற்கான தீர்வுகளை கண்டறிந்து செயல்படுத்தினார். கவுதம் கம்பீர் என்னும் மனிதர் அருகில் இருந்தால் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என்று அணியின் நிர்வாகத்திற்கும் வீரர்களுக்கும் தெரியும். பயிற்சி முகாம்களின் போது, சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரூ ரசல் முக்கியத்துவம் பெறுவதை கம்பீர் உறுதி செய்தார். இதன் விளைவாக, போட்டியில் சுனில் 488 ரன்கள் குவித்து வெற்றி பெற்றார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொல்கத்தா அணியின் வெற்றியில் அணியின் நிர்வாகமும் முக்கிய பங்கு வகித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸின் தாயார் ஆப்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சூழலில், அவர் இந்தியாவில் கொல்கத்தா அணிக்காக விளையாடுவது அணி மீதான அவரது அன்பைக் காட்டுகிறது. அணியை நிர்வகிப்பவர்கள் வீரர்களிடம் நடந்து கொள்ளும் விதம் தான் இந்த அன்புக்கு காரணம்.

ரஹ்மானுல்லா குர்பாஸ் பேசுகையில், “உங்களுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற நிர்வாகம் அமைந்தால் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் கவுதம் சார், ஷாருக் சார், தலைமைப் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் ஆகியோர் வீரர்களை  குடும்பம் போன்று நடத்துவார்கள்," என்றார்.

கௌதம் கம்பீர்: ' வேகமும் விவேகமும்'  நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் ஆன கதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கம்பீர் 2023 இல் லக்னோவின் ஆலோசகராக இருந்த சமயத்தில் கோலியுடன் களத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது

கம்பீரின் பிம்பம்

கவுதம் கம்பீர் எப்போதும் ஆக்ரோஷமாகவும் கோபமாகவும் இருப்பதாக ஒரு பிம்பம் இருக்கும். கம்பீர் மட்டும் இல்லை, பல வீரர்கள் மீது இந்த விமர்சனம் வைக்கப்படுவது வழக்கம். மைதானத்தில் விராட் கோலியுடன் கம்பீர் வாக்குவாதம் செய்ததை ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த ஐ.பி.எல் போட்டியிலும் அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது, ஆனால் இரு வீரர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து சிரித்து கொண்டனர். 'களத்திற்கு வெளியே நண்பர்கள்' என்று கம்பீர் சொல்வது வழக்கம். இந்தக் கூற்றை தனது கிரிக்கெட் வாழ்நாளில் செயல்படுத்தியும் காட்டியிருக்கிறார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஷ்வின் தனது யூடியூப் சேனலில் கம்பீரை நேர்காணல் செய்திருந்தார்.

அதில் "கவுதம் கம்பீர் பற்றி தவறான புரிதல் உள்ளது. ஆனால் அவர் அப்படி இல்லை,” என்று அஷ்வின் கூறினார்.

இந்தக் காணொளியில் கௌதம் கம்பீர், "என்னால் முடிந்தவரை ஆக்ரோஷமாக இருக்க விரும்புகிறேன்," என்று கூறியிருந்தார். "இதில் என்ன தவறு? இது என் இயல்பு. என்னைப் பொறுத்தவரையில் வெற்றி பெறுவது ஒரு ஆசை. நான் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறேன்," என்றார்.

இதே நிகழ்ச்சியில் கம்பீர், "நான் பேசும் போது சிரிப்பதில்லை என்று பலர் சொல்வார்கள். என் முகத்தில் எப்போதும் விளையாட்டு தொடர்பான பதற்றம் இருக்கும். மக்கள் நான் சிரிப்பதைப் பார்ப்பதற்காக வருவதில்லை. நாங்கள் வெற்றி பெறுவதைப் பார்க்கவே வருகிறார்கள். என்னால் இதை மாற்றிக் கொள்ள முடியாது. நான் பாலிவுட் நடிகர் இல்லை. நான் ஒரு கிரிக்கெட் வீரர்,” என்றார்.

கொல்கத்தா அணிக்கு கம்பீர் கேப்டனாக இருந்தபோது விளையாடிய வீரர் பியூஷ் சாவ்லா கூறுகையில், "நல்ல சூழல் இருந்தால், எந்த வீரரை வைத்தும் சிறந்த முடிவுகளைப் பெற முடியும் என்பதை கம்பீர் அறிவார். அவர் கிரிக்கெட்டை மிகவும் அழகாகப் படித்து வைத்திருக்கிறார்,” என்றார்.

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் செய்தியில், முன்னாள் கே.கே.ஆர் வீரர் மன்விந்தர் பிஸ்லா, "கவுதம் கம்பீர் தனது அணியின் வீரருக்காக  நெஞ்சில் புல்லட்டையும் சுமப்பார்," என்று புகழ்ந்திருக்கிறார்.

கௌதம் கம்பீர்: ' வேகமும் விவேகமும்'  நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா ஐபிஎல் சாம்பியன் ஆன கதை

பட மூலாதாரம்,ANI

கம்பீர் கொல்கத்தாவில் நீடிப்பாரா?

ஐ.பி.எல்-லில் கொல்கத்தாவை சாம்பியன் ஆக்கிய ஆலோசகரான கௌதம் கம்பீர் அந்த அணியில் நீடிப்பாரா என்பதுதான் தற்போதைய கேள்வி.

'இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் பொறுப்பேற்க முடியுமா?' என்ற யூகங்களும் உள்ளன.

முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் ESPN Cric Info நிகழ்ச்சியில் பேசுகையில், "எனது பார்வையில்,  கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பார். ஐ.பி.எல் வெற்றி இதனை உறுதி செய்துள்ளது,” என்றார்.

அதே நிகழ்ச்சியில், டாம் மூடி, "முதலில் கொல்கத்தா அணியில் ஒரு ஆலோசகராக தனது இன்னிங்ஸை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று கம்பீர் நினைத்திருக்க கூடும். டீம் இந்தியாவின் பயிற்சியாளராக வருவதைப் பற்றி பின்னர் யோசிக்கலாம் என்று இருக்கிறார் போலும், ஏனென்றால் அது ஒரு பெரிய பொறுப்பு,” என்றார்.

இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் கவுதம் கம்பீர் எந்தளவுக்கு கவனமாக இருக்கிறார் என்ற கேள்விக்கான பதில் விரைவில் தெரியவரும்.

https://www.bbc.com/tamil/articles/ce44j9e2980o

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்த‌வ‌ரை இந்த‌ ஜ‌பிஎல்ல‌ 

மிட்ஷெல் ஸ்டார்க் இர‌ண்டு போட்டியில் தான் சிற‌ப்பாக‌ ப‌ந்து போட்ட‌வ‌ர்

 

இடையில் ஒரு போட்டியில் இவ‌ர் அதிக‌ ர‌ன்ஸ் விட்டு கொடுக்கிறார் என்று கூப்பில் உக்காற‌ வைச்ச‌வை

நேற்றையான் வெற்றிக்கு மிட்ஷெல் ஸ்டார்க்கின் ப‌ங்கு பெரிய‌து

முன்ன‌னி வீர‌ர்க‌ளை ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை அவுட் ஆக்கி விட்டார்......................................................................................

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்த நால்வர் கைது! நேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் தம்பதியினர் உட்பட நால்வரை பிலியந்தலை, படகெத்தர பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸாரின்  விசாரணையில் ” குறித்த சீன நிறுவனத்திற்கு தரம் மற்றும் செயல்திறனைப் பொறுத்து ஒரு வீடியோவிற்கு 50,000 முதல் 100,000  ரூபாய்  வரையில்  சந்தேக நபர்கள் விற்பனை செய்து வந்துள்ளமை” தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388415
    • Published By: DIGITAL DESK 7 17 JUN, 2024 | 02:46 PM   முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து 4238 சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 3389 தமிழ் குடும்பங்களுக்கு காணி இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்றையதினம் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வடமாகாணத்திலே 2415 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம். கிட்டத்தட்ட 5 இலட்சத்தி தொண்ணூறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு காணி இல்லை. ஏற்கனவே விடுதலைபுலிகள் மௌனிக்கப்பட்ட காலங்களிற்கு பின்னர் பூர்விகமான மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்து. 4238 சிங்கள  குடும்பங்களுக்கு காணிகள் வழங்கி வீட்டு வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அரசாங்கம் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்தே வழங்கியிருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் 47455 மொத்த குடும்பங்களும், 140931 மக்கள் தொகையாக காணப்படுகின்றது. இதில் தமிழர்களுடைய பூர்வீக இடங்களில் 4557 குடியமர்த்தப்பட்ட சிங்கள குடும்பங்களை சேர்ந்த 12545 பேரும், முஸ்லீம் மக்களாக 1675 குடும்பங்களை சேர்ந்த 6382 பேரும் தமிழ் மக்களாக 41210 குடும்பங்களை சேர்ந்த 121799 பேருமாக காணப்படுகிறார்கள்.  குறிப்பிட்டு கூறக்கூடிய விடயம் என்னவெனில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசன குளங்கள் அதனோடு சேர்ந்த காணிகள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு 4557 குடும்பங்களில் பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் ஆமையன்குளம், முந்திரிகைகுளம், மறிச்சுக்கட்டி குளம் ஆகிய குளங்களையும் அதனோடு இணைந்த நிலப்பரப்புகளையும் அபகரித்தே சிங்கள மக்களுக்கு வழங்கி தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களையும், குளங்களையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கும் நிலமையை ஆட்சியாளர்கள் கொக்குத்தொடுவாய் , கொக்குளாய், கருநாட்டுக்கேணி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்கள். இது தவிர 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 28676 இளைஞர், யுவதிகள் தமக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் தருமாறு விண்ணப்பித்த ஒரு நடவடிக்கை இருக்கின்றது. அரசாங்கமே விண்ணப்பிக்குமாறு அறிவித்தல் வழங்கியிருந்தார்கள். ஆனால் இன்றுவரைக்கும் அவர்களுக்கான எதுவித காணிகளும் வழங்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/186265
    • 17 JUN, 2024 | 02:28 PM ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிப்பதன் மூலமே வெற்றிக்கான வாய்ப்பாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாளங்குடாவில் புனரமைக்கப்பட்ட வீதி திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் தாளங்குடா கடற்கரை வீதி சுமார் 92இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.   கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.   இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தட்சணாகௌரி தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.      இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர், இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இன்று எந்த கட்சியுமே பலமான நிலையில் இல்லை. ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும்போது சக்திவாய்ந்த தலைவர் ஒருவரை இந்த நாட்டில் தேர்வுசெய்யமுடியும். யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்கு 51வீதமான வாக்குகள் தேவையாகவுள்ளது. அவ்வாறான வாக்குகளைப்பெறும் நிலையானது இன்றைய நிலையில் எந்த கட்சியனாலும் கடுமையான போட்டியாகவே இருக்கும். அதனால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைவரும் இன்றிணையும்போது வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/186267
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.