Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்.பல்கலைக் கழக நினைவு தூபி விவகாரம்; ஊழியருக்கு எதிராக பேராசிரியர்கள் முறைப்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

யாழ்.பல்கலைக் கழக நினைவு தூபி விவகாரம்; ஊழியருக்கு எதிராக பேராசிரியர்கள் முறைப்பாடு.

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்தவரும்,  தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றிவரும் நபருக்கு எதிராகவே இணைய வழி ஊடாக பொலிஸ் மா அதிபருக்கும்( Tell To IGP), யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த நபரை காங்கேசன்துறையில் உள்ள பொலிஸாரின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்துக்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சமூக ஊடக வெளியில் நன்கு அறிப்பட்டவர் என்பதுடன் சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு ஆக்கபூர்வமான தகவல்களை பகிர்ந்து வருவதுடன் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யும் அச்சமின்றி சமூக ஊடக பதிவுகள் மூலம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் உள்ளிட்ட இருவர் மேற்கொண்ட முறைப்பாடுகளையடுத்து அது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள  முகநூல் பதிவு தொடர்பாக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1358458

  • கருத்துக்கள உறவுகள்

எனது படத்துடன் முகநூலில் அவதூறு பரப்பியவருக்கு எதிராகவே முறைப்பாடு செய்தேன்

adminNovember 13, 2023

spacer.png

யாழ் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் நபர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் எனது அனுமதியின்றி எனது புகைப்படத்தை பிரசுரித்து உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டிருந்தார். அதற்கு எதிராகவே நான்  காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் வேல்நம்பி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தொடர்பில் முகநூலில் பதிவிட்ட நபருக்கு எதிராக பேராசிரியர் வேல்நம்பி யாழ்ப்பாண  காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் , அது தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் தூபியுடன் என்னை தொடர்புபடுத்தி, எனது அனுமதியின்றி எனது புகைப்படத்தை பயன்படுத்தி முகநூல்களில் விசமப் பிரச்சாரம் செய்யப்பட்டது.  குறித்த செய்தியை முகநூலில் பதிவிட்ட நபருருக்கு எதிராக யாழ்  காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தேன்.

 காவல்துறை விசாரணைகளில் இருந்து தப்புவதற்காகவும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் முள்ளிவாய்க்கால் தூபி தொடர்பில் தேவையற்ற விடயங்களை என் மீது சுமத்துவதற்காகவும் பொய்யான தகவல்களை குறித்த நபர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அவா்   மேலும் தெரிவித்தார்.
 

https://globaltamilnews.net/2023/197248/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.