Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க தூதருக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் - சந்திம வீரக்கொடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜூலி சங்கிற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் - சந்திம வீரக்கொடி

Published By: VISHNU    22 NOV, 2023 | 09:32 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங்கிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 

தேவையற்ற பரிந்துரைகள் இராஜதந்திர மட்டத்தில் முரண்பாடுகளை ஏற்படுத்தும். குழுவின் தலைவரின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் எமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. முறையான விசாரணைகளை முன்னெடுங்கள் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான சந்திம வீரக்கொடி சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பாராளுமன்றம் எவ்வித கட்டுப்பாடுகளுமில்லாமல்,எண்ணம் போல் செயற்படுகிறது.பாராளுமன்றத்தில் இடம்பெறும் செயற்பாடுகளால் ஒட்டுமொத்த மக்களும்  பாராளுமன்ற கட்டமைப்பை வெறுக்கிறார்கள்.தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரது செயற்பாடுகளினால்  பாராளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 9 (அ) பிரிவில் 'பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை மற்றும் குழுக்களின் அறிக்கைகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் வெளியாட்களுக்கு வழங்குவது தண்டனைக்குரிய குற்றம்' என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

துறைசார் மேற்பார்வை குழுவின் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் கடந்த மாதம் 19 ஆம் திகதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஊடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் பாராளுமன்ற கோட்பாடுகளுக்கு எதிரானது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர' இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு. வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக எச்சரிக்கை விடுக்க முடியுமா?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவின் படுகொலை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த படுகொலை தொடர்பில் துறைசார் மேற்பார்வை குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அத்துடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு  பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே இவ்விடயம் முற்றிலும் தவறானது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகரவின் தன்னிச்சையான  தீர்மானங்களினால் எமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழு ஊடாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/169951

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கத் தூதுவருக்காக பொலிஸாரை காட்டிக் கொடுக்க முடியாது : சரத் வீரசேகர

Published By: VISHNU   23 NOV, 2023 | 01:10 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அமெரிக்க தூதுவர்  ஜூலி சங்கிற்கு சார்பாக செயற்படும் சந்திம வீரக்கொடி போன்றவர்களுக்காக பொலிஸாரை காட்டிக் கொடுக்க முடியாது சந்திம வீரக்கொடி தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினராக உள்ளதால் பல முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

ஆகவே குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குங்கள் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். குழுவின் அனுமதியுடன் தான மூன்று முக்கிய பரிந்துரைகளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்தேன்.

பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி  தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினராக  பதவி வகிக்கிறார்.

ஆனால் அவர் குழுவின் செயற்பாடுகளுக்கு எதிராக  செயற்படுகிறார்.குழுவில் முன்னிலையாகும் அரச அதிகாரிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுகிறார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் ஆகவே உரிய நடவடிக்கை எடுங்கள் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம்  வலியுறுத்தினேன்.

அமெரிக்க தூதுவருக்கு சார்பாக செயற்படும் சந்திம வீரக்கொடி போன்றவர்களுக்காக பொலிஸாரை காட்டிக் கொடுக்க முடியாது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அடிப்படை அறிவில்லாத சந்திம வீரக்கொடி தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினராக உள்ளதால் பல முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.ஆகவே குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/170040

  • கருத்துக்கள உறவுகள்

இவர், ஜெனீவா போய், சிங்கள ராணுவம் பத்தரை மாத்து தங்கம் என்கிற ரீதியில் கதை விட்டுக்கொண்டிருந்தார்.

அமெரிக்கா விசா தர முடியாது என்றவுடன், மேலை நாடுகள் எதுவுமே கொடாது என்பதால், கடுப்பில் நிக்கிறார்.

ஆனால், அந்தம்மா, ஜூலி, இவரை கண்டுகொள்வது போல தெரியவில்லை.

இதுபோலவே உளறிக்கொண்டிருந்த உதயா கம்மன்பிள்ள க்கு, அவுஸ் விசா நிராகரிக்கப்பட்டதால் அதிர்ச்சி ஆகி, அமைதியாகி விட்டார். இவ்வளவுக்கும், அங்கே வாழ்ந்தவர்.

அமைதியான இன்னோருவர், விமல் வீரவன்ச.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

இவர், ஜெனீவா போய், சிங்கள ராணுவம் பத்தரை மாத்து தங்கம் என்கிற ரீதியில் கதை விட்டுக்கொண்டிருந்தார்.

அமெரிக்கா விசா தர முடியாது என்றவுடன், மேலை நாடுகள் எதுவுமே கொடாது என்பதால், கடுப்பில் நிக்கிறார்.

ஆனால், அந்தம்மா, ஜூலி, இவரை கண்டுகொள்வது போல தெரியவில்லை.

இதுபோலவே உளறிக்கொண்டிருந்த உதயா கம்மன்பிள்ள க்கு, அவுஸ் விசா நிராகரிக்கப்பட்டதால் அதிர்ச்சி ஆகி, அமைதியாகி விட்டார். இவ்வளவுக்கும், அங்கே வாழ்ந்தவர்.

அமைதியான இன்னோருவர், விமல் வீரவன்ச.

அவர்களுக்கு தெரியும் இந்த இனவாத நாய்களை எப்படி நடத்த வேண்டுமென்று. சரத் வீரசேகராவின் இந்த வீணான பேச்சுகளைப்பற்றி சந்திமாவீரக்கொடி பாராளுமன்றில் பேசி இருக்க தேவை இல்லை என்றே தோன்றுகின்றது. சீனாவை சாந்தப்படுத்த, அவர்கள் வாங்கிய பணத்துக்காக குரைத்து கொண்டே இருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.