Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலைக்கு சற்றுத் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் : சூறாவளியாக வலுவடையுமாம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
02 DEC, 2023 | 06:51 AM
image

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமென சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், 

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல்  மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில்  100 மில்லிமீற்றரிலும் கூடிய  பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாட்டின் ஏனைய  மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். 

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும். 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக திருகோணமலையிலிருந்து சுமார் 490 கிலோமீற்றர் தொலைவில் தாழ் அமுக்கம் நிலைகொண்டுள்ளது. 

இது விருத்தியடைந்து அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் சக்திமிக்க தாழ்அமுக்கமாக மாற்றமடைவதுடன் நாளையளவில் மேலும் விருத்தியடைந்து சூறாவளியாக வலுவடையும். 

இந்த சூறாவளியானது இலங்கையின் வட கரையை அண்மித்ததாக வடமேற்குத் திசையினூடாக எதிர்வரும் 5 ஆம் திகதியளவில் இந்தியாவின் தமிழ் நாட்டின் வடகரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆகையினால் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அடுத்துவரும் 48 மணித்தியாலங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். 

ஏற்கனவே இக் கடல் பிராந்தியங்களுக்கு சென்றவர்கள் கரைக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு திரும்பிச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

காலி தொடக்கம் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்பாடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/170769

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

weather-alert.jpg

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரங்களுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பரப்புகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது குறித்த கடற்பிராந்தியங்களுக்கு சென்றுள்ள மீனவர்கள் மற்றும் கடற்பயணம் மேற்கொள்வோர் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும் அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த தாழமுக்கம் வலுவடைவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தாழமுக்கமானது இன்று (02) காலை 05.30 அளவில் திருகோணமலையில் இருந்து வடகிழக்காக 380 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.

நாளை அது சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு, வட மேல் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வட மேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் கடும் காற்று வீசக்கூடுமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனிடையே, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/283321

  • கருத்துக்கள உறவுகள்

வானிலை தொடர்பில்  சிவப்பு அறிவிப்பு

வானிலை தொடர்பில்  சிவப்பு அறிவிப்பு

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, தென்மேற்கு வங்கக் கடலின் ஆழம் மற்றும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் பயணிக்கும் மீனவ சமூகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி கடல் பரப்பிற்கு  அண்டிய ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று (03) 11.4° வடக்கு அகலாங்கு மற்றும் 82.5° கிழக்கு நெடுங்கோடு அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்கே சுமார் 325 கி.மீ தொலைவில் சூறாவளியாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புக்களில் பயணிக்க வேண்டாம் என மீனவ சமூகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=180927

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடலில் நிலைகொண்டுள்ள “மிக்ஜம்” ! வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்....

04 DEC, 2023 | 07:20 AM
image
 

மிக்ஜம் சூறாவளியானது வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக சுமார் 365 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது  என சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

வானிலை குறித்து மேலும் கூறுகையில்,

மிக்ஜம் சூறாவளியானது மேலும் தீவிரமைவதுடன் வடமேற்குத் திசையை நோக்கி இலங்கையிலிருந்து அப்பால் நகர்ந்து சென்று இந்தியாவின் தமிழ் நாட்டின் வடகரையை சென்றடையும். 

இதன்பிற்பாடு வடதிசையை நோக்கி திரும்பி நாளையளவில் தென் ஆந்திராப் பிரதேசத்தை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திரிகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக சூறாவளி நிலைகொண்டுள்ளதனால் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் குறிப்பிட்ட கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். 

ஏனைய கடல் பிராந்தியங்களுக்கு செல்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/170898

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.