Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசிற்கு சொந்தமான அனைத்து பால் பண்ணைகளையும் இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்க நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு இந்திய மற்றும் இலங்கை நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சிக்காக தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான அனைத்து பண்ணைகளையும் குத்தகைக்கு வழங்குவதற்கான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

அதன்படி, தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 32,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட32 பண்ணைகள் குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன. மேலும் விலங்குகள் மற்றும் நிலங்களின் மதிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவின் அமுல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கண்காணிப்புச் சுற்றுப்பயணத்திற்காக சம்பந்தப்பட்ட பண்ணைகளுக்குச் சென்றதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நாட்டில் கால்நடை உற்பத்தியை அதிகரிப்பதற்காக NLDB மற்றும் Milco ஆகிய நிறுவனங்கள் பல வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும், அந்தத் துறையில் எதிர்பார்த்த அபிவிருத்தி ஏற்படவில்லை என தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யூ.சிறில் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் உள்ள கால்நடைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறி, பால் பண்ணையாளர்களின் சங்கப் பிரதிநிதிகள் அவ்வப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://thinakkural.lk/article/284093

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

அதன்படி, தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 32,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட32 பண்ணைகள் குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன. மேலும் விலங்குகள் மற்றும் நிலங்களின் மதிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பண்ணைகள் எந்தெந்தப் பகுதிகளில் உள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த பண்ணைகள் எந்தெந்தப் பகுதிகளில் உள்ளன.

எனக்கு சரியாகத் தெரியவில்லை அண்ணை, மலையகப் பகுதிகளை ஒட்டி இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வே,....... வீட்டு வெற்றிலைத் தட்டம் போல வந்துவிட்டது. 

😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த பண்ணைகள் எந்தெந்தப் பகுதிகளில் உள்ளன.

அம்பேவெலவில் நியூசிலாந்து பண்ணை - என ஒன்று உள்ளது. சுற்றுலா போல சுற்றி காட்டுவார்கள். ஐரோப்பாவுக்கு போனது போல் இருக்கும்.

அருகில் அம்பேவெல பண்ணை என இன்னொரு பண்ணையும் உண்டு.

இரெண்டினையும் லங்கா மில்க் பூட்ஸ் எனும் கம்பெனி வைத்துள்ளது (லக்ஸ்பிரே இவர்களதுதான்). இதில் பெரும்பான்மையான பங்குகள் அரசுக்குரியது.

இவற்றைத்தான் அமுலுக்கு கொடுக்க போகிறாகளோ தெரியாது.

அமுல் - குஜராத் மாநிலத்தின் கூட்டுறவு அமைப்பினது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அம்பேவெலவில் நியூசிலாந்து பண்ணை - என ஒன்று உள்ளது. சுற்றுலா போல சுற்றி காட்டுவார்கள். ஐரோப்பாவுக்கு போனது போல் இருக்கும்.

அருகில் அம்பேவெல பண்ணை என இன்னொரு பண்ணையும் உண்டு.

இரெண்டினையும் லங்கா மில்க் பூட்ஸ் எனும் கம்பெனி வைத்துள்ளது (லக்ஸ்பிரே இவர்களதுதான்). இதில் பெரும்பான்மையான பங்குகள் அரசுக்குரியது.

இவற்றைத்தான் அமுலுக்கு கொடுக்க போகிறாகளோ தெரியாது.

அமுல் - குஜராத் மாநிலத்தின் கூட்டுறவு அமைப்பினது.

தகவலுக்கு நன்றி கோசான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.