Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
plant1.jpg

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் அறியத்தருமாறு, ஜனாதிபதி தோட்டக் கம்பனி பிரதானிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் பிரகாரம் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் தமது வேலைத்திட்டங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அது குறித்த எதிர்கால நடவடிக்கைகளுக்காக குழுக்களை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் குறித்து ஆலோசிக்க ஒரு குழுவை நியமிக்கவும், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இன்னுமொரு குழுவை நியமிக்கவும் இங்கு முன்மொழியப்பட்டது.

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் தமக்கு வலுவான நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைவரினதும் பங்களிப்பு அவசியம் எனவும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஆசிய நாடுகளின் சனத்தொகை அதிகரிப்புடன் உணவுத் தேவையும் அதிகரிக்கும் எனவும், அதற்காக இந்நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரம் தயாராக வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/284150

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி அப்படிதான் பேசுவார் , சொல்லுவார். ஆனால் நடைமுறை படுத்த மாடடார். இப்போது மலையக மக்கள் இதை நம்பி இருப்பார்கள். அடுத்த தேர்தல் வரையும் பேச்சுவார்த்தை இழுபட்டுக்கொண்டு போகும். பின்னர் எல்லாமே அம்போதான். 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தலைவர் சம்பந்தனை பார்த்து  என்னுடன் பேச விரும்பினால் இருந்து பேசலாம்  விருப்பம் இல்லையா எழுந்து போகலாம்” என்று சொன்ன ரணில்    குழுக்கள் அமைக்கிறார் பாருங்கள் 🤣 அவருக்கு தெரியும்  குழுக்களில் உள்ளவர்கள் இடையே ஒருபோதும் ஒற்றுமை ஏற்படாது   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா வழங்க ஒருபோதும் சாத்தியமில்லை - திகாம்பரம்

10 DEC, 2023 | 04:48 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தோட்ட தொழிலாளர்களின் பொருளாதார பிரச்சினையை தீர்க்காமல் எதனையும் செய்ய முடியாது. அதனால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மக்களுக்குரிய காணிகளை பிரித்து வழங்குமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறேன். அதன் மூலமாவது அவருக்கு தோட்ட மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என ப.திகாம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (09) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் கமத்தொழில் அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

தோட்டத் தொழிலாளர்களுக்கு பொருளாதார பிரச்சினையை தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை. 20 கிலோ தேயிலை கொழுந்து பறித்தால் அவர்களுக்கு 800 அல்லது 900 ரூபா கிடைக்கிறது. 20 கிலோவுக்கு குறைவாக பறித்தால் கிலோவுக்கு 50 ரூபா கிடைப்பதில்லை. அதனால் தோட்ட தொழிலாளர்களின் பொருளாதார பிரச்சினையை தீர்க்காமல் எதனையும் செய்ய முடியாது.

அதனால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மக்களுக்குரிய காணிகளை பிரித்து வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். காணி உரிமையை கொடுக்குமாறு நாங்கள் தெரிவிப்பதில்லை. ஏனெனில் 10 பேர்ச காணியை வழங்காமல் இருக்கும் இவர்கள் ஒரு ஏக்கர் காணி வழங்கி அதற்கு உரிமை வழங்கப்போவதில்லை. 

அதனால் தொழிலாளர்களுக்கு குத்தகைக்கு காணியை வழங்கி, அதில் அவர்கள் தேயிலை பயிர் செய்த பின்னர், அவர்களிடமிருந்து ஒரு கிலோ தேயிலை கொழுந்து 150 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் 20 கிலோ தேயிலை பெற்றுக்கொண்டால், அவர்களுக்கு 3 ஆயிரம் ரூபா கிடைக்கிறது. தேயிலை கொழுந்து அதிகம் இருக்கும் காலத்தில் அதிகமாக பணம் சம்பாதித்துக்கொள்ன முடியுமாகிறது. இதன் மூலம் அவர்களின் தேவைகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

அவ்வாறு இல்லாமல் நாங்கள் பாராளுமன்றத்தில் இதனை கதைக்கிறோம். அதனை பத்திரிகை, தொலைகாட்சியில் காட்டுவார்கள். அத்துடன் அது முடிவடைகிறது. அதனால் இதனை செய்ய முடியாது என்றால் எதிர்காலத்தில் தோட்டங்களில் வேலை செய்ய யாரும் இருக்கமாட்டார்கள். முன்னர் 300, 400 பேர் வேலை செய்த தோட்டங்களில் தற்போது 60, 70 பேரே வேலை செய்கிறார்கள். தோட்ட மக்கள் கொழும்புக்கு வேலைக்கு வந்து நாள் ஒன்றுக்கு 2000, 3000 என சம்பாதித்து வருகின்றனர்.

எனவே பெருந்தோட்டத்துறையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால் எமது கோரிக்கையை முன்னெடுக்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால், அதனை செய்ய முடியாமல் போகும். நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு  லயன் அறைக்கு 7 பேர்ச் காணி வழங்க தீர்மானித்தோம். அதனை தற்போது 10 பேர்ச் வழங்குவதாக தெரிவித்திருக்கின்றனர்.

அவ்வாறு இல்லாமல் அனைவருக்கும் காணி வழங்க தீர்மானித்தால் பெருந்தோட்டத்துறை இல்லாமல் போகும். அதனால் ஒரு லயன் அறைக்கு 10 பேர்ச் காணி வழங்கி, அவர்களுக்கு பிள்ளைகள் இருந்தால் அந்த காணியில் மாடி வீடு அமைத்துக்கொள்ள முடியும்.

அத்துடன், தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா வழங்க முடியுமா என எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி முதலாளிமார்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நான் முதலாளிமார் சங்கத்திடம் கேட்டேன். ஆனால், அவ்வாறு எந்த கலந்துரையாடலும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்கள். மாறாக, மறுசீரமைப்பு செய்யுமாறே தெரிவித்ததாக குறிப்பிட்டார்கள். அதனால் ஜனாதிபதியையும் எங்களுக்கு தெரியும் கம்பனி உரிமையாளர்களையும் எங்களுக்கு தெரியும். இது ஒருபோதும் இடம்பெறாத விடயம். கூட்டு ஒப்பந்தத்துக்கு சென்றாலும் 1700 ரூபாவுக்கு அவர்கள் இணங்கப்போவதில்லை.

அதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணிகளை குத்தகைக்கு வழங்கி தேயிலை பயிரிடச் செய்து அவர்களிடம் தேயிலையை 150 ரூபாவுக்கு பெற்றுக்கொள்வதே இந்த பிரச்சினைக்கு தீர்வு. அவ்வாறு இல்லாமல் தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் ஏமாற்றாமல் ஜனாதிபதி இந்த காணிகளையாவது வழங்கினால் அவருக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் குறைந்த பட்சம் ஒரு இலட்சம் வாக்குகளையாவது பெற்றுக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் அதுவும் கிடைக்காமல் போகும் என்றார்.

https://www.virakesari.lk/article/171381

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/12/2023 at 02:25, Cruso said:

ஜனாதிபதி அப்படிதான் பேசுவார் , சொல்லுவார். ஆனால் நடைமுறை படுத்த மாடடார். இப்போது மலையக மக்கள் இதை நம்பி இருப்பார்கள். அடுத்த தேர்தல் வரையும் பேச்சுவார்த்தை இழுபட்டுக்கொண்டு போகும். பின்னர் எல்லாமே அம்போதான். 

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தோட்டத்தொழிலாளர் கட்சிகளும் எம் அரசியல்வாதிகளைப்போல் தூங்கு மூஞ்சிகளா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தோட்டத்தொழிலாளர் கட்சிகளும் எம் அரசியல்வாதிகளைப்போல் தூங்கு மூஞ்சிகளா?

அங்கும் ஒற்றுமை இல்லாத நிலைமைதான் காணப்படுகின்றது. இருந்தாலும் தேர்தல்கள் வருகிறபடியால் இருக்கின்ற அரசியல்வாதிகள் ரணிலை இன்னும் கொஞ்சம் நெருக்குவாரப்படுத்தினால் காரியங்கள் நடக்க சந்தர்ப்பமுண்டு. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.