Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டில் இனி குற்றங்களுக்கு தண்டனை இல்லை ! : புது சட்டம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

crimnal-law.jpg?resize=750,375&ssl=1

நாட்டில் இனி குற்றங்களுக்கு தண்டனை இல்லை ! : புது சட்டம்?

வறுமை அல்லது வேறு காரணங்களால் சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைப்பது போன்ற தண்டனைகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, அந்த நபரின் பெற்றோர் அல்லது உறவினர்களிடம் பத்திரத்தில் கையொப்பமிட்டு அவர்களை ஒப்படைக்க முடியும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறிய தவறு செய்தவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவர்களின் உடலில் ‘சிப்’ பொருத்தி, வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

சில நீதிமன்றங்கள் சிறு குற்றங்களை செய்தவர்களை சிறையில் அடைப்பதோடு, பிணை வழங்குவதில் நீதிமன்றங்கள் தனது விருப்புகளை காட்டி வருகிறது, இந்த நாட்டின் சட்டப்படி விசாரணைகள் நிறைவடையாதது, சில இளைஞர்கள் சிறையில் இருந்து விடுதலை போன்ற காரணங்களால் பிணை மறுக்க வாய்ப்பு உள்ளது. எனவே , பிணை வழங்கும்; சட்டத்தில் சில திருத்தங்கள் செய்வதாக நம்புவதாக அமைச்சர் கூறினார்.

https://athavannews.com/2023/1362659

  • கருத்துக்கள உறவுகள்

சிறைவாசிகளுக்கு உணவு குடுக்க காசில்லை என்பதை எவ்வளவு நாகரீகமாக வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு சொல்கிறார்கள் ......." பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை".......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, suvy said:

சிறைவாசிகளுக்கு உணவு குடுக்க காசில்லை என்பதை எவ்வளவு நாகரீகமாக வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு சொல்கிறார்கள் ......." பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை".......!   😁

இல்லை இல்லை. இலங்கையை சிங்கப்பூரராக மாற்ற முயட்சிப்பதாக ஒருஇடத்தில் எழுதி இருந்தேன். அதில் ஒரு பகுதிதான் இது. எனவே இலங்கையை பற்றி அப்படி மிகவும் தாழ்வாக நினைக்க வேண்டாம். என்ன இப்போது கொஞ்சம் வங்குரோத்து நிலைமையில் இருக்கிறம். மற்றப்படி இலங்கை சிங்கப்பூர்தான். 😜

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகநபர்களை வீட்டுக் காவலில் வைக்க அமைச்சரவை அனுமதி

cabinet-decision-300x200.jpg

சந்தேகநபர்களை தடுப்புக் காவலில் வைப்பதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைத்திருப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் நிலவுகின்ற நெரிசல் காரணமாக குறித்த யோசனை முன்மொழியப்பட்டது. இந்த நிலையில், குறித்த பிரச்சினைக்குத் தீர்வாக தடுப்பு காவலில் வைத்தல் மற்றும் சிறைச்சாலையில் வைப்பதற்கு பதிலாக உரிய வழக்கு நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்களை வீட்டுக் காவலில் தடுத்து வைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை அறிமுகம் செய்வதற்காக உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் படி, பொருத்தமான சட்டங்களை அறிமுகம் செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://thinakkural.lk/article/284505

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.