Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருத்தப் பணிகளுக்காக மூடப்படவுள்ள வடக்கு தொடருந்து பாதை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாஹோ சந்தி முதல் அநுராதபுரம் வரையான வடக்கு தொடருந்து பாதை திருத்தப் பணிகளுக்காக 6 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் எதிர்வரும் 6 மாதங்களுக்கு குறித்த தொடருந்து மார்க்கம் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பங்களில், கொழும்பிலிருந்து மாஹோ சந்தி வரையிலும், அநுராதப்புரத்திலிருந்து காங்கேசன்துறை வரையில், மாத்திரமே தொடருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு தொடருந்து மார்க்கத்தில் மாஹோ மற்றும் ஓமந்தை வரையில் இரண்டாம் கட்ட திருத்தப்பணிகளுக்காக இவ்வாறு மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/284285

  • கருத்துக்கள உறவுகள்

இடையில் உள்ள தூரத்தை எப்படி கடப்பது? ரெயில்வே திணைக்களம் இடைபிரயாயணத்துக்கான போக்குவரத்து வசதிகளை பயணிகளுக்கு வழங்குகின்றதா? ஒரு ரிக்கெட்டில் முழு தூரத்தையும் பயணிக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இதே போல் ஒரு செய்தி முன்பு வந்ததே. 

அப்போ அனுராதபுரம்-ஓமந்தை சேவை இல்லை என நினைவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

இடையில் உள்ள தூரத்தை எப்படி கடப்பது? ரெயில்வே திணைக்களம் இடைபிரயாயணத்துக்கான போக்குவரத்து வசதிகளை பயணிகளுக்கு வழங்குகின்றதா? ஒரு ரிக்கெட்டில் முழு தூரத்தையும் பயணிக்க முடியுமா?

இல்லை பயணிகள் தாமாகவே பேரூந்து மூலம் பயணிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இல்லை பயணிகள் தாமாகவே பேரூந்து மூலம் பயணிக்கவேண்டும்.

மஹோ ஸ்டேசன் - மஹோ பஸ் நிலையம் - அனுராதபுரம் பஸ் நிலையம்- அனுராத புரம் ஸ்டேசன் -

சீவன் போய்டும்.

அப்படி போனாலும் connecting train ஐ பிடிப்போம் என்ற உத்தரவாதம் ஏதும் இல்லை.

பழையபடி பலூன் பஸ்தான்.

இப்ப எது உள்ளதில் வசதியானது?

ஆனால் அவங்கள் ஓடுறத ஓட்டத்தை நினைக்கத்தான் வயித்தை கலக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

மஹோ ஸ்டேசன் - மஹோ பஸ் நிலையம் - அனுராதபுரம் பஸ் நிலையம்- அனுராத புரம் ஸ்டேசன் -

சீவன் போய்டும்.

அப்படி போனாலும் connecting train ஐ பிடிப்போம் என்ற உத்தரவாதம் ஏதும் இல்லை.

பழையபடி பலூன் பஸ்தான்.

இப்ப எது உள்ளதில் வசதியானது?

ஆனால் அவங்கள் ஓடுறத ஓட்டத்தை நினைக்கத்தான் வயித்தை கலக்குது.

தொடரூந்தில் வந்த அத்தனை பயணிகளையும் இலவசமாக பேரூந்தில் ஏற்றி அடுத்து எங்கு தொடரூந்து வருதோ அங்கே இறக்க வேண்டும்.

கடந்த முறை எனது நண்பர் ஒருவர் கொழும்பில் இருந்து யாழ் போக அனுராதபுரத்தில் இறங்கி கூடுதலான பணம் கொடுத்து ஆட்டோ பிடித்து வவுனியாவுக்கு பேரூந்தில் போய் மீண்டும் கூடுதல் பணம் கொடுத்து ஆட்டோ பிடித்து வவுனியா புகையிரத நிலையம் சென்றடைந்தார்.


சிங்களம் தெரியாது என்றால் அலேலூயாகாரர் தண்ணீரில் மூழ்கி எடுத்தது போல எடுத்துவிடுவார்கள்.

4 hours ago, ஏராளன் said:

இல்லை பயணிகள் தாமாகவே பேரூந்து மூலம் பயணிக்கவேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் இப்படியான திருத்த வேலைகள் வழமை. ஆனால், அழகாக ஒரு பயணச்சீட்டில் பயணம் செய்யும் வகையில் பயணிகளின் வசதி கருதி மாற்று ஏற்பாடுகள் செய்வார்கள். 

இலங்கையிலும் இந்த ஏற்பாடு வர வேண்டும். புகையிரதங்கள், இடைவழியை ஒன்றுசேர்க்கும் பேருந்து தொடரும் மற்றைய புகையிரதம் ஆகியவற்றை நேரங்கள் பொருந்தும் வகையில் திட்டமிட்டு இயங்கவைக்கலாம். 

பயணிகளை அலைக்கழியவிட்டு உதாசீனம் செய்வது தவறு. 

கொழும்பில் ஏறி மாகோவில் புகையிரதத்தால் இறங்குவோரை அநுராதபுரம் கொண்டு செல்லும் பேருந்துகள் தயாராக நிற்கவேண்டும். அநுராதபுரம் செல்வோர் பயணத்தை தொடர புகையிரதம் தயாராக நிற்கவேண்டும். 

இவ்வாறே காங்கேசன்துறை - அநுராதபுரம் - மாகோ - கொழும்பு பயண வசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். 

இதை செய்வதற்குரிய வளங்கள் இல்லையா? போக்குவரத்து துறைக்கு என அமைச்சர் உள்ளார்களா?

மனம் உண்டானால் இடம் உண்டு.

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நியாயம் said:

வெளிநாடுகளில் இப்படியான திருத்த வேலைகள் வழமை. ஆனால், அழகாக ஒரு பயணச்சீட்டில் பயணம் செய்யும் வகையில் பயணிகளின் வசதி கருதி மாற்று ஏற்பாடுகள் செய்வார்கள். 

இலங்கையிலும் இந்த ஏற்பாடு வர வேண்டும். புகையிரதங்கள், இடைவழியை ஒன்றுசேர்க்கும் பேருந்து தொடரும் மற்றைய புகையிரதம் ஆகியவற்றை நேரங்கள் பொருந்தும் வகையில் திட்டமிட்டு இயங்கவைக்கலாம். 

பயணிகளை அலைக்கழியவிட்டு உதாசீனம் செய்வது தவறு. 

கொழும்பில் ஏறி மாகோவில் புகையிரதத்தால் இறங்குவோரை அநுராதபுரம் கொண்டு செல்லும் பேருந்துகள் தயாராக நிற்கவேண்டும். அநுராதபுரம் செல்வோர் பயணத்தை தொடர புகையிரதம் தயாராக நிற்கவேண்டும். 

இவ்வாறே காங்கேசன்துறை - அநுராதபுரம் - மாகோ - கொழும்பு பயண வசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். 

இதை செய்வதற்குரிய வளங்கள் இல்லையா? போக்குவரத்து துறைக்கு என அமைச்சர் உள்ளார்களா?

மனம் உண்டானால் இடம் உண்டு.

 

இலங்கையை சிங்கப்பூராக்கும் திடடம் இருக்கின்றது. இருந்தாலும் இப்போது வங்குரோத்து நிலையில் இருப்பதால் செய்ய முடியவில்லை. நீங்கள் சொல்லுவது போல நிச்சயமாக நடக்கும். அதட்கு இன்னும் கொஞ்ச காலம் (??) எடுக்கும். அது எப்போது என்று கேட்க வேண்டாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

இப்ப எது உள்ளதில் வசதியானது?

பலூன் பஸ், வீட்டில் கொண்டு வந்துவிடும் வான்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Cruso said:

இலங்கையை சிங்கப்பூராக்கும் திடடம் இருக்கின்றது. இருந்தாலும் இப்போது வங்குரோத்து நிலையில் இருப்பதால் செய்ய முடியவில்லை. நீங்கள் சொல்லுவது போல நிச்சயமாக நடக்கும். அதட்கு இன்னும் கொஞ்ச காலம் (??) எடுக்கும். அது எப்போது என்று கேட்க வேண்டாம். 

 

மாகோ - அநுராதபுரம் 68 கிலோமீற்றர், கிட்டத்தட்ட ஒன்று அரை மணித்தியால பேருந்து பயணம். இடையில் ஆட்களை இறக்கி ஏற்றினால் இரண்டு மணித்தியாலங்கள். 

ரயில்வே திணைக்களம் இலாபத்தில்தானே ஓடுகின்றது?

பயணிகள் கட்டணம் செலுத்துகின்றார்கள் தானே. காங்கேசந்துறை கொழும்பு ரூபா 3000-4000 கட்டணம் என நினைக்கின்றேன்.

அதிக லாபத்திற்காக அல்லது வேறு வகையான வருமானத்திற்காக பயணிகள் சிரமத்தை கண்டுகொள்ளாவிட்டால் என்ன செய்வது? 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயம் said:

 

மாகோ - அநுராதபுரம் 68 கிலோமீற்றர், கிட்டத்தட்ட ஒன்று அரை மணித்தியால பேருந்து பயணம். இடையில் ஆட்களை இறக்கி ஏற்றினால் இரண்டு மணித்தியாலங்கள். 

ரயில்வே திணைக்களம் இலாபத்தில்தானே ஓடுகின்றது?

பயணிகள் கட்டணம் செலுத்துகின்றார்கள் தானே. காங்கேசந்துறை கொழும்பு ரூபா 3000-4000 கட்டணம் என நினைக்கின்றேன்.

அதிக லாபத்திற்காக அல்லது வேறு வகையான வருமானத்திற்காக பயணிகள் சிரமத்தை கண்டுகொள்ளாவிட்டால் என்ன செய்வது? 

ரயில்வே திணைக்களம் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது எப்போதும் நடடத்தில்தான் இயங்குகின்றது. வடபகுதி சேவை  லாபத்தில் இயங்கினாலும் மற்ற சேவை எல்லாம் இலவச சேவைதான்.

தென் பகுதியென்றால் உங்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும். இங்கு சேவை என்பது நீங்கள் எந்த பகுதிக்கு செல்கிறீர்கள் என்பதை பொறுத்து இருக்கிறது. இது ஸ்ரீ லங்கா என்பதை மறந்துவிட வேண்டாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.