Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காசாவில் மருத்துவமனைக்கு அருகில் புல்டோசர்களால் பொதுமக்களை நசுக்கி கொலை செய்த இஸ்ரேல் - விசாரணையை கோருகின்றது பாலஸ்தீன அதிகார சபை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN    18 DEC, 2023 | 12:15 PM

image
 

வடகாசாவில் உள்ள மருத்துவமனையொன்றின் நோயாளிகளை இஸ்ரேலிய படையினர் புல்டோசர்களை பயன்படுத்தி நசுக்கிகொலை செய்தனர் என வெளியானகுற்றச்சாட்டுகள் குறித்து பாலஸ்தீன அதிகார சபை விசாரணைகளை கோரியுள்ளது.

வடகாசாவில் உள்ள கமால் அட்வான் மருத்துவமனையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

gaza_hos_bull.jpg

மருத்துவமனைக்குஅருகில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்களை இஸ்ரேலிய படையினர் புல்டோசர்களை பயன்படுத்தி அழித்தனர் இதன்போது நோயாளிகள் உட்பட பொதுமக்களை கொலை செய்தனர் என வைத்தியர்களும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் குறிப்பிட்டனர்.

பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டனர் புல்டோசர்களை பயன்படுத்திபொதுமக்கள்  உயிருடன் புதைக்கப்பட்டனர் என தெரிவித்துள்ள  ஒருவர் இதனை யார் செய்வார்கள் இந்த குற்றங்களை இழைத்தவர்கள் அனைவரையும் நீதியின் முன் நிறுத்தவேண்டும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என தெரிவித்துள்ளார்.

கமால் அட்வான் மருத்துவமனைக்கு அருகில் கட்டிட இடிபாடுகளிற்குள் பலர் உயிரிழந்த நிலையில் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

gaza_dead_bodies_dece19.jpg

மருத்துவமனையின் பெருமளவு பகுதியை புல்டோசர்கள் இடித்துதரைமட்டமாக்கியுள்ளன என தெரிவித்துள்ள  அல்ஜசீராவின் செய்தியாளர் மக்கள் தங்கள் கூடாரங்களிற்குள் வைத்து புல்டோசர்களால் நசுக்கிகொல்லப்பட்டனர் 20 பேர் இவ்வாறு கொல்லப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/171939

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நீதிமன்றம் போன்றவை எல்லாமே மேற்கின்  tools  என்பது  இஸ்ரேல் காஸா விடயத்தில் 100 %  உறுதி செய்யப்படுகிறது. 

இரண்டு மாதங்களில் 20,000 பொதுமக்களைக்  கொன்ற நதன்யாகு இன்றுவரை மேற்கின் ஆதரவை தக்கவைத்துள்ளார் என்றால்  பாருங்களேன் !

😏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா மீது பயங்கர தாக்குதல்: ஆயிரம் பேரை பிடித்துச் சென்ற இஸ்ரேல் இராணுவம்

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் காசாவில் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் செய்யப்படாது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்த போதிலும், தாக்குதலை சிறிதும் குறைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

அத்தோடு இஸ்ரேல் இராணுவம் 1000 பேரை பிடித்து வைத்துள்ளது. ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, கைகளை தூக்கினால் நாங்கள் அவர்களை கைது செய்வோம். நாங்கள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தமாட்டோம் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் இஸ்ரேல் இராணுவம், நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சுரங்கப்பாதையை கண்டு பிடித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.

எராஸ் எல்லைப் பகுதியில் இந்த சுரங்கப்பாதையை இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்துள்ளது. சிறிய வகை வாகனம் செல்லும் வகையில் மிகப்பெரியதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/285060

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.