Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் நிலநடுக்கத்தில் 220 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என  தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகவும் இருந்ததாகவும்10 கிமீ (ஆறு மைல்) ஆழத்தில் இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் நிலநடுக்கத்தில் 220 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என  தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகவும் இருந்ததாகவும்10 கிமீ (ஆறு மைல்) ஆழத்தில் இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

https://tamilwin.com/article/powerful-earthquake-in-china-1702944967

23-6580e58151b04.webp

  • கருத்துக்கள உறவுகள்

116 பேர் பலியான பரிதாபம்… சீனாவை உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நிலநடுக்கம் பாதித்த பகுதியில் மீட்பு பணி

சீனாவை நேற்றிரவு உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 116இற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

வடமேற்கு சீனாவின் கன்சு மற்றும் கிங்காய் மாகாணங்களில் 6.2 ரிக்டர் என்றளவில் நிலநடுக்கம் நேரிட்டதாக தெரிய வருகிறது. திங்கள் இரவு நிலநடுக்கம் நேரிட்டதை சீனாவின் அரசு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

நிலநடுக்கத்தால் தாக்குண்டதில் வீடுகள் தரைமட்டமாகியுள்ளதுடன், மின்சாரம் மற்றும் குடிநீர் சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதன் காரணமாக குடிமக்கள் இரவில் மேலும் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் வீடுகளை துறந்து வீதிகளில் மக்கள் அடைக்கலமாகியுள்ளனர்.

சீன நிலநடுக்கம்

தகவல்தொடர்பு முடங்கியதால் அதிகாலையில் இருந்தே மீட்பு பணிகள் தொடங்கப்பெற்றுள்ளன. கட்டிடங்களின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கக் கூடும் என்று வெளியான தகவலால் மக்கள் மத்தியில் கவலை கூடியுள்ளது. மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் நிலநடுக்கம் நேரிட்டதை மேற்கு ஊடகங்களும் உறுதி செய்துள்ளன. ஆனால் பாதிப்பின் வீரியம், பலியானோர் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் துல்லியமாக உறுதி செய்யப்பட இயலவில்லை. சமூக ஊடகங்களில் பரவும் நிலநடுக்க பாதிப்புகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

https://thinakkural.lk/article/285150

  • கருத்துக்கள உறவுகள்

china.jpeg?resize=750,375&ssl=1

சீனாவில் சக்திவாய்ந்த பூகம்பம்; 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கன்சு மாகாணத்தில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் கிங்காய் மாகாணத்திலும்  11 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கமானது 6.2 என்ற ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் இதனால் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும், பாரிய அளவில் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1363609

 

  • கருத்துக்கள உறவுகள்

China-ல் Earthquake: 126 பேர் பலி; 13 ஆண்டுகளில் மோசமான நிலநடுக்கம் - என்ன நடந்தது?

 

சீனாவின்  வடமேற்கு பகுதியில்  திங்கட்கிழமை நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது 126 பேர் உயிரிழந்துள்ளனர். 700-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 

 

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்வு!

world-news-2.jpg

சீனாவில் கடந்த திங்கள் அன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் உயரக்கூடும் என அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வடமேற்கு சீனாவின் கன்சு மற்றும் கிங்காய் மாகாணங்களில் 6.2 ரிக்டர் என்றளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. திங்கள் இரவு நிலநடுக்கம் நேரிட்டதை சீனாவின் அரசு ஊடகங்கள் உறுதி செய்தன.

நிலநடுக்கத்தால் வீடுகள் சிதிலமானது; மின்சாரம் மற்றும் குடிநீர் சேவைகள் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக குடிமக்கள் இரவில் மேலும் பரிதவிப்புக்கு ஆளானார்கள். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் வீடுகளை துறந்து வீதிகளில் மக்கள் அடைக்கலமானார்கள்.

தகவல் தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகள் தற்போது வரை நீடித்து வருகிறது. இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் அபாய கட்டத்தில் உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/285519

  • கருத்துக்கள உறவுகள்

பூமி தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது........தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுத்திவாற டபுள்ரோல் அதுக்கு அதுதான் உள்ளே காஸ்ட்ரபிள் ஏற்பட்டு வெளியே விடுகுது.......அதுவும் பாவம் என்ன செய்யும்........!  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.