Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பாடசாலைகளுக்கு அருகில் போதை வியாபாரம்; மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். புறநகர் பாடசாலைக்கு அருகில் போதை வியாபாரம் ; 6 பேர் கைது ; மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை

Published By: VISHNU   20 DEC, 2023 | 02:53 PM

image
 

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதே வேளை அவர்களிடம் போதைப்பொருளை கொள்வனவு செய்த 15 மாணவர்கள் இனம்காணப்பட்டு, அவர்களை பொலிஸார் கடுமையாக எச்சரித்ததுடன், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை வழங்கி பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் குறித்த தெரியவருவதாவது, 

யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட , யாழ்.புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில், மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் , போதை கலந்த பாக்குகள், மாவா பாக்கு உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்களிடம் அவற்றை வாங்கி வந்த மாணவர்களை பொலிஸார் இனம் கண்டு கொண்டனர். 

அவ்வாறு இனம் காணப்பட்ட சுமார் 15 மாணவர்களையும் பொலிஸார் கடுமையாக எச்சரிக்கை செய்து, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை அவர்களுக்கு ஊட்டி, பெற்றோர்களிடம் கையளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 06 இளைஞர்களையும் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/172146

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நெல்லியடியில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது

Published By: VISHNU   20 DEC, 2023 | 04:00 PM

image
 

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி, இரண்டு நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றில் அனுமதி பெற்று, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பாடசாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் ஹட்டன் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார்.

குறித்த இளைஞன் கடையில் வைத்து போதைப்பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டு வருவதாக நெல்லியடி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (19) குறித்த இளைஞனை கைது செய்த பொலிஸார் அவரது உடைமையில் இருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டு இருந்தனர்.

விசாரணைகளின் பின்னர், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இளைஞனை முற்படுத்திய பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், சந்தேகநபரை இரண்டு நாள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி என மன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட மன்று, சந்தேகநபரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதித்துள்ளது.

பொலிஸ் காவலில் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சந்தேகநபருடன் போதைப்பொருள் விற்பனை வலையமைப்பை சேர்ந்தவர்களை இனம் கொண்டுள்ளதாகவும், சந்தேக நபரிடம் போதைப்பொருளை வாங்கி வந்தவர்களையும் இனம் கண்டுகொண்டுள்ளதாகவும், அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/172144

  • கருத்துக்கள உறவுகள்

அங்கஜனின் தம்பியின் மகன் பலகோடி குஸ் போதைபொருளுடன் பிடிபட்ட செய்தி சிங்கள ஆங்கில தமிழ் ஊடகங்கள் ஒன்றிலும் வரவில்லை காரணம் இலங்கையில் குஸ் போதை பொருள் தடை செய்யப்படவில்லையாம் என்ன சுத்து சுத்துரான்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அங்கஜனின் தம்பியின் மகன் பலகோடி குஸ் போதைபொருளுடன் பிடிபட்ட செய்தி சிங்கள ஆங்கில தமிழ் ஊடகங்கள் ஒன்றிலும் வரவில்லை காரணம் இலங்கையில் குஸ் போதை பொருள் தடை செய்யப்படவில்லையாம் என்ன சுத்து சுத்துரான்கள் .

சிறிய தந்தையின் மகன்(தம்பி) என முகப்புத்தகத்தில் எழுதுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வகையில் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட , யாழ்.புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில், மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் , போதை கலந்த பாக்குகள், மாவா பாக்கு உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 

இடத்தையும்  ஆட்களையும் சொல்லலாம்தானே...அல்லது சொல்லக்கூடாத...உலகின் உன்னத மேம்பட்ட சுத்தமான ஆட்களோ....அந்த இனம் என்றால்தான் பத்திரிகைகள்  ஒழிக்கிறவை..

Edited by alvayan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, alvayan said:

அந்த வகையில் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட , யாழ்.புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில், மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் , போதை கலந்த பாக்குகள், மாவா பாக்கு உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 

இடத்தையும்  ஆட்களையும் சொல்லலாம்தானே...அல்லது சொல்லக்கூடாத...உலகின் உன்னத மேம்பட்ட சுத்தமான ஆட்களோ....அந்த இனம் என்றால்தான் பத்திரிகைகள்  ஒழிக்கிறவை..

அவைக்கும் பயம் இருக்கும் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.