Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியை சந்திக்க வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு : சந்திக்கமாட்டேன் என்கிறார் சி.வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 DEC, 2023 | 07:09 AM
image

ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என்பதே எனது கருத்தாகும்.

 ஆகவே, ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதில் நான் வருந்துகிறேன். எனது முடிவை ஐனாதிபதிக்கு தெரிவிக்கவும் - என்றுள்ளது.

மேலும், ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு வியாழக்கிழமை (21) பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐனாதிபதி மேலதிக செயலாளரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அழைப்புக்கு சி.வி.விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு பதில் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/172179

  • கருத்துக்கள உறவுகள்

wikky.jpg?resize=750,375&ssl=1

ஐனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை – சி.வி.விக்னேஸ்வரன்

ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஐனாதிபதியுடனான சந்திப்புக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐனாதிபதி மேலதிக செயலாளரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்தில் இவ்விடயத்தை கூறியுள்ளார்.

ஜனாதிபதியால் ஏற்கனவே வழங்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான வாக்குறுதிகளை அமுல்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதில் எந்தவொரு பயனும் கிடையாது என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான குறித்த சந்திப்பு இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

https://athavannews.com/2023/1363795

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுடன் பேசினேன், சரிவராதென விலகிவிட்டேன் ; தமிழ் கட்சிகள் கோரினால், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதை பற்றி பரிசீலிக்கிறேன்  - சி.வி. விக்னேஸ்வரன் 

22 DEC, 2023 | 04:21 PM
image
 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசினேன். எனினும், சரிவராது என தோன்றியதால் விலகினேன் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் கட்சிகள் ஒருமித்து அழைத்தால் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், 

நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படும்போது சிலர், 'இவர் ரணிலின் ஆள்' என்றனர்.

நான் யாருடைய ஆளுமல்ல, தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக் கொடுக்க வேண்டும் என முயற்சி செய்தேன், அது நடைபெறவில்லை.

நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தேடிச் செல்லவில்லை. ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், பாராளுமன்றத்தில் என்னை அவர் சந்தித்தபோது இணைந்து செயற்பட வருமாறு அழைத்தார்.

ஒரு ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் மக்களுக்காக சென்று பேசுவது அரசியல் நாகரிகம். நான் கொமிஷன் வேண்டுபவன் அல்ல.

சிலர் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு முன்னரே 'சரிவராது' என கூறுவது சிறுபிள்ளைத்தனம். பேசிப் பார்த்து 'சரிவராது' என்ற பின் விலகுவது அறிவாளித்தனம். அதையே நான் செய்தேன்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப் போவதாக பலர் பேசுகின்றனர்.

ரணில் விக்கிரமசிங்கவை இன்று நேற்று அறிந்தவன் நான் அல்ல. என்னை விட பத்து வயது இளமை என்றாலும் பாடசாலை காலத்திலிருந்து அவரை எனக்கு நன்கு தெரியும்.

சிங்களத் தலைவர்களுடன் ஒப்பிடும்போது இனவாதம் அற்றவர். அவரது குடும்ப பின்னணி எல்லோருடனும் இணைந்து செயற்படக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது.

ஆனால், பல சந்திப்புகளை மேற்கொண்டேன். 13வது திருத்தம் தொடர்பில் நடைமுறை தன்மையை ஆராய்வதற்கு குழு ஒன்றை அமைப்பதற்கு இணங்கினார். ஆறு துறை சார்ந்த நிபுணர்களின் பெயர்களை வழங்கினேன். குழு அமைக்கப்படவில்லை.

தற்போது நடைபெற்ற வரவு செலவு திட்டத்தில் அவர் பேசிய கருத்துக்கள் என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது.

மாகாண சபையை இல்லாதொழித்து மாவட்ட அபிவிருத்தி குழு ஒன்றின் ஊடாக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக  காத்திருக்கிறார். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

13ஆவது திருத்தத்தை அரசியல் அமைப்பில் இருந்து அகற்றுவதன் மூலம் இந்தியாவின் தலையீட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை ரணில் விக்கிரமசிங்க செய்ய நினைக்கிறார்.

இவ்வாறானவருடன் இணைந்து செயற்பட முடியாது. தமிழ் மக்களும் எந்தவொரு சிங்கள ஜனாதிபதியிடமும் தமக்கான தீர்வுகளை எதிர்பார்ப்பது கடினமான விடயம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவது சிறந்ததா அல்லது ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்தி எமது பலத்தை காட்டுவது சிறந்ததா என பார்த்தால் தமிழர் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது எனது விருப்பம்.

ஒலிம்பிக்கில் சாதித்த எதிர்வீரசிங்கம் தொடர்புகொண்டு பேசினார். 'ஜனாதிபதி வேட்பாளராக வாருங்கள்; சிங்கள மக்கள் மத்தியில் உங்களுக்கு மதிப்பு உள்ளது' என்றேன். அவர் 'புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்; இயலாது' என்றார்.

நான் அரசியலில் ஈடுபாடு இல்லாமல் இருந்தபோது பலரின் வற்புறுத்தலின் பேரில் மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக வந்தேன்.

வந்த பின்னர், என்னை அப்புறப்படுத்தும் வேலைகளை எம்மவர்களே செய்தார்கள். மக்களின் ஆதரவினால் தப்பினேன்.

ஆகவே, தமிழ் கட்சிகள் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்ந்து பொது வேட்பாளராக போட்டியிடுமாறு கோரினால், அப்போதைய கள நிலவரங்களைப் பார்த்து பரிசீலனை செய்யத் தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/172291

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு விழுந்தடித்து ஓடுவதன் மர்மம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, nunavilan said:

இந்தியாவுக்கு விழுந்தடித்து ஓடுவதன் மர்மம் என்ன?

எசமான் கூப்பிட்டா வீறாப்புக் காட்ட முடியுமா? விழுந்தடித்து ஓடத்தான் வேண்டும்,. ....🤣

(குழப்புவதில் கஜேந்திரகுமாரின் இடத்தை நிரப்புவார் என்று நினைக்கிறேன் )

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

எசமான் கூப்பிட்டா வீறாப்புக் காட்ட முடியுமா? விழுந்தடித்து ஓடத்தான் வேண்டும்,. ....🤣

(குழப்புவதில் கஜேந்திரகுமாரின் இடத்தை நிரப்புவார் என்று நினைக்கிறேன் )

கஜேந்திரனை  இந்த முறை கூப்பிடவே இல்லை. ஐயாவை கூப்பிட்டு போகவில்லை. அதாவது இவர்களாலும் பிரயோசனம் இல்லை அவர்களாலும் பிரயோசனம் இல்லை. இவர்களுக்குள்ளேயே ஆளாளுக்கு ஒரு தீர்வு, அவர்களுக்கோ ஏமாற்றிக்கொண்டு இருப்பதே தீர்வு. 

என்ன இருந்தாலும் ஐயாவின் துணிவை பாராட்டத்தான் வேண்டும். அதாவது ஜனாதிபதியாக வேண்டும் என்ற ஆசையை சொல்லுகிறேன்.

மக்கள் அவரை முதலமைச்சராகி படட பாடு போதும். இனியாவது ஐயா அரசியலில் இருந்து ஓய்வெடுத்து சங்கிகளுடன்  சேர்ந்து ஆன்மீகத்தி ஈடுபடடாள் அவருக்கும் நல்லது மக்களுக்கும் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு சாமரம் வீசுவதையே தொழிலாக் கொண்டவர் இவர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.