Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இமாலயப் பிரகடனமும் இலங்கை அரசியலின் பாசாங்குத்தனமும்- பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கையின் ஜனாதிபதி ரணில் இந்த வருட இலங்கையின் சுதந்திர விழாவில் ஈழத் தமிழருக்கு தீர்வு என்று சொன்னார். ஒரு சிறு நகர்வு கூட நகர்ந்ததாய் இல்லை. மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் இருக்கும் போதும், வாய் கிழிய பாராளுமண்றத்தில் தீர்வை தாருங்கள் என்று கத்திய போதும், எதுகும் நடக்காத போதும் எதையுமே அவர்களை காதில் போட்டுக் கொள்ளாத போதும், அவர்களிடம் ஏதும் பேசாத போதும், இன்னுமே தொலைத்து போனவர்களுக்கான ஒரு தீர்வை வழங்காத போதும், புத்த சிலைகளை எல்லாம் போகும் இடம் எல்லாம் தமிழர் பூமியில் புதுசாய் நட்டு வைத்தும் எந்த வித நல்லிணக்க செயல்பாடோ Act of reconciliation இது வரை ஏதும் செய்யாமல், தமிழர் தீர்வில் எத்தனையோ ஆணையகங்களின் சிபாரிசுகளை ஏற்க மறுத்தும், தமிழர் மனங்களை வெல்லாமல் Winning the hearts of tamils minds எந்த நகர்வுமே இல்லாமல், எப்படி தீர்வை கொண்டு வருவார்கள். ஏதாவது தீர்வுக்கு ஒரு பாதையை தன்னும் திறந்தால் தானே எவரும் நம்ம முடியும். 

அற்ப சொற்ப தீர்வான 13 ம் சரத்துக்கு மேல் சென்று தமிழருக்கு தீர்வு வழங்குவோம் என்று பல முறை கூறியும் இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த அண்ணனும் இலங்கை பொருளாதாரம் வங்குரோத்து அடைந்து மூழ்கும் நிலைக்கு போகும் போது கை கொடுத்து தூங்கி விட்ட இந்தியா தமிழருக்கான 13 ம் சரத்து தீர்வை முழுமையாக வழங்குங்கள் என்று ஆயிரம் தடவைக்கு மேல் கூறியும் அதை கூட காதில் வேண்டாத சிங்கள பேரினவாதம் இனி என்ன  நல்லிணக்கத்தையோ தீர்வையோ தரப் போறார் ரணில் என்று ஈழத் தமிழர் பேரவை ( Global Tamil forum(GTF) இங்கிலாந்தில் இருந்து வந்து இன ஐக்கியம் பேசுகிறார்கள். பொறுத்து இருந்து பார்ப்போம் புதுசாய் ஏதும் நடக்குதோ என்று. இல்லை இன்னும் இன்னும் தமிழர்கள் நம்பி நம்பி ஏமாற்றப்படுவார்களா என்று.

கடந்த கால அனுபவங்கள் இது சாத்தியமாகுமா இலங்கையில் என்பது கேள்விக் குறியே. எல்லா தமிழர் தரப்பும் ஒற்றுமையாக எந்த நேரத்தில் எப்போ என்று நேரமும் காலமும் அறிந்து தான் நாம் காலை வைக்க வேண்டும். யாரும் பேசலாம் முயற்சி செய்யலாம் அது ஜனநாயக பண்பு இருந்த போதிலும் இலங்கையின் இனப்பிரச்சினையில் எல்லா தமிழர் தரப்பும் ஒற்றுமையோடும் பங்கு பற்றக் கூடிய அடிப்படையில் பலத்தோடு பேச வேண்டும். இராஜதந்திரம் என்பது சரியான நேரத்தில் சரியான விஷயங்களை சரியான பலத்தோடு சொல்லுவதும் எந்த நேரத்திலும் தவறான விஷயங்களைச் சொல்வதையோ அல்லது செய்வதையோ தவிர்ப்பதுமாகும்.

புத்தர் எதுகுமே வேண்டாம் என்று  எல்லா ஆசைகளையும் துறந்து ஞானம் பெற்றார்.  “Desire is the root of suffering.” ஆசையே துன்பத்தின் வேர் என்றார். பெளத்த மத குருமார்கள் இலங்கையில் புத்த தர்மங்களின் சிந்தனைகள் இருந்து முற்றும் வேறு பட்டவர்கள். இவர்கள் எல்லா வகை ஆசை பற்றுக்களோடு வாழ நினைப்பவர்கள். இலங்கையின் வன்முறையான பாதை ஒன்றிற்கு வரலாற்று ரீதியாக துணை நின்றவர்கள். பேரினவாதத்தின் ஒரு அடையாளமாக இருப்பவர்கள் இவர்களுடனான சமரசம் என்பது சாத்தியமா என்பது கேள்விக் குறியே. 

தமிழர் ஒடுக்கு முறைக்கான போராடடம் ஆரம்பித்த காலத்தில் இருந்து எத்தனை போராட்டங்கள் சாத்வீக வழியில் இருந்து ஆயுதப் போராட்டம் வரையிலும் இன்று வரை சிங்களத்திடம் இருந்து எதுகுமே பெற முடியவில்லை. 13 ம் சரத்து கூட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்தினால் கிடைத்த தீர்வு தான். இது கூட தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக அவர்களின் எந்த வித அபிப்பிராயமும் இன்றி இறக்குமதி செய்யப் பட்ட தீர்வாகும். இன்று இலங்கை ஓர் பொருளாதர ரீதியாக அபிவிருத்தி அடைந்து அமைதிப் தேசமாக இருக்க வேண்டுமானால் தமிழருக்கானா தீர்வை உடன் வழங்குவதன் மூலமே சாத்தியம் என்பதை சிங்கள மக்களும் பெளத்த பீட மதகுருமாரும் உணர்ந்து கொள்ள வேண்டும். 

வெறும் இனவாத பேச்சின் மூலமும் புலம் பெயர் தமிழர்களை எந்த வித ஆதாரமும் இன்றி பிரிவினை வாதிகள் என்பதும் வெறும் வன்முறையும் வெறுக்கத் தக்க பேச்சின் மூலமும் சிங்கள பேரினவாதம் எதையும் சாதிக்கப் போவதில்லை. முழுமையான எதார்த்தத்தை உணர்ந்து இனியும் ஓரு மாற்றத்தினுடாக சிங்களம் பயணிக்குமா என்பது இன்னும் கேள்விக்கு குறியே. விட்ட பிழைகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது போல் Learn from the mistakes சிங்கள தரப்பும் அத்தோடு தமிழர் தரப்பும் உணர்ந்து கொண்டு பயணிக்க வேண்டும். இனியும் சரியான பாதையை  தேடவில்லையானால் இன்னும் பல அறகலைய போராட்டங்களை சிங்களம் சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பா.உதயன் ✍️


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.