Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(புதியவன்) 

யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனக் கருதி 8 பேருக்கு எதிராகத் தடை உத்தரவு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கில் பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக நாளை யாழ்ப்பாணம் வருகின்றார். யாழில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தங்கியிருக்கும் அவர், வடக்கின் பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.  இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான போராட்டத்தைத் தடுக்கும் வகையில் 8 பேருக்குத் தடை கட்டளை கோரி பொலிஸார் நீதிமன்றில் யெ விண்ணப்பித்துள்ளனர். இது தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாட்டை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதிவான் தமிழ் நீதிமன்றில் இன்று முன்வைக்குமாறு நீதிமன்றம் பிரதி வாதிகளுக்குக் கட்டளையிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் உறுப்பினர்கள், பிரதிநிதிகள் என 8 பேருக்கு எதிராகத் இந்த தடை கட்டளை கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (ஐ)   

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தைத் தடுக்கும் வகையில் கஜேந்திரகுமார், கஜேந்திரன் உட்பட 8 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பிழம்பு said:

யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனக் கருதி 8 பேருக்கு எதிராகத் தடை உத்தரவு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பேசாமல் ஊரடங்கு சட்டத்தைப் போட்டுவிட்டால்

ஐயா தன்னாரவாரம் திரிஞ்சு போட்டு போகலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

பேசாமல் ஊரடங்கு சட்டத்தைப் போட்டுவிட்டால்

ஐயா தன்னாரவாரம் திரிஞ்சு போட்டு போகலாமே.

ஊரடங்குச் சட்டம் போட்டால், சனம் கூடாது, மக்கள் வரவேற்பு என கைக்கூலிகள் படமும் போடேலாது, மாத்தையா யாரோடு கலந்துரையாடுவதாம்? என்ன இருந்தாலும், அவரின் கைக்கூலிகளுக்கு காட்சி கொடுத்து அவர்களை பிரபல்யப்படுத்த வருகிறார், இதற்கு கலந்துரையாடல் என்கிற விளம்பரம். இங்கு மக்களுக்கு என்ன இருக்கிறது கலந்துரையாட? கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை, மேலதிகமாக வெறும் வாக்குறுதி அளிக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

ஊரடங்குச் சட்டம் போட்டால், சனம் கூடாது, மக்கள் வரவேற்பு என கைக்கூலிகள் படமும் போடேலாது, மாத்தையா யாரோடு கலந்துரையாடுவதாம்? என்ன இருந்தாலும், அவரின் கைக்கூலிகளுக்கு காட்சி கொடுத்து அவர்களை பிரபல்யப்படுத்த வருகிறார், இதற்கு கலந்துரையாடல் என்கிற விளம்பரம். இங்கு மக்களுக்கு என்ன இருக்கிறது கலந்துரையாட? கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை, மேலதிகமாக வெறும் வாக்குறுதி அளிக்கப்படும்.

இலங்கை இப்போ கம்யூனிச நாடாகிப் போட்டுது போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கை இப்போ கம்யூனிச நாடாகிப் போட்டுது போல இருக்கு.

அது என்ன நாடு என அவர்களுக்கே குழப்பம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.