Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு பிரச்சினைகளிற்கு தீர்வை கண்ட பின்னர் சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்க செல்லுங்கள் - கர்தினால் மல்கம் ரஞ்சித்

Published By: RAJEEBAN   15 JAN, 2024 | 08:50 AM

image

அரசாங்கம் சர்வதேச கடற்பரப்பினை பாதுகாப்பதற்கு முன்னர் உள்நாட்டில் காணப்படும் பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் கருத்து வெளியிட்டுள்ளார்.

சர்வதேச கடற்பரப்பிற்கு கப்பலை அனுப்பும் அரசாங்கத்தின் தீர்மானத்தை விமர்சித்துள்ள அவர் உள்நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன  என குறிப்பிட்டுள்ளார்.

பொரளைதேவலாயத்தில் இரண்டு வருடங்களிற்கு முன்னர் கைக்குண்டு மீட்கப்பட்டதை குறிப்பதற்காக இடம்பெற்ற விசேட ஆராதனையின்போது இதனை தெரிவித்துள்ள அவர் இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் கைக்குண்டினை வைத்த உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் தவறிவிட்டனர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதல்களை மேற்கொண்டவர்கள் யார் ஊடகங்களை  துன்புறுத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் தவறியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன்நிறுத்தப்படுவார்களா என்பதை பார்ப்பதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம். பிரகீத் எக்னலிகொடவின் கொலைக்கு யார் காரணம் என்பதும் லசந்தவை யார் கொலை செய்தார்கள் என்பதும் எவருக்கும் இதுவரை தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்தும் மூடிமறைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் உள்நாட்டு பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு பதில் சர்வதேச கடற்பரப்பை பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்குகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2024ம் ஆண்டு தேர்தல்களின் ஆண்டு என அறிகின்றோம். இந்த தடவை சரியான தலைவர்களிடம் மக்கள் ஆட்சியை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/173975

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஏராளன் said:

உள்நாட்டு பிரச்சினைகளிற்கு தீர்வை கண்ட பின்னர் சர்வதேச கடற்பரப்பை பாதுகாக்க செல்லுங்கள் - கர்தினால் மல்கம் ரஞ்சித்

Published By: RAJEEBAN   15 JAN, 2024 | 08:50 AM

image

அரசாங்கம் சர்வதேச கடற்பரப்பினை பாதுகாப்பதற்கு முன்னர் உள்நாட்டில் காணப்படும் பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் கருத்து வெளியிட்டுள்ளார்.

சர்வதேச கடற்பரப்பிற்கு கப்பலை அனுப்பும் அரசாங்கத்தின் தீர்மானத்தை விமர்சித்துள்ள அவர் உள்நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன  என குறிப்பிட்டுள்ளார்.

பொரளைதேவலாயத்தில் இரண்டு வருடங்களிற்கு முன்னர் கைக்குண்டு மீட்கப்பட்டதை குறிப்பதற்காக இடம்பெற்ற விசேட ஆராதனையின்போது இதனை தெரிவித்துள்ள அவர் இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் கைக்குண்டினை வைத்த உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் தவறிவிட்டனர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதல்களை மேற்கொண்டவர்கள் யார் ஊடகங்களை  துன்புறுத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் தவறியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன்நிறுத்தப்படுவார்களா என்பதை பார்ப்பதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம். பிரகீத் எக்னலிகொடவின் கொலைக்கு யார் காரணம் என்பதும் லசந்தவை யார் கொலை செய்தார்கள் என்பதும் எவருக்கும் இதுவரை தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்தும் மூடிமறைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் உள்நாட்டு பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு பதில் சர்வதேச கடற்பரப்பை பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்குகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2024ம் ஆண்டு தேர்தல்களின் ஆண்டு என அறிகின்றோம். இந்த தடவை சரியான தலைவர்களிடம் மக்கள் ஆட்சியை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/173975

இலங்கை அரசு இவர் சொல்வதை இப்போது கருத்தில் கொள்வதில்லை. இதனால் எங்கள் கர்தினால் ஒரு உத்வேகத்தில் அப்படி சொல்லிவிடடார். மற்றப்படி ரணில் அரசு சரியானதைத்தான் செய்யும். 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

செங்கடல் பகுதிக்கு இரகசியமாக கடற்படை கப்பலை அனுப்பியது இலங்கை - மோர்னிங் தகவல்

Published By: RAJEEBAN    25 FEB, 2024 | 09:53 AM

image

செங்கடல் பகுதிக்கு ரோந்து நடவடிக்கைகளிற்காக மிகவும் இரகசியமாக அனுப்பப்பட்ட இலங்கை கடற்படையின் கப்பல் தனது கூட்டு ரோந்து நடவடிக்கைகளை பூர்த்திசெய்துகொண்டு இலங்கைக்கு திரும்புகின்றது என மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.

பப் எல் மன்டெப் நீரிணைக்கு இலங்கை கடற்படை கப்பல் அனுப்பப்பட்டதை கடற்படை பேச்சாளர் கயன் விக்கிரமசூர்ய உறுதி செய்துள்ளதுடன்  எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ளாமல் இலங்கை கடற்படை கப்பல் ரோந்து நடவடிக்கையை பூர்த்தி செய்துவிட்டு இலங்கை திரும்புகின்றது என தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் பின்னர் இலங்கை கடற்படை முன்னெடுத்த ஆபத்தான இந்த நடவடிக்கையின் இரகசிய தன்மை காரணமாக கடற்படை மேலதிக தகவல்களை வெளியிடவில்லை என மோர்னிங் தெரிவித்துள்ளது.

மீண்டும் எப்போது இலங்கை கடற்படை தனது கப்பலை அனுப்பும் என்பது குறித்து இலங்கை கடற்படை எதனையும் தெரிவிக்கவில்லை.

இலங்கை கடற்படை தனது கப்பலை எப்போது அனுப்பியது கப்பல் எப்போது தனது ரோந்துநடவடிக்கைகளை பூர்த்தி செய்தது போன்ற விபரங்கள் இரகசியமானவையாக காணப்படுகின்றன என மோர்னிங் தெரிவித்துள்ளது.

இவ்வாறான தகவல்களை பகிரங்கப்படுத்தினால் அவற்றை பயன்படுத்தி ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்ட கப்பல்களை தாக்கக்கூடும் என பாதுகாப்பு தரப்பின் சிரேஸ்ட அதிகாரியொருவர் மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

மிகவும் ஆபத்தான செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்குகப்பல்களின் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும்  யுத்தக்கப்பல்கள் தாங்கள் செயற்படும் இடத்தை பகிரங்கப்படுத்துவதில்லை. தாக்குதல் ஆபத்தை தவிர்ப்பதற்காக தங்களின் இலத்திரனியல் சமிக்ஞைகளை கூட அவதானமாகவே பயன்படுத்துகின்றன என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

செங்கடல் பகுதியில் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூட்டு ரோந்தில் இலங்கையும் இணைந்துகொள்ளும் என ஜனாதிபதி ஜனவரி மூன்றாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/177225

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

பப் எல் மன்டெப் நீரிணைக்கு இலங்கை கடற்படை கப்பல் அனுப்பப்பட்டதை கடற்படை பேச்சாளர் கயன் விக்கிரமசூர்ய உறுதி செய்துள்ளதுடன்  எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ளாமல் இலங்கை கடற்படை கப்பல் ரோந்து நடவடிக்கையை பூர்த்தி செய்துவிட்டு இலங்கை திரும்புகின்றது என தெரிவித்துள்ளார்

பாரிய பின்னடைவை கூதிகளுக்கு ஏற்படுத்தி விட்டு நாடு திருப்பி உள்ளார்கள்.🙃

  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2024 at 15:20, ஏராளன் said:

செங்கடலிற்கு கப்பலை அனுப்பும் இலங்கையின் தீர்மானம் - மேற்காசிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தி

Published By: RAJEEBAN  13 JAN, 2024 | 09:31 AM

image

செங்கடலிற்கு கப்பலை அனுப்பும் இலங்கையின் தீர்மானம் தொடர்பில் மேற்காசிய நாடுகளின் தூதுவர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்ற பணிகளில் இலங்கையர்களை இஸ்ரேல் வேலைக்கு அமர்த்துவதற்கு அனுமதிக்கவேண்டாம் எனவும் மேற்காசிய நாடுகளின் தூதுவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சமீபத்தில் சந்தித்தவேளை மேற்காசிய நாடுகளின் தூதுவர்கள் செங்கடலிற்கு கப்பலை அனுப்பும் தீர்மானம் குறித்து வெளிப்படையாக அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேலுடனான பாதுகாப்பு உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே அமெரிக்காவும் பிரிட்டனும் செங்கடலில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன ஏனைய நாடுகள் அவ்வாறு செயற்படவில்லை என மேற்காசியநாடுகளின் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/173833

இஸ்ரேலுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பியதுபோல செங்கடலுக்கு கப்பலை அனுப்பிவிட வேண்டும். இத்தேட்கெல்லாம் யோசிக்க கூடாது.

நம்ம என்ன ஏவுகணைகளையா அனுப்ப போகிறோம். எங்கயாவது ஒருஇடத்தில நங்கூரத்தை போட்டிவிட்டு நிக்கிறதுதானே. ரணிலுக்கு இதெல்லாமா சொல்லி கொடுக்க வேண்டும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.