Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெரு நாட்டின் 'ஏலியன்' மம்மி: டி.என்.ஏ ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஏலியன் புகைப்படங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிராண்டன் லைவ்சே
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 15 செப்டெம்பர் 2023
    புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த ஆண்டு அக்டோபரில் பெரு நாட்டின் தலைநகர் லிமா விமான நிலையத்தில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு 'ஏலியன் மம்மிகள்' மனிதனால் உருவாக்கப்பட்டவை என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

லிமாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பெருவின் கலாச்சார அமைச்சகம் இந்த மம்மிகள் மனித உருவ பொம்மைகள் என்று கூறியது.

இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் எலும்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டது என்று டிஎன்ஏ சோதனை முடிவுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பெருவின் நாஸ்கா பகுதியில் காணப்படும் மற்றொரு 'மூன்று விரல் கை'யையும் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். நிபுணர்களைப் பொறுத்தவரை, அந்த உயிரினத்திற்கும் வேற்றுகிரகவாசிகளுடன் எந்த தொடர்பும் இல்லை.

பெருவின் சட்ட மருத்துவம் மற்றும் தடயவியல் அறிவியல் கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர் ஃபிளேவியோ எஸ்ட்ராடா, "அவை வேறொரு உலகத்தைச் சேர்ந்தவை அல்ல. பூமியின் விலங்குகளின் எலும்புகளால் செய்யப்பட்ட பொம்மைகள், நவீன செயற்கை பசையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவை வேற்றுகிரகவாசிகள் என்று நம்பப்படுகிறது. ஆனால், அது முற்றிலும் புனையப்பட்டது,"என்றார்.

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, லிமா விமான நிலையத்தில் அமைந்துள்ள டிஹச்எல்(DHL) என்ற கூரியர் நிறுவனத்தின் அலுவலகத்தில் அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த இந்த இரண்டு மம்மிகளும் கண்டெடுக்கப்பட்டன.

அவை ஏலியன் மம்மிகளாக இருக்கலாம் என்று பல ஊடக நிறுவனங்கள் ஊகித்தன.

கடந்த ஆண்டு செப்டம்பரில், மெக்சிகோ நாடாளுமன்றத்தில் நீண்ட தலைகள் மற்றும் மூன்று விரல்களைக் கொண்ட இரண்டு சிறிய மம்மிகள் ஏலியன்களின் உடல்களா இல்லையா என்பது குறித்து விவாதம் நடந்தது. ஆனால் பெரும்பாலான வல்லுநர்கள் அன்னியக் கோட்பாட்டை நிராகரித்துள்ளனர். இதுகுறித்து நாசாவும் ஒரு அறிக்கையை அப்போது வெளியிட்டிருந்தது.

 

என்ன சொன்னது நாசா?

மனிதர் அல்லாத பழைய சடலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நாசா நிர்வாகி பில் நெல்சன், அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, அதன் தரவுகளும் வெளிப்படைத்தன்மையோடு மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதாகக் கூறினார்

இது வரையில் தென்பட்ட நூற்றுக்கணக்கான யுஎப்ஒ-க்களை ஆய்வு செய்த அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, இந்த விவரிக்கப்படாத நிகழ்வுகளுக்கு பின்னால் வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளது.

ஆனால், அப்படி வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான சாத்தியத்தை முற்றிலும் நிராகரிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

உண்மையை சொல்லப்போனால் நீண்டகாலமாக எதிர்பார்கப்பட்ட இந்த நாசாவின் அறிக்கை எந்த உறுதியான ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

ஆனால், இந்த அறிக்கையில் யுஏபி எனப்படும் அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை எப்படி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டும், செயற்கை நுண்ணறிவைக் கொண்டும் நாசா ஆய்வுக்கு உட்படுத்துகிறது என விவரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய நாசா நிர்வாகி பில் நெல்சன், அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, அதன் தரவுகளும் வெளிப்படைத்தன்மையோடு மக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதாகக் கூறினார்.

நாசாவின் அந்த 36 பக்கங்கள் கொண்ட அறிக்கை மிகவும் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான ரீதியிலான தன்மையில் இருப்பதால், அதில் முக்கியமாகக் கூறப்பட்டுள்ளவை இங்கே உள்ளன.

 
கேமராவில் பதிவானவை

பட மூலாதாரம்,US NAVY

படக்குறிப்பு,

கேமராவில் பதிவானவை

வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா ?

மனிதர் அல்லாத பழைய சடலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சூரிய குடும்பத்தில் பூமிக்கு அப்பாற்பட்ட இடங்களில் உயிரினங்கள் இருப்பதாக நாசா முடிவு செய்யவில்லை

நாசாவின் அறிக்கையின் கடைசிப் பக்கத்தில், நூற்றுக்கணக்கான யுஏபி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வருவதற்கான எந்த காரணமும், ஆதரமும் இல்லை என்று கூறியுள்ளது.

"இருப்பினும், அந்த பொருட்கள் இங்கு வருவதற்கு நமது சூரிய குடும்பத்தின் வழியாக பயணித்திருக்க வேண்டும்" என்று அறிக்கையில் கூறுயுள்ளது.

சூரிய குடும்பத்தில் பூமிக்கு அப்பாற்பட்ட இடங்களில் உயிரினங்கள் இருப்பதாக நாசா முடிவு செய்யவில்லை, இருப்பினும், புவி வளிமண்டலத்தில் அறியப்படாத வேற்றுகிரக தொழில்நுட்பத்தின் சாத்தியம் உள்ளது என்றும் கூறியுள்ளது.

 

ஏலியன்ஸ் குறித்த ஆய்வுக்கு தரவுகள் உண்டா ?

மனிதர் அல்லாத பழைய சடலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இதுவரை நாம் பார்த்திடாத ஒரு மிகப்பெரிய மர்மங்களில் இந்த யுஏபி ஒன்று

நாசாவின் அறிவியல் இயக்க இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா பாக்ஸ் கூறுகையில், “இதுவரை நாம் பார்த்திடாத ஒரு மிகப்பெரிய மர்மங்களில் இந்த யுஏபி ஒன்று. இதற்கு காரணம், நம்மிடம் அவை தொடர்பாக எந்த ஒரு தரவுகளும் இல்லை,” என்றார்.

அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகள் பலவும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவு செய்யப்பட்டு வந்தாலும், அவை குறித்து போதுமான தரவுகள் நம்மிடம் இல்லை என்கிறார் பாக்ஸ்.

"யுஏபி.யின் தன்மை மற்றும் அவற்றின் தோற்றம் குறித்து உறுதியான அறிவியல் ரீதியிலான முடிவுகளை எடுக்க நம்மிடம் போதுமான தரவுகள் இல்லை,” என்றார் பாக்ஸ்

இதுபோன்று அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளின் எதிர்கால தரவுகளை மதிப்பிடுவதற்கும், ஒரு வலுவான தரவுத்தளத்தை நிறுவுவதற்கும் இந்த புதிய இயக்குநரை நியமித்துள்ளதாக பாக்ஸ் கூறினார்.

 

மெக்ஸிகோவில் இருந்து வைரலான 'ஏலியன்' புகைப்படங்கள் உண்மையா ?

ஜெய்ம் மவுசன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

யுஎஃப்ஒ நிபுணரான ஜெய்ம் மவுசன், இரண்டு பழைய "மனிதர் அல்லாத" அன்னியர்களின் சடலங்களை அவர் ஆய்வுக்கு கொண்டு வந்தார்.

மெக்சிகோ அதிகாரிகளால் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்த வேற்று கிரகவாசிகளின் புகைப்படங்கள் குறித்து பிபிசி செய்தியாளர் சாம் கம்பரால் நாசா அதிகாரிகளிடம் கேட்டார்.

யுஎஃப்ஒ நிபுணரான ஜெய்ம் மவுசன், இரண்டு பழைய "மனிதர் அல்லாத" அந்நியர்களின் சடலங்களை அவர் ஆய்வுக்கு கொண்டு வந்தார்.

2017 ஆம் ஆண்டில் பெருவின் குஸ்கோ பகுதியில் அந்த மனிதர் அல்லாத சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ரேடியோகார்பன் சோதனையில் 1,800 ஆண்டுகள் பழமையான பொருள்கள் அவை என்றும் அவர் கூறினார்.

இந்த மாதிரிகளின் நம்பகத்தன்மை அறிவியல் வட்டாரங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஒரு முறை மௌசானே வேற்று கிரகவாசிகள் மற்றும் அவர்கள் வாழ்க்கை குறித்த நம்பிக்கைகளை நிராகரித்திருந்தார்.

நாசா விஞ்ஞானி டேவிட் ஸ்பெர்கெல் பிபிசியிடம் பேசுகையில், “உலக அறிவியல் சமூகத்திற்கு இந்த மாதிரிகளை ஆய்வுக்காக கிடைக்கச் செய்யுங்கள, அங்கே என்ன இருக்கிறது என்று பார்ப்போம்," என்றார்.

 

விஞ்ஞானிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள் !

மனிதர் அல்லாத பழைய சடலங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நாசாவின் ஆராய்ச்சிக்கான உதவி நிர்வாகியும் விஞ்ஞானியுமான டேனியல் எவன்ஸ், ஆராய்ச்சி குழு உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறினார்.

 

யுஏபி ஆராய்ச்சிக்காக நாசா சார்பில் புதிய இயக்குனர் இருப்பார், ஆனால், அவரின் அடையாளம் தற்போதைக்கு வெளியிடப்படாது.

யுஏபி ஆராய்ச்சியில் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என நாசா அறிவித்திருந்தபோதிலும், புதிய இயக்குனர் பற்றிய விவரங்கள், அவருக்கு எவ்வளவு மாதச் சம்பளம், அவர் என்ன மாதிரியான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறார் போன்ற தகவல்கள் வியாழக்கிழமை (செப்டம்பர் 14) அன்று நடந்த கூட்டத்தில் பகிரப்படவில்லை.

புதிய இயக்குநரை வெளியில் இருந்து வரும் அழுத்தங்கள் மற்றும் இடையூறுகளில் இருந்து பாதுகாக்க இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நாசாவின் ஆராய்ச்சிக்கான உதவி நிர்வாகியும் விஞ்ஞானியுமான டேனியல் எவன்ஸ், ஆராய்ச்சி குழு உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறினார்.

புதிய இயக்குநரின் பெயரை வெளியிடாததற்கு நாசா குழுவின் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக கருதுவதும் ஒரு காரணம் என்று அவர் கூறினார்.

 

AI கருவிகளைப் பயன்படுத்த நாசா பரிந்துரைக்கிறது

செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவின் துணை மிகவும் அத்தியாவசியனது

நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவின் துணை மிகவும் அத்தியாவசியனது என அந்த அறிக்கை கூறுகிறது. ஏனெனில், யுஏபியை புரிந்துக்கொள்ள முக்கியமான அம்சங்களில் செயற்கை நுண்ணறிவு மிகவும் அவசியமாக நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

யுஏபி.களை நன்கு புரிந்துகொள்வதற்கும் அடையாளம் காண்பதற்கும் உள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்று தரவு பற்றாக்குறை என்று கூறிய நாசா, அந்த இடைவெளியை 'க்ரவுட் சோர்சிங்' நுட்பங்கள் மூலம் சரி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதில், ஓப்பன் சோர்ஸ் ஸ்மார்ட்போன் அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் "உலகளவில் பல பார்வையாளர்களின் பிற ஸ்மார்ட்போன் மெட்டாடேட்டாவும் அடங்கும்.

தற்போது வரை பொது மக்களால் கூறப்படும் அல்லது பார்க்கப்படும் அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகளை ஒருங்கிணைத்து ஒழுங்கமைக்க தரப்படுத்தப்பட்ட அமைப்பு எதுவும் இல்லை, அதன் விளைவாக குறைவான மற்றும் முழுமையற்ற தரவுகளே உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cgle4d0j8e8o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஸ்லோவாக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது யார்? - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES 15 மே 2024 புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர் ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடந்தது? உள்ளூர் செய்தி தொலைக்காட்சி நிறுவனமான TA3 வெளியிட்டுள்ள செய்தியின்படி, "ஸ்லோவாக்கியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவிலிருந்து வட கிழக்கே 180 கிமீ தொலைவில் உள்ள ஹன்ட்லோவா நகரில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. ஹன்ட்லோவா நகரில் உள்ள கலாசார சமூக மையத்தில் நடந்த அரசு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ராபர்ட் அங்கிருந்து கிளம்புவதற்காக வெளியே வந்தபோது மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதை ஸ்லோவாக்கியாவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ஸ்லோவாக்கியா பிரதமர் சுடப்பட்ட இடம் அந்நாட்டு ஊடகங்களிடம் பேசிய சாட்சிகள், "துப்பாக்கி சூட்டுக்கு பிறகு பிரதமர் தரையில் வீழ்ந்ததாகவும், பாதுகாவலர்கள் அவரை காரில் ஏற்றி உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்" என்றும் தெரிவித்துள்ளனர். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ராபர்ட் ஃபிகோ படக்குறிப்பு,பான்ஸ்கா பைஸ்ட்ரிகா நகரில் உள்ள மருத்துவமனைக்கு பிரதமர் ராபர்ட் ஃபிகோ கொண்டுவரப்பட்ட காட்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரதமர்? பிரதமரின் கை, கால் மற்றும் வயிற்றுப்பகுதியில் குண்டுகள் பாய்ந்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. பிபிசியால் அதை தனிப்பட்ட முறையில் உறுதி செய்யமுடியவில்லை. இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "நான் பிரதமரின் கைகளைக் குலுக்க சென்ற போது மூன்று குண்டுகள் சுடப்பட்ட சத்தத்தை கேட்டேன். பின் பிரதமரின் தலையில் ஒரு கீறலையும் பார்த்தேன்" என்றார். பிரதமர் படுகொலை செய்ய முயற்சிகள் நடந்திருப்பதாக ஸ்லோவாக்கியா உள்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், பிரதமரின் உடல்நிலை குறித்து எந்த தகவலையும் அவர் குறிப்பிடவில்லை. பிரதமரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “பிரதமர் பல முறை சுடப்பட்டார், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவர் ஹெலிகாப்டர் மூலமாக பான்ஸ்கா பைஸ்ட்ரிகா நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,2018 இல் புலனாய்வுப் பத்திரிகையாளரான ஜான் குசியாக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஃபிகோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. யார் இந்த ராபர்ட் ஃபிகோ? கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலுக்குப் பிறகு ஸ்லோவாக்கியாவின் பிரதமராக மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ராபர்ட் ஃபிகோ. இடதுசாரி ஸ்மெர்-எஸ்எஸ்டி கட்சிக்கு தலைமை தாங்கி வரும் ராபர்ட், கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனுக்கான போர் உதவிகளை நிறுத்துவதாக உறுதிமொழி கொடுத்திருந்தார். அதே சமயம் தான் ஒரு ரஷ்ய சார்பற்றவன் என்பதையும் அவர் தெரிவித்துக் கொண்டார். 2018 இல் புலனாய்வுப் பத்திரிகையாளரான ஜான் குசியாக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஃபிகோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. "தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், யுக்ரேனுக்கு ஒரு சுற்று வெடிமருந்துகளை கூட அனுப்பமாட்டோம்” என்று தேர்தல் பரப்புரையின் போது ராபர்ட் உறுதியளித்தார். . ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை எதிர்ப்பதாக அவர் அளித்த உறுதிமொழியும், சிலரிடம் வரவேற்பை பெற்றது. இவரையும், ஹங்கேரியின் வலதுசாரி பிரதமரான விக்டர் ஓர்பனையும் ஒப்பிட்டு ஐரோப்பிய அரசியல் அரங்கில் விவாதங்கள் நடந்தன. ஒருவர் கைது ஸ்லோவாக்கியா பிரதமர் சுடப்பட்டது தொடர்பாக சம்பவ இடத்தில் ஒரு நபர் காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவர் யார்?, அவர்தான் பிரதமரை துப்பாக்கியால் சுட்டாரா? பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட என்ன காரணம்? என்பன போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,பிரதமர் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவரை கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.   பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,ஸ்லோவாக்கியா பிரதமர் மீதான தாக்குதலை உலகத் தலைவர்கள் கண்டித்துள்ளனர். உலகத் தலைவர்கள் கண்டனம் ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் மீதான தாக்குதலை உலக தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர். ஸ்லோவாக்கியா அதிபர் சுசானா கேப்புட்டவா, இந்த தாக்குதலை மிருகத்தனமானது மற்றும் இரக்கமற்றது என விமர்சித்துள்ளார். “நான் இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த மோசமான சூழ்நிலையில், தாக்குதலில் இருந்து மீண்டு வர ராபர்ட் ஃபிகோவுக்கு கூடுதல் வலிமை கிடைக்க வேண்டுகிறேன்” என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஃபிகோ மீதான இந்த மோசமான தாக்குதலை தான் கண்டிப்பதாக கூறியுள்ளார். ருமேனிய பிரதமர் மார்செல் சியோலாகு, துப்பாக்கிச் சூடு பற்றிய செய்தியைக் கேட்டு தான் "ஆழ்ந்த அதிர்ச்சியில்" இருப்பதாககூறியுள்ளார். செக். குடியரசு நாட்டின் பிரதமர் பீட்டர் ஃபியாலா, இந்த சம்பவம் "அதிர்ச்சியூட்டுவதாகவும்”, ஃபிகோ விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் கூறுகையில், "எனது நண்பரான பிரதமர் ராபர்ட் ஃபிகோவுக்கு எதிரான இந்த கொடூரமான தாக்குதலால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்" என்று கூறியுள்ளார். இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த பயங்கரமான தாக்குதல் சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். நாங்கள் அனைவரும் ஃபிகோ மற்றும் அவரது குடும்பத்தாரையே நினைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஸ்லோவாக்கியா பிரதமர் மீதான தாக்குதலை கண்டித்துள்ளார் யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி யுக்ரேன் அதிபர் கண்டனம் யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி இந்த தாக்குதலை பயங்கரமானது என்று கூறியுள்ளார். எந்த ஒரு நாட்டிலும், எந்த வடிவத்திலும் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், தங்களது சிந்தனை முழுவதும் ராபர்ட் ஃபிகோ மற்றும் அவரது அன்புக்குரியவர்கள், ஸ்லோவாக்கியாவின் மக்களோடு இருப்பதாக தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/c9rzrlekkn1o
    • தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை மக்களுக்கு உண்டு. அதைச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்(Charles Nirmalanathan) மற்றும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்(Mano Ganesan ) ஆகிய இருவரிடமும் தொடர்பு கொண்டு பேசிய போதே இதனை கூறியுள்ளார். மேலும், ‘‘திருகோணமலை, மூதூர் - சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் விரைவில் பிணையில் விடுவிக்க வழி செய்யப்படுவார்கள். பொலிஸ் கெடுபிடி அது தொடர்பாக பொதுப் பாதுகாப்பு அமைக்க டிரான் அலஸ் உரிய தரப்புகளுக்கு வழிகாட்டல் விடுத்திருக்கின்றார்.” என்றும் இந்த உரையாடல்களின்போது ஜனாதிபதியால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனோ கணேசன் எம்.பி. நேற்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘‘கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பொலிஸ் கெடுபிடி, அராஜகம் குறித்து விசனத்துடன் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதை விவரமாகச் செவிமடுக்க முன்னரே, இவ்விடயம் குறித்து சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. தன்னுடன் தொடர்பு கொண்டு பேசினார் என்றும், சம்பூரில் கைதானோரைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனோ கணேசனுக்குத் தெரிவித்துள்ளார். "உயிரிழந்தவர்களுக்காக உறவுகள் நினைவேந்தல் செய்வது அந்த உறவுகள் ஒவ்வொருவரினதும் உரிமை. அதை ஏன் தடை செய்யப் பொலிஸார் முனைகின்றனர் என்பது எனக்கு விளங்கவில்லை." என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்து “இது தொடர்பில் அரசுத் தலைவராக நீங்கள் ஒரு கொள்கை ரீதியான முடிவு எடுத்து, அதைப் பகிரங்கமாக அறிவித்துப் பொலிஸாருக்கும் நாட்டுக்கும் தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.   அதற்கான காலம் இதுதான். 'தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் அல்லது அமைப்புடன் தொடர்பு படுத்தாமல் தங்கள் உறவுகளை நினைவேந்த அனைத்து மக்களுக்கும் உரிமையுண்டு. அதை அங்கீகரிக்கின்றோம். அதைத் தடுக்க முடியாது. தடுக்கக் கூடாது. என்ற கொள்கைப் பிரகடனத்தை நீங்கள் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.''  என்று ஜனாதிபதியிடம் இதன்போது மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொருவருக்கும் மறைந்த தங்கள் உறவுகளை நினைவேந்த உரிமையுண்டு என ஏற்கனவே தாம் ஜனாதிபதி பதவிக்கு வந்த உடனேயே ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார். எனினும் அவரின் கீழே இயங்கும் பொலிஸ் கட்டமைப்பு வேறு நிகழ்ச்சி நிரலில் விடயங்களைக் கையாள்வது இப்போது நிரூபணமாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/mullivaikkal-remembrance-ranil-speech-1715819542
    • இது ரணிலை விழுத்தவென்றே யாரோ செய்த சதி. ரணில் தான் தமிழர்களிள் நண்பனாச்சே.
    • ஒரு ஜென்ட்ரல் நொலேட்ஜ்ஜுக்காக: எங்கண்ட ஜூயிஸ் பீப்பிளும் போர்க், ஹம் ஒண்டும் சாப்பிட்றேல்ல!
    • தமிழ் மக்கள் சிங்களவர்களோடு இணங்கி, அனுசரித்துப் போய், பொருளாதாரத்தையும், வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்த ரணிலுடன் சமரசம் பேச எத்தனிக்கும்போது இப்படி முள்ளிவாய்க்கால்க் கஞ்சி என்று காய்ச்சி எங்களின் எண்ணத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டுவது தகுமா?  இந்த நவடிக்கைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது எனது இணக்க அரசியலுக்குக் கடுமையான சேததைத்தை விளைவிக்கிறது.  ரணில் மாத்தையாட்ட ஜயவேவா !!! ஒஹொம யங், ஒஹொம யங் !!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.