Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரஞ்சித் said:

போகிறபோக்கில் நீங்கள் ஈழத்தமிழரையும் தொட்டுவிட்டுச் செல்கிறீர்கள். இலங்கை இலங்கையர்களுக்குச் சொந்தமா?  எல்லோரையுமே நீங்கள் கூறும் இலங்கை ஆட்சியாளர்கள் ஒன்றாக நடத்துகிறார்களா? அப்படி நடத்தியிருந்தால் நாம் தனிநாடு கேட்கவேண்டிய தேவை ஏன் வந்தது? எமது போராட்டம் தனிநபர்களால் தூண்டிவிடப்பட்ட தேவையற்ற போராட்டம் என்று கூறும் அளவிற்கு உங்களின் எண்ணம் சுருங்கக் காரணம் என்ன? அல்லது இதுதான் உங்களின் உண்மையான நிலைப்பாடா?  நல்லது, வெளியே வந்திருக்கிறீர்கள். 

இலங்கை போராளிகளுக்கு இந்தியா  ஆய்தம் கொடுத்து  பயிட்சி வழங்கியது  எதட்காக? இலங்கையில் ஈழம் சாத்தியம் இல்லை என்பது இந்தியாவுக்கு தெரியாதா? அப்படி பெற்று கொடுத்தால் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் என்ன செய்யும்?

போராட்டத்தால் கண்ட பலன் என்ன? இருந்ததை எல்லாம் இழந்ததுதான் மிச்சம். பிச்சை வேணாம் நாயை பிடி என்ற நிலைமைக்கு தமிழ் மக்கள் வந்துள்ளார்கள்.

13 திருத்த சடடதுக்கு என்ன நடந்தது? இந்தியாவுக்கு தேவைப்படும்போது கையில் எடுப்பார்கள், பின்னர் கை நழுவி விடுவார்கள். இவை எல்லாமே இந்தியாவின்  நாடகம்தான். 

  • Replies 61
  • Views 4.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • என்னிடம் நீளமாக எழுத எதுவும் இல்லை. The crux of the matter: 1. உங்கள் தவறான தரவுகள்: நீங்கள் ஓரின உறவை மனநோய் என்று தவறாகக் குறிப்பிட்டீர்கள். இது முதல் தடவையல்ல. மேலே கூட பால் மாற்ற சிகிச்ச

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    இதில் எவர் பக்கமும் நான் சாய விரும்பவில்லை. ஆனால் இதுதொடர்பாக எனது கருத்தை மட்டும் எழுதிவிடுகிறேன். நாஜிகளின் கைகளில் அகப்பட்டு முற்றான இனக்கொலையினைச் சந்தித்தவர்கள் யூதர்கள். கிட்டத்தட்ட ஆறு மில

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    எமது போராட்டம்பற்றி எந்தளவு தூரத்திற்கு தெளிவற்று இருக்கிறீர்கள் என்பதற்கு உங்களின் கருத்து சாட்சி. சம உரிமைக்கான, தாயக‌க் காப்பிற்கான, மொழிக்கான போராட்டம் என்பது சுதந்திரத்திற்குப் பின்னரான உடனட

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Cruso said:

இலங்கை போராளிகளுக்கு இந்தியா  ஆய்தம் கொடுத்து  பயிட்சி வழங்கியது  எதட்காக? இலங்கையில் ஈழம் சாத்தியம் இல்லை என்பது இந்தியாவுக்கு தெரியாதா? அப்படி பெற்று கொடுத்தால் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் என்ன செய்யும்?

போராட்டத்தால் கண்ட பலன் என்ன? இருந்ததை எல்லாம் இழந்ததுதான் மிச்சம். பிச்சை வேணாம் நாயை பிடி என்ற நிலைமைக்கு தமிழ் மக்கள் வந்துள்ளார்கள்.

13 திருத்த சடடதுக்கு என்ன நடந்தது? இந்தியாவுக்கு தேவைப்படும்போது கையில் எடுப்பார்கள், பின்னர் கை நழுவி விடுவார்கள். இவை எல்லாமே இந்தியாவின்  நாடகம்தான். 

எமது போராட்டம்பற்றி எந்தளவு தூரத்திற்கு தெளிவற்று இருக்கிறீர்கள் என்பதற்கு உங்களின் கருத்து சாட்சி.

சம உரிமைக்கான, தாயக‌க் காப்பிற்கான, மொழிக்கான போராட்டம் என்பது சுதந்திரத்திற்குப் பின்னரான உடனடிக் காலத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அப்போது இந்தியா இவ்விடயத்தில் தலையிடவே இல்லை. 

1983 இலிருந்துதான் இந்தியா எமது பிரச்சினையில் தலையிட ஆரம்பித்தது. அதற்கு வித்திட்டவர் இந்திரா. ஆனால், 1983 ஆம் ஆண்டின் இனக்கொலை தமிழர்கள் தனித் தேசத்திற்குச் சொந்தக்காரர்கள் என்பதையும், அவர்கள் தம்மை இலங்கையர்களாக அடையாளப்படுத்த முடியாது என்பதையும் தெளிவாக அவர்களுக்கு உணர்த்திற்று (உங்களுக்கு அந்த உணர்வு வரவில்லையென்றால் பிழை தமிழர்களில் அல்ல). 2009 இல் நடந்தவை உங்களுக்குத் தெரிந்திருந்தால் உங்களை நீங்கள் "இலங்கையர்" என்று கூறி மகிழ மாட்டீர்கள். 

இந்தியா தலையிட்டது தனது நலன்களை காத்துக்கொள்ளவே. அதற்கும் ஈழத்தமிழர்களின் அவலங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நாம் இந்தியாவின் கைக்கூலிகள் அல்ல. எமது போராட்டம் இந்திய நலன்களுக்கான போராட்டம்தான் என்று நீங்கள் நம்பினால், அது உங்களின் அரசியல் அறிவை, எமது போராட்டத்தின் சரித்திரம் தொடர்பான புரிதலைக் காட்டி நிற்கிறது.

அழிக்கப்பட்டது ஆயுதப் போராட்டம் மட்டும்தான். ஆனால், எமது இருப்பிற்கான, மொழிக்கான, தாயக‌க் காப்பிற்கான போராட்டமும் தேவையும் என்றுமில்லாதவாறு இன்று அதிகமாகவே இருக்கிறது. இதை புரிந்துகொள்ளாது, நாம் அனைவருமே இலங்கையர் என்று நீங்கள் கூறி மகிழ்வீர்களாக இருந்தால்,பிழை என்னில் இல்லை. 

18 minutes ago, Cruso said:

இலங்கை போராளிகளுக்கு இந்தியா  ஆய்தம் கொடுத்து  பயிட்சி வழங்கியது  எதட்காக? இலங்கையில் ஈழம் சாத்தியம் இல்லை என்பது இந்தியாவுக்கு தெரியாதா? அப்படி பெற்று கொடுத்தால் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் என்ன செய்யும்?

போராட்டத்தால் கண்ட பலன் என்ன? இருந்ததை எல்லாம் இழந்ததுதான் மிச்சம். பிச்சை வேணாம் நாயை பிடி என்ற நிலைமைக்கு தமிழ் மக்கள் வந்துள்ளார்கள்.

13 திருத்த சடடதுக்கு என்ன நடந்தது? இந்தியாவுக்கு தேவைப்படும்போது கையில் எடுப்பார்கள், பின்னர் கை நழுவி விடுவார்கள். இவை எல்லாமே இந்தியாவின்  நாடகம்தான். 

இந்தியாவையும், தனிநாட்டிற்கான கோரிக்கையினையும், ஆயுதப் போராட்டத்தினால் ஏற்பட்ட அழிவினையும் தூக்கி ஓரத்தில் வைத்துவிட்டு, எனது கேள்விக்கு பதில் தாருங்கள்.

இலங்கையில் இன்று தமிழர்கள் சம உரிமையினைக் கொண்டு, தமது மொழிக்கான சம அந்தஸ்த்தினைக் கொண்டு, இராணுவ ஆக்கிரமிப்பின்றி, தமது தாயகம் காவுகொள்ளப்படாது, பெளத்த மயமாக்கப்படாது சிங்களவர்களுக்கு நிகரான சுதந்திரத்தைக் கொண்டு வாழ்கிறார்களென்று நம்புகிறீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரஞ்சித் said:

எமது போராட்டம்பற்றி எந்தளவு தூரத்திற்கு தெளிவற்று இருக்கிறீர்கள் என்பதற்கு உங்களின் கருத்து சாட்சி.

சம உரிமைக்கான, தாயக‌க் காப்பிற்கான, மொழிக்கான போராட்டம் என்பது சுதந்திரத்திற்குப் பின்னரான உடனடிக் காலத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அப்போது இந்தியா இவ்விடயத்தில் தலையிடவே இல்லை. 

1983 இலிருந்துதான் இந்தியா எமது பிரச்சினையில் தலையிட ஆரம்பித்தது. அதற்கு வித்திட்டவர் இந்திரா. ஆனால், 1983 ஆம் ஆண்டின் இனக்கொலை தமிழர்கள் தனித் தேசத்திற்குச் சொந்தக்காரர்கள் என்பதையும், அவர்கள் தம்மை இலங்கையர்களாக அடையாளப்படுத்த முடியாது என்பதையும் தெளிவாக அவர்களுக்கு உணர்த்திற்று (உங்களுக்கு அந்த உணர்வு வரவில்லையென்றால் பிழை தமிழர்களில் அல்ல). 2009 இல் நடந்தவை உங்களுக்குத் தெரிந்திருந்தால் உங்களை நீங்கள் "இலங்கையர்" என்று கூறி மகிழ மாட்டீர்கள். 

இந்தியா தலையிட்டது தனது நலன்களை காத்துக்கொள்ளவே. அதற்கும் ஈழத்தமிழர்களின் அவலங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நாம் இந்தியாவின் கைக்கூலிகள் அல்ல. எமது போராட்டம் இந்திய நலன்களுக்கான போராட்டம்தான் என்று நீங்கள் நம்பினால், அது உங்களின் அரசியல் அறிவை, எமது போராட்டத்தின் சரித்திரம் தொடர்பான புரிதலைக் காட்டி நிற்கிறது.

அழிக்கப்பட்டது ஆயுதப் போராட்டம் மட்டும்தான். ஆனால், எமது இருப்பிற்கான, மொழிக்கான, தாயக‌க் காப்பிற்கான போராட்டமும் தேவையும் என்றுமில்லாதவாறு இன்று அதிகமாகவே இருக்கிறது. இதை புரிந்துகொள்ளாது, நாம் அனைவருமே இலங்கையர் என்று நீங்கள் கூறி மகிழ்வீர்களாக இருந்தால்,பிழை என்னில் இல்லை. 

அப்படியா ? அப்படி என்றால் இப்போது என்ன நடக்குதென்று உங்களுக்கு தெரியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Cruso said:

அப்படியா ? அப்படி என்றால் இப்போது என்ன நடக்குதென்று உங்களுக்கு தெரியுமா? 

நன்றாகவே தெரியும், ஊரில் இருப்பது நீங்கள் மட்டுமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரஞ்சித் said:

நன்றாகவே தெரியும், ஊரில் இருப்பது நீங்கள் மட்டுமல்ல.

நல்லது 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Cruso said:

நல்லது 

எனது கேள்விக்கான பதில்? 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

எனது கேள்விக்கான பதில்? 

கேள்வியா? என்ன கேள்வி? ஆ அதுவா? ஊரில் நான் மட்டுமில்லை இன்னும் நிறைய பேர் இஇருக்கிறார்கள் என்று எழுதி இருந்தீர்கள். நான் ஒரு நாளும் நான் மட்டும்தான் இருக்கிறேன் என்று எழுதவில்லை. நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Cruso said:

கேள்வியா? என்ன கேள்வி? ஆ அதுவா? ஊரில் நான் மட்டுமில்லை இன்னும் நிறைய பேர் இஇருக்கிறார்கள் என்று எழுதி இருந்தீர்கள். நான் ஒரு நாளும் நான் மட்டும்தான் இருக்கிறேன் என்று எழுதவில்லை. நன்றி. 

எனது கேள்விக்கு உங்களிடமிருந்து பதில் வரபோவதில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதற்கு பின்வருவன அல்லது அவற்றில் ஒன்று காரணமாக இருக்கலாம்,

1. நான் கூறியதை அப்படியே ஏற்றுக்கொள்கிறீர்கள். அதாவது தமிழர்கள் இலங்கையர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது என்பது.
2. நான் கேட்கும் கேள்வி குறித்து உங்களுக்குப் புரிதல்/தெளிவு இல்லையென்பது.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரஞ்சித் said:

எனது கேள்விக்கு உங்களிடமிருந்து பதில் வரபோவதில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதற்கு பின்வருவன அல்லது அவற்றில் ஒன்று காரணமாக இருக்கலாம்,

1. நான் கூறியதை அப்படியே ஏற்றுக்கொள்கிறீர்கள். அதாவது தமிழர்கள் இலங்கையர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது என்பது.

அதெப்படி இலங்கை தமிழர்கள் இந்தியர்கள் என்று சொல்லலாம். இலங்கை தமிழர்கள் இலங்கையர்கள்தான். என்னதான் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் இலங்கை தமிழர்களுக்கு வேற்று நாட்டு பிரஜா உரிமை கிடைக்கு மட்டும் இலங்கையர்கள்தான். வேறு எங்காவது ஒரு நாட்டில் சீவித்துக்கொண்டு நான் இலங்கையர் இல்லை என்று சொல்ல முடியுமா? இலங்கை கடவு சீட்டு வைத்துக்கொள்ளுமட்டும் , ஆள் அடையாள அடடை வைத்து கொள்ளு மட்டும் இலங்கை தமிழர்கள்தான் தமிழர்கள் இலங்கையர்கள்தான். 


2. நான் கேட்கும் கேள்வி குறித்து உங்களுக்குப் புரிதல்/தெளிவு இல்லையென்பது.

இத்தேட்கெல்லாம் பெரிய Phd படடம் எல்லாம் படிக்க  தேவை இல்லை. ஆரம்ப பாடசாலைக்கு போனாலே போதும். 

நன்றி

 

On 17/1/2024 at 20:48, குமாரசாமி said:

 இஸ்ரேலியர்கள் இன்று காசாவில் செய்வதற்கும் அன்று ஹிட்லர் யூதர்களுக்கு செய்தற்கும் என்ன வித்தியாசம் என நான் கேட்டால்.....? வரலாறு தெரியாதவன் என்பர் 

இதுதான் ஹிட்லர் கீழானவர் இல்லை என்று காட்ட முயற்சிக்கும் சமன்பாடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, இணையவன் said:

இதுதான் ஹிட்லர் கீழானவர் இல்லை என்று காட்ட முயற்சிக்கும் சமன்பாடு.

முதலில் இன்றைய யூதர்களுக்கும் அன்றைய நாஷிகளுக்கும் என்ன வித்தியாசம் என நன்றாக யோசித்து சொல்லுங்கள். அவசரமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/1/2024 at 19:46, Cruso said:

எனவே பலஸ்தீனியர்களை இன்று அகதிகளாக , பயங்கரவாதிங்களாக ஆயுதம் தூக்க வைத்தவர்கள் அரபு நாடுகளே. இஸ்ரேல் இல்லை. 

கடந்த 60 ஆண்டில் இஸ்ரேலியர்களால் இஸ்ரேலில் கொல்லப்பட்ட கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை? தரை மட்டமாக்கப்பட்ட வீடுகள் எத்தனை? 
குறிப்பு: இவை AI தொழில்நுட்பத்தால் நடை பெறவில்லை.😝

டிஸ்கி: காசாவும், மேற்கு கரையும் இஸ்ரேலில் உள்ளன.🙃

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.