Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் மயானங்களை கனரக வாகனங்கள் கொண்டு உழுது அழிக்கும் இஸ்ரேலிய இராணுவம்

ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் மீதான காசா யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை பதினாறு மயானங்களை இஸ்ரேலிய இராணுவ அழித்து நாசம் செய்திருப்பதாகத் தெரியந்திருக்கிறது. இவ்வாறு அழிக்கப்பட்டுள்ள மயானங்களின் நினைவுக் கற்கள் புரட்டப்பட்டு, குழிகள் தோண்டப்பட்டு, மனித எச்சங்களும் வெளியே எடுத்து விச்சப்பட்டிருப்பதை அமெரிக்காவின் சி.என்.என் செய்திச்சேவை ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டிருக்கிறது.
இறுதியாகக் கான் யூனிஸ் பகுதியில் அமைந்திருந்த மயானத்தை அழித்து, புதைகுழிகளைத் தோண்டிய இஸ்ரேலிய இராணுவம் இஸ்ரேலியர்களை ஹமாஸ் இங்கு ஒளித்து வைத்திருக்கலாம் என்பதனால் மயானத்தை அழிக்கவேண்டி வந்ததாகக் கூறியிருக்கிறது. 

யுத்தத் தாங்கிகளையும், கனரக வாகனங்களையும் பாவித்தே இந்த மயானங்கள் இஸ்ரேலினால் அழிக்கப்பட்டிருக்கின்றன. 
காசாவினுள் இஸ்ரேலிய இராணுவம் புகுந்ததிலிருந்து மாயானங்களை அழிக்கும் கைங்கரியம் மிகவும் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டு வருவதை சி என் என் வைத்திருக்கும் ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. சர்வதேச சட்டங்களின்படி மதத் தலங்களை அழித்தல், மயானங்களை அழித்தல் ஆகியவை குற்றங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலின் இக்குற்றம் போர்க்குற்றம் ஆவதற்கான அனைத்து இலக்கணங்களையும் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. 

மயானங்களை ஹமாஸ் அமைப்பு இராணுவத் தேவைகளுக்காகப் பாவிப்பதால் அவையும் தனது இராணுவத்தின் முறையான இலக்குகள்தான் என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் நியாயப்படுத்தியிருக்கிறார். கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் இந்த மயானங்களில் புதைத்திருக்கலாம் என்பதனாலேயே அனைத்து மயானங்களும் தோண்டப்படுவதாகவும் அவர் கூறினார். அவ்வாறு தோண்டியெடுக்கப்படும் உடல்கள் இஸ்ரேலியர்களினுடையவை அல்ல என்று உறுதிப்படுத்துப்படுமிடத்து அவை மீளவும் அங்கேயே புதைக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார். 

ஆனால், சி என் என் பெற்றுக்கொண்ட ஏனைய விபரங்களின்படி, மயானங்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் தரைமட்டமாக உழப்பட்டு, அங்கே இராணுவத் தாங்கிகளும், ஆட்டிலெறித் தளங்களும் நிறுவப்பட்டு யுத்தத்திற்காகப் பாவிக்கப்பட்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மயானங்களைச் சுற்றி பாரிய மதில்கள் அமைக்கப்பட்டு இராணுவ ஏவுதளங்களாக இவை மாற்றப்பட்டிருக்கின்றன. 

ஆனால், ஒரேயொரு மயானம் மட்டும் அப்படியே இருந்தது. அங்கே முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களில் கொல்லப்பட்ட கிறீஸ்த்த‌வர்கள், யூதர்கள், மேற்குநாட்டவர்களின் கல்லறைகள் காணப்பட்டன. ஆகவே, அதனை இஸ்ரேலிய இராணுவம் அப்படியே விட்டு விட்டது. 


மரணித்தவர்களுக்கான மரியாதையினை தாம் வழங்குவதாகக் கூறிய பேச்சாளர், எதற்காக மயானங்களின் மீது தமது யுத்தத் தாங்கிகளும், ஆட்டிலெறித் தளங்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றன என்று கேட்டபோது எதனையும் கூற மறுத்துவிட்டார். 

இவற்றைப் பார்க்கும்போது நினைவிற்கு வருவது ஒரு விடயம்தான்.

தாயகத்தில் எமது செல்வங்களின் கல்லறைகள் சிங்கள மிருகங்களால் உழப்பட்டு, மாவீரர்களின் திருமேனிகள் தூக்கி வெளியே எறியப்பட்டு, எமது கல்லறைகளின் மீது சிங்களப் பேய்கள் இராணுவத் தளங்களை அமைத்து இறுமாப்புடன் எம்மை இன்றுவரை ஆக்கிரமித்து வைத்திருப்பதுதான். 

1980 களில் இஸ்ரேலியப் பயங்கரவாதிகள் சொல்லிக்கொடுத்த மிருகத்தனத்தை சிங்களப் பேய்கள் எம்மீது கட்டவிழ்த்துவிட்டன. இன்றோ சிங்களப் பேய்கள் 2009 இல் இருந்து செய்து வருபவற்றை இஸ்ரேலிய பயங்கரவாதிகள் பாலஸ்த்தீனத்தில் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சீ என் என் இல் கடந்த சில நாட்களாக இதுதான் தலைப்பு செய்தி.

சீ என் என் இலேயே தலைப்பு செய்தியாக பிரசுரிக்கின்றார்கள் என்றால் இஸ்ரேல் எவ்வளவு மோசமான முறையில் செயற்படுகின்றது என்பதை கற்பனை செய்யலாம்.  

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான் என்ற பொன்மொழி இஸ்ரேல் விடயத்தில் எப்போது காண்பிக்கப்படும் என அவதானிப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா சிறிது  சிறிதாக இஸ்ரேலை கைவிடுவது போலுள்ளது. இரு மாநில கொள்கையை பைடன் ஆதரிக்க சொல்லி நத்தனியாகுவிடம் கேட்டும் நத்தனியாகு அதனை அரைகுறையாக ஆம்/ இல்லை என்ற நிலையில் உள்ளது காரணமாக இருக்கலாம்.
மற்ற காரணம் தோற்கிற குதிரையில் யாரும் பந்தயம் கட்டுவார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, nunavilan said:

அமெரிக்கா சிறிது  சிறிதாக இஸ்ரேலை கைவிடுவது போலுள்ளது. இரு மாநில கொள்கையை பைடன் ஆதரிக்க சொல்லி நத்தனியாகுவிடம் கேட்டும் நத்தனியாகு அதனை அரைகுறையாக ஆம்/ இல்லை என்ற நிலையில் உள்ளது காரணமாக இருக்கலாம்.
மற்ற காரணம் தோற்கிற குதிரையில் யாரும் பந்தயம் கட்டுவார்களா?

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலை கை விடும் என நான் நினைக்கவில்லை.மனிதாபிமானம் இல்லாமல் சுய மரியாதைக்காக ஆயுதங்களை கையிலெடுப்பவர்கள் இவர்கள். எனது கணிப்பில் நடிக்கின்றார்கள் அவ்வளவுதான். ஏனெனில் போகும் வரும் இடமெல்லாம் தோல்வியில் துவண்டு போயுள்ளனர் அதனால் தான் ஏதோ ஒரு மாற்று வழியை தேடுகின்றனர்.

இந்தா அடுத்த அமெரிக்க ஜெனாதிபதி டொனால்ட் ரம்ப் எண்டு இப்பவே  புறு புறுக்க வெளிக்கிட்டுட்டாங்கள்.... அந்த மனிசனும் இந்தா 24 மணித்தியாலத்திலை பிரச்சனையளை முடிக்கிறன் எண்டு சவால் வேற விடுறார்....😂

காசா போரும் அமெரிக்க தேர்தல் வெற்றியை தீர்மானிக்கப்போகின்றது. எனவே இன்னும் பல நாடகங்கள் மேடையேறும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சிங்களம் மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்தது போன்றதொரு செயல். 

இறப்பிலும் மனிதருக்கு அமைதி இல்லையென்றாகிவிட்டது. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலை கை விடும் என நான் நினைக்கவில்லை.மனிதாபிமானம் இல்லாமல் சுய மரியாதைக்காக ஆயுதங்களை கையிலெடுப்பவர்கள் இவர்கள். எனது கணிப்பில் நடிக்கின்றார்கள் அவ்வளவுதான். ஏனெனில் போகும் வரும் இடமெல்லாம் தோல்வியில் துவண்டு போயுள்ளனர் அதனால் தான் ஏதோ ஒரு மாற்று வழியை தேடுகின்றனர்.

இந்தா அடுத்த அமெரிக்க ஜெனாதிபதி டொனால்ட் ரம்ப் எண்டு இப்பவே  புறு புறுக்க வெளிக்கிட்டுட்டாங்கள்.... அந்த மனிசனும் இந்தா 24 மணித்தியாலத்திலை பிரச்சனையளை முடிக்கிறன் எண்டு சவால் வேற விடுறார்....😂

காசா போரும் அமெரிக்க தேர்தல் வெற்றியை தீர்மானிக்கப்போகின்றது. எனவே இன்னும் பல நாடகங்கள் மேடையேறும்.:cool:

பைடன் அடுத்த தேர்தலில் வெல்ல வேண்டும் எனில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஒரு தீர்வின் மூலமே இது சாத்தியம். மறு கரையில் நத்தனியாகு போரை விட்டால்  அவர் பதவி இழக்க வேண்டும். ஊழல் வழக்குகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்.  நத்தனியாகுவின் வெற்றி அமெரிக்காவை போருக்குள் இழுத்து விட்டது. அவரின் தோல்வி கமாஸ், கிஸ்புல்லாவை ஒடுக்க முடியாமல் இருப்பது. பணய கைதிகளை மீட் க முடியாததும் ஒரு தோல்வி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.