Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 JAN, 2024 | 07:44 PM
image

இலங்கையில் 91வீத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார். 

தட்டம்மை நோய் இந்நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த காலங்களில் தட்டம்மை நோய் மீண்டும் தலைதூக்கியதையடுத்து, இவ்வாறான தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே  கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பதிரண,

“நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதே இந்த ஆண்டின் முக்கிய எதிர்பார்ப்பாகும். ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு மிகவும் தரமான சேவையை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு அவசியமான நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. தொற்றா  நோய்கள் தொடர்பில் இலங்கை பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.

20 வீதத்துக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்காசிய பிராந்தியத்தில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகளவில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ள நாடாகவும் இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயர் இரத்த அழுத்தம் தொடர்பான சிக்கல்களில் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல நோய்கள் அடங்குகின்றன.

மேலும், வேகமாக முதுமையடையும் மக்கள் தொகை கொண்ட நாடென்ற வகையில், நினைவாற்றல் குறைபாடு, கண் நோய்கள், எலும்பு நோய்கள் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன.

எனவே, தொற்றாத நோய்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வேகமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த விசேட அவதானத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையினரின் ஆதரவு கிடைத்துள்ள போதிலும், இது தொடர்பாக பொதுமக்களின் ஆதரவு இப்பொழுதுள்ளதை விடவும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தற்போது அதிகரித்து வரும் தட்டம்மை நோயைத் தடுக்க பல்வேறு விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம். கடந்த சில வாரங்களில், 91 வீத குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை ஏற்ற முடிந்தது.

அத்துடன், தற்போதுள்ள மருந்துப் பற்றாக்குறையை போக்குவதற்கு பெருமளவிலான அத்தியாவசிய மருந்துகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மருந்து தட்டுப்பாடு படிப்படியாக குறைந்து வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில், மருத்துவ விநியோகத் துறையையும், கொள்முதல் செயல்முறையையும் வெளிப்படையானதாக மாற்ற ஒன்லைன் முறையைப் பயன்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்காக ஏற்கனவே மொரட்டுவை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களின் கணினி துறைகளுடன் சுகாதார அமைச்சு கலந்துரையாடி வருகிறது” என்றும்  அமைச்சர் ரமேஷ் பதிரண மேலும்  தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/174554

  • கருத்துக்கள உறவுகள்

காலேல 12  இடியப்பம், 11 மணிக்கு tea வடை, மத்தியானம் மலை மாதிரி சோறு,  இரண்டு மணிக்கு வெயில் சூட்டுக்கு fanta சோடா. பின்னரம் மிக்ஸ்ர் கொண்டல் கடலை and Tea. இரவைக்கு beer with கொத்து ரொட்டி

இப்பிடி சாப்பிட்டுகொண்டு சனம் 35 வயசுக்கு மேல் வாழுதே.. அதே பெரிய விஷயம் 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, பகிடி said:

காலேல 12  இடியப்பம், 11 மணிக்கு tea வடை, மத்தியானம் மலை மாதிரி சோறு,  இரண்டு மணிக்கு வெயில் சூட்டுக்கு fanta சோடா. பின்னரம் மிக்ஸ்ர் கொண்டல் கடலை and Tea. இரவைக்கு beer with கொத்து ரொட்டி

இப்பிடி சாப்பிட்டுகொண்டு சனம் 35 வயசுக்கு மேல் வாழுதே.. அதே பெரிய விஷயம் 

இப்படி சாப்பிடுகின்றவர்கள் என்ன வேலை செய்கின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இப்படி சாப்பிடுகின்றவர்கள் என்ன வேலை செய்கின்றார்கள்?

அநேகமா அரச உத்தியோகத்தார் வேலை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, பகிடி said:

அநேகமா அரச உத்தியோகத்தார் வேலை 

அன்றைய காலங்களில் அரச உத்தியோகத்தர்களும்(கொழும்பு தவிர) ஏதாவது ஒரு வழியில் உடம்பு களைக்க வேலை செய்தவர்கள். சில பலர் தங்கள் சுய தேவைகளுக்காக தோட்டம் கூட செய்தனர்.வயல் வேலைகளும் செய்தனர். நடந்து திரிந்தனர். சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தனர். நோய் நொடிகளும் குறைவாகவே இருந்தது.

ஆனால் இன்று மரக்கறி விலை ஏறிவிட்டது என புலம்பிக்கொண்டு சகல நோய்களையும் சுமந்து  அவதிப்படுகின்றனர். 😂

On 22/1/2024 at 22:27, குமாரசாமி said:

அன்றைய காலங்களில் அரச உத்தியோகத்தர்களும்(கொழும்பு தவிர) ஏதாவது ஒரு வழியில் உடம்பு களைக்க வேலை செய்தவர்கள். சில பலர் தங்கள் சுய தேவைகளுக்காக தோட்டம் கூட செய்தனர்.வயல் வேலைகளும் செய்தனர். நடந்து திரிந்தனர். சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தனர். நோய் நொடிகளும் குறைவாகவே இருந்தது.

ஆனால் இன்று மரக்கறி விலை ஏறிவிட்டது என புலம்பிக்கொண்டு சகல நோய்களையும் சுமந்து  அவதிப்படுகின்றனர். 😂

அன்றைய மக்கள் ஏன் ஆரோக்கியமாகவும் இன்றுபோல் நீண்ட ஆயுளுடனும் வாழவில்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, இணையவன் said:

அன்றைய மக்கள் ஏன் ஆரோக்கியமாகவும் இன்றுபோல் நீண்ட ஆயுளுடனும் வாழவில்லை?

இன்றைய மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்கின்றார்களா? இல்லையே:

9 minutes ago, இணையவன் said:

இன்றுபோல் நீண்ட ஆயுளுடனும் வாழவில்லை?

நீண்ட ஆயுள் என நீங்கள் சொல்ல வருவதில் வயதெல்லை என்னவாக இருக்கும்?

Just now, குமாரசாமி said:

இன்றைய மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்கின்றார்களா? இல்லையே:

விகிதாசரப்படி முன்னேறிய நாடுகளில் நிச்சயமாக.

சரியான உணவு மருத்துவம் இல்லாத நாடுகளில் ஆரோக்கியமின்றி வாழ்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, இணையவன் said:

விகிதாசரப்படி முன்னேறிய நாடுகளில் நிச்சயமாக.

சரியான உணவு மருத்துவம் இல்லாத நாடுகளில் ஆரோக்கியமின்றி வாழ்கிறார்கள்.

இன்றைய காலத்து முதியவர்கள் எத்தனை பேர் தங்கள் இயற்கை கடமைகளை தாங்களாகவே செய்கின்றார்கள்? இப்படியானவர்களை கவனிக்கவென்றே பல கட்டண சேவை நிறுவனங்கள் உருவாகிகொண்டிருப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? 

என்னை நானே  கவனிக்க முடியவில்லை ஆயின் உயிரோடு இருந்து என்ன பலன்?

11 minutes ago, இணையவன் said:

சரியான உணவு மருத்துவம் இல்லாத நாடுகளில் ஆரோக்கியமின்றி வாழ்கிறார்கள்.

சரியான மருத்துவம் இல்லாத நாடுகளில் மக்கள் வாழவில்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, இணையவன் said:

சரியான உணவு மருத்துவம் இல்லாத நாடுகளில் ஆரோக்கியமின்றி வாழ்கிறார்கள்.

சரியான மருத்துவமும் சரியான உணவுமுறைகளும் உள்ள நாடுகளில் தான் ஊருக்கொரு மருத்துவமனைகளும் பெட்டிக்கடை போல் மூலைக்கு மூலை வைத்தியர்களும் நோயாளிகளுக்காக காத்திருக்கின்றர்கள். 

ஆனால் அந்த வைத்தியர்களோ  எம் முன்னோர்களைப்போல் உணவு விடயங்களில் ஏழையாக இருங்கள் என்றுதான் புத்திமதி சொல்கின்றார்கள்.

17 minutes ago, குமாரசாமி said:

ஆனால் அந்த வைத்தியர்களோ  எம் முன்னோர்களைப்போல் உணவு விடயங்களில் ஏழையாக இருங்கள் என்றுதான் புத்திமதி சொல்கின்றார்கள்.

ஏழை பணக்காரராக இருந்தாலும் தாம் உண்ணும் உணவில் என்ன உள்ளது என்ற அறிவியல் அறிவு இருந்தாலே போதுமானது. மேலை நாடுகளில் பொதுவாக இந்த அறிவியல் இல்லாத ஏழை மக்களே அதிக கொழுப்பும் சீனியும் உப்பும் உள்ள உணவுகளை அதிகமாக உண்ணுகிறார்கள். ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் அவரவர் வசதிக்கேற்ப ஆரோக்கியமான உணவை உண்ண முடியும்.

இதைத்தான் அறிவியல் திரிகளில் விவாதிக்கப்படுகிறது. இதை யார் எழுதுகிறார்கள் என்று பார்ப்பவர்கள்தான் அதிலுள்ள விடயத்தைப் பற்றிச் சிந்திக்காமல் குளறுபடி செய்கிறார்கள்.🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, இணையவன் said:

ஏழை பணக்காரராக இருந்தாலும் தாம் உண்ணும் உணவில் என்ன உள்ளது என்ற அறிவியல் அறிவு இருந்தாலே போதுமானது. மேலை நாடுகளில் பொதுவாக இந்த அறிவியல் இல்லாத ஏழை மக்களே அதிக கொழுப்பும் சீனியும் உப்பும் உள்ள உணவுகளை அதிகமாக உண்ணுகிறார்கள். ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் அவரவர் வசதிக்கேற்ப ஆரோக்கியமான உணவை உண்ண முடியும்.

இன்று உலகச்சந்தைகளில் விற்கும் உணவுப்பொருட்களின் தராதரம் அறியாமல்  கருத்து எழுதிக்கொண்டிருக்கின்றீர்கள்.

2 minutes ago, குமாரசாமி said:

இன்று உலகச்சந்தைகளில் விற்கும் உணவுப்பொருட்களின் தராதரம் அறியாமல்  கருத்து எழுதிக்கொண்டிருக்கின்றீர்கள்.

எனது அறிவுக்கு எட்டியபடி நாள்தோறும் எனக்குத் தேவையான விற்றமின்கள் கனியுப்புகள் புரதம் கொழுப்பு சீனி நார்ப்பொருள் போன்றவற்றைத் தரும் சாதாரண மரக்கறி பழங்கள் மீன் இறைச்சி எண்ணை போன்றவற்றைத் தேடி வாங்கி உண்க்கிறேன். உங்களைப் போல் உலகச் சந்தை பற்றி அதிகம் தெரியாது 🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, இணையவன் said:

இதைத்தான் அறிவியல் திரிகளில் விவாதிக்கப்படுகிறது. இதை யார் எழுதுகிறார்கள் என்று பார்ப்பவர்கள்தான் அதிலுள்ள விடயத்தைப் பற்றிச் சிந்திக்காமல் குளறுபடி செய்கிறார்கள்.🙂

உங்களுக்கு ஜஷ்ரின் ஆஸ்தான குரு. இருக்கட்டும். இருந்து விட்டு போகட்டும். நான் தடையில்லை. ஆனால் எனக்கு எது உண்மை எது பொய் என கிரகிக்கும் பக்குவமுண்டு.
ஜஷ்ரின் தனக்கு தெரிந்ததை எழுதட்டும். எழுதிக்கொண்டே இருக்கட்டும்.யாரும் குறுக்கே நிற்கவும் இல்லை என நினைக்கின்றேன்.
குமாரசாமி ஆகிய நான் தென்னங்குத்தி குறுக்கே போட்டு வழி மறிக்கவுமில்லை.

2 minutes ago, இணையவன் said:

எனது அறிவுக்கு எட்டியபடி நாள்தோறும் எனக்குத் தேவையான விற்றமின்கள் கனியுப்புகள் புரதம் கொழுப்பு சீனி நார்ப்பொருள் போன்றவற்றைத் தரும் சாதாரண மரக்கறி பழங்கள் மீன் இறைச்சி எண்ணை போன்றவற்றைத் தேடி வாங்கி உண்க்கிறேன். உங்களைப் போல் உலகச் சந்தை பற்றி அதிகம் தெரியாது 🙂

உண்ணும் உணவுகளே மருந்து. இது என் மூதாதையர்கள் சொன்னது. இன்று அதற்கேற்ப உணவுகளை உண்டு வாழ்கின்றேன்.

உலக சந்தையில் இரசாயனம் கலக்காத உணவுகள் என்ற சந்தையும் உண்டு.

5 minutes ago, குமாரசாமி said:

குமாரசாமி ஆகிய நான் தென்னங்குத்தி குறுக்கே போட்டு வழி மறிக்கவுமில்லை.

நல்லது. அறிவியலுக்குச் சற்றும் தொடர்பற்ற நேர்மறைக் கருத்துக்களையும் அரட்டைக் கருத்துக்களையும் பொழுதுபோக்குத் திரிகளில் எழுதுவதுதான் யாழுக்கும் நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, இணையவன் said:

நல்லது. அறிவியலுக்குச் சற்றும் தொடர்பற்ற நேர்மறைக் கருத்துக்களையும் அரட்டைக் கருத்துக்களையும் பொழுதுபோக்குத் திரிகளில் எழுதுவதுதான் யாழுக்கும் நல்லது.

இது...இது தான்....
அதெப்படி நான் எழுதிய கருத்துக்களுள் அதை மட்டும் பிரித்து எடுத்து குறை கண்டீர்கள். பலே ஆள் நீங்கள். 🤣

15 minutes ago, குமாரசாமி said:

உங்களுக்கு ஜஷ்ரின் ஆஸ்தான குரு. இருக்கட்டும். இருந்து விட்டு போகட்டும். நான் தடையில்லை. ஆனால் எனக்கு எது உண்மை எது பொய் என கிரகிக்கும் பக்குவமுண்டு.
ஜஷ்ரின் தனக்கு தெரிந்ததை எழுதட்டும். எழுதிக்கொண்டே இருக்கட்டும்.யாரும் குறுக்கே நிற்கவும் இல்லை என நினைக்கின்றேன்.

 

1 minute ago, குமாரசாமி said:

இது...இது தான்....
அதெப்படி நான் எழுதிய கருத்துக்களுள் அதை மட்டும் பிரித்து எடுத்து குறை கண்டீர்கள். பலே ஆள் நீங்கள். 🤣

ஏனென்றால் இதற்கு ஏற்கனவே பதில் எழுதியும் நீங்கள் வாசிக்கவில்லை.

👇

36 minutes ago, இணையவன் said:

இதைத்தான் அறிவியல் திரிகளில் விவாதிக்கப்படுகிறது. இதை யார் எழுதுகிறார்கள் என்று பார்ப்பவர்கள்தான் அதிலுள்ள விடயத்தைப் பற்றிச் சிந்திக்காமல் குளறுபடி செய்கிறார்கள்.🙂

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, இணையவன் said:

 

ஏனென்றால் இதற்கு ஏற்கனவே பதில் எழுதியும் நீங்கள் வாசிக்கவில்லை.

👇

 

இது உங்கள் தீர்ப்பு.
என் விடை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

 

உலகின் குறைந்த  பருமன் கொண்ட வியட்நாமிய மக்கள்

 

VIETNAMESE PEOPLE AMONG THE MOST PHYSICALLY INACTIVE BUT LEAST OBESE

Although Vietnam is ranked high among countries for physical inactivity in a recent global study, the country also has the lowest rate of adult obesity in the world. The Stanford University study that ranks Vietnamese people’s daily steps among the world’s lowest worried many at first. So one may wonder how can Vietnamese people stay thin without exercising much.

 

HOW CAN VIETNAMESE PEOPLE STAY THIN WITHOUT EXERCISING MUCH?

Stanford researchers used smartphones to track the daily steps of 717,000 people in 111 countries and territories using the same health and fitness monitoring mobile app.

 

According to the study, in countries with lower obesity rates, people mostly walked a similar amount per day. However, big gaps between people who walked a lot and those who didn’t coincide with much higher levels of obesity.

 

On average, Vietnamese people walk around 3,600 steps a day, far less than the global average of 5,000, leaving the country seventh from the bottom in the rankings. Hong Kong residents have an average of 6,880 steps per day, the highest level in the world.

 

But the Stanford finding is not seemingly applicable in Vietnam’s case because another global study unveiled last month showed that Vietnam has the lowest rate of adult obesity with only 1 percent of the total population. Unfortunately, this is changing and the trend for obesity is growing upwards, especially among children.

 

Vietnamese people are thin

 

Reasons Why Vietnamese Do Not Like Walking

Is it true that Vietnamese people don’t like walking? Probably because the streets in Vietnam, especially in Ho Chi Minh City are too crowded and polluted, and there is a lack of public spaces for physical activity. The sidewalks are not pedestrian-friendly as they are usually occupied, deterring people from going out for a walk.

 

In HCMC, people tend to go to the gym for exercise. In Hanoi, walking outdoors is still popular. Also, the frequency of exercise calculated by the average number of steps is not applicable to those who do other kinds of exercise. The study used data collected from mobile apps, so it excluded those who do not use these apps.

 

The obesity risk in Vietnam could be low due to factors such as the local cuisine which are mostly organic with a low percentage of oil. The food is not much processed and mostly fresh, and the variety of ingredients used crates balanced meals.

 

Vietnamese people are thinner

 

Furthermore, sugar intake is relatively low, and consumption of soda drinks remains limited. However, the low ranking could also be due to economic factors such as long working hours with workers having no time for exercise.

https://www.citypassguide.com/how-can-vietnamese-people-stay-thin-without-exercising-much/#:~:text=The obesity risk in Vietnam,ingredients used crates balanced meals.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இணையவன் said:

ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் அவரவர் வசதிக்கேற்ப ஆரோக்கியமான உணவை உண்ண முடியும்

உண்மை 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.