Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு கோட்டாபய வழங்கிய உத்தரவுகள் - யுத்த குற்றங்களில் அவர் உடந்தை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் - சர்வதேச அமைப்பு அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற போதிலும் இலங்கையின் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு முக்கிய தொடர்புள்ளதை வெளிப்படுத்தும் புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளதாக உண்மை மற்றும் நீதிக்கான சர்வதே திட்டம் தெரிவித்துள்ளது.

mullivaikal_new.jpg

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனது வன்முறை மிகுந்த கடந்தகாலத்தை கையாள்வதில் உண்மையான தீவிரமான ஆர்வத்தை கொண்டிருந்தால் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக  கோட்டாபய ராஜபக்சவை பொறுப்புக்கூறலிற்கு உள்ளாக்குவதே அதற்கான அமில பரிசோதனையாக காணப்படும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராகபணியாற்றிய வேளை போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு அவர் வழங்கிய உத்தரவுகள் தொடர்பான புதிய ஆதாரங்களை உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச சட்டத்தின் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.

இராணுவதளபதியாக இல்லாவிட்டாலும் பாதுகாப்புபடையினர் தொடர்பில் கட்டளையிடுவது குறித்து வலுவான கட்டுப்பாடு காணப்பட்டது என தெரிவித்துள்ள புதிய அறிக்கை அவருக்கு பாதுகாப்பு படையினர் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை சர்வதேச குற்றவியல் சட்டங்களை   மீறுவது குறித்து நன்கு தெரிந்திருந்தது ஆனால் அவர் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க தவறினார் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவர்ளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த தயங்கினார் எனவும் ஐடிஜேபியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னர்பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகதன்மைமிக்க விசாரணையை மேற்கொள்வதற்கும் நீதிநடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும்   அவருக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களிற்கும் போதிய சந்தர்ப்பமிருந்தது எனினும் உண்மை வெளியில் வருவதற்கு அனுமதிப்பதற்கு பதில் கோட்டாபய ராஜபக்சவும் ஏனைய ஆட்சியாளர்களும் உரிமை மீறல்களில் பாதுகாப்பு படையினருக்கு தொடர்புள்ளதை மறுத்துவந்துள்ளனர் எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் அவர்கள் அவர்களிற்கு பதவிஉயர்வுகளை வழங்கியுள்ளதுடன் பாதுகாத்து வந்துள்ளனர் எனவும் ஐடிஜேபி தெரிவித்துள்ளது.

 

https://itjpsl.com/assets/Tamil_Gotabaya-Rajapaksas-war-time-role-Jan-2024_Final_26.01.2024_compressed.pdf

போர்முனையிலிருந்த தளபதிகளிற்கு கோட்டாபய வழங்கிய உத்தரவுகள் - யுத்த குற்றங்களில் அவர் உடந்தை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் - சர்வதேச அமைப்பு அறிக்கை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாயைகளை நம்ப வேண்டாம் ...இன்னும் நூறு வருடங்களின் பின்பும் இதே அறிக்கை வெளி வரலாம் ....மலம் துடைத்து எறியும் கடுதாசி போல இதையும் தூக்கி ஏறிந்து கடந்து செல்ல வேண்டும் ..

இந்த இணையத் தளத்தைப் பார்த்தால் நம்பிக்கையுள்ளதாகத் தெரியவில்லை. இவர்களின் ட்விட்டர் பக்கத்தில் ஏராளமான தமிழ் கார்டியன் செய்திகள் இணைக்கப்பட்டுள்ளன. 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இதனை ICJ இட்கு கொண்டு செல்வதென்றால் தென் ஆபிரிக்காவை அணுக வேண்டும். நீங்கள் எவ்வளவு பணம் கொடுக்கிறீர்கள் என்பதை பொறுத்து சிறு முன்னேற்றமாவது இருக்கும். பணம் இல்லாவிட்ட்தால் இதை செய்தியாக போட்டு கொள்ளலாமே தவிர எதுவுமே நடக்க போவதில்லை. காசேதான் கடவுளடா. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.