Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழக மாணவன் மீது வட்டுக்கோட்டை காவல்துறையினர் இன்று திங்கட்கிழமை காலை(05) தாக்கிய நிலையில் அடி தாங்கமுடியாது காவல் நிலையத்தினை விட்டு ஓடி வந்த மாணவன் உயிரை காப்பாற்றுமாறு கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது;
வட்டுக்கோட்டை கோட்டை காடு பகுதியினை சேர்ந்த கருணாகரன் நிதர்ஷன் எனும் 27 வயதான இளைஞன் தனது கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்று காலை யாழ். பல்கலைக்கழககத்திற்கு தனது வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் சித்தன்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றுவிட்டு மீள திரும்பி வந்த பொழுது வட்டு இந்து கல்லூரிக்கு அண்மையாக நின்ற காவல்துறையினர் வழிமறித்துள்ளனர். வழிமறித்த காவல்துறையினர் நாம் மறித்த பொழுது எதற்காக நிற்காது சென்றாய் என கேட்டனர். இந்நிலையில் போக்குவரத்து காவல்துறையினர் இல்லை என்ற அடிப்படையில் அவசரமாக சென்றேன் என கூறினேன் இந்நிலையில் திடீரென அங்குவந்த மேலதிக சிவில் உடைதரித்த காவல்துறையினர் வீதியில் வைத்து சரமாரியாக தாக்கினர் .இதனை காணொலியும் எடுத்தேன். இந்நிலையில் தொலைபேசியினையும் பறித்து என்னை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து அறை ஒன்றினுள் ஆறு காவல்துறையினர் காலை விரித்து தலைகீழாக தூக்கி அடித்தனர். அடித்து கொண்டு தொலைபேசியில் உள்ள காணொலியை அழிப்பதற்கு தொலைபேசி கடவுச்சொல்லை கேட்டனர். நான் மறுத்தேன் மறுத்த பொழுது தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தினர். போக்குவரத்து விதிகளை மீறியிருந்தால் எனக்கு தண்டம் விதியுங்கள் இல்லை நீதிமன்றம் அனுப்புங்கள் என கூறியும் அடித்தனர். இதனையடுத்து எனக்கு சுவாசம் உள்ளெடுக்க பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக என்னை வெளியில் கொண்டு வந்து அமர்த்தினர். அமர்த்திய பொழுது வீதியில் என்னை அடித்து செய்தி கேட்டு தாயார் வருகை தந்தார் . இந்நிலையில் அடிக்கு பயந்து இருந்த என்னை மீண்டும் தாக்குவதாக கூறிய நிலையில் பயத்தில் ஓடி வந்து விட்டேன்.
தற்பொழுது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்கின்றேன். இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை காவல்துறையினர் கொன்றாலும் என்ற பயத்திலேயே ஓடி வந்தேன். எனக்கு ஏதும் நடந்தால் வட்டுக்கோட்டை காவல்துறையினரே முழுமையான பொறுப்பினையும் ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை மாணவனின் ஆணுறுப்பு, கால்  உட்பட பல இடங்களில் அடிகாயங்கள் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கபடவுள்ளார். (ச)

https://newuthayan.com/article/யாழ்._பல்கலைக்கழக_மாணவன்_மீது_காவல்துறையின்_மிலேச்சத்தனமான_தாக்குதல்;

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழன்பன் said:

யாழ். பல்கலைக்கழக மாணவன் மீது வட்டுக்கோட்டை காவல்துறையினர் இன்று திங்கட்கிழமை காலை(05) தாக்கிய நிலையில் அடி தாங்கமுடியாது காவல் நிலையத்தினை விட்டு ஓடி வந்த மாணவன் உயிரை காப்பாற்றுமாறு கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது;
வட்டுக்கோட்டை கோட்டை காடு பகுதியினை சேர்ந்த கருணாகரன் நிதர்ஷன் எனும் 27 வயதான இளைஞன் தனது கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்று காலை யாழ். பல்கலைக்கழககத்திற்கு தனது வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் சித்தன்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றுவிட்டு மீள திரும்பி வந்த பொழுது வட்டு இந்து கல்லூரிக்கு அண்மையாக நின்ற காவல்துறையினர் வழிமறித்துள்ளனர். வழிமறித்த காவல்துறையினர் நாம் மறித்த பொழுது எதற்காக நிற்காது சென்றாய் என கேட்டனர். இந்நிலையில் போக்குவரத்து காவல்துறையினர் இல்லை என்ற அடிப்படையில் அவசரமாக சென்றேன் என கூறினேன் இந்நிலையில் திடீரென அங்குவந்த மேலதிக சிவில் உடைதரித்த காவல்துறையினர் வீதியில் வைத்து சரமாரியாக தாக்கினர் .இதனை காணொலியும் எடுத்தேன். இந்நிலையில் தொலைபேசியினையும் பறித்து என்னை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து அறை ஒன்றினுள் ஆறு காவல்துறையினர் காலை விரித்து தலைகீழாக தூக்கி அடித்தனர். அடித்து கொண்டு தொலைபேசியில் உள்ள காணொலியை அழிப்பதற்கு தொலைபேசி கடவுச்சொல்லை கேட்டனர். நான் மறுத்தேன் மறுத்த பொழுது தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தினர். போக்குவரத்து விதிகளை மீறியிருந்தால் எனக்கு தண்டம் விதியுங்கள் இல்லை நீதிமன்றம் அனுப்புங்கள் என கூறியும் அடித்தனர். இதனையடுத்து எனக்கு சுவாசம் உள்ளெடுக்க பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக என்னை வெளியில் கொண்டு வந்து அமர்த்தினர். அமர்த்திய பொழுது வீதியில் என்னை அடித்து செய்தி கேட்டு தாயார் வருகை தந்தார் . இந்நிலையில் அடிக்கு பயந்து இருந்த என்னை மீண்டும் தாக்குவதாக கூறிய நிலையில் பயத்தில் ஓடி வந்து விட்டேன்.
தற்பொழுது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்கின்றேன். இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை காவல்துறையினர் கொன்றாலும் என்ற பயத்திலேயே ஓடி வந்தேன். எனக்கு ஏதும் நடந்தால் வட்டுக்கோட்டை காவல்துறையினரே முழுமையான பொறுப்பினையும் ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை மாணவனின் ஆணுறுப்பு, கால்  உட்பட பல இடங்களில் அடிகாயங்கள் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கபடவுள்ளார். (ச)

https://newuthayan.com/article/யாழ்._பல்கலைக்கழக_மாணவன்_மீது_காவல்துறையின்_மிலேச்சத்தனமான_தாக்குதல்;

இந்த காவல்துறை இன்னும் திருந்தவில்லை    இலங்கையில் தமிழனாக. பிறப்பது பாவம்   தப்பி ஒடி வந்து வெளிநாட்டில் வாழ்ந்தாலும். உழைக்கும் பணத்தை இலங்கையில் முதலீடு என்று தமிழனே சொல்லுகிறான்.  

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸாரினால் யாழ்.பல்கலை மாணவன் சித்திரவதை - மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Published By: DIGITAL DESK 3   05 FEB, 2024 | 04:43 PM

image

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறையில் வைத்து, தன்னை தலைகீழாக தூக்கி, அடித்து சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவன் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். 

மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில், பல்கலைக்கழக மாணவனான கருணாகரன் நிதர்சன் எனும் மாணவன் இன்று திங்கட்கிழமை (05) முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவிக்கையில், 

வட்டுக்கோட்டை மாவடி பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தன்னை வழிமறித்து, தான் மறிக்கும் போது ஏன் மோட்டார் சைக்கிளை நிறுத்தவில்லை என என்னுடன் முரண்பட்டார். 

அதற்கு நான் நீங்கள் மறித்ததை கவனிக்கவில்லை என கூறி, ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன, என அவற்றை எடுத்து கொடுத்த போது, அதனை வாங்காது மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு வரவழைத்தார். 

அதன் போது, சிவில் உடையில் வந்த 7க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் , எவ்வித விசாரணைகளும் இன்றி, என்னை வீதியில் வைத்து, மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே கடுமையாக தாக்கினார்கள். என்னை தாக்கும் சம்பவம் அருகில் உள்ள கடையில் கண்காணிப்பு கமராக்களில் கூட பதிவாகியுள்ளது. அத்துடன் நானும் எனது கைபேசியில் என்னை தாக்குவதனை காணொளி எடுத்தேன். 

பின்னர் என்னை பொலிஸ் வாகனத்தில் ஏற்றி சென்று, பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறைக்குள் என்னை அழைத்து சென்று என்னுடைய ஆவணங்கள், மற்றும் கைபேசி என்பவற்றை பறித்தார்கள். 

கைபேசியின் இரகசிய குறியீட்டை கேட்ட போது, அதனை தர முடியாது என மறுத்த போது, என் கால்களை பிடித்து தலைகீழாக தூக்கி கடுமையாக தாக்கினார்கள். 

என் ஆணுறுப்பை குறிவைத்தும் கடுமையாக தாக்கினார்கள். இதனால் எனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. வியர்க்க தொடங்கியது. 

அதனை அடுத்து என்னை அறையில் இருந்து, வெளியே அழைத்து வந்து, கதிரையில் அமர வைத்து விட்டு சென்று விட்டார்கள். 

பின்னர் நான் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி வந்தேன். என்னை பொலிஸாரின் இரகசிய அறைக்குள் அழைத்து சென்றதனை, பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் நேற்றைய தினம் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மூவர் கண்டார்கள். 

அறைக்குள் வைத்து, அடிக்கும் போது, நான் எழுப்பிய அவலக்குரல் அவர்களுக்கும் கேட்டு இருக்கும். அடித்த பின்னர் என்னை கைத்தாங்கலாக பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அழைத்து வந்து கதிரையில் அமர வைத்ததையும் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மூவரும் நேரில் கண்டார்கள். 

எவ்வித குற்றமும் இழைக்காத என்னை சிவில் உடை தரித்த பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்கி சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். என்னை கொலை செய்யும் நோக்குடன் என் ஆணுறுப்பை குறித்து வைத்தும் தாக்கினார்கள். 

இந்நிலையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளமையால் இன்றைய தினம் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளேன் என தெரிவித்தார். 

இதேவேளை, வட்டுக்கோட்டை பொலிஸாரினால், கடுமையான சித்திரவதைக்கு உள்ளான நகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 

குறித்த உயிரிழப்பானது ஆட்கொலையே என யாழ்.நீதவான் நீதிமன்றம் மரண விசாரணை கட்டளையில் குறிப்பிட்டுள்ளது.

இளைஞனின் கொலை தொடர்பில் நேரடி சாட்சியான, இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன், சித்திரவதைக்கு தம்மை உள்ளாக்கியவர்கள் ஐவர் என அடையாளம் கூறிய போதிலும், பொலிஸார் நால்வரையே கைது செய்து மன்றில் முற்படுத்தி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த வாரம், சுன்னாகம் பொலிஸாரினால் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கடுமையாக தாக்கி சித்திரவதைக்கு உள்ளாகிய நிலையில், கைதான இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று இருந்தார். 

அச்சுவேலி பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, விசாரணைக்கு செல்லாத இளைஞனை அச்சுவேலி பொலிஸார் வீதியில் வழிமறித்து கடுமையாக தாக்கியமையால், இளைஞன் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். 

இவ்விரு சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது வட்டுக்கோட்டை பொலிஸாரினால் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். 

இதேவேளை கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேரணியில் பொலிஸார் மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/175635

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண மக்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவனொருவர் வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை தாக்கியதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடளித்து விட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

குறித்த நபர் போதைப்பொருள் பயன்படுத்தியமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியான நிலையில்  குறித்த மாணவனைக் கைது செய்த வட்டுக்கோட்டை பொலிஸார்  மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தினர்.

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.