Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU  19 FEB, 2024 | 02:30 AM

image

இந்தியா மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறிய மீன்பிடி தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் தமக்கான தீர்வை பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தை செவ்வாய்க்கிழமை (20) முற்றுகையிட மீனவ அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், எமது கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களில் அத்துமீறல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

எமது வளங்கள் நாளுக்கு நாள் தொடர்ச்சியாகச் சூறையாடப்படும் நிலையில் எமது வாழ்வாதாரங்களும்  தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகிறது.

நாங்கள் பல தடவைகள் இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் கோரிக்கை விடுத்தோம் எமக்கு உங்கள் உதவிகள் வேண்டாம் எமது வளத்தை இந்திய மீனவர்களிடம் இருந்து பாதுகாத்து தருமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தோம் ஆனால் அது நடைபெறவில்லை.

தற்போது இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் தமது மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக இலங்கை கடற்பரப்பு சென்றார்கள் கைது செய்து விட்டார்கள் விடுவிக்குமாறு கோரிக்கை விடுகிறார்கள்.

நாங்கள் அவர்களிடம் ஒன்றை கூற விரும்புகிறோம் நீங்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வருவது பாரிய குற்றம் மட்டுமல்லாது எமது மீனவர்களின் வாழ்க்கையை அழிக்கிறீர்கள்.

ஆகவே இந்திய மீனவர் மீனவர்களின் வருகையை நிறுத்துமாறு கோரி யாழ் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

குறித்த ஊடக சந்திப்பில் யாழ் மாவட்ட கிராமிய கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், சமாசங்கள் மற்றும் சம்மேளங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/176716

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை இந்திய மீனவர்கள் என்பதை விடுத்து இந்தியக் கடற்கொள்ளையர்கள் என்றழைப்பதே சாலவும் பொருத்தமானது!

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் சொல்லியிருப்பார் சீனா மீன்பிடிப்பாளர்களை உள்ளே அனுமதிக்க 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண மீனவ அமைப்புகளுக்கு பாரட்டுக்கள்.
இந்திய தூதுவர் தமிழ் அசியல்வாதிகளை யாழ்பாணத்தில் அழத்து சந்தித்தவராம் அப்போது அவர்கள் இந்திய கடற்கொள்ளையர்களால் தமிழர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் பற்றி சொன்னார்களாம் ஆனால் இந்திய தூதுவர்  அதை கண்டுகொள்ளவில்லையாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய துணை தூதரகத்துக்கு முன்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

news-04-5.jpg

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்துக்கு முன்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு மீனவ சங்கங்கள் இணைந்து இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடவுள்ளதாக முன்னதாக அறிவிப்பு விடுத்திருந்தமையினால் தூதரகத்துக்கு முன்பாக பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், காலை 11 மணியளவில் மீனவர்கள் ஒன்று திரண்டு பேரணியாக சென்று துணைத் தூதரகத்தை முற்றுகையிட முற்பட்டபோது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மீனவ சங்க பிரதிநிதிகள் 8 பேர் மாத்திரம் தூதரகத்துக்கு சென்று துணைத் தூதுவரைச் சந்தித்து மனுவொன்றை கையளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்ததாக
தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/292599

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருநாட்டு மீனவர்களையும் மோதவிடாது அத்துமீறலை தடுத்து நிறுத்துங்கள் - மாவட்ட மீனவர்கள் கோரிக்கை

20 FEB, 2024 | 04:21 PM
image

(எம்.நியூட்டன்)

இந்திய மீனவர்களின் அத்துமீறலை உடனடியாக தடுத்து நிறுத்த இலங்கை இந்திய அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் எமது  போராட்டம் தொடர்போராட்டமாகி கடலிலும் தரையிலும் போராட்டமாக மாறும்  என யாழ் மாவட்ட மீனவர்கள் தெரிவித்தார்கள்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ் இந்திய துணை துதரக்கத்திற்கு  அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டபோதே இதனை தெரிவித்தார்கள் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நாங்கள் நீண்டகாலமாக இந்திய மீனவர்களின். அத்து மீறலை கண்டித்து போராடிவருகிறோம்.

நாம் இனி என்ன தான் செய்வது ஒருதடவை இந்திய மீனவர்கள் அத்து மீறிவருகின்ற போது எமது சேத மதிப்பானது பல இலட்சங்களை தாண்டுகின்றது.

இதனை ஈடுசெய்ய முடியாத நிலை உள்ளது இவை தெடர்பில் பல தரப்பட்ட முறைப்பாடுகளை செய்தும் உள்ளோம் எனினும் எந்த பயனும் இல்லை  ஒரு நாட்டு மீனவர்கள் தமது நாட்டின் எல்லையை மீறி மற்ருமோருநாட்டின் எல்லகயை தாண்டி வந்து அத்து மீறி தொழில் செய்கிறார்கள் என்றால் இரண்டு நாட்டு கடற்படையினலும் அனுமதி வழங்குகிறார்களா என்ற சந்தேகம் எமக்கு வருகிறது எமது வளத்தை பாதுகாக்க வேண்டியவர்களே அதனை அளிக்க நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துமீறி வருபவர்களுக்கு சரியான தண்டனைகள் வழங்கப்படுமாயின் இந்த அத்து மீறலை தடுக்கலாம் கண்துடைப்பிற்காக இந்திய மீனவர்களை கைது செய்வதும் பின்னர் விடுவிப்பதும் ஏமாற்ர நாடகமாகவே உள்ளது இந்திய மீனவர்கள் தொப்பிள் கொடி உறவு என கூறிக் கொண்டு எமது வாழ்வாதாரத்தை இல்லாது செய்கிறார்கள்.

இதனை எவ்வாறு ஏற்பதுஇந்திய மீனவர்களது அத்து மீறல்களை தடுத்து நிறுத்துங்கள் நாங்கள் கடலையே நம்பிள்ளோம் எமது வாழ்வாதாரத்தை நிம்மதியாக இருக்க விடுங்கள்

இலங்கை இந்திய அரசாங்கங்கள் இருநாட்டு மீனவர்களையும் மோதவிட்டு பார்க்காது  அத்துமீறலை தடுத்துமாறு கோருகிறோம் என்றார்கள்.

https://www.virakesari.lk/article/176879

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

எமது சேத மதிப்பானது பல இலட்சங்களை தாண்டுகின்றது.

ஆஹா ஆஹா....தேசம் பற்றி பேசுறாங்கள் ...கடலட்டை  விவாகாரம் பற்றி பேசவே மாட்டாங்கள்....

மக்களை மோத விடுவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர் ஆனால் தேசத்தின் பெரிய சொத்துக்களை சுரண்டும் பொழுது அமைதி காக்கின்றனர்....mmmmm 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

ஆஹா ஆஹா....தேசம் பற்றி பேசுறாங்கள் ...கடலட்டை  விவாகாரம் பற்றி பேசவே மாட்டாங்கள்....

மக்களை மோத விடுவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர் ஆனால் தேசத்தின் பெரிய சொத்துக்களை சுரண்டும் பொழுது அமைதி காக்கின்றனர்....mmmmm 

சுரண்டுவது வேறு , கொள்ளையடிப்பது வேறு. இந்திய மீனவர்கள் இப்போது கடத்தி கொள்ளையர்களாக மாறி விடடார்கள்.

கொள்ளையடித்தல் மட்டும் பரவாயில்லை அங்குள்ள மீன் உட்பதியாகும் பாறைகளெல்லாவற்றையும் அடியோடு நாசமாகி விட்டு செல்லுகிறார்கள். அவர்களது பகுதியில் மீன்கள் இல்லாமல் போவதட்கு முக்கிய காரணமே இதுதான்.

இலங்கை கடட்படை இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இப்படி எழுதினால் துரோகி படடம்  கிடைத்தாலும் கிடைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Cruso said:

சுரண்டுவது வேறு , கொள்ளையடிப்பது வேறு. இந்திய மீனவர்கள் இப்போது கடத்தி கொள்ளையர்களாக மாறி விடடார்கள்.

கொள்ளையடித்தல் மட்டும் பரவாயில்லை அங்குள்ள மீன் உட்பதியாகும் பாறைகளெல்லாவற்றையும் அடியோடு நாசமாகி விட்டு செல்லுகிறார்கள். அவர்களது பகுதியில் மீன்கள் இல்லாமல் போவதட்கு முக்கிய காரணமே இதுதான்.

இலங்கை கடட்படை இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இப்படி எழுதினால் துரோகி படடம்  கிடைத்தாலும் கிடைக்கும். 

இந்த விடயத்தில் மக்களை மோதவிட்டு மக்கள் புரட்சி ...என சீன் காட்டாமல் ....சம்பந்த பட்ட அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்....கடற்படை சுட்டு தள்ளாமல்.... அவர்களை உள்ளே விடாமல் தடுக்க வேண்டும் ....கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் உள்ளே வருகின்றது ,மீன் தொழிலாளர்கள் உள்ளே வருகின்றனர்  என்றால் முப்படைகள் பொலிஸ் எல்லாம்  என்ன செய்கின்றனர்...தமிழர்களை அழிக்கவா?

துரோகி பட்டமும் ஒர் கெளரவ பட்டமாக  வெகு விரைவில் அறிவிப்பார்கள் ...ஆகவே அதை பார்த்து பயப்பட வேண்டாம்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.