Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனைத்தான் இழந்துவிட்டோம்; எஞ்சியோரையாவது காப்பாற்றுங்கள்

713633176.jpg

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சட்டத்தரணி புகழேந்தி மன்றாட்டம்....

உயிரோடு தாயிடம் அனுப்பிவைப்போம் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில் இன்று சாந்தனை நாம் இழந்துவிட்டோம். எஞ்சிய மூவரையாவது காப்பாற்றுவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வரவேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த சட்டத்தரணி புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

உடுப்பிட்டி கற்பகப் பிள்ளையார் ஆலய முன்றிலில் அவ்வூர் பொதுமக்களால் நேற்று நண்பகல் முன் னெடுக்கப்பட்டிருந்த சாந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து வருகைதந்த சட்டத்தரணி புகழேந்தி ஆற்றிய அஞ்சலி உரையின் போது இந்தக்கோரிக்கையை முன்வைத்திருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சாந்தனை எப்படியாவது காப்பாற்றித் தாயிடம் அனுப்பி வைப்போம் என்றே நம்பியிருந்தோம். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த சாந்தனின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு நினைவிழந்த நிலைக்குச் சென்றார். அந்த நிலையில் கூட எயார் அம்புலன்ஸ் மூலமாக கட்டுநாயக்கா ஊடாக அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். இருந்தும் அனைத்துப் போராட்டங்களும் பயனற்றுப்போகும் வகையில் அவர் உயிரிழந்தார்.


ஈழத்தில் இருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு உடனடியாக வர வேண்டும். திருச்சி சிறப்பு முகாமில் உள்ள எஞ்சிய மூவரும் எவ்வாறான கொடும் சிறையில் இருக்கின்றார்கள் என்பதை நேரடியாகப் பாருங்கள். தமிழ் நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து, எஞ்சிய மூவரும் விரும்பிய இடங்களுக்குச் செல்வதற்கு உரிய அனுமதி கிடைக்கும் வரை அவர்களை தமிழ்நாட் டில் உள்ள உறவுகளிடம் கையளிக்குமாறு கோரிக்கை வையுங்கள். அது நடைபெற்றால் மட்டுமே அவர்களையாவது நாம் காப்பாற்ற முடியும். திருச்சி சிறப்பு முகாமில் உள்ள எஞ்சிய மூவரையும் காப்பாற்றி அவர்கள் விரும்பும் நாட்டுக்குச் சென்று அவர்களுடைய குடும்பத்துடன் நிம்மதியாக வாழவைப்பதற்கான சட்டப்போரட்டத்தை தமிழ்நாடு திரும்பிய கையோடு முழுவீச்சோடு முன்னெடுக்க உள்ளேன் - என்றார்.

சட்டத்தரணி புகழேந்தி, ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சாந்தன், முருகன் உள்ளிட்டோரின் வழக்கு விடயங்களை 2005 ஆம் ஆண்டு முதல் எவ் விதக் கட்டணங்களும் வாங்காது இலவசமாக முன்னெடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

https://newuthayan.com/article/சாந்தனைத்தான்_இழந்துவிட்டோம்;_எஞ்சியோரையாவது_காப்பாற்றுங்கள்;

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

சாந்தனின் முடிவே எங்களுக்கும்! – முருகன்

சாந்தனின் உயிர் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுள்ளதாக  தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தனுடன் விடுவிக்கப்பட்டு இலங்கை திரும்ப முடியாமல், சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வு தொடர்பாக வழங்கிய ஒலிப்பதிவிலேயே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”சாந்தனுடன் 33 வருடங்கள் நான் சிறையில் கழித்துள்ளேன். சாந்தன் தனது  தாய் மண்ணில் கால் வைப்பதற்கு முன்னரே அவரது உயிர் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுள்ளது. இதுவே எனக்கும் ராபர்ட் பயஸ்ஸுக்கும்,ஜெயகுமாருக்கும்  நடக்கப் போகின்றது.

33 வருடங்களாக சிறையில் மனதையும் , உடலையும் திடமாக வைத்திருந்த ஒருத்தர், சிறப்பு முகாமில் ஒரு வருடத்திற்கு எவ்வாறு இப்படி மாறி போனார். இதில் எங்களுக்கு  சந்தேகம் உள்ளது. மக்களின் அஞ்சலி ஊடாக வெளி உலகுக்கு எமக்கு இழைக்கப்பட்ட அநீதி தெரிய வர வேண்டும்” இவ்வாறு முருகன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1372189

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

spacer.png

சாந்தனின் முடிவே எங்களுக்கும்! – முருகன்

சாந்தனின் உயிர் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுள்ளதாக  தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தனுடன் விடுவிக்கப்பட்டு இலங்கை திரும்ப முடியாமல், சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வு தொடர்பாக வழங்கிய ஒலிப்பதிவிலேயே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”சாந்தனுடன் 33 வருடங்கள் நான் சிறையில் கழித்துள்ளேன். சாந்தன் தனது  தாய் மண்ணில் கால் வைப்பதற்கு முன்னரே அவரது உயிர் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுள்ளது. இதுவே எனக்கும் ராபர்ட் பயஸ்ஸுக்கும்,ஜெயகுமாருக்கும்  நடக்கப் போகின்றது.

33 வருடங்களாக சிறையில் மனதையும் , உடலையும் திடமாக வைத்திருந்த ஒருத்தர், சிறப்பு முகாமில் ஒரு வருடத்திற்கு எவ்வாறு இப்படி மாறி போனார். இதில் எங்களுக்கு  சந்தேகம் உள்ளது. மக்களின் அஞ்சலி ஊடாக வெளி உலகுக்கு எமக்கு இழைக்கப்பட்ட அநீதி தெரிய வர வேண்டும்” இவ்வாறு முருகன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1372189

கொலை எனும் சந்தேகம் மேலும் வலுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை வைப்பதைவிட மோசமான இழிவுபடுத்தல் வேறொன்றுமில்லை. 

😏

  • கருத்துக்கள உறவுகள்

”சாந்தன் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாம் மிகக் கொடுமையானது : ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை – சட்டத்தரணி புகழேந்தி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லையென சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் என்பது சிறையை விட மிகவும் கொடூரமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன் சார்பில் சட்டத்தரணி புகழேந்தி பல ஆண்டுகளாக வழக்காடியிருந்தார்
சாந்தன் உயிரிழந்த பின்னர் அவரின் உடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான அனைத்து சட்ட ஏற்பாடுகளையும் செய்த சட்டத்தரணி புகழேந்தி, சாந்தனின் உடல் புதைக்கப்படும் இறுதி நிமிடம் வரையில் உடனிருந்தார். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இன்று சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் :

“சாந்தன் 32 ஆண்டுகள் மன உறுதியுடன் சிறையில் இருந்தார். ஆனால், ஒரு வருடத்திற்குள் அவர் திருச்சி சிறப்பு முகாமில் மன நோயாளியாக மாற்றப்பட்டார். உடல் அளவிலும் செயற்பட முடியாத அளவிற்கு மாறினார். சிறப்பு முகாமின் வடிவமைப்பு கொடுமையானது
சாந்தன் இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் அங்கிருந்த மற்றொருவர் உயிரிழந்தார். அந்த முகாம் மூடப்பட வேண்டும். அங்கிருப்பவர்கள் உடன் வெளியிடங்களுக்கு மாற்றப்பட வேண்டும். முன்பு அது பெண்களுக்கான சிறையாக இருந்தது. இன்று அதன் பெயரை சிறப்பு முகாம் என்று மாற்றியுள்ளனர். மற்றப்படி அது சிறைதான். இங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை   விதித்துள்ளனர்.

இந்நிலையில், அங்கிருக்கும் முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோரை உடன் மீட்க வேண்டும். அதற்கு இலங்கையில் இருக்கக் கூடிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி எடுக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்கின்றோம். இரு தரப்பினரும் இணைந்து செயற்பட்டு அங்கிருக்கும் மூவரையும் காப்பற்ற வேண்டும். அதற்காக நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.

https://thinakkural.lk/article/294529

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.