Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
காந்தி கணக்கு
-------------------------
'ஓஷோவைத் தெரியுமா?'
 
அந்தப் பெயரில் ஒரு ஆள் இந்தச் சுற்று வட்டாரத்தில், இந்தக் கூட்டத்தில், என்னுடைய இருபதுக்கும் மேலான வருட பழக்கத்தில் இருந்ததாக ஞாபகம் இல்லை. கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கெட் இப்படி  எந்த விளையாட்டிலும் இந்தப் பெயரில் எவரையும் நினைவில் இல்லை.
 
'ஓஷோ என்ன விளையாடுகிறவர்?'
 
'இல்லை, இல்லை, ஓஷோ விளையாடுகிறவர் இல்லை. ஓஷோ ஆசிரமம் வைத்திருந்தார். தாடி வைத்திருந்தார். தத்துவப்  புத்தகங்கள் எழுதியிருக்கின்றார்.....'
 
அந்த ஓஷோவா, அந்த தாடி வைத்த ஓஷோ இங்கே இப்பொழுது எதற்காக வருகின்றார் என்று முன்னுக்கு நின்ற புதிய பஞ்சாபி நண்பரை உற்றுப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த பஞ்சாபி நண்பர்கள் ட்ரக் ஓடுவார்கள், பெரிய தோட்டங்கள் செய்வார்கள், எல்லா விளையாட்டுகளிலும் அசத்துவார்கள். இரவில் நித்திரைக்குப் போகும் முன் தவறாமல் ஒரு கலன் பால் குடிப்பார்கள். இதைவிட மகாத்மா காந்தியைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவரை திட்டுவார்கள். இல்லையப்பா, அவர் அது செய்யவில்லை என்று நான் காந்திக்காக ஒவ்வொரு முறையும் ஆஜராகி, அந்த வழக்கு இன்னும் ஒரு முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. ஓஷோவைப் பற்றிய விசாரணை இதுவே முதல் தடவை.
 
ஜலியான்வாலா பாக் படுகொலை, பகத்சிங் அவர்களின்  தூக்கு தண்டனை மற்றும் இன்னும் சில விடயங்களால் காந்திக்கும் சீக்கியர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருந்து வருகின்றது. காந்தி காலனிய ஆட்சியாளர்களை கண்டிக்காதது மட்டும் இல்லாமல், வெள்ளை இன ஆட்சியாளர்களுக்கு இந்த விடயங்களில் ஆதரவாக இருந்தார் என்ற கோபம் சீக்கிய மக்களிடையே சாம்பல் மூடிய தணலாக இன்றும் தகித்துக் கொண்டிருக்கின்றது.    
 
'ஆ, தெரியும் ஓஷோவை. சில புத்தகங்கள் வாசித்திருக்கின்றேன்.......'
 
ஓஷோவைப் பற்றித் தொடர்ந்தார் புதிய நண்பர். ஓஷோ வாழ்க்கையை அனுபவிக்க சொல்லியிருக்கின்றார், அழகை ரசிக்க சொல்லியிருக்கின்றார், சிரிக்கச் சொல்லியிருக்கின்றார், சிந்திக்கத் தேவையில்லை என்றிருக்கின்றார், இப்படியே வரிசை நீண்டது. 
 
நண்பருக்குத் தெளிவான ஆங்கிலம், மன்மோகன்சிங் குடும்பமாக இருப்பாரோ என்றும் ஒரு நினைப்பு வந்தது.
 
'எங்கேயும் எப்போதும் எப்படி இருந்தாலும், ஆனந்தமாய் இருங்கள்' என்று ஓஷோ சொல்லியிருக்கின்றார் என்றார் புதிய நண்பர்.
 
'மகனே, இப்ப நடந்து கொண்டிருக்கும்  இந்தப் போட்டியில் உங்கள் அணி தோற்றால், நீங்கள் நடுவரை படுத்தப் போகும் பாடு இருக்குதே, அது தான் உங்களின் ஆனந்தம்' என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டேன். விளையாட்டில், போட்டியில் தோற்பவர்கள் முதலில் நடுவரைத்தான் குற்றம் சொல்வார்கள், அது கிட்டத்தட்ட ஒரு பொதுவான உலக வழக்காக ஆகிவிட்டது.   
 
'அங்கே பார்' என்றார். அவர் காட்டின திசையில் ஒரு பெண் ஓடிக் கொண்டிருந்தார். கோடைகால இரவு, இன்னும் வெக்கை குறையாத நேரம், அந்தப் பெண் மிகக்குறைந்த, கண்டிப்பாகத் தேவையான உடைத் துண்டுகள் மட்டுமே அணிந்திருந்தார். நண்பர் பார்த்துக் கொண்டேயிருந்தார். தன்னையும் மறந்து, என்னையும் மறந்து விட்டார்.
 
நண்பரை மெதுவாகத் தட்டினேன். 'என்ன......' என்று திரும்பினார். 
 
'மகாத்மா காந்தியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?' என்று கேட்டேன்........
 
ஓஷோவாலும் காந்தியை காப்பாற்ற முடியவில்லை.
 
சில ரணங்கள் தலைமுறைகள் தாண்டியும், தத்துவங்கள் தாண்டியும் காயாமல் காயமாகவே நீடிக்கும் போல.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரசோதரன் said:

போட்டியில் உங்கள் அணி தோற்றால், நீங்கள் நடுவரை படுத்தப் போகும் பாடு இருக்குதே, அது தான் உங்களின் ஆனந்தம்'

அடிக்கடி ‘நடுவர்’ பற்றியே எழுதுகிறீர்கள். நடுவர்களுக்கும் உங்களுக்கும் அப்படி என்னதான் பிரச்சனை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

மகனே, இப்ப நடந்து கொண்டிருக்குமமிந்தப் போட்டியில் உங்கள் அணி தோற்றால், நீங்கள் நடுவரை படுத்தப் போகும் பாடு இருக்குதே, அது தான் உங்களின் ஆனந்தம்' என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டேன். விளையாட்டில், போட்டியில் தோற்பவர்கள் முதலில் நடுவரைத்தான் குற்றம் சொல்வார்கள், அது கிட்டத்தட்ட ஒரு பொதுவான உலக வழக்காக ஆகிவிட்டது.   

நடுவராக நின்று நொந்து நுhடூல்ஸ் ஆகியீட்டீங்க என்று மட்டும் தெரியுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Kavi arunasalam said:

அடிக்கடி ‘நடுவர்’ பற்றியே எழுதுகிறீர்கள். நடுவர்களுக்கும் உங்களுக்கும் அப்படி என்னதான் பிரச்சனை?

😀.....

பிரச்சனையே பல இடங்களில் நான் நடுவராக இருப்பது தான்.......

இது ஒரு சம்பளமில்லாத உத்தியோகம், ஏதோ ஒரு ஆசையில் போய்க் கொண்டிருக்கின்றது. 

25 minutes ago, ஈழப்பிரியன் said:

நடுவராக நின்று நொந்து நுhடூல்ஸ் ஆகியீட்டீங்க என்று மட்டும் தெரியுது

அது தான் உண்மை.....🤣

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் வாத்தியார் என்று இன்னுமொரு நடுவர் இருக்கின்றார் ........ இடைக்கிடை வருவார்.....கொஞ்ச நாளாய் அவரைக் காணவில்லை.......!  😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரசோதரன் said:

காந்தி கணக்கு

பிரமிக்கும் வகையில் நல்ல எழுத்தாற்றல் உங்களிடம் உள்ளது. வாழ்த்துகள்  :respekt:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

பிரமிக்கும் வகையில் நல்ல எழுத்தாற்றல் உங்களிடம் உள்ளது. வாழ்த்துகள்  :respekt:

மிக்க நன்றி நீங்கள் எனக்கு கொடுக்கும் ஊக்கத்திற்கும், உங்கள் வாழ்த்துகளுக்கும்.....🙏

Edited by ரசோதரன்

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.