Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

04 APR, 2024 | 05:01 PM
image
 

கடந்ந மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட 25 மீனவர்களில் 24 மீனவர்கள் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாதங்கள் சிறை என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (04) நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 3 படகுகளில் 1படகினை செலுத்திவந்த படகோட்டியான ஒருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு படகு தொடர்பான வழக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏனைய இரு படகுகளில் ஒரு படகின் உரிமையாளர் படகில் இருந்தமையாலும்,  மற்றைய படகின் உரிமையாளரின் மகன் குறித்த படகில் இருந்தமையாலும் அவர் தந்தையின் மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்து குற்றத்தினை ஒப்புக்கொண்டமையால் இரு படகுகளும் அரசுடமையாக்கப்பட்டன..

இந்திய மீனவர்கள் 24 பேர் விடுதலை ; ஒருவருக்கு சிறை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

15 இந்திய மீனவர்கள் விடுதலை!

justis-300x200.jpg

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் யாழ். நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 15 ஆம் திகதி இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றைய வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதவான் ஜே. கஜநிதிபாலன் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது, முதலாவது மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுகளுக்காக 15 மீனவர்களுக்கும் தலா 1000 மற்றும் 1500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், அதனை அவர்கள் செலுத்தியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.

கடற்படையினரை தாக்கியதாக தெரிவித்து சுமத்தப்பட்டிருந்த 03 ஆம் 04 ஆம் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுச்சொத்தான கடற்படையின் படகை சேதப்படுத்தியமை தொடர்பில் சுமத்தப்பட்டிருந்த 05 ஆவது பிரதான குற்றச்சாட்டின் கீழ் மீனவர்களுக்கு எதிராக 03 இலட்சம் ரூபா அபராதமும் 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சாதாரண சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

https://thinakkural.lk/article/298264

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.