Jump to content

தரம் குறைந்த மருந்தினால் பார்வையிழந்தவர்கள் கெஹெலியவுக்கு எதிராக வழக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கண் சத்திர சிகிச்சையின் போது தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டதன் காரணமாக பார்வையிழந்த நோயாளிகள் , கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 2023ம் ஆண்டின் ஏப்ரல் மாதமளவில் நுவரெலியா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் பின்னர் ஆறு நோயாளிகள் பார்வைத் திறனை முற்றாக இழந்திருந்தனர்.

குறித்த நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சையின் போது prednisolone acetate எனும் தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டிருப்பதும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னரே குறித்த மருந்துப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

தரம் குறைந்த மருந்தினால் பார்வையிழந்தவர்கள் கெஹெலியவுக்கு எதிராக வழக்கு | People Blinded By Substandard Medicine Sue Kehelia

அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடு

சத்திர சிகிச்சையின் பின்னர் பார்வைத் திறனை இழந்த நோயாளிகளுக்கு நட்டஈடு வழங்கப்படு்ம் என்று அன்றைய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்த போதும், அவ்வாறான இழப்பீடுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் குறித்த ஆறு நோயாளிகளும் ஒன்றிணைந்து கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

ஒரு நோயாளிக்கு நூறு மில்லியன் ரூபா வீதம் ஆறுநோயாளிகளுக்கும் அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://tamilwin.com/article/people-blinded-by-substandard-medicine-sue-kehelia-1714075637

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெஸ்சின்டீஸ் அணியிட‌ம் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை   அதிர‌டியா அடிச்சு ஆட‌க் கூடிய வீர‌ர்கள் ப‌ல‌ர் இருக்கின‌ம் ப‌ந்து போட‌ ந‌ல்ல‌ வீர‌ர்கள் இல்லை  ரம்பவுல் எப்படி அணிய‌ வ‌ழி ந‌ட‌த்துகிறார் என்று பாப்போம்......................................
    • நன்றி சுவி அண்ணா. =================== உண்மையில் இது ஒரு உண்மைச் சம்பவத்தை ஒட்டிய கிறுக்கல். காலை நேரம்.. வேலைக்கு கிளம்புகிறான் அந்த பையன். தன் துணைவி.. குடும்பத்திற்காகவும்.. தனக்காவும்.. நனிகுளிர் காலத்தின் அந்த நடுங்கும் குளிருக்குள் இருந்து தப்ப.... இழுத்துப் போர்த்திக் கொண்ட ஜாக்கட்டுக்குள் பதுங்கிய படி.. தொடரூந்தில் ஏறி அமர்கிறான். அதுவரை எதனையும் அவதானிக்காதவன்.. எதிர்முனையில் அமர்ந்திருந்த அந்த இளம் பெண்ணை காண்கிறான். தலையில் கறுத்த முக்காடு.. ஓரளவு மேக் கப்.. ஆனாலும் அவளுக்குள் ஏதோ ஒரு படபடப்பு என்பதை பார்த்த மாத்திரத்தில் உணர்ந்துவிடுகிறான். இருந்தாலும்.. அந்த நாட்டுச் சட்டப்படியும்.. அவனின் மனச்சாட்சிப்படியும்.... ஒருவரை அதிக நேரம் உற்றுப் பார்ப்பது.. வரவேற்கப்படவில்லை.. என்பதால்.. தன் நீளக்காற்சட்டை பொக்கட்டுக்குள் இருந்த போனை எடுத்து நோட்ட மிடுகிறான்.. என்ன ஒரு அதிர்ச்சி. எதிர்முனையில் அமர்ந்திருந்த பெண்.. அழுவது விம்பமாக விழுகிறது மீண்டும் அவன் கண் திரையில். எதற்கும் உறுதி செய்து கொள்ள நோட்டமிடுகிறான். ஆம் அவள் அழுகிறாள் தான். கண்ணீர் தாரையாகி கன்னங்களில் வழிந்தோடிய நெடிய கோடுகள் இரண்டு.. இரண்டு பக்க விழிகளின் கீழும்... பேட்டிருந்த மேக் கப்பை கழுவித்தள்ளியபடி.. வழிந்தோடி இருந்ததன் அறிகுறிகள் அவை.  சிறிது நேரத்தில் மீண்டும் அதிர்ச்சி. தன் கைப்பையில் இருந்த பேனை எடுத்து தான் அழுவதை ஒரு செல்பி எடுக்கிறாள் அந்த இளம்பெண். அதனை அவசர அவசரமாக வாட்ஸ் அப் வழியாக அஞ்சல் செய்வது தெரிகிறது. மீண்டும்.. போனை கைப்பையில் இடுகிறாள். மீண்டும் இவன் நோட்ட மிடுகிறான். அவள் கண்களில் மீளவும்.. கண்ணீர் திரண்டு வழிகிறது. மீண்டும் செல்பி எடுக்கிறாள்..  இப்படியே.. செய்து கொண்டிருந்தவள்.. அவளின் தரிப்பிடம் வந்ததும் இறங்கிச் சென்று விடுகிறாள். ஆனாலும்.. அந்தப் பையனுக்குள் ஒரு கேள்வி.. அவளின் பரிதவிப்பு.. கண்ணீர் எல்லாமே.. பட்சாபத்திற்குரியது என்றாலும்.. எதற்கு அதனை செல்பி ஆக்கினாள்.. அஞ்சல் செய்தாள்.....???! விடை காண தேவையற்றவனாயினும்.. தனக்குள் எழுந்த வினாக்களோடு.. உலக மனித நடத்தைக் கோலங்களின் மாற்றங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதவனாய்.. தன் வேலையிடம் நோக்கிப் போகிறான் அவன். வினாக்களுக்கோ விடையில்லாமலே தன்னைச் சுற்றிய உலகத்தில் நடப்பவற்றை எல்லாம் நொந்தபடி...!
    • சுவுக்கு அடிப்படையில்  கம்மனியூசுக்களுக்கு ஆதரவாக இருந்தவர். கம்னியூஸ்ட்டுக்களுக்கு புலிகள் என்றால் அலர்ஜி(தா.பாண்டியன் போன்றோர் விதிவிலக்கு). சவுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரித்தார்.இந்தமுறை அதிமுகவை ஆதரித்தார். கம்னியூசத்தை கைவிட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது. சவுக்கு புலிகளுக்கு எதிராக பல முறை கருத்து தெரிவித்திருக்கிறார்.கடந்த முறை சிறைக்குப் போய் வந்த பிறகு திமுகவை கடுமையாக விமர்சித்தார்.  எதிரியின் எதிரி நன்பன் என்ற வகையில் கடந்த முறை சிறைக்குப் போன பொழது சீமான் அவருக்கு ஆதரவளித்தார். புலிகள் போதைப் பொருள் கடத்தியதாக ஒருமுறை குரத்துத் தெரிவித்திருந்தார். அதற்கு சீமான் நேரடியாக சவுக்குச் சங்கரை கண்டித்ததாக நான் அறியவில்லை. சீமான் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் நாம் தமிழர்கட்சி சவுக்கு சங்கரை பலமாக விமர்சித்திருக்கிறது. குறிப்பாக சுவுக்குக்கு எதிராக சாட்டை  துரைமுருகன் சாட்டைவலையொளியில் பல முறை விமர்சித்திருக்கிறார்.  அண்மைக்காலமாக சவுக்கு சங்கர் நாம் தமிழரை ஒரு கட்சியாகவே  மதிப்பதில்லை.( யாழில் இருக்கும் சில சீமான் எதிர்ப்பாளர்களும் கிட்டத்தட்ட அந்த நிலைப்பாடுதான்).அதை ஒரு எங்சினியரிங் கொலிங் என்று விமர்சித்திருந்தார். ஒரு தொகுதி படிப்பு முடிந்து வெளியேற அடுத்த தொகுதி மாணவர்கள் வருவது போல என்றார். சின்னமே சிக்கவில்லை. நாடு எப்படிச்சிக்கும் என்று எக்காளமிட்டுச் சிரித்தார்.இடையில் அரசியலில் இறங்கப் போவதாக ஒரு ஸ்டன்ட் அடித்தார். யூன்  ஆ ம்திகதி தேர்தலில் நாம் தமிழ் கட்சியின் வாக்கு சதவீதம் அது எஞசியனியரிங் கொலிங்சா இல்லை களத்தில் நிற்கும் அரிசியல் கட்சியா என்று தெரியவரும். என்கு கொம்னியூஸ்ட்டுக் கொள்கையைும் அதனைப் பின்பற்றுவோரையும் அறவே பிடிக்காது. ஆது எல்லோரையும் குறை சொல்லிக் கொண்டிருக்குமே ஒழிய  எந்த முன்னேற்றத்திற்கும் உதவாது. ஆது ஒரு ஒரு தோல்வி அடைந்த கோட்பாடு.
    • என‌க்கு சென்னையை பிடிக்காது சென்னை அணி இள‌ம் க‌ப்ட‌ன் கெய்க்வாட் முத‌ல் முறை க‌ப்ட‌ன் ப‌தவு கொடுத்து இருக்கின‌ம்  கெய்க்வாட் அவ‌ருக்காக‌ சென்னை வெல்ல‌னும் என்று விரும்புவேன்....................இனி வ‌ரும் விளையாட்டுக‌ளில் தொட‌ர் வெற்றி பெற்றால் தான் 4லுக்குள் வ‌ர‌லாம்....................................    
    • எல்லாரும் க‌வுண்டு போய் கிட‌க்கிறோம் குஜ‌ர‌த் அணி அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளை ந‌ம்பி கீழ் ம‌ட்ட‌த்துக்கு வ‌ந்து விட்டின‌ம்........................ குஜ‌ராத் அணி அதிக‌ம் ந‌ம்பின‌து ர‌சித் ஹானை அவ‌ரின் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத்தின‌ம் எதிர் அணியின‌ர் ஜ‌க்க‌ம்மா மேல் ச‌த்திய‌ம் மிட்டு சொல்லுறேன் நான் தான் க‌ட‌சி இட‌த்துக்கு வ‌ருவேன் , உங்க‌ளால் முடியுமா என் இட‌த்தை பிடிக்க‌ ஹா ஹா😁.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.