Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது - இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கனடா ஏற்கனவே தடைகளை விதித்துள்ளது - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தியில் கனடா பிரதமர்

Published By: RAJEEBAN  19 MAY, 2024 | 07:49 AM

image
 

சர்வதேச அளவில் மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது என தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

15 வருடங்களிற்கு முன்னர் இலங்கையின் உள்நாட்டு மோதல் முடிவிற்கு வந்தது  முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர்.

இன்றுவரை பலர் காணாமல்போயுள்ளனர் காயமடைந்துள்ளனர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இன்று நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் அர்த்தமற்ற நீண்டகால வன்முறை ஏற்படுத்திய வேதனை வலியுடன் வாழும் அவர்களின் அன்புக்குரியவர்களை நாங்கள் கௌரவிக்கின்றோம்.

இரண்டு வருடங்களிற்கு முன்னர் மே 18ம் திகதியை தமிழர்கள் இனப்படுகொலை நினைவேந்தல் தினமாக அங்கீகரிப்பதற்கான தீர்மானத்திற்கு கனடா நாடாளுமன்றம் ஏகமனதாக வாக்களித்தது.

மோதல்களின் போது இடம்பெற்ற குற்றங்களிற்காகவும் இலங்கையின் அனைத்து மக்களும் எதிர்கொள்ளும் துயரங்களிற்காகவும்  நாங்கள் எப்போதும் நீதியையும் பொறுப்புக்கூறலையும் பரப்புரை செய்கின்றோம்.

2023 இல்  இலங்கையின் ஆயுதமோதலின் போது மனித உரிமைகளை மீறிய  இலங்கை இராணுவ அதிகாரிகள் நால்வருக்கு எதிராக நாங்கள் தடைகளை விதித்தோம்.

இலங்கையில் மனித உரிமைகளை கனடா வலுவான விதத்தில் பாதுகாக்க முயல்கின்றது.

2022 ஒக்டோபரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றும் நடவடிக்கைகளில் எங்கள் சர்வதேச சகாக்களுடன் இணைந்து ஈடுபட்டுள்ளோம். இந்த தீர்மானம் இலங்கையில் அதிகளவான நல்லிணக்கம் நீதி பொறுப்புக்கூறல் மனித உரிமைகள் ஆகியவற்றிற்கு வேண்டுகோள் விடுக்கின்றது.

இலங்கை அரசாங்கத்தை மத நம்பிக்கை மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றிற்கான சுதந்திரத்தை மதிக்குமாறு நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்துகின்றோம். இவை நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு அவசியான விழுமியங்களாகும்.

இன்றைய நாள் மனித உரிமைகள் நீதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கு குரல்கொடுக்கும் ஆதரவளிக்கும் எங்களின் கூட்டு கடப்பாட்டை நினைவுபடுத்துகின்றது. 

சர்வதேச அளவில் மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது.

https://www.virakesari.lk/article/183923

  • கருத்துக்கள உறவுகள்

கனேடியப் பிரதமரின் குற்றச்சாட்டை நிராகரித்த இலங்கை வெளிவிவகார அமைச்சு!

Canadian Prime Minister Justin Trudeau tests positive for Covid

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகத் தெரிவித்து கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்துள்ள குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட கனேடியப் பிரதமர், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்காக எப்போதும் வாதிடுவோம் என தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையிலேயே 2023ஆம் ஆண்டு 4 இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கனடா இலங்கையில் மனித உரிமைகளின் வலுவான பாதுகாவலராக உள்ளது.

நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான அத்தியாவசிய மதிப்புகளான மதச் சுதந்திரம், நம்பிக்கை மற்றும் பன்மைத்துவம் என்பவற்றுக்கு மதிப்பளிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்துவதாக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்து நேற்றைய தினம் (21) அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, கனேடியப் பிரதமரின் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/302205

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.