Jump to content

தனித்திரு - சோம.அழகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகள் சோம. அழகு 'திண்ணை' இணையத்தில் எழுதிய 'தனித்திரு' எனும் கட்டுரை அவளுக்கே உரிய அங்கத நடையில் :

          தனித்திரு

சோம. அழகு

            கோவிட் காலம், அதுவல்லாத காலம், இளமை, முதுமை என எல்லா நிலைகளிலும் எனக்கு மட்டும்தான் ‘தனித்திரு’ என்னும் இச்சொல் இன்பத்தேனாகப் பாய்கிறதா? “‘கொடிது கொடிது தனிமை கொடிது; அதனினும் கொடிது முதுமையில் தனிமை’. வயசானாதான் அதுலாம் தெரியும். இப்போ அதுபற்றி உனக்குப் புரியாது” – இதைத்தானே சொல்லப் போகிறீர்கள்? ஒப்புக்கொள்கிறேன். முதல் வரியில் ‘முதுமை’யைச் சேர்த்துக் கொள்ள எனக்குத் தகுதி இல்லைதான். ஆனால் ‘முதுமையில் நாம் தனித்திருக்க இயலாது’ என்னும் ஒற்றைக் காரணத்திற்காக நாம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான மாபெரும் மிகப் பெரிய்ய்ய்ய்ய விலையைப் பற்றி யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அதைப் பற்றித்தான் கொஞ்சம் கதைக்கலாமெண்டு வந்தனான்.         

            இப்பதிவை முறையாக என் பெற்றோரை வசைபாடியபடி இறைவணக்கத்துடன் துவங்குவது சிறப்பாய் அமையும். நமது முதல் உலகம் வீடல்லவோ? என் அம்மா என்பதற்காகச் சொல்லவில்லை. மனித குலத்தின் விநோதமான விதிவிலக்கு அவள். எவ்வித காழ்ப்புணர்வும் இன்றி எப்படி ஒரு மனுஷியை எல்லோர்க்கும் பிடித்துப் போகும்? இந்தப் புதிரின் புரியாத விடை அவள். கோபத்தைக் கூட அமைதியினுள்ளோ புன்னகையினுள்ளோ ஒளித்து வைத்த வருத்தமாகத்தான் வெளிப்படுத்தத் தெரியும் அவளுக்கு. இதுவரை ஒருவர் கூட அவளிடமோ அவளைப் பற்றியோ சினந்து பேசியதில்லை. வள்ளுவனைப் பொய்யாக்கிவிடக் கூடாது என்னும் ஒரே காரணத்திற்காக அப்பா மட்டும் அவ்வப்போது அவளிடம் சிறு சிறு விஷயங்களுக்குக் கோபம் கொள்வார்கள். அது இயற்கைதானே? எனவே அதுவும் கணக்கில் வராது. அப்பா, தங்கை, நான் – நாங்கள் அனைவரும் நாத்திகர்கள் என்பதில் அவளுக்கு எப்போதும் மனத்தடையோ வருத்தமோ கிடையாது. “நான் உங்களுக்குப் பகுத்தறிவுப் பாதையைக் காண்பித்திருக்கலாம். ஆனால் பிற ஆத்திகவாதிகள் போல் அல்லாமல் நீங்கள் பூசிக் கொள்ள விரும்பும் நிறத்தைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை உங்களிடமே வழங்கியதில் எல்லா பெருமையும் அவளையே சாரும்” என்று அப்பாவே சொல்வார்கள். இவள் எந்த கிரகத்திலிருந்து வந்தாள்? முதல் குற்றவாளி இவள்தான்.

            அடுத்த முக்கிய குற்றவாளியான அப்பாவின் crime rate விண்ணை முட்டி ஆக்ஸிஜன் தேடி அலைகிறது. எவ்வளவு தைரியம், பெண் பிள்ளை என்றும் பாராமல் கருப்பின் மீதும் சிவப்பின் மீதும் ஈர்ப்பை உண்டாக்க? பகுத்தறிவு, திராவிடம், கம்யூனிஸம் உள்ளிட்ட பெரிய பெரிய கருத்தாக்கங்களைத் தெள்ளிய முறையில் எடுத்துரைப்பதென்ன; ‘நறுக்’, ‘சுருக்’ என தம் வாதங்களின் மூலம் வியக்க வைப்பதென்ன; வீட்டிலே ஆகச் சிறந்த சனநாயகச் சூழலை உருவாக்கித் தந்ததென்ன; தோழர்கள் உலகைக் காண்பிப்பதென்ன; நிரம்பிய நூலுடைய கொள்கைச் சான்றோரின் கலந்துரையாடல்களுக்கு அழைத்துச் செல்வதென்ன… என்ன? என்ன? என்ன? போதாக் குறைக்கு இலக்கிய ரசனையை எங்களுக்கே தெரியாமல் எங்களுள் ஏற்றியிருக்கிறார்கள். இவ்வளவும் செய்தவர்களுக்குப் புற உலகைப் பற்றிய நிதர்சனத்தையும் கூறி வளர்க்கத் தெரியாதா?

            சொல்லித்தான் வளர்த்தார்கள்… நான்தான்… நான் பார்த்த உலகில் உள்ளவர்கள் தான் முழு உலகிலும் பெரும்பாலானவர்களாக நிறைந்து இருப்பார்கள் என்னும் கற்பனையை ஆசையாக மாற்றி நம்பத் துவங்கினேன். அதற்காக என்னைத் தவறென்று சொல்லாதீர்கள். எனக்கு இப்போது கோபத்தைக் காட்ட இடம் வேண்டும். ‘பிங்க் ஜிமிக்கி எங்கு கிடைக்கும்?’, ‘தேங்காய் நாரில் மாங்காய் டிசைன் போட்ட மயில் கழுத்து நிற சேலை எப்போது கடைக்கு வரும்?’ போன்ற உருப்படியான(!) கவலைகளை மட்டுமே ஊட்டி வளர்த்திருந்தால் இவ்வுலகில் ‘இருத்தல்’ தொழில் சுலபமாகியிருக்கும். ப்ச்! வளர்ப்பு சரியில்லை…!

            ஏதோ ‘மாற்றுக் கருத்து’ என்றாலே எனக்கு ஒவ்வாமை என நினைத்துவிட வேண்டாம். ‘இடியாப்பம் பிடிக்கும்; பிடிக்காது’ என்ற அளவில் இருப்பதன் பெயர்தான் மாற்றுக் கருத்து. ‘இடி அமீன் பிடிக்கும்; பிடிக்காது’ என்பதில் வருவதல்ல. ‘இடி அமீன் ஏன் வெறுக்கப்பட வேண்டும்?’ என்பதெற்கெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டி சூழல் பணிக்கிறதெனில் சுற்றம் சரியில்லை என்றுதான் பொருள்! எவ்வளவு எடுத்துக் கூறியும் “இல்லையில்லை. நீ எவ்வளவு சொன்னாலும் இடி அமீனை வெறுப்பது எனக்குச் சரியாகப் படவில்லை. அவன் பக்க நியாயம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?” என்று கூறுவோரையெல்லாம் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டு செல்ல வைக்கும் வாழ்க்கை மீதுதான் என் மொத்த கோபமே. இடி அமீனுக்குப் பதில் அதிமுக்கியமான வாழ்வியல் விஷயங்களை, ஒரு மனிதனை அடிப்படையாக வரையறுக்கும் பண்புகளை கருத்தாக்கங்களை வைத்து யோசிக்கவும்.  ‘வாழ்க்கை இப்படியே போயிருமா?’ என ஒரு கடுப்பு வரும் இல்லையா?

பொருத்தமான நிகழ்வொன்றை விவரிப்பது ஏதுவாய் அமையும்.

            உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்குச் செல்ல நேரிட்டது. பந்தியில் உணவருந்த அமர்ந்தோம். முதல் வாய் உள்ளே சென்ற போது அருகில் துன்னுட்டு இருந்த துன்னியார் ஒருவர், “புதுசா நான் கட்டிட்டு இருக்குற வீட்டுல பெருசா ஒரு டைனிங் டேபிள். பக்கத்துல ரொம்ப பெருசா ஒரு ஜன்னல். ஹால்ல 70 இஞ்ச் டிவி,…. சுக்கு காப்பி, மிளகு ரசம்….” என்று அடுக்கிக் கொண்டே சென்றார் பெருமிதம் பொங்க. இதற்குள் எதிர் வரிசையில் கொஞ்சம் தள்ளி இருந்த மாமா ஒருவர் “வீட்டைக் கட்டிப் பாருன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க. எனக்கெல்லாம் விழி பிதுங்கிடுச்சு. அப்போல்லாம் சாப்பாட்டுக்கே கஷ்டம். ஒருத்தர் இல்ல தூக்கி விடுறதுக்கு, உன்னையும் சேர்த்துதான். எல்லாத்தையும் மீஈஈஈறி நின்ன்னு காமிச்சேன். உக்காந்து காம்போசிசன் எழுதுனேன்…. நடந்து போய் கமர்கட் வாங்குனேன்” என்று அவர் பங்குக்கு அடித்து விட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு நல்ல அரசு உத்தியோகத்தில் இருந்தும் ‘பேதைதன் கையொன் றுடமை பெற்ற’தைப் போல் வாழ்ந்து பணி ஓய்வு பெற்று இருந்திருந்து திறவோன் பருவத்தின் மத்திம கால வயதில் முதன்முதலாகத் தாம் கட்டும் வீட்டைப் பற்றி இவ்வளவு சிலாகித்த அந்தச் சுக்குக் காப்பி சித்தப்பாவிடம் ‘பயனில சொல்லாமை’ பற்றி எடுத்துச் சொல்வது வராஹ பகவானின் முன் முத்துகளைச் சிந்துவதாகும். அந்த மாமாவின் பின்னணி தெரியாமல் இதைக் கேட்டால் ஏதோ உத்வேகம் தரும் கதை போல என யாரும் நம்பிவிடுவர். குடும்பத்தில் முதல் ஆளாக வேலைக்குச் சென்றவர். அதுவும் நல்ல வேலை… பின்னர் வணிகக் காந்தமாகும் முயற்சியில் மும்மரமாகக் குதித்துக் கால் இடறியதில் அன்பை முறிக்கும் சுறாக்களின்(!) காந்தவலையில் சிக்கி முக்கி மீண்டு வந்துதான் ‘சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ இப்பேருரை. காதுகள் பாவமில்லையா? தன் ‘அறிவார்ந்த(!)’ சோதனை முயற்சிகளின் மூலம் ‘ஏதங்கொண்டு ஊதியம் போக’ விட்டு இன்மையில் உழன்ற கதையை glorify/romanticize செய்து சொல்லிக் கொண்டிருந்ததில் அனைவரின் தலைமுடி கைமுடி எல்லாம் ‘parade salute!’ என எழுந்து நின்றன. ‘சீரல் லவர்கண் படின்’ ‘முந்திரிமேற் காணி மிகுவேதல் கீழ்தன்னை இந்திரனா எண்ணு’ம் இவர்களின் உளுத்துப் போன அறுவையுரையால் அறை முழுதும் ஊசல் வாடை கமழ்ந்தது.

நானும் எதிரில் அமர்ந்திருந்த அப்பாவும் சிரித்து வைக்கவும் முடியாத, கடுப்பை வெளிப்படுத்தவும் இயலாத ஒரு கலவையான பார்வையைப் பரிமாறிக் கொண்டோம். இதில் வேறு அந்த மாமா என் அம்மாவிடம், “நானா கண்டு தாக்குப்பிடிச்சேன். என்னக்கா?” என அவளின் ஆமோதித்தலை எதிர்ப்பார்க்க அவளும் “பின்ன? சும்மாவா?” என்று சொல்லிச் சமாளிக்க, நானோ யாருக்கும் கேட்காதவாறு அவளின் காதில் “கூச்சமே இல்லேல?” என்றேன். சிரித்தாவாறே முகத்தை வைத்துக் கொண்டு “வாய மூடிட்டுச் சாப்பிடு” என்று கடுகடுத்தாள். “அது எப்பிடிம்மா முடியும்?” என்று கொடூரமாக நகைச்சுவையை அள்ளித் தெளித்தேன். இதற்குள் பெரியப்பா ஒருவர் “ஏன் காத கடிக்கா எம்மவ?” எனக் கேட்க “மோர் வேணுமாம்” என்று சொல்லி வைத்தாள் அம்மா.

ஒரு அரை கிலோமீட்டர் தூரத்து உறவு அண்ணன் ஒருவன் மோர் கொண்டு வந்தான். உடனே அறைக்கு இன்னும் மணம் சேர்க்கும் பொருட்டு அங்கிருந்த அவனது அம்மா, “இவன் பக்குவம் பொறுப்பு அறிவு யாருக்கும் வராது… ஆனை பூனை அல்லே பராக்….” என்று நீட்டி முழக்கிய போது அவ்வார்த்தைகளுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் என நிச்சயம் எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்திருப்பார்கள். கல்லூரியில் வகுப்புகளுக்கு வெளியேதான் அறிவு கிட்டும் என ஆழமாக நம்பும் ஞானி அவன். ஒவ்வொரு தாளையும் குறைந்தது நான்கு முறையாவது எழுதுவதைப் பொறுப்பாகச் சலிக்காமல் ஏற்றுச் செய்து வந்தான். ஒரே நேரத்தில் பல இளைஞிகளுடன் எவ்விதக் குழப்பமும் இல்லாமல் நிலக்கடலை வியாபாரம் பார்ப்பதில் வல்லவன். இப்போது சம்பந்தமே இல்லாத துறை எனினும் நன்றாகச் சம்பாதிக்கிறான் என்று அவனுக்காக ஆறுதலடையவோ மகிழவோ கூட அனுமதிக்க மாட்டான். உடனே சுக்கு நூறாக அவனுள் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்து ஒட்ட மறுக்கும் ஆங்கிலத்தையும் இவனே வலுக்கட்டாயமாக அடித்து உடைத்த தமிழையும் கொண்டு திருவாய் மலர்ந்தருளி ‘திருவேறு தெள்ளிய ராதலும் வேறு’ என்ற இருவேறு உலகத்து இயற்கைக்கு வாழும் உதாரணம் தான் என நிரூபிப்பான்.  

அத்தை ஒருத்தி அம்மா காதில், “இவன் இருந்த இருப்புக்கு வேலையா கெடைச்சுருக்கும்? கோடகநல்லூர் கைலாசநாதர் கோவில்ல  ஒரு தேங்காய் விடலை போட்ட கையோட மரகநெடுங்குழைக்காதர் பெருமாள் கோவிலில் துளசித் தண்ணி வாங்கி ஒரு மடக்கு குடிச்சுட்டு கரெக்ட்டா ரெண்டு துளிய உச்சந்தலையில தெளிச்சு விட்டுட்டு நேரே சாயிபாபா கோவிலுக்குப் போய் நாலரை சுத்து சுத்தீட்டு வடமேற்கு பக்கமா திரும்பி நின்னு ஒரு கையை மேலே தூக்கி இன்னொரு கையால் கால் சுண்டு விரலைப் பிடித்தவாறே வானத்தைப் பார்த்து வேண்டிக்கொண்டால் நினைத்தது நிச்சயம் நடக்கும்னு அவனுக்குப் பரிகாரம் சொன்னேன். அத செஞ்ச பொறவு தான் உடனே ரெண்டு வருசம் கழிச்சு வேலை கெடச்சது. ஒங்களுக்கும் ஏதாவது வேணும்னா கேளுங்க” என்றார். “கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கோங்க” என்று அந்த அத்தையிடம் சொல்லிவிட்டு அம்மாவின் இந்தக் காதில் நான் “ஒவ்வொரு சாமியும் மத்த சாமி பாத்துக்கும்னு விட்டதுல கொஞ்சம் தாமதாமாகிட்டு போல” என்றது அத்தைக்குக் கேட்டுவிட்டது போலும். என்னை முறைத்துக் கொண்டே இஞ்சிப் பச்சடியை வத்தக்குழம்பு என நினைத்து சோற்றில் போட்டுப் பிசைந்துவிட்டார்.

“எதேச்சையா வந்த இந்த விசேஷ வீட்டோட டைனிங் ஹால்ல தற்செயலா நுழைஞ்சேன் ஃப்ராண்ட்ஸ்… இங்க பாத்தீங்கன்னா எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்காங்க ஃப்ராண்ட்ஸ்… அதுவும் வலது கையால எடுத்து வாயாலயே சாப்பிடுறாங்க ஃப்ராண்ட்ஸ்… இங்க ஒரு ஆன்டி காரத்துல கதறுரததான் பாத்துட்டு இருக்கீங்க….” என்று கி.பி இராண்டாயிரமாம் காலகட்டத்தைச் சார்ந்த குழந்தை ஒன்று கைபேசியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

திடீரென ஒரு அங்கிள் அரசியல் பேசத் துவங்கினார்கள். உலக அரசியல் வழியாக உள்நாட்டு அரசியலுக்குத் தாவி உள்ளூர் அரசியலை அடைந்து… என அங்கும் இங்கும் சுற்றி கடைசியில் காவிக்குக் காவடி எடுத்தார்கள். “அடச்சை! Toilet paper” என அவர்கள் வீட்டில் வாங்கும் நாளிதழ் என் நினைவிற்கு வந்து சென்றது. அப்பாவும் அருகிலிருந்த தோழரும் அவரைப் பரவச நிலையிலிருந்து நிதானமாக இறக்க முற்பட்டார்கள். அவரோ ‘பவர்ர்ர்ர்ர்’ என இன்னும் இன்னும் உக்கிரத்தை நோக்கிச் செல்ல இருவரும் நிலைமையைப் புரிந்து கொண்டு அமிழ்தத்தை இங்கு கொட்டக்கூடாது என்றுணர்ந்து கை கழுவ அங்கணத்தை நோக்கிச் செல்ல ஆயத்தமானார்கள். நானும் ‘புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க’ என்று புளிசேரியை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். அப்பாவின் வார்ப்பு நான் என்றறிந்த அங்கிள் “நீ என்ன சொல்லுத?” என்று என் வாயைக் கிண்டினார்கள். “எந்தக் கட்சிக்கும் ஆதரவா நான் பேசல. எல்லா இடத்துலயும் ஊழல் இருக்கலாம். ஆனா எதேச்சதிகாரத்தை ஒழிக்குறதுதான் இப்போ முக்கியம். அதனால இந்தக் குறிக்கோளோட மக்கள் பக்கம் நிக்குற கட்சிக்கு வாக்கு அளிக்குறதுதான் சரியா இருக்கும்” என்று பதில் மொழியவும் நான் எந்தக் கட்சியைச் சொல்கிறேன் என்பதை உணர்ந்து என்னை அக்கட்சியின் பரப்புரையாளராகப் பாவித்து என்னைச் சாடத் துவங்கினார். ‘வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொள்’ளும் முயற்சியில் பரிதாபமாகத் தோற்று நின்றேன்.

இன்னொரு அங்கிள் வந்து “இந்த நாடு குட்டிச்சுவரா போறதுக்கே ஒங்கள மாதிரி ஆட்கள்தான் காரணம்” என்று காவி அங்கிளைப் பார்த்துச் சொல்ல ‘ஒளி தெரிகிறது’ என்று என் மனம் பூரிக்கத் துவங்கவும் படாரென்று ஒரு நடிகரின் நடுநிலைமைக் கட்சியைத் தாம் ஆதரிப்பதாகச் சொன்னார். ஒளி வந்த வேகத்திலேயே மறைந்துவிட்டது!

மூன்றாவதாக அண்ணாவா அங்கிளா என்று குழப்ப வைத்த ஒரு நபர் வந்து அவ்விருவரையும் பார்த்து “இப்படியே பேசிட்டு இருந்தா விளங்கிரும். ஒங்க ஆளுக்கு ஊர் சுத்தவே நேரம் இல்லை. ஒங்காளு பேச்சுக்கு கோனார் உரை கூட கெடைக்காது…” என்றார். ஆகா! என்னை ஆதரிக்க இவர் திருவுளங்கொண்டு விட்டார் என நான் எண்ணுகையில் என்னை நோக்கித் திரும்பி “இவ ஒரு கருப்பு சிவப்பு சங்கி” என்று அதிர்ச்சியடைய வைத்தார். பிறகு சாந்தமான குரலில் கூறினார் “புதுசா கட்சி ஆரம்பிச்சுருக்குற எங்க நடிகருக்கு ஒரு வாய்ப்பு குடுக்கலாம்ல”.  அவர் தலைவராவது புரிபடாமல் பேசுவதில்தான் வல்லவர்; இவர் தலைவர் வாயையே திறக்காமல் பேசுவதில் வல்லவர்.

ஹ்ம்ம்ம்!!! பிரமாதம். என்னைச் சொன்னது கூட வலிக்கல மை டியர் அங்கில்ஸ்! அட!அட!அட! இதுக்குப் பேசாம நான் பேசாமலே இருந்துருக்கலாம்!

            பீற்றல் பேர்வழிகளுக்கும் ‘அறிவுஜீவி’ நோய்க்குறியால் (syndrome – கூகிள் இப்படித்தான் சொல்லுச்சு!) வாடும் வகையறாக்களுக்கும் மனமார்ந்த அனுதாபங்களையும் ஆழ்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்து விட்டு ‘பாயாசம் சாப்பிடுங்க ஃப்ராண்ட்ஸ்’ என சொல்லச் சொல்லி மனது அரித்துக் கொண்டிருந்ததை மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்தினேன். “எனக்குச் சோறே வேண்டாம். ஆள விடுங்கடா” என எழலாம் என்று பார்த்தால் பந்தி முடியவில்லை. என் இரு பக்கமும் ஒருவரும் எழவில்லை. என்னாலும் எழ முடியவில்லை. பாதியிலேயே எழுந்தால் மரியாதைக் குறைவு, இங்கிதமின்மை என்பார்கள், ஏதோ இவ்வளவு நேரமும் அவர்கள் அதைக் கடைபிடித்ததைப் போல.

            தப்பிக்க இயலாமல் கடைசி வரை இருந்து தொலைக்க வேண்டிய நிர்பந்தம். ‘என் உலகம் வேறு; இது ஏதோ தற்காலிகச் சூழல்’ என்னும் பட்சத்தில் ஒரு நாழிகை பந்தியில் இதையெல்லாம் சிரித்துக் கடந்து விடலாம். ஆனால் சகிப்புத்தன்மையை அளவற்ற சோதனைக்கு உள்ளாக்கும் இந்த ஒரு நாழிகை பந்தியை முழு வாழ்க்கை காலத்திற்கான குறியீடாகக் கருதிப் பாருங்கள். வாழ்க்கை நம்மை எவ்விடத்தில் எச்சூழலில் இருத்தி வைக்கும் எனத் தெரியாது. அப்போது நமக்கே நமக்கானவர்கள் பந்தியில்/வாழ்க்கையில் சில வரிசை தள்ளி இருக்கும் சூழ்நிலை அமையலாம். பணியினாலோ தொலைவினாலோ அவர்களுடனான ஆழமான கலந்துரையாடல்களுக்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லாமல் போகலாம். அச்சமயத்தில் ‘நாணாமை நாடாமை நாரிமை யாதொன்றும் பேணாமை’ ஆகியவற்றையே தொழிலாகக் கொண்டிருக்கும் (ஓட்டை உடைசல் பண்ட) பாத்திரங்கள் வாழ்நாள் முழுமைக்கும் நம்மைச் சுற்றிச் சுற்றி வருகிற போது ‘வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை’ எல்லாம் சுக்கு நூறாகிவிடும்.

            என் உலகை அப்படியே என்னோடு நகர்த்திச் செல்வது சாத்தியமற்றதாகிப் போகும் போது, சூழ்ந்திருப்போரிடம் எனக்கானவர்களைத் தேடித் தோற்கும் வேளைகளில் மனம் ஆங்காரத்தோடு கர்ஜிக்கும் – ‘தனித்திரு!’. தேர்ந்து தெளிந்த கேண்மையே சில சமயம் கழிவிரக்கத்தையோ ஏமாற்றத்தையோ தரும் போது ‘காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதலால்’ வந்தோர் அன்னாருடன் வரும் இலவச இணைப்புகள் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

இரு மனிதர்களுக்கு இடையில் பிணைப்பு என்பது அன்பு, புரிதல், மரியாதை, கருத்து ஒற்றுமை என ஏதோ ‘ஒன்றன்’ அடிப்படையில் உருவாகும். அப்படியான ஒன்று கூட இல்லாமல் திறந்த வீட்டில் நுழைந்த சிங்கங்களாக நம் உலகில் வளைய வருபவர்கள்தாம் இலவச இணைப்புகள். ஒரு மனிதரை நம் வட்டத்தினுள் மனதார வரவேற்கும்போது அவரிலிருந்து முற்றிலும் மாறுப்பட்ட அவரைச் சார்ந்த – அவ்விய நெஞ்சத்தவர்கள், நெஞ்சின் துறவார் துறந்தார்போல் பேசுபவர்கள், ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதைகள், கல்லாத மேற்கொண்டொழுகுவோர், ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் பிரிவினர், உலகத்தார் உண்டென்ப தில்லென்போர் ஆகியோரும் மிக இயல்பான நிகழ்வாக உடன் வந்து அமர்வதுதான் வாழ்க்கையின் அசட்டுத்தனமான வடிவமைப்பு!

தம்கணத்தார் அல்லாதாரால் சூழப்பட்டிருக்கும் காலத்தில்

அதைக் கட்டுப்படுத்துவது நம் கைகளில் இல்லாமல் போகும் கையறுநிலையில் பொறையுடைமை தீர்ந்து போகும் தருணத்தில்

மனநலத்தையும் உடல்நலத்தையும் காக்கவேண்டி ‘சிற்றினம் அஞ்சி தனித்திரு என் மனமே!’

மாண்டார்நீ ராடி மறைந்தொழு மாந்தர்களே! பெரியார் துணைகோடலுக்கு வழி விடவும்!

  • சோம. அழகு
  • Like 2
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனித்திருவில் ஏதோ புரிகிறது ஐயா.
எழுத்தின் அளவை கொஞ்சம் பெரிதாக்கினால் வாசிக்க இலகுவாக இருக்கும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுப.சோமசுந்தரம் said:

மகள் சோம. அழகு 'திண்ணை' இணையத்தில் எழுதிய 'தனித்திரு' எனும் கட்டுரை அவளுக்கே உரிய அங்கத நடையில் :

          தனித்திரு

சோம. அழகு

            கோவிட் காலம், அதுவல்லாத காலம், இளமை, முதுமை என எல்லா நிலைகளிலும் எனக்கு மட்டும்தான் ‘தனித்திரு’ என்னும் இச்சொல் இன்பத்தேனாகப் பாய்கிறதா? “‘கொடிது கொடிது தனிமை கொடிது; அதனினும் கொடிது முதுமையில் தனிமை’. வயசானாதான் அதுலாம் தெரியும். இப்போ அதுபற்றி உனக்குப் புரியாது” – இதைத்தானே சொல்லப் போகிறீர்கள்? ஒப்புக்கொள்கிறேன். முதல் வரியில் ‘முதுமை’யைச் சேர்த்துக் கொள்ள எனக்குத் தகுதி இல்லைதான். ஆனால் ‘முதுமையில் நாம் தனித்திருக்க இயலாது’ என்னும் ஒற்றைக் காரணத்திற்காக நாம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான மாபெரும் மிகப் பெரிய்ய்ய்ய்ய விலையைப் பற்றி யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அதைப் பற்றித்தான் கொஞ்சம் கதைக்கலாமெண்டு வந்தனான்.         

            இப்பதிவை முறையாக என் பெற்றோரை வசைபாடியபடி இறைவணக்கத்துடன் துவங்குவது சிறப்பாய் அமையும். நமது முதல் உலகம் வீடல்லவோ? என் அம்மா என்பதற்காகச் சொல்லவில்லை. மனித குலத்தின் விநோதமான விதிவிலக்கு அவள். எவ்வித காழ்ப்புணர்வும் இன்றி எப்படி ஒரு மனுஷியை எல்லோர்க்கும் பிடித்துப் போகும்? இந்தப் புதிரின் புரியாத விடை அவள். கோபத்தைக் கூட அமைதியினுள்ளோ புன்னகையினுள்ளோ ஒளித்து வைத்த வருத்தமாகத்தான் வெளிப்படுத்தத் தெரியும் அவளுக்கு. இதுவரை ஒருவர் கூட அவளிடமோ அவளைப் பற்றியோ சினந்து பேசியதில்லை. வள்ளுவனைப் பொய்யாக்கிவிடக் கூடாது என்னும் ஒரே காரணத்திற்காக அப்பா மட்டும் அவ்வப்போது அவளிடம் சிறு சிறு விஷயங்களுக்குக் கோபம் கொள்வார்கள். அது இயற்கைதானே? எனவே அதுவும் கணக்கில் வராது. அப்பா, தங்கை, நான் – நாங்கள் அனைவரும் நாத்திகர்கள் என்பதில் அவளுக்கு எப்போதும் மனத்தடையோ வருத்தமோ கிடையாது. “நான் உங்களுக்குப் பகுத்தறிவுப் பாதையைக் காண்பித்திருக்கலாம். ஆனால் பிற ஆத்திகவாதிகள் போல் அல்லாமல் நீங்கள் பூசிக் கொள்ள விரும்பும் நிறத்தைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை உங்களிடமே வழங்கியதில் எல்லா பெருமையும் அவளையே சாரும்” என்று அப்பாவே சொல்வார்கள். இவள் எந்த கிரகத்திலிருந்து வந்தாள்? முதல் குற்றவாளி இவள்தான்.

            அடுத்த முக்கிய குற்றவாளியான அப்பாவின் crime rate விண்ணை முட்டி ஆக்ஸிஜன் தேடி அலைகிறது. எவ்வளவு தைரியம், பெண் பிள்ளை என்றும் பாராமல் கருப்பின் மீதும் சிவப்பின் மீதும் ஈர்ப்பை உண்டாக்க? பகுத்தறிவு, திராவிடம், கம்யூனிஸம் உள்ளிட்ட பெரிய பெரிய கருத்தாக்கங்களைத் தெள்ளிய முறையில் எடுத்துரைப்பதென்ன; ‘நறுக்’, ‘சுருக்’ என தம் வாதங்களின் மூலம் வியக்க வைப்பதென்ன; வீட்டிலே ஆகச் சிறந்த சனநாயகச் சூழலை உருவாக்கித் தந்ததென்ன; தோழர்கள் உலகைக் காண்பிப்பதென்ன; நிரம்பிய நூலுடைய கொள்கைச் சான்றோரின் கலந்துரையாடல்களுக்கு அழைத்துச் செல்வதென்ன… என்ன? என்ன? என்ன? போதாக் குறைக்கு இலக்கிய ரசனையை எங்களுக்கே தெரியாமல் எங்களுள் ஏற்றியிருக்கிறார்கள். இவ்வளவும் செய்தவர்களுக்குப் புற உலகைப் பற்றிய நிதர்சனத்தையும் கூறி வளர்க்கத் தெரியாதா?

            சொல்லித்தான் வளர்த்தார்கள்… நான்தான்… நான் பார்த்த உலகில் உள்ளவர்கள் தான் முழு உலகிலும் பெரும்பாலானவர்களாக நிறைந்து இருப்பார்கள் என்னும் கற்பனையை ஆசையாக மாற்றி நம்பத் துவங்கினேன். அதற்காக என்னைத் தவறென்று சொல்லாதீர்கள். எனக்கு இப்போது கோபத்தைக் காட்ட இடம் வேண்டும். ‘பிங்க் ஜிமிக்கி எங்கு கிடைக்கும்?’, ‘தேங்காய் நாரில் மாங்காய் டிசைன் போட்ட மயில் கழுத்து நிற சேலை எப்போது கடைக்கு வரும்?’ போன்ற உருப்படியான(!) கவலைகளை மட்டுமே ஊட்டி வளர்த்திருந்தால் இவ்வுலகில் ‘இருத்தல்’ தொழில் சுலபமாகியிருக்கும். ப்ச்! வளர்ப்பு சரியில்லை…!

            ஏதோ ‘மாற்றுக் கருத்து’ என்றாலே எனக்கு ஒவ்வாமை என நினைத்துவிட வேண்டாம். ‘இடியாப்பம் பிடிக்கும்; பிடிக்காது’ என்ற அளவில் இருப்பதன் பெயர்தான் மாற்றுக் கருத்து. ‘இடி அமீன் பிடிக்கும்; பிடிக்காது’ என்பதில் வருவதல்ல. ‘இடி அமீன் ஏன் வெறுக்கப்பட வேண்டும்?’ என்பதெற்கெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டி சூழல் பணிக்கிறதெனில் சுற்றம் சரியில்லை என்றுதான் பொருள்! எவ்வளவு எடுத்துக் கூறியும் “இல்லையில்லை. நீ எவ்வளவு சொன்னாலும் இடி அமீனை வெறுப்பது எனக்குச் சரியாகப் படவில்லை. அவன் பக்க நியாயம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?” என்று கூறுவோரையெல்லாம் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டு செல்ல வைக்கும் வாழ்க்கை மீதுதான் என் மொத்த கோபமே. இடி அமீனுக்குப் பதில் அதிமுக்கியமான வாழ்வியல் விஷயங்களை, ஒரு மனிதனை அடிப்படையாக வரையறுக்கும் பண்புகளை கருத்தாக்கங்களை வைத்து யோசிக்கவும்.  ‘வாழ்க்கை இப்படியே போயிருமா?’ என ஒரு கடுப்பு வரும் இல்லையா?

பொருத்தமான நிகழ்வொன்றை விவரிப்பது ஏதுவாய் அமையும்.

            உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்குச் செல்ல நேரிட்டது. பந்தியில் உணவருந்த அமர்ந்தோம். முதல் வாய் உள்ளே சென்ற போது அருகில் துன்னுட்டு இருந்த துன்னியார் ஒருவர், “புதுசா நான் கட்டிட்டு இருக்குற வீட்டுல பெருசா ஒரு டைனிங் டேபிள். பக்கத்துல ரொம்ப பெருசா ஒரு ஜன்னல். ஹால்ல 70 இஞ்ச் டிவி,…. சுக்கு காப்பி, மிளகு ரசம்….” என்று அடுக்கிக் கொண்டே சென்றார் பெருமிதம் பொங்க. இதற்குள் எதிர் வரிசையில் கொஞ்சம் தள்ளி இருந்த மாமா ஒருவர் “வீட்டைக் கட்டிப் பாருன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க. எனக்கெல்லாம் விழி பிதுங்கிடுச்சு. அப்போல்லாம் சாப்பாட்டுக்கே கஷ்டம். ஒருத்தர் இல்ல தூக்கி விடுறதுக்கு, உன்னையும் சேர்த்துதான். எல்லாத்தையும் மீஈஈஈறி நின்ன்னு காமிச்சேன். உக்காந்து காம்போசிசன் எழுதுனேன்…. நடந்து போய் கமர்கட் வாங்குனேன்” என்று அவர் பங்குக்கு அடித்து விட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு நல்ல அரசு உத்தியோகத்தில் இருந்தும் ‘பேதைதன் கையொன் றுடமை பெற்ற’தைப் போல் வாழ்ந்து பணி ஓய்வு பெற்று இருந்திருந்து திறவோன் பருவத்தின் மத்திம கால வயதில் முதன்முதலாகத் தாம் கட்டும் வீட்டைப் பற்றி இவ்வளவு சிலாகித்த அந்தச் சுக்குக் காப்பி சித்தப்பாவிடம் ‘பயனில சொல்லாமை’ பற்றி எடுத்துச் சொல்வது வராஹ பகவானின் முன் முத்துகளைச் சிந்துவதாகும். அந்த மாமாவின் பின்னணி தெரியாமல் இதைக் கேட்டால் ஏதோ உத்வேகம் தரும் கதை போல என யாரும் நம்பிவிடுவர். குடும்பத்தில் முதல் ஆளாக வேலைக்குச் சென்றவர். அதுவும் நல்ல வேலை… பின்னர் வணிகக் காந்தமாகும் முயற்சியில் மும்மரமாகக் குதித்துக் கால் இடறியதில் அன்பை முறிக்கும் சுறாக்களின்(!) காந்தவலையில் சிக்கி முக்கி மீண்டு வந்துதான் ‘சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ இப்பேருரை. காதுகள் பாவமில்லையா? தன் ‘அறிவார்ந்த(!)’ சோதனை முயற்சிகளின் மூலம் ‘ஏதங்கொண்டு ஊதியம் போக’ விட்டு இன்மையில் உழன்ற கதையை glorify/romanticize செய்து சொல்லிக் கொண்டிருந்ததில் அனைவரின் தலைமுடி கைமுடி எல்லாம் ‘parade salute!’ என எழுந்து நின்றன. ‘சீரல் லவர்கண் படின்’ ‘முந்திரிமேற் காணி மிகுவேதல் கீழ்தன்னை இந்திரனா எண்ணு’ம் இவர்களின் உளுத்துப் போன அறுவையுரையால் அறை முழுதும் ஊசல் வாடை கமழ்ந்தது.

நானும் எதிரில் அமர்ந்திருந்த அப்பாவும் சிரித்து வைக்கவும் முடியாத, கடுப்பை வெளிப்படுத்தவும் இயலாத ஒரு கலவையான பார்வையைப் பரிமாறிக் கொண்டோம். இதில் வேறு அந்த மாமா என் அம்மாவிடம், “நானா கண்டு தாக்குப்பிடிச்சேன். என்னக்கா?” என அவளின் ஆமோதித்தலை எதிர்ப்பார்க்க அவளும் “பின்ன? சும்மாவா?” என்று சொல்லிச் சமாளிக்க, நானோ யாருக்கும் கேட்காதவாறு அவளின் காதில் “கூச்சமே இல்லேல?” என்றேன். சிரித்தாவாறே முகத்தை வைத்துக் கொண்டு “வாய மூடிட்டுச் சாப்பிடு” என்று கடுகடுத்தாள். “அது எப்பிடிம்மா முடியும்?” என்று கொடூரமாக நகைச்சுவையை அள்ளித் தெளித்தேன். இதற்குள் பெரியப்பா ஒருவர் “ஏன் காத கடிக்கா எம்மவ?” எனக் கேட்க “மோர் வேணுமாம்” என்று சொல்லி வைத்தாள் அம்மா.

ஒரு அரை கிலோமீட்டர் தூரத்து உறவு அண்ணன் ஒருவன் மோர் கொண்டு வந்தான். உடனே அறைக்கு இன்னும் மணம் சேர்க்கும் பொருட்டு அங்கிருந்த அவனது அம்மா, “இவன் பக்குவம் பொறுப்பு அறிவு யாருக்கும் வராது… ஆனை பூனை அல்லே பராக்….” என்று நீட்டி முழக்கிய போது அவ்வார்த்தைகளுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் என நிச்சயம் எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்திருப்பார்கள். கல்லூரியில் வகுப்புகளுக்கு வெளியேதான் அறிவு கிட்டும் என ஆழமாக நம்பும் ஞானி அவன். ஒவ்வொரு தாளையும் குறைந்தது நான்கு முறையாவது எழுதுவதைப் பொறுப்பாகச் சலிக்காமல் ஏற்றுச் செய்து வந்தான். ஒரே நேரத்தில் பல இளைஞிகளுடன் எவ்விதக் குழப்பமும் இல்லாமல் நிலக்கடலை வியாபாரம் பார்ப்பதில் வல்லவன். இப்போது சம்பந்தமே இல்லாத துறை எனினும் நன்றாகச் சம்பாதிக்கிறான் என்று அவனுக்காக ஆறுதலடையவோ மகிழவோ கூட அனுமதிக்க மாட்டான். உடனே சுக்கு நூறாக அவனுள் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்து ஒட்ட மறுக்கும் ஆங்கிலத்தையும் இவனே வலுக்கட்டாயமாக அடித்து உடைத்த தமிழையும் கொண்டு திருவாய் மலர்ந்தருளி ‘திருவேறு தெள்ளிய ராதலும் வேறு’ என்ற இருவேறு உலகத்து இயற்கைக்கு வாழும் உதாரணம் தான் என நிரூபிப்பான்.  

அத்தை ஒருத்தி அம்மா காதில், “இவன் இருந்த இருப்புக்கு வேலையா கெடைச்சுருக்கும்? கோடகநல்லூர் கைலாசநாதர் கோவில்ல  ஒரு தேங்காய் விடலை போட்ட கையோட மரகநெடுங்குழைக்காதர் பெருமாள் கோவிலில் துளசித் தண்ணி வாங்கி ஒரு மடக்கு குடிச்சுட்டு கரெக்ட்டா ரெண்டு துளிய உச்சந்தலையில தெளிச்சு விட்டுட்டு நேரே சாயிபாபா கோவிலுக்குப் போய் நாலரை சுத்து சுத்தீட்டு வடமேற்கு பக்கமா திரும்பி நின்னு ஒரு கையை மேலே தூக்கி இன்னொரு கையால் கால் சுண்டு விரலைப் பிடித்தவாறே வானத்தைப் பார்த்து வேண்டிக்கொண்டால் நினைத்தது நிச்சயம் நடக்கும்னு அவனுக்குப் பரிகாரம் சொன்னேன். அத செஞ்ச பொறவு தான் உடனே ரெண்டு வருசம் கழிச்சு வேலை கெடச்சது. ஒங்களுக்கும் ஏதாவது வேணும்னா கேளுங்க” என்றார். “கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கோங்க” என்று அந்த அத்தையிடம் சொல்லிவிட்டு அம்மாவின் இந்தக் காதில் நான் “ஒவ்வொரு சாமியும் மத்த சாமி பாத்துக்கும்னு விட்டதுல கொஞ்சம் தாமதாமாகிட்டு போல” என்றது அத்தைக்குக் கேட்டுவிட்டது போலும். என்னை முறைத்துக் கொண்டே இஞ்சிப் பச்சடியை வத்தக்குழம்பு என நினைத்து சோற்றில் போட்டுப் பிசைந்துவிட்டார்.

“எதேச்சையா வந்த இந்த விசேஷ வீட்டோட டைனிங் ஹால்ல தற்செயலா நுழைஞ்சேன் ஃப்ராண்ட்ஸ்… இங்க பாத்தீங்கன்னா எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்காங்க ஃப்ராண்ட்ஸ்… அதுவும் வலது கையால எடுத்து வாயாலயே சாப்பிடுறாங்க ஃப்ராண்ட்ஸ்… இங்க ஒரு ஆன்டி காரத்துல கதறுரததான் பாத்துட்டு இருக்கீங்க….” என்று கி.பி இராண்டாயிரமாம் காலகட்டத்தைச் சார்ந்த குழந்தை ஒன்று கைபேசியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

திடீரென ஒரு அங்கிள் அரசியல் பேசத் துவங்கினார்கள். உலக அரசியல் வழியாக உள்நாட்டு அரசியலுக்குத் தாவி உள்ளூர் அரசியலை அடைந்து… என அங்கும் இங்கும் சுற்றி கடைசியில் காவிக்குக் காவடி எடுத்தார்கள். “அடச்சை! Toilet paper” என அவர்கள் வீட்டில் வாங்கும் நாளிதழ் என் நினைவிற்கு வந்து சென்றது. அப்பாவும் அருகிலிருந்த தோழரும் அவரைப் பரவச நிலையிலிருந்து நிதானமாக இறக்க முற்பட்டார்கள். அவரோ ‘பவர்ர்ர்ர்ர்’ என இன்னும் இன்னும் உக்கிரத்தை நோக்கிச் செல்ல இருவரும் நிலைமையைப் புரிந்து கொண்டு அமிழ்தத்தை இங்கு கொட்டக்கூடாது என்றுணர்ந்து கை கழுவ அங்கணத்தை நோக்கிச் செல்ல ஆயத்தமானார்கள். நானும் ‘புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க’ என்று புளிசேரியை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். அப்பாவின் வார்ப்பு நான் என்றறிந்த அங்கிள் “நீ என்ன சொல்லுத?” என்று என் வாயைக் கிண்டினார்கள். “எந்தக் கட்சிக்கும் ஆதரவா நான் பேசல. எல்லா இடத்துலயும் ஊழல் இருக்கலாம். ஆனா எதேச்சதிகாரத்தை ஒழிக்குறதுதான் இப்போ முக்கியம். அதனால இந்தக் குறிக்கோளோட மக்கள் பக்கம் நிக்குற கட்சிக்கு வாக்கு அளிக்குறதுதான் சரியா இருக்கும்” என்று பதில் மொழியவும் நான் எந்தக் கட்சியைச் சொல்கிறேன் என்பதை உணர்ந்து என்னை அக்கட்சியின் பரப்புரையாளராகப் பாவித்து என்னைச் சாடத் துவங்கினார். ‘வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொள்’ளும் முயற்சியில் பரிதாபமாகத் தோற்று நின்றேன்.

இன்னொரு அங்கிள் வந்து “இந்த நாடு குட்டிச்சுவரா போறதுக்கே ஒங்கள மாதிரி ஆட்கள்தான் காரணம்” என்று காவி அங்கிளைப் பார்த்துச் சொல்ல ‘ஒளி தெரிகிறது’ என்று என் மனம் பூரிக்கத் துவங்கவும் படாரென்று ஒரு நடிகரின் நடுநிலைமைக் கட்சியைத் தாம் ஆதரிப்பதாகச் சொன்னார். ஒளி வந்த வேகத்திலேயே மறைந்துவிட்டது!

மூன்றாவதாக அண்ணாவா அங்கிளா என்று குழப்ப வைத்த ஒரு நபர் வந்து அவ்விருவரையும் பார்த்து “இப்படியே பேசிட்டு இருந்தா விளங்கிரும். ஒங்க ஆளுக்கு ஊர் சுத்தவே நேரம் இல்லை. ஒங்காளு பேச்சுக்கு கோனார் உரை கூட கெடைக்காது…” என்றார். ஆகா! என்னை ஆதரிக்க இவர் திருவுளங்கொண்டு விட்டார் என நான் எண்ணுகையில் என்னை நோக்கித் திரும்பி “இவ ஒரு கருப்பு சிவப்பு சங்கி” என்று அதிர்ச்சியடைய வைத்தார். பிறகு சாந்தமான குரலில் கூறினார் “புதுசா கட்சி ஆரம்பிச்சுருக்குற எங்க நடிகருக்கு ஒரு வாய்ப்பு குடுக்கலாம்ல”.  அவர் தலைவராவது புரிபடாமல் பேசுவதில்தான் வல்லவர்; இவர் தலைவர் வாயையே திறக்காமல் பேசுவதில் வல்லவர்.

ஹ்ம்ம்ம்!!! பிரமாதம். என்னைச் சொன்னது கூட வலிக்கல மை டியர் அங்கில்ஸ்! அட!அட!அட! இதுக்குப் பேசாம நான் பேசாமலே இருந்துருக்கலாம்!

            பீற்றல் பேர்வழிகளுக்கும் ‘அறிவுஜீவி’ நோய்க்குறியால் (syndrome – கூகிள் இப்படித்தான் சொல்லுச்சு!) வாடும் வகையறாக்களுக்கும் மனமார்ந்த அனுதாபங்களையும் ஆழ்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்து விட்டு ‘பாயாசம் சாப்பிடுங்க ஃப்ராண்ட்ஸ்’ என சொல்லச் சொல்லி மனது அரித்துக் கொண்டிருந்ததை மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்தினேன். “எனக்குச் சோறே வேண்டாம். ஆள விடுங்கடா” என எழலாம் என்று பார்த்தால் பந்தி முடியவில்லை. என் இரு பக்கமும் ஒருவரும் எழவில்லை. என்னாலும் எழ முடியவில்லை. பாதியிலேயே எழுந்தால் மரியாதைக் குறைவு, இங்கிதமின்மை என்பார்கள், ஏதோ இவ்வளவு நேரமும் அவர்கள் அதைக் கடைபிடித்ததைப் போல.

            தப்பிக்க இயலாமல் கடைசி வரை இருந்து தொலைக்க வேண்டிய நிர்பந்தம். ‘என் உலகம் வேறு; இது ஏதோ தற்காலிகச் சூழல்’ என்னும் பட்சத்தில் ஒரு நாழிகை பந்தியில் இதையெல்லாம் சிரித்துக் கடந்து விடலாம். ஆனால் சகிப்புத்தன்மையை அளவற்ற சோதனைக்கு உள்ளாக்கும் இந்த ஒரு நாழிகை பந்தியை முழு வாழ்க்கை காலத்திற்கான குறியீடாகக் கருதிப் பாருங்கள். வாழ்க்கை நம்மை எவ்விடத்தில் எச்சூழலில் இருத்தி வைக்கும் எனத் தெரியாது. அப்போது நமக்கே நமக்கானவர்கள் பந்தியில்/வாழ்க்கையில் சில வரிசை தள்ளி இருக்கும் சூழ்நிலை அமையலாம். பணியினாலோ தொலைவினாலோ அவர்களுடனான ஆழமான கலந்துரையாடல்களுக்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லாமல் போகலாம். அச்சமயத்தில் ‘நாணாமை நாடாமை நாரிமை யாதொன்றும் பேணாமை’ ஆகியவற்றையே தொழிலாகக் கொண்டிருக்கும் (ஓட்டை உடைசல் பண்ட) பாத்திரங்கள் வாழ்நாள் முழுமைக்கும் நம்மைச் சுற்றிச் சுற்றி வருகிற போது ‘வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை’ எல்லாம் சுக்கு நூறாகிவிடும்.

            என் உலகை அப்படியே என்னோடு நகர்த்திச் செல்வது சாத்தியமற்றதாகிப் போகும் போது, சூழ்ந்திருப்போரிடம் எனக்கானவர்களைத் தேடித் தோற்கும் வேளைகளில் மனம் ஆங்காரத்தோடு கர்ஜிக்கும் – ‘தனித்திரு!’. தேர்ந்து தெளிந்த கேண்மையே சில சமயம் கழிவிரக்கத்தையோ ஏமாற்றத்தையோ தரும் போது ‘காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதலால்’ வந்தோர் அன்னாருடன் வரும் இலவச இணைப்புகள் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

இரு மனிதர்களுக்கு இடையில் பிணைப்பு என்பது அன்பு, புரிதல், மரியாதை, கருத்து ஒற்றுமை என ஏதோ ‘ஒன்றன்’ அடிப்படையில் உருவாகும். அப்படியான ஒன்று கூட இல்லாமல் திறந்த வீட்டில் நுழைந்த சிங்கங்களாக நம் உலகில் வளைய வருபவர்கள்தாம் இலவச இணைப்புகள். ஒரு மனிதரை நம் வட்டத்தினுள் மனதார வரவேற்கும்போது அவரிலிருந்து முற்றிலும் மாறுப்பட்ட அவரைச் சார்ந்த – அவ்விய நெஞ்சத்தவர்கள், நெஞ்சின் துறவார் துறந்தார்போல் பேசுபவர்கள், ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதைகள், கல்லாத மேற்கொண்டொழுகுவோர், ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் பிரிவினர், உலகத்தார் உண்டென்ப தில்லென்போர் ஆகியோரும் மிக இயல்பான நிகழ்வாக உடன் வந்து அமர்வதுதான் வாழ்க்கையின் அசட்டுத்தனமான வடிவமைப்பு!

தம்கணத்தார் அல்லாதாரால் சூழப்பட்டிருக்கும் காலத்தில்

அதைக் கட்டுப்படுத்துவது நம் கைகளில் இல்லாமல் போகும் கையறுநிலையில் பொறையுடைமை தீர்ந்து போகும் தருணத்தில்

மனநலத்தையும் உடல்நலத்தையும் காக்கவேண்டி ‘சிற்றினம் அஞ்சி தனித்திரு என் மனமே!’

மாண்டார்நீ ராடி மறைந்தொழு மாந்தர்களே! பெரியார் துணைகோடலுக்கு வழி விடவும்!

  • சோம. அழகு

👍.....

எல்லாவறையும் உங்கள் மகள் இப்படி ஒரேயடியாக எழுதி விட்டாரே.... அவர் எழுதியிருக்கும் ஒவ்வொரு பந்தியும் நான் தேடிக் கொண்டிருந்தது. இடியப்பமும், இடி அமீனும் இனி என்னை பல இடங்களில் காப்பாற்றும்..........🤣

என் போன்ற பலர் ஏதாவது எழுதுவதற்கு தயங்குவதற்கு பிரதான காரணமே இப்படியான எழுத்துகள், ஆக்கங்கள் தான். இந்த எழுத்துகளின் தரத்தின் முன்னே நாங்கள் எழுத முயற்சிப்பது ஒன்றுமே இல்லை என்று தோன்றும்...👍👍  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

என் போன்ற பலர் ஏதாவது எழுதுவதற்கு தயங்குவதற்கு பிரதான காரணமே இப்படியான எழுத்துகள், ஆக்கங்கள் தான். இந்த எழுத்துகளின் தரத்தின் முன்னே நாங்கள் எழுத முயற்சிப்பது ஒன்றுமே இல்லை என்று தோன்றும்...👍👍  

ஐயய்யோ ! உங்கள் எழுத்தின் பாணி வேறு. உங்களது எழுத்து பலரைச் சென்றடையும் திறன் கொண்டது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஏராளன் said:

எழுத்தின் அளவை கொஞ்சம் பெரிதாக்கினால் வாசிக்க இலகுவாக இருக்கும்.

வேறு தளத்தில் உள்ளதைப் படி எடுத்து ஒட்டியதால் இவ்வாறு அமைந்தது. அடுத்த முறை பெரிய எழுத்தில் பதிய முயற்சிக்கிறேன். நன்றி, தோழர் !

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுப.சோமசுந்தரம் said:

ஐயய்யோ ! உங்கள் எழுத்தின் பாணி வேறு. உங்களது எழுத்து பலரைச் சென்றடையும் திறன் கொண்டது.

நீங்கள் எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கும் ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள்.

பல வருடங்களின் முன்னர், ஈழத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் நல்ல ஒரு எழுத்தாளராக வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு ஒரு பதில் சொல்லியிருந்தார். உலகில் உள்ள நல்ல சிறுகதைகளில் 500 ஐயும், நல்ல நாவல்களில் 50 ஐயும் முதலில் வாசிக்க வேண்டும் என்று அந்தப் பதிலில் சொல்லியிருந்தார். சிறந்த சிறுகதை, நாவல் வரிசைகள் பலரால், எஸ் ரா, ஜெயமோகன் மற்றும் சில விமர்சகர்களால் (க நா சு போன்றோர்) போன்றவர்களால், வெளியிடப்பட்டும் இருந்தன.

அந்த வரிசைகளில் உள்ள சில படைப்புகள் இணையத்திலேயே கிடைத்ததால், வாசிக்க கூடியதாகவும் இருந்தது. ஆனால் பலவற்றை வாசித்த பின் பெரும் பிரமிப்பும், பயமுமே உண்டானது, எவ்வளவு பெரிய படைப்பாளிகள் வந்து போயிருக்கின்றனர், இதுவல்லவோ எழுத்து என்று.    

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஐயா ..........!   😁

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மேற்கின் அறிவிப்புக்கள் எல்லாம் உக்ரேனுக்கு எந்தப் பயனையும் கொடுக்கவில்லை  என்பது கண்கூடு.  இனிவரும் நாட்கள் உக்ரேனுக்கு இன்னும் மோசமான அழிவுகளை ஏற்படுத்தும் நாட்களாக வரப்போகின்றன என ஊகிக்கிறேன்.  புடினின் போர்நிறுத்த நிபந்தனை இதற்கட்டியங்கூறலாகவே தெரிகிறது. 
    • இன்னும் உந்த மேற்கின் ஊடகங்களை நம்புகிறீர்களா?  ஆச்சரியமாய் இருக்கிறது. 
    • தலைப்பை மாத்திவிடுங்கள் ( டக்கி புலம்பெயர் தமிழர்கள் தலைவருக்கு நன்றிக்கடனாக இருக்கட்டாம் என்று) இல்லாவிட்டால் இப்படியான செய்திகளை வாசிக்கமாட்டேன்
    • "மாயா"     செப்டம்பர் 22, 1995 , என்னால் மறக்க முடியாத ஒருநாளாக இன்னும் என் மனதை வருத்திக்கொண்டு இருக்கிறது. அன்று தான் என் அன்பு சிநேகிதி இறந்த தினம். அவர் சாதாரணமாக இறக்கவில்லை, அந்த கொடுமையை நினைத்தால் எவருமே கதிகலங்குவார்கள். அவளும் அவளின் மாணவிகளும் புத்தரின் தர்ம போதனைக்கும் உலக நீதிக்கும் எதிராக துண்டு துண்டாக உடல்கள் சிதறி நாகர்கோவில் மகாவித்தியாலத்தில் பிற்பகல் 12.50 மணியளவில் விமானப் படையினரின் குண்டுத் தாக்குதலில் 21 - 26 மாணவர்கள் உட்பட கொல்லப் பட்ட தினம் ஆகும். அது தான் நான் இன்று, இந்த கார்த்திகை தினத்தில் நேரத்துடன் துயிலில் இருந்து எழும்பி யன்னல் வழியாக ஆகாயத்தை வெறுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.   அரசியல், யுத்தம், சமதானம் என்பவற்றைப் பற்றிப் புத்தர் தெளிவான கருத்துடையவராயிருந்தார். அஹிம்சையும் சமாதானமுமே பௌத்தம் உலகுக்கு விடுக்கும் செய்தி. இது எல்லாராலும் நன்கு அறியப்பட்டதொரு விஷயம். எந்தவிதமான பலாத்காரத்தையும் அது ஏற்றுக்கொள்வதில்லை. கொல்லாமையே அதன் மூலாதாரமான கொள்கை. 'நீதியான யுத்தம்' என்று சொல்லக் கூடியது ஒன்றுமில்லை. இது ஒரு போலிப் பெயர். துவேஷம், கொடுமை, இம்சை, கொலை என்பவை நேர்மையானவையெனக் காட்டும் நோக்கமாக ஆக்கப்பட்டதொரு அர்த்தமற்ற வார்த்தை.   பௌத்த மதத்தின்படி 'நீதியான யுத்தம்' என்று ஒன்றுமில்லை. 'இது நீதி, இது அநீதி' என்று தீர்மானிப்பது யார்? நாங்கள் துவங்கும் யுத்தம் எப்பொழுதும் நீதியானது. மற்றவர்கள் துவங்கும் யுத்தம் அநீதியானது. பௌத்தம் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை.   ரோஹினி ஆற்று நீர்ப் பிரச்சினை சம்பந்தமாகச் சாக்கியரும், கோலியரும் பிணங்கிக் கொண்டு சண்டை செய்ய முற்பட்டபோது பகவான் யுத்தகளத்துக்குப் போய் பிணக்கைத் தீர்த்துச் சண்டையை நிறுத்தினார். அஹிம்சையை அவர் போதித்தது மாத்திரமன்றி, சமாதானத்தை நிலை நாட்டக் காரிய பூர்வமான நடவடிக்கையை எடுத்தார். பகவானுடைய அறிவுரையைக் கேட்டு அஜாதசத்து என்ற மன்னன் வஜ்ஜிராச்சியத்தோடு உண்டான சண்டையை நிறுத்தினான்.   நான் சைவ மதத்தவன் என்றாலும் புத்த பெருமானை நேசிக்கிறேன் அவரின் இந்த கொள்கைக்காக! ஆனால் இன்று அவரின் புதல்வர்கள் என்று கூறும் பலர், இதை பின்பற்றுவதாக எனக்குத் தெரியவில்லை. அது தான் அந்த குண்டுகள் பொழிந்த ஆகாயத்தை பார்த்தபடி என் சினேகிதியை இந்த கார்த்திகை நாளில் நினைவு கூறுகிறேன்!   என் சினேகிதியை தற்செயலாக தற்காலிக இடமாற்றத்தை அடுத்து வேலையை பாரம் எடுக்க பருத்தித்துறைக்கு சென்ற பொழுது, பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் சந்தித்தேன். அவர் ஒரு இளம் ஆரம்ப பள்ளி ஆசிரியை. அவர் தான் என் புது அலுவலகத்துக்கான பாதைக்கு வழி காட்டியதுடன், தன் வீடும் அதற்கு அருகில் என்று, கூடவே கதைத்து கொண்டும் வந்தார். ஒரு சில நிமிடங்களில் பரிமாறி கொண்ட கவர்ச்சிகரமான அப்பாவித்தனமான பார்வைகள் அவளின் குறும்புத்தனம் மிக்க இனிய குரல்கள், பெண்மையின் வளைவு நெளிவுகளை வெளிப்படுத்தும் அவளின் அழகிய கோலமும் குனிந்த நடையும் வாரம் நகர்ந்தும் என்னால் மறக்க முடியவில்லை. அவளின் பெயர் மாயாதேவி , நாகர்கோவில் மகாவித்தியால ஆசிரியை, இவ்வளவும் தான் எனக்குத் தெரியும். ஒரு சில நிமிடங்கள் தானே அவளுடன் பழக்கம். அவளை முழுமையாக அறிய அன்று ஆவல் இருந்தாலும், எடுத்தவுடன் அதுகளை கேட்டு குழப்பக்கூடாது என்று பேசாமல் இருந்துவிட்டேன்.   முதிர்ச்சியற்ற காதல் இப்படிச் சொல்லும்: `நான் உன்னைக் காதலிக்கிறேன். ஏனென்றால் நீ எனக்கு வேண்டும்.’ முதிர்ச்சியடைந்த காதல் இப்படிச் சொல்லும்: `எனக்கு நீ வேண்டும். ஏனென்றால், நான் உன்னைக் காதலிக்கிறேன்.’ ‘ - இதைச் சொன்னவர் அமெரிக்க சமூக உளவியலாளர் எரிக் ஃப்ரோம் (Erich Fromm). காதலுக்குத் தேவையான அடிப்படையான மனப்பக்குவம் இதுதான். அப்படித்தான் நானும் இருந்தேன்.   அவள் விண்ணில் இருந்து வந்த தேவதையின் உடல் எடுத்து வந்தது போல் இருந்தாள். அவளை சுற்றி ஒரு பிரகாச சூழ்நிலை நிலவிக்கொண்டு இருப்பதாய் அன்று அவதானித்தேன். அந்த அழகு எப்படி வர்ணிப்பது என்று எனக்கு தெரியவில்லை. அவளின் படைப்பில் வெறுக்கிற மாதிரி ஒரு அம்சம் கூட இல்லை. நான் சும்மா சொல்லவில்லை. அவள் மலர்ந்துகொண்டு இருக்கும் ஒரு பன்னீர் மலர்! 'பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய் அழகை பாடுங்களே!' என்று ஒரு பாடல் கேட்ட ஞாபகம். உண்மையில் 'பன்னீர் மலர் சொரியும் மேகங்களே என் நண்பியின் மெய் அழகை பாடுங்களே!' என்று தான் என் உள்ளம் அசை போடுகிறது!. எப்படியும் அவளை சந்திக்கவேண்டும் என்று அன்று ஒரு நாள், அவள் பாடசாலை முடிய வரும் பேருந்துக்காக, நேரத்துடன் வேலையில் இருந்து புறப்பட்டு காத்திருந்தேன்.   'இளந்தளிரைப் போன்று மென்மையாகவும் தாமரைக்கொடியைப் போன்ற மெதுமெதுவென்று இருக்கும் கரங்கள் என்னைத் தழுவவேண்டும். அவளின் வசீகரமான புன்முறுவல் என் மார்பில் சாய்ந்து கொட்டிடவேண்டும். அப்பொழுது உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் இன்பத்தை பொழியவேண்டும்' இப்படி என் மனம் மகிழ்ந்து கொண்டு, நான் என்னையே மறந்து கனவில் மிதந்த அந்த தருவாயில், 'ஹாய்' என்ற அந்த அவளின் இனிய குரல் என்னை மீண்டும் பூமிக்கு வர வைத்தது. 'ம்ம்ம் என்ன இன்று நேரத்துடன் வேலை முடிந்ததா ?' அவள் தான் தொடர்ந்தாள், நான் என்னை சமாளித்துக்கொண்டு, இல்லை ஒரு தனிப்பட்ட விடயமாக கொஞ்சம் வெளியே வந்தேன், இனி திரும்பவும் வேலைக்கு போகப் போகிறேன் என என் கதையை மாற்றினேன். அப்ப தான் அவளுடன் ஒன்றாய் நடக்க முடியும்!   கொஞ்சம் எனக்கு பசி, வாங்க தேநீரும் வடையும் சாப்பிட்டுவிட்டு போவோம் என கூப்பிட, அவள் கொஞ்சம் தயங்கினாலும், பின் ஓகே என்று வந்தாள். அது தான் என் முதல் வெற்றி! கொஞ்சம் கொஞ்சமாக அவளை அறியத் தொடங்கியதுடன் என்னைப்பற்றியும் சொன்னேன். அவள் தொடக்கத்தில் கொஞ்சம் அச்சம் நாணம் கொண்டாலும், போகப் போக அன்னியோன்னியமாக பழகத் தொடங்கினாள். அது என் இரண்டாவது வெற்றி!   அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய என்ப."   என்றார் தொல்காப்பியர். இது களவியலுக்கு மட்டும் தான்! ஒரு காதல் சுவைக்கு மட்டும் தான் என்ற உண்மையை அவளிடம் கண்டேன்! இப்ப நான் மட்டும் அல்ல அவளும் எனக்காக காத்திருக்கிறாள். இப்ப நான் மோட்டார் சைக்கிளில் வர ஆரம்பித்ததால், நான் காலை நேரத்துடன் வந்து அவளை பாடசாலையில் இறக்கிவிட தொடங்கினேன். அவள் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு செல்லக் கதைகளும் பேச தொடங்கிவிட்டாள். அந்த சிலநிமிட பயணம், சொர்க்கம் என்று ஒன்று இருந்ததால் அங்கே போனமாதிரி இருந்தது!   ஒரு சில மாதம் கழிய, செப்டம்பர் 22, 1995 , அவளுக்கு என் காதலின் அடையாளமாக ஒரு அழகிய மோதிரம் எம் இருவரின் படத்துடன், அன்று அவளை, பாடசாலையில் இறக்கிவிடும் பொழுது, திடீரென ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அவளின் விரலில் நானே போட்டுவிட்டேன். அவள் அப்படியே திகைத்து நின்றாள், ஒன்றுமே பேசவில்லை, ஆனந்த கண்ணீர் சொட்டு சொட்டாக அவள் கன்னத்தை நனைத்தன. அது தான் நான் கொடுத்த முதல் முத்தம் கூட. திரும்பி, சுற்றி பார்த்தாள், நாம் ஒரு மரத்தின் அடியில் நின்றதால், எம்மைக் காணக்கூடியதாக ஒருவரும் தெரியவில்லை. திடீரென அவசரம் அவசரமாக என்னை இழுத்து, வாயுடன் வாய்சேர்த்து முத்தம் தந்துவிட்டு, சட்டென அந்த மோதிர விரலை பார்த்தபடியே பாடசாலைக்குள் ஓடி விட்டாள். வழமையாக சொல்லும் 'போயிட்டு வருகிறேன்' கூட சொல்லவில்லை ?   அவள் இன்று ஒன்றும் சொல்லாமல் பாடசாலைக்குள் போனது எனோ எனக்கு ஒரு மாதிரி இருக்க, என் மதிய இடைவெளியில், சாப்பிடுவதை தவிர்த்து, அவளை ஒருக்கா பார்க்க வேண்டும் என்ற அவா உந்த, மோட்டார் சைக்கிளில் அவளிடம் போனேன். போகும் பொழுது, பாடசாலைக்கு கொஞ்சம் அருகில் இருந்த கடை ஒன்றில் அவளுக்கு, அவள் மிகவும் விரும்பும் இருதய அமைப்பில் அமைந்த ஆல்கஹால் பிரீ டார்க் சாக்லேட் [alcohol free dark chocolate] பெட்டி ஒன்றை வாங்கி, மீண்டும் மோட்டார் சைக்கிளில் எற, பெரும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் பாடசாலை பக்கம் இருந்து கேட்டது. போர்விமானமும் கூவிக்கொண்டு பறந்தன, கடைக்கார முதலாளி கடையை உடனடியாக மூடிக்கொண்டு, தம்பி, ஒரு இடமும் போகவேண்டாம் என்று என்னையும் பதுங்கு குழிக்குள் இழுத்து சென்றார்.   நான் ரசித்த உடல் துண்டு துண்டாக அன்று மாலை என்னால் போய் பார்க்க முடிந்தது. அவளின் மற்றும் மாணவர்களின் பெற்றோரின் அழுகுரல் ஒரே சோகமயமாக அங்கு காட்சி அளித்தது. நான் அவளின் கையை, நான் போட்டுவிட்ட மோதிரம் மூலம் அடையாளம் கண்டேன்.     "அழகான என் செல்ல நண்பியே அன்பான ஒரே நம்பிக்கை நட்சத்திரமே அளப்பெரும் துயரில் என்னைத் தள்ளி அமைதியாய் சொல்லாமல் மறைந்தது ஏனோ ?"   "வாய் மூடி தலை குனிந்து வான் உயர துள்ளி குதித்து வாழ்க்கை காண கனவு கண்டவளே வாட்டம் தந்து மௌனமாகியது எனோ?"   "என் அழகான காதல் செல்லமே என்னை விட்டு போக வேண்டாம்? என் குறும்பு இளவரசி இல்லாமல் எனக்கு இனி மகிழ்ச்சி எனோ?"   "பள்ளி அறையில் புத்தகங்களுக்கு இடையில் பகுதி பகுதியாக உன்னை கண்டுஎடுத்தேன் பரவி இருந்த இரத்த சொட்டுக்குள் பச்சை சேலை சிவந்தது எனோ?"   "மச்சம் கொண்ட உன் இளம்கால் மல்லாந்து என்னைப் பார்ப்பதைக் கண்டேன் மயான அமைதியில் உற்று நோக்கினேன் மடிந்தவிரலில் மோதிரம் என்னை அழைப்பதுஎனோ?"     நேரம் இப்ப அதிகாலை இரண்டு மணி, இன்னும் நல்ல இருட்டு, பனி எங்கும் பொழிந்து கொண்டு இருந்தது. நான் இப்ப வெளிநாட்டில், மனைவி பிள்ளைகளுடன் வாழ்கிறேன். அது உலக வாழ்க்கை. ஆனால் என் மனம் இன்னும் அவளையே நினைக்கிறது. அவளுக்காக ஒரு தீபம் ஏற்ற இப்பவே இந்த கார்த்திகை தினத்தில் எழும்பிவிட்டேன். என் மனைவி இன்னும் சரியான தூக்கத்தில், பிள்ளைகள் தங்கள் தங்கள் அறையில். யன்னலுக்கு வெளியே, இது கிராமப்புறம் என்பதால் சிறு மரப்பத்தைகள் [woods]. வானம் அமைதியாக இருந்தது. நான் கொஞ்சம் என் பார்வையை கிழே இறக்கி மரப்பத்தையை பார்த்தேன்.   கழுத்தில் இருந்து கால்வரை வெள்ளை நிற முழு அங்கியுடன், தனது முகத்தை நீண்ட கரும் கூந்தலால் மறைத்துக்கொண்டு, என்னை நோக்கி என் மாயாவின் உடல் அமைப்பிலேயே ஒரு பெண் உருவம் வருவதைக் கண்டேன்!   அருகில் அருகில் வர, தன் முடியை, தன் வலது கையால் வாரி முதுகுப் பின்னல் போட்டாள். நான் போட்டுவிட்ட அந்த மோதிரம் இன்னும் அந்த விரலில் இருப்பதைக் கண்டேன். அது ஒளிர்ந்து கொண்டு இருந்தது. அதே புன்முறுவல், அதே நாணம், அதே நடை! என்னால் நம்பவே முடியவில்லை!. 'ம்ம் வாங்க, உங்க மாயா கூப்பிடுகிறாள், நான் தான் உங்க மனைவி, உதறித்த தள்ளுங்கள் அவளை, கட்டிலில் படுத்திருப்பவளை'   இரண்டு கைகளையும் நீட்டி என்னை அழைத்தபடி நெருங்கி வந்து கொண்டு இருந்தது. என்னை அறியாமலே நான் யன்னலூடாக குதித்து வெளியே போக, யன்னலை அகல துறந்து, அதில் எற, ஒரு காலை தூக்கி வைத்தும் விட்டேன். மற்ற காலை தூக்க முயலும் பொழுது தான் , யாரோ என் காலை பிடித்து இழுப்பது தெரிந்தது. நான் திரும்பி பார்க்கவே இல்லை, என் மாயாவையே, அந்த அழகு தேவதையே பார்த்துக் கொண்டு ' மாயா, என் செல்லமே, நான் வாரெனடா கண்ணு' என்று சத்தம் போட்டு அலறியே விட்டேன்.   பிள்ளைகளும் சத்தம் கேட்டு ஓடிவந்து அப்பா, அப்பா என , மனைவியுடன் சேர்ந்து என்னை யன்னலால் குதிக்க விடாமல் உள்ளுக்குள் இழுத்துவிடார்கள். மனைவி என்னை கட்டிப்பிடித்து, உங்கள் மாயா எனக்கும் சகோதரி தான், எனக்கும் நண்பி தான். காலை நாம் குடும்பமாக இந்த , இனிவரும் ஒவ்வொரு கார்த்திகை தினத்திலும் விளக்கேற்றுவோம். இப்ப வந்து படுங்க, என பிள்ளைகளும் சேர்ந்து என்னை மீண்டும் கட்டிலில் படுக்க வைத்தனர். நான் அவர்களுக்காக கண்மூடி விடியும் மட்டும் இருந்தாலும், அந்த உருவம், என் மாயா என் மனதில் இருந்து அகலவே இல்லை !   "இறந்த அவளின் சூக்கும உடல் இளமுறுவலுடன் என் முன் வந்தது இலக்குமி போல அழகாய் தோன்றி இதழ் குவித்து முத்தம் தந்து"   "பழைய மெல்லிசை முணுமுணுத்து பதுங்கி என் கண்கள் பார்த்து பதுமையாக என் முன் நின்று பணிந்து அழைத்து வா என்றது"   "என் அழகிய குட்டி கண்மணியே எதற்காக உன் உயிரை மாய்த்தாய்? எழுச்சி தந்து நம்பிக்கை விதைத்து என்னை விட்டு விலகியது எனோ?"   "இறந்ததாக நான் உன்னை நம்பவில்லை இன்றும் உனக்காக நான் காத்திருக்கிறேன் இளந் தென்றல் தொடும் அடிவானத்தில் இரவும்பகலும் உன்னைத் தேடி அலைகிறேன் ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.