Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

main-qimg-a3a9e2dda1de9ae65695880d317b72

சில வாரங்களில் 3 ஆவது உலக போர் : இந்திய ஜோதிடரால் பரபரப்பு!

உலகில் இன்னும் சில வாரங்களில் 3 ஆவது உலக போர் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பது சமூக வலைத்தளங்களில் தகவலாகப் பரவிவருகின்றது.

அரியானாவை சேர்ந்த பிரபல ஜோதிடரான குசால் குமார் என்பவரே இது தொடர்பாக தனது வலைதளப்பக்கத்தில் கூறியுள்ளார்.

தற்போது ரஷ்யா – நோட்டா உறுப்பு நாடுகளின் ஆதரவு பெற்ற உக்ரைன் இடையிலான போர் மற்றும் வட மேற்கில் இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான், சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் அமைதியின்மை போன்றவற்றால் மூன்றாம் உலகப்போர் குறித்த பேசப்படும் நிலையில் இவரின் கணிப்பு மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

அதன்படி 2024 ஆம் ஆண்டு உலகெங்கிலும் நடைபெறும் போர் பதற்ற சூழ்நிலைகளாளே இதை கணிக்க கூடியதாக உள்ளதாகவும் கொரியா நாடுகள், சீனா மற்றும் தைவான், மத்திய கிழக்கு போன்ற போர் பதற்றம் உள்ளிட்ட செய்திகளும், உக்ரைன், ரஷ்யா போர், இஸ்ரேல், காசா போரும் இதற்கு உதாரணமான கணிப்பை தருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில நாடுகளில் ஆட்சி அதிகாரம் பெற்ற சிலர் பெரும் கவலைக்குரிய சூழ்நிலையை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் கடுமையான உடல் நிலையால் பாதிக்கப்படலாம் அல்லது இராஜினாமா செய்ய நேரிடலாம் எனவும் இன்னும் சில நாடுகளின் அரசியல் எழுச்சி ஏற்படலாம் என்பதுடன், அதை தடுக்க இராணுவம் கொண்டு வரப்படலாம் எனவு; அவர் தனது கணிப்பில் கூறியுள்ளார்.

https://athavannews.com/2024/1384030

 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

main-qimg-a3a9e2dda1de9ae65695880d317b72

சில வாரங்களில் 3 ஆவது உலக போர் : இந்திய ஜோதிடரால் பரபரப்பு!

உலகில் இன்னும் சில வாரங்களில் 3 ஆவது உலக போர் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பது சமூக வலைத்தளங்களில் தகவலாகப் பரவிவருகின்றது.

அரியானாவை சேர்ந்த பிரபல ஜோதிடரான குசால் குமார் என்பவரே இது தொடர்பாக தனது வலைதளப்பக்கத்தில் கூறியுள்ளார்.

தற்போது ரஷ்யா – நோட்டா உறுப்பு நாடுகளின் ஆதரவு பெற்ற உக்ரைன் இடையிலான போர் மற்றும் வட மேற்கில் இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான், சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் அமைதியின்மை போன்றவற்றால் மூன்றாம் உலகப்போர் குறித்த பேசப்படும் நிலையில் இவரின் கணிப்பு மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

அதன்படி 2024 ஆம் ஆண்டு உலகெங்கிலும் நடைபெறும் போர் பதற்ற சூழ்நிலைகளாளே இதை கணிக்க கூடியதாக உள்ளதாகவும் கொரியா நாடுகள், சீனா மற்றும் தைவான், மத்திய கிழக்கு போன்ற போர் பதற்றம் உள்ளிட்ட செய்திகளும், உக்ரைன், ரஷ்யா போர், இஸ்ரேல், காசா போரும் இதற்கு உதாரணமான கணிப்பை தருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில நாடுகளில் ஆட்சி அதிகாரம் பெற்ற சிலர் பெரும் கவலைக்குரிய சூழ்நிலையை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் கடுமையான உடல் நிலையால் பாதிக்கப்படலாம் அல்லது இராஜினாமா செய்ய நேரிடலாம் எனவும் இன்னும் சில நாடுகளின் அரசியல் எழுச்சி ஏற்படலாம் என்பதுடன், அதை தடுக்க இராணுவம் கொண்டு வரப்படலாம் எனவு; அவர் தனது கணிப்பில் கூறியுள்ளார்.

https://athavannews.com/2024/1384030

 

குசால் குமார் என்ற சாஸ்திரியாரின் பெயர் அசத்தலாக இருக்கின்றது. இந்தப் பெயரில் யாராவது யாழ் களத்திற்கு வந்து விடப் போகின்றார்கள்...........🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

குசால் குமார் என்ற சாஸ்திரியாரின் பெயர் அசத்தலாக இருக்கின்றது. இந்தப் பெயரில் யாராவது யாழ் களத்திற்கு வந்து விடப் போகின்றார்கள்...........🤣.

ஜல்சா குமார் என்ற பெயரில் ஒரு காணொளி விஜய் ரிவியில் வந்ததே!!
அதில் இன்ஸ்பையர் ஆகி குசால் குமார் வந்திருக்கலாம்!

 

Edited by ஏராளன்
இன்னொரு முழு காணொளி இணைக்கப்பட்டது

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்


சோதிடத்தை நம்புமாறு சொல்லவில்லை.

அனால், பெரிய அரசு / அமைப்புக்கு எதிரே பெரிய தாக்குதல், இன்னொரு பெரிய அரசினால் நடத்தப்படும்  கண்ணுக்கு  புலப்படாத சாத்திய கூறுகள் அதிகரித்து வருகிறது.  

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

உலக போருக்கான நாளை அறிவித்த பிரபல ஜோதிடர்

இந்தியாவின் பிரபல ஜோதிடராக அறியப்படுபவர் குஷால் குமார். இந்தியாவின் நாஸ்ட்ரடாமஸ் என அறியப்படுபவர். இதற்கு முன் ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரை கணித்தவர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போரையும் முன்கூட்டியே அறிவித்தவர் இந்த போர்களால் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, உணவு தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்டன. கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகம் மீண்டு வந்த சூழலில், இந்த போர்கள் ஆப்பிரிக்கா போன்ற வளர்ச்சி அடையாத நாடுகளை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டன.

இந்த நிலையில், 3-ம் உலக போர் தொடக்கம் பற்றிய தேதியை குஷால் அறிவித்து உள்ளார். அவருடைய கணிப்பின்படி, இந்த போர் இன்று அல்லது நாளை தொடங்கும் ஆகஸ்டு 4 அல்லது ஆகஸ்டு 5 ஆகிய இரு தேதிகளில் போர் தொடங்கும் என அவர் கூறினார். அவருடைய கணிப்பின்படி, அந்த நாள் இன்று தொடங்குகிறது ஆனால், அது மெய்யாவதற்கான சாத்தியங்கள் பின்னரே தெரிய வரும். இதற்கு முன்பும் அவர் பல முறை 3-ம் உலக போர் தொடங்கும் திகதியை அறிவித்துள்ளார் இதன்படி, நடப்பு ஆண்டின் ஜூன் 18-ந்திகதி போர் தொடங்கும் என கூறினார்.

ஆனால், அன்று எதுவும் நடக்கவில்லை. இதன்பின், புதிய திகதியை அறிவித்த அவர், ஜூலை 26 அல்லது ஜூலை 28 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு திகதியில் 3-ம் உலக போர் தொடங்கும் என கணிப்பு வெளியிட்டார். ஆனால், அதுவும் தவறாகி போனது இஸ்ரேல் மீது போரை தொடுக்க ஈரான் தலைவர் அலி காமினி உத்தரவிட்டு சில தினங்கள் ஆன நிலையில், பிரபல ஜோதிடரின் 3-ம் உலக போர் பற்றிய அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://thinakkural.lk/article/307342

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவனில் ஆரம்பித்தது இப்ப தினக்குரல் வரை வந்திருக்கின்றது............. தினக்குரலிற்கும் இது தேவையா.........🫣.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இது உலகப் போராக மாறாது! 

அல் அக்ஶா பள்ளிவாயல் எப்ப தகர்க்கப்படுகின்றதோ அன்றுதான் உலகப்போர் தொடங்கும்.

அதுவரை சோதிடர்களும், மோகன் சி லாசரஸ், பால் தினகரன் போன்ற தீர்க்கதரிகளும் புல்டா போண்டா கஞ்சா கப்ஸா கதைவிட்டுகொண்டே இருப்பார்கள்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.