Jump to content

"நட்பு என்பது நடிப்பு அல்ல"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"நட்பு என்பது நடிப்பு அல்ல"
 
 
"நட்பு என்பது நடிப்பு அல்ல
நடனம் ஆடும் மேடை அல்ல
நயமாக பேசும் பொய்யும் அல்ல
நலம் வாழ என்னும் பாசமே!"
 
"வடிவு என்பது உடல் அல்ல
வட்டம் இடும் கண்ணும் அல்ல
வளைந்து பொங்கும் மார்பும் அல்ல
வளையாமல் நிமிர்ந்து நிற்கும் உள்ளமே!"
 
"காதல் என்பது பொழுதுபோக்கு அல்ல
காது குளிர பேசுவது அல்ல
காமம் கொடுத்து மயக்குவது அல்ல
காலம் முழுவதும் உண்மையாக இருப்பதே!"
 
"அன்பு என்பது கடமை அல்ல
அக்கம் பக்கத்தாருக்கு நடிப்பது அல்ல
அற்பம் சொற்பம் தருவது அல்ல
அறிவுடன் உணர்ந்து பாசமாக நேசிப்பதே!"
 
"முகநூல் நட்பு தேடுவது அல்ல
முகர்ந்து பார்க்க அலைவது அல்ல
முகத்தை மாற்றி ஏமாற்றுவது அல்ல
முழுதாய் சொல்லி அறிவாய் நடப்பதே!"
 
"பொறுப்பு என்பது வீட்டில் இருப்பது அல்ல
பொது நண்பர்களுடன் சுற்றுவது அல்ல
பொய்கள் பேசி திரிவது அல்ல
பொருள் தேடி குடும்பத்தை காப்பதே!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
290732799_10221244899574815_5574166228355732030_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=xQ7q9SoK7x8Q7kNvgHkM0Eg&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDl6tWiUYbh3R0mUPFquHjxLOSJSk2SC85e04ngLcNj4g&oe=666402F3 290898179_10221244900214831_7683258841725289106_n.jpg?stp=dst-jpg_p480x480&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=eqCiZDovQOEQ7kNvgGzPCoq&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDepq81f19iVk5d3BwQ5h6ExyCbtyB-DW7Z9EUfymyy1w&oe=66640750 290663802_10221244898934799_2861531148812096290_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=rRBfVhsKfm0Q7kNvgFRJz1x&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYCelMOGJ1IF1yuCjirZUP_Bxp41RwZazGJUx8r57kWWaA&oe=6663E5E5
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, kandiah Thillaivinayagalingam said:
"வடிவு என்பது உடல் அல்ல
வட்டம் இடும் கண்ணும் அல்ல
வளைந்து பொங்கும் மார்பும் அல்ல
வளையாமல் நிமிர்ந்து நிற்கும் உள்ளமே!"
 
"காதல் என்பது பொழுதுபோக்கு அல்ல
காது குளிர பேசுவது அல்ல
காமம் கொடுத்து மயக்குவது அல்ல
காலம் முழுவதும் உண்மையாக இருப்பதே!"

290898179_10221244900214831_7683258841725289106_n.jpg?stp=dst-jpg_p480x480&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=eqCiZDovQOEQ7kNvgGzPCoq&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDepq81f19iVk5d3BwQ5h6ExyCbtyB-DW7Z9EUfymyy1w&oe=66640750

அத்தியடி தில்லையர் ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு இப்ப எங்கை வந்து நிக்கிறார் பாருங்கோ....😂

உங்கள் எழுத்துகளுக்கு வரவேற்புகள் ஆயிரமாயிரம்👍. தொடருங்கள். நேற்றைய தினம் தமிழ்சிறியருடன் தொலைபேசியில் உறவாடிய போது உங்கள் எழுத்து திறமையை பற்றி அதிகம் கதைத்தோம்.

@தமிழ் சிறி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

290898179_10221244900214831_7683258841725289106_n.jpg?stp=dst-jpg_p480x480&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=eqCiZDovQOEQ7kNvgGzPCoq&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDepq81f19iVk5d3BwQ5h6ExyCbtyB-DW7Z9EUfymyy1w&oe=66640750

அத்தியடி தில்லையர் ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு இப்ப எங்கை வந்து நிக்கிறார் பாருங்கோ....😂

உங்கள் எழுத்துகளுக்கு வரவேற்புகள் ஆயிரமாயிரம்👍. தொடருங்கள். நேற்றைய தினம் தமிழ்சிறியருடன் தொலைபேசியில் உறவாடிய போது உங்கள் எழுத்து திறமையை பற்றி அதிகம் கதைத்தோம்.

@தமிழ் சிறி

முதலில் அவர் எங்கு உள்ளார் என்று அறிய ஆவல் ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

முதலில் அவர் எங்கு உள்ளார் என்று அறிய ஆவல் ?

ஏன்?  
ஒவ்வொருவரின் இடம் வலம் பார்த்தா யாழ்களத்தில் உறவுகளை தேடி வைத்திருக்கின்றோம்? 😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"முதலில் அவர் எங்கு உள்ளார் என்று அறிய ஆவல் ?"


நான் என் பெயரை, யாழ் மத்திய கல்லூரியில் சாதாரண, மற்றும் உயர் வகுப்பு கற்கும் பொழுது 'அகதி' என்றே என் புத்தகத்தில் குறிப்பேன் 

அப்பொழுது இந்த 'அகதி' க்கு ஒரு பொருள் இருப்பது தெரியாது 

அப்பொழுது இந்த 'அகதி'

'அ' த்தியடி 'க' ந்தையா 'தி' ல்லைவிநாயகலிங்கம் மட்டுமே!

இன்று

யாதும் ஊரே, யாவரும் கேளிர், மூன்று பிள்ளைகளிடமும் மூன்று நாட்டுக்கு ஓடித் திரிகிறேன்!  

"ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே 
ஈனப்புத்தி தவிர்த்து தரமாக வாழ்! 
ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன் 
ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!!"
  
அன்று 
 
"குழந்தைப் பருவம் சுமாராய்ப் போச்சு    
வாலிபப் பருவம் முரடாய்ப் போச்சு 
படிப்பு கொஞ்சம் திமிராய்ப் போச்சு 
பழக்க வழக்கம் கரடாய்ப் போச்சு!"

பின் 

"நாற்பது வயது தொப்பை விழுகுது 
கருத்த முடி நரை விழுகுது 
ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது 
குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது
சோர்வான உடல் எதோ கேட்குது 
ஐம்பதில் ஏறியதில் மகிழ்ச்சி அடையுது!"

"ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது   
அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது   
வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது   
மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது  
தலைமுதல் கால் விரல்கள் வரை
படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!"

"கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது  
பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்]
பகலும் இரவும் சாப்பிட வைக்குது  
விரலை குத்தி சீனி பார்க்குது  
நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது 
கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது!"


"சிரித்த முகத்துடன் கட்டிப் பிடிக்குது
கோலம் மாறும் காலம் அதுவென 
அறுபத்தி ஐந்து ஓய்வைச் சொல்லுது 
பேரப் பிள்ளை தோளில் ஏறுது
எழுபது  தாண்டி எண்பது வருமோ?   
ஞானம் பிறந்து சவக்குழி தேடுமோ!"  

பொறுத்திருந்து பார்க்கிறேன் !!!

 

எல்லோருக்கும் எனது நன்றிகள் 
 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.