Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
08 JUN, 2024 | 03:59 PM
image
 
"பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை, அதிமுக மீண்டும் வலிமை பெறும்" என அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரான முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்ததாவது. 

''நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகளை விட, 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது ஒரு சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்றிருக்கிறது. இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றியாகும். 

ஒவ்வொரு தேர்தலிலும் சூழலுக்கு ஏற்றவாறு வெற்றி தோல்வி அமையும். ஒரு கட்சி தோல்வி அடைந்தால் மீண்டும் தோல்வி அடையும் என்பது இல்லை.      

ஒவ்வொரு முறையும் மக்களவைத் தேர்தல் என்றாலும், சட்டப்பேரவை பொதுத் தேர்தல் என்றாலும் வாக்கு வித்தியாசம் மாறி மாறி தான் வரும் . மக்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தான் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள்.

பாஜக வளர்ந்து விட்டதாக செய்திகள் வெளியாகிறது. தேர்தலில் பாஜக கூட்டணி அதிக வாக்குகள் பெற்றதாகவும் தவறான செய்திகள் தான் அதிகம் வருகிறது. புள்ளி விவர கணக்குப்படி 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலை விட 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது.

தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள சரிவுகள் விரைவில் சீரமைக்கப்படும்.

தமிழக மக்கள் விழிப்புடன் உள்ளனர். எந்த சமயத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து வாக்களிக்கிறார்கள். வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். 

அதிமுக - புரட்சித் தலைவர் காலத்திலும் சரி, புரட்சித்தலைவி ஜெயலலிதா காலத்திலும் சரி, தொடர்ந்து தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தது.‌ வெற்றி வரும் வரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். வெற்றி பெற்ற பின்னர் தமிழகத்தை மறந்து விடுகிறார்கள்.‌ இந்த நிலை மாற வேண்டும் என்பதால் தான் அதிமுக இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. ஆட்சி அதிகாரம் வேண்டும் என நினைத்திருந்தால்.. தேசிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்திருக்கும்.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பதை எல்லாம் பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது. அதிமுக மீண்டும் வலிமை பெறும். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே நான் கூறியதை மீண்டும் தெரிவிக்கிறேன்.

நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.

https://www.virakesari.lk/article/185605

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் என்ன சொல்ல வாறாரெண்டால்.....

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்தாலும் ஞானம் வந்தது மகிழ்ச்சியே.

தமிழ் நாட்டில் இனிமேல் பாஜக தீண்டதகாத கட்சியாக வர வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, goshan_che said:

காலம் கடந்தாலும் ஞானம் வந்தது மகிழ்ச்சியே.

தமிழ் நாட்டில் இனிமேல் பாஜக தீண்டதகாத கட்சியாக வர வேண்டும்.

பாஜக  அப்படி என்ன தீங்கு பிரத்தியேகமாக உங்களுக்கு செய்தது?

அல்லது ஈழத்தமிழர்களுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2024 at 01:03, குமாரசாமி said:

பாஜக  அப்படி என்ன தீங்கு பிரத்தியேகமாக உங்களுக்கு செய்தது?

அல்லது ஈழத்தமிழர்களுக்கு?

எனக்கு எந்த தீங்கும் செய்யவில்லை.

ஈழத்தமிழருக்கு ஆட்சியில் இருந்த போது எந்த நல்லதும் செய்யவில்லை. காங்கிரசின் அதே நடைமுறைகளை பின்பற்றியது.

இப்போதும் - இன்றைய இந்திய வெளிவிவகார அமைச்சர் 90-94 இலங்கயில் இந்திய உயர் ஸ்யானிகராலகய உயர் அதிகாரி -

பாஜக, காங்கிரஸ், ஜனதா அனைத்து இந்திய அரசுகளின் இலங்கை கொள்கையும் ஒன்றே.

நிற்க:

நான் பாஜக, நாதக வை எதிர்ப்பது முழுக்க முழுக்க தமிழ் நாட்டின், தமிழ் நாட்டு மக்களின் நலனை மட்டும் மனதில் வைத்துத்தான்.

நீங்களும் இப்படித்தா  என நீங்கள் பலதடவை கூறி இருந்தாலும், நீங்கள் மேலே கேட்ட கேள்வி - உங்களின் தமிழக அரசியல் நிலைப்பாடு ஈழத் தமிழர் நலனின் அடிப்படையிலானதே அன்றி, தமிழ்நாட்டு நலனின் பால்பட்டு அல்ல என்பதை காட்டு கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2024 at 01:27, goshan_che said:

காலம் கடந்தாலும் ஞானம் வந்தது மகிழ்ச்சியே.

தமிழ் நாட்டில் இனிமேல் பாஜக தீண்டதகாத கட்சியாக வர வேண்டும்.

சாதி மதம் மற்றும் பிரதேசவாதம் சார்ந்த கட்சிகள் எப்போதும் ஆபத்தானவையே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

நீங்களும் இப்படித்தா  என நீங்கள் பலதடவை கூறி இருந்தாலும், நீங்கள் மேலே கேட்ட கேள்வி - உங்களின் தமிழக அரசியல் நிலைப்பாடு ஈழத் தமிழர் நலனின் அடிப்படையிலானதே அன்றி, தமிழ்நாட்டு நலனின் பால்பட்டு அல்ல என்பதை காட்டு கிறது.

தமிழ்நாட்டை ஆளும் இன்றைய அன்றைய கட்சிகள் யாவும் மத சார்பும் சாதிவாதங்களும் நிறைந்தவையே. இன்றுவரை சாதி வேறுபாடுகளும் ஒழிக்கப்படவில்லை. மத சம்பிரதாயங்களும்,மதவாதங்களும் ஒழிக்கப்படவில்லை. இன்றைய கட்சிகளிலும் சாதிவாரியாகத்தானே தேர்தலில் நிறுத்தப்படுகின்றார்கள்.
 

 

2 hours ago, விசுகு said:

சாதி மதம் மற்றும் பிரதேசவாதம் சார்ந்த கட்சிகள் எப்போதும் ஆபத்தானவையே. 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டை ஆளும் இன்றைய அன்றைய கட்சிகள் யாவும் மத சார்பும் சாதிவாதங்களும் நிறைந்தவையே. இன்றுவரை சாதி வேறுபாடுகளும் ஒழிக்கப்படவில்லை. மத சம்பிரதாயங்களும்,மதவாதங்களும் ஒழிக்கப்படவில்லை. இன்றைய கட்சிகளிலும் சாதிவாரியாகத்தானே தேர்தலில் நிறுத்தப்படுகின்றார்கள்.

அவற்றை அழிப்பது அவ்வளவு எளிதல்ல என்பது தெரியும்.  ஆனால் அதை வளராமல் தடுக்க முடியும் தடுக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, விசுகு said:

அவற்றை அழிப்பது அவ்வளவு எளிதல்ல என்பது தெரியும்.  ஆனால் அதை வளராமல் தடுக்க முடியும் தடுக்கவேண்டும். 

வளர தேவையில்லை விசுகர். அதை கடைப்பிடித்தாலே போதுமானது. ஏன் அதிக தூரம் போவான் எமது அடிப்படலை எமது ஊர்களுக்குள் என்ன நடக்கின்றது? 
புலம்பெயர் தேசத்திலும் சாதி பார்க்கப்படுகின்றது என்றால் அது துளிர் விட்டு வளர்கின்றது என்றுதானே அர்த்தம்....😂
 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

சாதி மதம் மற்றும் பிரதேசவாதம் சார்ந்த கட்சிகள் எப்போதும் ஆபத்தானவையே. 

ஏன் டி எம் கே இல் மதவாதம் இல்லையா ? இந்து எதிர்ப்பு ... 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2024 at 01:34, ஏராளன் said:
08 JUN, 2024 | 03:59 PM
image
 
"பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை, அதிமுக மீண்டும் வலிமை பெறும்" என அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரான முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்ததாவது. 

''நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகளை விட, 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது ஒரு சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்றிருக்கிறது. இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றியாகும். 

ஒவ்வொரு தேர்தலிலும் சூழலுக்கு ஏற்றவாறு வெற்றி தோல்வி அமையும். ஒரு கட்சி தோல்வி அடைந்தால் மீண்டும் தோல்வி அடையும் என்பது இல்லை.      

ஒவ்வொரு முறையும் மக்களவைத் தேர்தல் என்றாலும், சட்டப்பேரவை பொதுத் தேர்தல் என்றாலும் வாக்கு வித்தியாசம் மாறி மாறி தான் வரும் . மக்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தான் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள்.

பாஜக வளர்ந்து விட்டதாக செய்திகள் வெளியாகிறது. தேர்தலில் பாஜக கூட்டணி அதிக வாக்குகள் பெற்றதாகவும் தவறான செய்திகள் தான் அதிகம் வருகிறது. புள்ளி விவர கணக்குப்படி 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலை விட 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது.

தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள சரிவுகள் விரைவில் சீரமைக்கப்படும்.

தமிழக மக்கள் விழிப்புடன் உள்ளனர். எந்த சமயத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து வாக்களிக்கிறார்கள். வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். 

அதிமுக - புரட்சித் தலைவர் காலத்திலும் சரி, புரட்சித்தலைவி ஜெயலலிதா காலத்திலும் சரி, தொடர்ந்து தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தது.‌ வெற்றி வரும் வரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். வெற்றி பெற்ற பின்னர் தமிழகத்தை மறந்து விடுகிறார்கள்.‌ இந்த நிலை மாற வேண்டும் என்பதால் தான் அதிமுக இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. ஆட்சி அதிகாரம் வேண்டும் என நினைத்திருந்தால்.. தேசிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்திருக்கும்.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பதை எல்லாம் பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது. அதிமுக மீண்டும் வலிமை பெறும். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே நான் கூறியதை மீண்டும் தெரிவிக்கிறேன்.

நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.

https://www.virakesari.lk/article/185605

உன் கதை முடியும் நேரமிது .....இந்த பாடல் தான் இப்ப பொருத்தம்....2026 இல் தளபதி வருகின்றார் ... இனி நீங்கள் வயசுக்கு வந்தால் என்ன வராட்டி என்ன ....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.