Jump to content

"எல்லாமாய் அவளே"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"எல்லாமாய் அவளே"
 
 
"எல்லாமாய் அவளே இறைவியும் அவளே!
சொல்ல முடியா அழகில் வந்து
வெல்ல முடியா நெஞ்சைக் கவர்ந்து
நல்லாய் வாழ தன்னைத் தந்தவளே!"
 
"கள்ளம் இல்லா நெஞ்சம் கொண்டவளே!
உள்ளம் தேடும் அன்பு தந்து
அள்ள அள்ள இன்பம் சொரிந்து
உள்ளது எல்லாம் எமக்கு கொடுத்தவளே!"
 
"ஆழ் கடலில் மலர்ந்த முத்தே!
வாழ்வு தர உன்னையே கொடுத்து
தாழ்வு மனப்பான்மை எம்மிடம் அகற்றி
சூழ்ச்சி சூது அறியா இல்லத்தரிசியே!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
449160696_10225422559453701_476038519364846119_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=Iv3C5E28_okQ7kNvgFamVwT&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYBlxU-8iiktBDlyPI0sd4UPIrv2uzVoHMiugLrb521DNQ&oe=66819FA0 449280054_10225422558533678_2943382871154336857_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=sHqf7D4ObCwQ7kNvgHGhQLE&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDNTxzwuIvPjaHhUTR8enc--8r_AI4MLmvQ1cK6WhDVmQ&oe=66816F8D 449159059_10225422559533703_4039492553933329610_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=Aoq1qhdwKXgQ7kNvgEkfW6n&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYASrnJn9tIzGBxZMqmhQzfHGfZYzwTMIDjRcFx1XlXN-Q&oe=66817437
 
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பயம்.... ஆயுதத்தை பார்த்து பயந்தனர் .... அதுதான் அவர்கள் ஜனநாயகம் ஜனநாயகம் என கூக்குரல் எழுப்பி கொண்டு திரிஞ்சவையள் .....ஜனநாயகம் என்றால் மக்களுக்கும் பயப்பட தேவையில்லை ஆயுத்தத்திற்கும் பயப்பட தேவையில்லை தாங்கள் நினைத்ததை  செய்யலாம்
    • எதிரிகள் ஒற்றுமையானதின் உள்நோக்கம்...இரு எதிர்களும் முதலாளிகள் தங்கள் சொத்துக்களை பாதுகாக்க .. இந்த ஜனாதிபதி தொடர்ந்து ஆட்சி செய்து சோசலிச சித்தாந்தத்தை சிறிலங்காவில் நிலைநாட்ட நினைத்தால் இந்த எதிரிகளுடன் சேர்ந்து அமேரிக்கா அண்ணனும் விட மாட்டார்... இவருடயை ஆட்சிக்கு எதிராக திட்டமிட்ட முறையில் போராட வேறு எவரும் சிறிலங்காவில் தற்பொழுது இல்லை இவரை அமெரிக்கா இராணுவம் கொலம்பியா சென்று கொலம்பிய இராணுவத்தின் துணையுடன் கொலம்பியாவில் வைத்து படுகொலை செய்து அங்கேயே ஒர் மைதானத்தில் புதைத்து விட்டார்கள் ....(பிராந்தியத்தில் சோசலிசம் மலர்க்கூடாது என்பதற்காக) இந்தியா இராணுவம் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இவரின் தலைவரையும் ...எமது போராட்ட தலைவரையும் போராட்டத்தையும் அழித்தார்கள்...(ஆசியா பிரராந்தியத்திலும் இது நடக்ககூடாது என இந்தியா முழு மூச்சாக செயல் படும் ...அமெரிக்கா கை கொடுக்கும்)
    • ஹமாஸோ ஹிஸ்புள்ளாவோ உருவாக்கப்பட்டது பலஸ்த்தீன மக்களின் விடுதலை ஒன்றை நோக்கமாகக் கொண்டே. இஸ்ரேலை முற்றாக அழிப்பதென்பது அவர்களின் இன்னொரு நோக்கமாக இருந்தாலும் பலஸ்த்தீன மக்களின் விடுதலையும், சுமூக வாழ்வும் இவ் அமைப்புக்களின் முக்கிய நோக்கமாகும். இப்போது ஹிஸ்புள்ளாவின் தலைவரையும், ஹமாஸின் தலைவரையும் இஸ்ரேலும் கொன்றிருக்கிறது. இஸ்ரேலைப் பொறுத்தவரையில் தனது முக்கிய எதிரிகளில் இருவரை அது கொன்றிருப்பதாக ஆனந்தம் அடையலாம். ஆனால், பலஸ்த்தீன மக்களுக்கு? தென் லெபனானை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்து ஹிஸ்புள்ளா காத்துக்கொள்ளும் என்று நம்பியிருந்த லெபனானிய மக்களுக்கு? உலகெங்கும் பரந்து வாழும் பலஸ்த்தீன, லெபனான் புலம்பெயர் மக்களுக்கு? இது ஒரு பாரிய இழப்புத்தான். தமது பெருத்த நம்பிக்கைகளில் பல ஒரே நேரத்தில் சாய்க்கப்பட்டது தாங்கொணாத் துயர்தான். இவர்களின் இழப்போடு எமது தலைவரும் போராளிகளும் நினைவில் வருகிறார்கள். ஏனென்றால், பலஸ்த்தீனர்களும் எம்மைப்போன்றே ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு நிற்கும் ஒரு இனம்தான். 
    • குத்துவிளக்கின்ர மெல்லிய வெளிச்சம் தரும் அருமை தெரியாத பாவியா நீங்கள்?  கந்தையருக்கு எப்ப பாத்தாலும் அந்த நினைப்புதான்  😂  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.