Jump to content

குறுங்கதை 3 -- கிழக்கிலும் மேற்கிலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கிழக்கிலும் மேற்கிலும்
-----------------------------------
கடந்த சில நாட்களாக அந்த மனிதரை அங்கு கண்டு கொண்டிருக்கின்றேன். இருவரும் ஒரு புன்முறுவலுடன் விலகிப் போய்க் கொண்டிருந்தோம். அவர் எந்த நாட்டவர் என்று சொல்லத் தெரியவில்லை. அவர் ஒரு ஆபிரிக்க அமெரிக்கராக இருப்பதற்கே சாத்தியம் அதிகம் போன்றது அவரது தோற்றம். காலையில் ஓட வருபவர்கள் மிகவும் குறைந்த குளிர்காலம் அது. இருவருக்கும் அந்தக் குளிரில் வெறும் டீ சேட்டும் காற்சட்டையுமாக நிற்கும் மற்றவர் கொஞ்சம் விநோதமானவராகத் தெரிந்திருக்கும்.
 
'இந்தியரா......' என்று அவர் தான் ஆரம்பித்தார் ஒரு நாள். அந்த ஆங்கில உச்சரிப்பு அமெரிக்க உச்சரிப்பு இல்லை. 'இல்லை, ஶ்ரீ லங்கா....' என்று சொல்லி விட்டு, 'நீங்கள் .........' என்று இழுத்தேன். 'ஓ....... சிலோன்....' என்று என் பதிலைத் திருத்தி விட்டு, அப்படியே தலையை மேலும் கீழும் அசைத்து விட்டு அருகில் இருந்த பெஞ்சில் இலகுவாக அமர்ந்தார். இந்த லாவகத்தை நான் எங்கோ பார்த்திருக்கின்றேன், ஆனால் எங்கேயென்று சட்டென்று ஞாபகத்திற்கு வரவில்லை.
 
'கரிபியன்........' என்றார் அவர். அதே தான், அவர்களை நான் நிறையவே பார்த்திருக்கின்றேன். சிறுவனாக ஊரில் இருந்த காலங்களில் மேற்கிந்திய அணி தான் என் அணி, விவ் ரிச்சர்ட்ஸ் தான் என் வீரர். அவர் வந்து நிற்கும் தோரணையே 'இந்த ஊரில் எங்களுடன் போட்டி போட யாராவது இருக்கிறீர்களா............' என்று கேட்பது போல இருக்கும். அந்த நாட்களில் அந்த அணியின் மீது ஒரு கிறக்கத்தில் கிடந்தோம் நாங்கள் பலர். அதே தொனி தான் இவரிலும் தெரிந்தது.
 
பின்னர் தினமும் கதைக்கத் தொடங்கினோம். கிரிக்கெட்டில் ஆரம்பித்த கதைகள் பின்னர் அப்படியே தனிப்பட்ட விடயங்களுக்கு தாவியது. என்னிடம் சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை. மிகச் சாதாரணமான ஒரு பாதையில், சாதாரணமாக ஒரு நடை நடந்தது போன்றது என் அனுபவங்கள். அவரோ அதற்கு எதிர். அங்கு ஒரு காவலராக ஒரு காட்டில் வேலை செய்திருக்கின்றார். காட்டை கொள்ளை அடிக்க வருபவர்களுடன் ஓயாது போராடுவது தான் அவரது வாழ்க்கையாக இருந்திருக்கின்றது. காட்டின் ஊடாக ஓடும் ஆற்றில் முதலைகள் போன்று வேடமிட்டுக் கூட 'கரிபியன் வீரப்பன்கள்' வந்துள்ளார்களாம். நிஜ முதலைகள் மனித முதலைகளை தண்ணீரில் அமுக்கிய கதைகளையும் சொன்னார்.
 
'நேற்று சிலோனைப் பற்றி ஒரு புத்தகம் வாசித்தேன்.....' என்றபடி ஆரம்பித்தார் ஒரு காலையில். உங்கள் இருவர் மீதும் தப்பில்லை என்றார். யார் அந்த இருவர் என்று நான் கண்களைச் சுருக்கினேன். சிங்களீஸ் அன்ட் டமில்ஸ் என்றார். முழுத் தப்புமே பிரிட்டிஷ் அரசின் மேல் தான் என்றார். அவர்கள் எல்லா இடத்திலும், எல்லா நாடுகளிலும் இதையே செய்தனர் என்றார். சிறுபான்மையை உயர்த்தி, பெரும்பான்மையை தாழ்த்தி, பின்னர் அப்படியே ஒரு நாள் இரவோடிரவாக விட்டுவிட்டு ஓடி விட்டார்கள் என்று. 
 
வெஸ்ட் இண்டீஸையும் அவர்கள் தானே ஆண்டனர், அங்கேயும் இப்படியா செய்தனர் என்றேன் நான்.
 
நாங்கள் வெஸ்ட் இண்டீஸ், நீங்கள் ஈஸ்ட் இண்டீஸ், இதன் அர்த்தம் என்னவென்று உனக்கு தெரியுமா என்று கேட்டார். இதுக்கு என்ன பெரிய அர்த்தம் தேட வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் உலகின் மேற்கில் இருக்கிறீர்கள், நாங்கள் உலகின் கிழக்கில் இருக்கின்றோம், அது தானே என்று கேட்டேன். 
 
கூர்ந்து பார்த்து விட்டுச் சொன்னார், 'இதன் அர்த்தம் நீங்கள் கிழக்கில் இருக்கும் அடிமைகள், நாங்கள் மேற்கில் இருக்கும் அடிமைகள்.'
 
அப்படியே இன்னும் ஒன்றும் சொன்னார்: இனிமேல் வெஸ்ட் இண்டீஸ் என்று சொல்லாதே, கரிபியன் என்றே சொல்லு என்று.
  • Like 4
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

சிறுபான்மையை உயர்த்தி, பெரும்பான்மையை தாழ்த்தி, பின்னர் அப்படியே ஒரு நாள் இரவோடிரவாக விட்டுவிட்டு ஓடி விட்டார்கள்

எல்லாம் அவன் செயல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:
அப்படியே இன்னும் ஒன்றும் சொன்னார்: இனிமேல் வெஸ்ட் இண்டீஸ் என்று சொல்லாதே, கரிபியன் என்றே சொல்லு என்று.

இந்த மனிதரின் கருத்து அந்த மண்ணின் மைந்தனின் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தத்தமது தேசியம் பற்றி விதவிதமான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன..........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kavi arunasalam said:

எல்லாம் அவன் செயல்

இந்த தடவை இஸ்ரேல் - பலஸ்தீன சண்டை ஆரம்பித்த போது, 'அருஞ்சொல்' இதழில் ஒரு கட்டுரைத் தொடர் வந்திருந்தது. ஐந்து பாகங்கள், சிறிது நீண்ட கட்டுரைகள். பல ஒற்றுமைகள் இருக்கின்றன, ஆனால் நாங்கள் பொதுவாக இதுவரை நினைத்திருக்கும் கோணத்தில அல்ல. இது இன்னொரு பார்வை.

 

https://www.arunchol.com/karthik-velu-on-israel-history

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

இந்த மனிதரின் கருத்து அந்த மண்ணின் மைந்தனின் கருத்து.

 

1 hour ago, suvy said:

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தத்தமது தேசியம் பற்றி விதவிதமான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன..........!  👍

அதுவே தான்......👍.

இன்னமும் சில தமிழ்நாட்டவர்கள் எங்களை 'சிலோன்காரர்கள்' என்று சொல்கின்றனர். அந்தச் சொல் அவ்வளவு ஒரு நல்ல உணர்வைக் கொடுப்பதில்லை. இலங்கையர்கள் என்று சொன்னால் நல்லாக இருக்குமே என்று தோன்றும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/6/2024 at 15:42, ரசோதரன் said:

சிறுவனாக ஊரில் இருந்த காலங்களில் மேற்கிந்திய அணி தான் என் அணி, விவ் ரிச்சர்ட்ஸ் தான் என் வீரர். அவர் வந்து நிற்கும் தோரணையே 'இந்த ஊரில் எங்களுடன் போட்டி போட யாராவது இருக்கிறீர்களா............' என்று கேட்பது போல இருக்கும்.

ஆகா கிரிக்கட்டைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னவர்

இப்போ சிறுவயதிலேயே விவி ரிச்சர்ட் தான் என்கிறாரே.

அப்போ இவரும் ஒரு கிரிக்கட் ஜாம்பவான் தான்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஆகா கிரிக்கட்டைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னவர்

இப்போ சிறுவயதிலேயே விவி ரிச்சர்ட் தான் என்கிறாரே.

அப்போ இவரும் ஒரு கிரிக்கட் ஜாம்பவான் தான்.

🤣.......

சின்ன வயதில் நிறையவே பார்த்திருக்கின்றேன், அண்ணை. ஆனால் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கிரிக்கெட் பார்த்ததும் இல்லை, எந்த வீரர்களையும் தெரியாது. கிரிக்கெட்டில் ஒரு கோமா நிலை மாதிரி...... அமெரிக்கன் விளையாட்டுகள் பரிச்சயமாகி, நாளும் பொழுதும் அதனுடனேயே போய்க் கொண்டிருக்கின்றன. இப்பொழுது தான் முதன் முதலாக T20 விளையாட்டைப் பார்த்தேன்........

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

இப்பொழுது தான் முதன் முதலாக T20 விளையாட்டைப் பார்த்தேன்........

அப்பிடியே அடுத்தடுத்த போட்டிகளையும் பாருங்கள்.

நானும் கிரிக்கட்டைப் பார்க்கத் தொடங்கியது யாழில் போட்டிகள் வந்த பின்பு தான்.

இப்ப கூட தொலைக்காட்சியில் பார்ப்பதற்கான வசதிகள் இல்லை.

கணனியில் களவுச்சனல்களை தேடிப் பிடித்து பார்ப்பேன்.அதுவும் சிலவேளைகளில் மக்கர் பண்ணும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்பிடியே அடுத்தடுத்த போட்டிகளையும் பாருங்கள்.

நானும் கிரிக்கட்டைப் பார்க்கத் தொடங்கியது யாழில் போட்டிகள் வந்த பின்பு தான்.

இப்ப கூட தொலைக்காட்சியில் பார்ப்பதற்கான வசதிகள் இல்லை.

கணனியில் களவுச்சனல்களை தேடிப் பிடித்து பார்ப்பேன்.அதுவும் சிலவேளைகளில் மக்கர் பண்ணும்.

👍........

தொடர்ந்து பார்ப்பதாகவே உள்ளேன், அண்ணை. 

@வீரப் பையன்26 சாருடன் மல்லுக்கு நிற்க வேண்டுமே..........🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

அப்பிடியே அடுத்தடுத்த போட்டிகளையும் பாருங்கள்.

நானும் கிரிக்கட்டைப் பார்க்கத் தொடங்கியது யாழில் போட்டிகள் வந்த பின்பு தான்.

இப்ப கூட தொலைக்காட்சியில் பார்ப்பதற்கான வசதிகள் இல்லை.

கணனியில் களவுச்சனல்களை தேடிப் பிடித்து பார்ப்பேன்.அதுவும் சிலவேளைகளில் மக்கர் பண்ணும்.

கைபேசியில் இருந்து தொலைக் காட்சிக்கு வுலூரு மூல‌ம் பெரிசா பார்க்க‌லாம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

இப்ப‌ சிறில‌ங்க‌ன் LPL  ந‌ட‌க்குது

நேற்று ஒரு மைச் பார்த்தேன் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை ஏல‌த்தில் எடுத்து ந‌ட‌த்தின‌ம்

ஆனால் அது ஜ‌பிஎல் போல் இல்லை அண்ணா.....................ஜ‌பிஎல்லுக்கு எப்ப‌வும் வ‌ர‌வேற்ப்பு அதிக‌ம் கிரிக்கேட் ர‌சிக‌ர்க‌ளிட‌ம்......................................

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.