“கூட்டணி என்றால் அடிமைகள் இல்லை” - ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக திமுகவிடம் கடுமை காட்டுகிறதா விடுதலைச் சிறுத்தைகள்?
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
நாட்டின் 9ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி சற்றுமுன்னர் வெளியாகியது. நாட்டின் 9ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி சற்றுமுன்னர் வெளியாகியது மேலதிக தகவலுக்கு எம்முடன் இணைந்திருங்கள்…. https://athavannews.com/2024/1393623 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
பொலிஸ் மா அதிபரின் நியமனத்தில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி ரணில்! பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பான விடயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பான விடயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இன்றையதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பாக ஜனாதிபதிக்கு சட்ட ஆலோசனை கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்தல் காலப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கவேண்டிய தேவை ஏற்படும் எனவும் சட்டவல்லுநர்கள் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளனர். மேலும் இந்த நியமனத்தை முன்னிலைப்படுத்தி மனுக்கள் தாக்கல் செய்ய முடியும் என்றும் சட்ட வல்லுணர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரியப்படுத்தியுள்ளர். எனவே பொலிஸ்மா அதிபர் விடயத்தில் தலையீடு செய்வதை தான் தவிர்த்து கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்துள்ளார். https://athavannews.com/2024/1393636 -
By தமிழ் சிறி · Posted
பொலிஸ் மா அதிபா் விவகாரம் – நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அவசியம் – பிரதமா் தினேஸ்! தற்போது பதவியிலிருக்கும் பொலிஸ் மா அதிபரை பதவியிலிருந்து விலக்க, நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டுவந்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளாா். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவா் இதனைத் தொிவித்தாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியவர், பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தார். இந்தநிலையில், கடந்த 25 ஆம் திகதி உயர்நீதிமன்றமானது, பொலிஸ் மா அதிபருக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்த அமர்வு நவம்பர் 11 ஆம் திகதி நடைபெறும் என்றும் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நவம்பர் மாதம் என்பது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து ஒருமாதம் கடந்து இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். புதிய ஜனாதிபதி பதவியேற்கும் காலத்தில்தான் இந்த வழக்கு விசாரணை அடுத்ததாக இடம்பெறும். பொலிஸ் மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டிய இந்தத் தருணத்தில் தான் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றுக்குள்ளும் தற்போது குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் 4 ஆவது உறுப்புரையில் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக நீதியான தேர்தலை நடத்த வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், உயர்நீதிமன்றமானது இந்தத் தடையை விதிக்கும் முன்னர், தேர்தல் ஆணைக்குழுவின் கருத்தைக் கேட்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அரசமைப்பின் 44 (அ) 2 ஆம் உறுப்புறுமையின் கீழ், 14 நாட்களுக்குள் பொலிஸ் மா அதிபரை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவானது, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியை அறிவித்துள்ளது. இந்த நிலையில், அரசமைப்புச் சபையின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். இதற்காக தற்போது பதவியிலிருக்கும் பொலிஸ் மா அதிபரை பதவியிலிருந்து விலக்க, நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டுவந்து பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். இப்போதும் பொலிஸ் மா அதிபராக இடைக்கால தடை விதிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபரே இருக்கிறார் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளாா். https://athavannews.com/2024/1393654 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
சுயாதீன (சுயேட்சை) வேட்பாளராகக் களமிறங்கும் ரணில்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொனால்ட் சி பெரேராவினால் குறித்த தொகை வைப்பு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதன்படி, ஜனாதிபதி சார்பாக அவரது சட்டத்தரணி தேர்தல் ஆணைக்குழுவில் சுயாதீன வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1393644
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
-
- 1 reply
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts