Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு ராத்திரி
-------------------
பகலுக்கும் இரவிற்கும் இடையில் இருக்கும் இடைவெளி நடுச்சாமத்தில் வெளியே போகும் போது தெரியும். இரவின் இருட்டில் உயிர்களுக்கு சுதந்திரம் அதிகமாகக் கிடைக்கும். இருட்டு கட்டுப்பாடுகளை அவிழ்த்து தளர்த்தி விடுகின்றது. 
 
ஆறு போல வாகனங்கள் நில்லாமல் ஓடிக் கொண்டிருந்த பெரும் தெருக்கள் நிலத்தில் கீறப்பட்ட கறுப்புக் கோடுகள் போல அரவமற்ற இரவில் நீண்டு தெரியும். சிறு தெருக்கள் அசைவில்லாமல் நெளிந்து படுத்திருக்கும் பாம்புகள் போல அப்படியே கிடக்கும்.  வீடுகள், வீடுகளுக்குள் மனிதர்கள், நகரங்கள் என்று எல்லாமே எல்லாம் மறந்த ஒரு தூக்கத்தில் கிடக்கும்.
 
'மோனத் திருக்குதடீ இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே........' என்ற வரிகளை இப்படியான ஒரு சாமத்தில் வெளியே வந்து பார்த்து விட்டுத் தான் அவர் எழுதினாரோ.  
 
தூங்கா நகரங்கள் என்றும் சில இருக்கின்றன தான். மதுரையைச் சொல்வார்கள். இரவு இரண்டாம் காட்சி படம் பார்த்து விட்டு, நடுச்சாமத்தில், அங்கே ரோட்டுக் கடையில் ஆவி பறக்கும் மல்லிகைப் பூ இட்லியும், மட்டன் குழம்பும் சாப்பிடலாம், சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அப்பவும் அந்த நேரத்திலும் கூட்டம் தெருக்கடைகளில் அள்ளும். லாஸ் ஏஞ்சலீஸ் நகரும் அப்படியான ஒன்று தான். 24 மணி நேரங்களும் திறந்திருக்கும் கடைகள், எப்போதும் நடமாடித் திரியும் மனிதர்கள், ஓயாத தெருக்கள் அத்துடன் அங்கங்கே சில சூட்டுச் சம்பவங்கள் என்று இதுவும் ஒரு தூங்கா நகரம் தான்.
 
சமீபத்தில் ஊர் போயிருந்த போது, ஒரு நாள் வவுனியாவில் இருந்து யாழ் போகும் புகையிரதம் அன்று கொஞ்சம் பிந்திப் போய்ச் சேர்ந்தது. இரவு ஏழு மணி ஆகிவிட்டது. யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து பஸ் தரிப்பிடம் போனால், கடைசி 751 பஸ் ஆறே முக்காலுக்கே போய் விட்டது என்றார்கள். இனி அன்றைக்கு பஸ் இல்லை. அங்கே நின்ற கடைசி 750 பஸ்ஸில் ஏறி புறாப்பொறுக்கியில் இறங்கினால், அங்கே ஒரே ஒரு ஆட்டோ நின்றது. அதில் ஏறி வீடு போனோம். எட்டு மணிக்கெல்லாம் அடங்கி விடுகின்ற ஒரு பிரதேசம் ஆகி விட்டது பிறந்து வளர்ந்த இடம். முன்னர் இப்படி இல்லை. ஊரில் இரண்டு தியேட்டர்கள் இருந்தன. அங்கும் இரண்டு இரவுக் காட்சிகள் இருந்தன. யாழ் - பருத்தித்துறை பஸ் இரவிலும் ஓடிக் கொண்டிருந்தது.
 
சிவராத்திரிக்கு பல நாட்கள் முன்னரேயே வீச்சு ஊஞ்சல்கள் கட்டி ஆட ஆரம்பித்து விடுவோம். சில ஊஞ்சல்கள் பெரியவை. பல பேர்கள் ஒன்றாக இருந்து ஆடலாம். பாட்டு சுத்தமாக வராதவர்களும் ஒரு கூச்சநாச்சம் இல்லாமல் பாடுவதற்கு இந்த வீச்சு ஊஞ்சல்கள் ஒரு நல்ல இடமும் கூட. ஊஞ்சல் கயிறு அறுந்து, பலகையுடன் சேர்ந்து பாடிக் கொண்டிருந்த மனிதர்களும் பறந்து போய் விழுந்த நிகழ்வுகளும் உண்டு. ஊரில் முறிவு நோவு பார்ப்பதற்கென்றே இரண்டு பரியாரிகள் அந்த நாட்களில் இருந்தார்கள்.
 
'மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு.......' என்ற பாடல் வழமையான ஊஞ்சல் பாடல்களை எல்லாம் தூக்கி வீசி விட்டு முன்னுக்கு வந்தது ஒரு வருடம்.
 
இந்தப் பயிற்சி, அடுக்குத் தடுக்கு எல்லாம் சிவராத்திரி அன்று முழு இரவும் முழித்திருப்பதற்காகவே. ஆனாலும் ஆறு காலப் பூசைகளுக்கும் சிவன் கோவில் போகும் சிலர் தவிர பெரும்பாலானோர் முழு இரவும் முழித்து இருப்பதில்லை. ஆனால் நாங்கள் சிலர் காத்துக் கொண்டு இருப்போம்.
 
அதிகாலையில் கோவிலில் இருந்து வந்து கொண்டிருக்கும் அல்லது கோவிலுக்கு போய்க் கொண்டிருக்கும் சிலர், அங்கங்கே நிற்கும் எங்களைப் பார்த்து 'என்னடா, நீங்கள் இரவிராக முழித்து இருந்தனீங்களோ.......... உங்களுக்கு சிவபெருமானின் அருள் கிடைக்குமடா.........' என்று சொல்லிக் கொண்டே போவார்கள்.
 
பொழுது விடிந்தவுடன், சில வீடுகள் அல்லோலகல்லோலப்படும். சில வீடுகளின் படலைகளைக் காணவில்லை என்று தேடுவார்கள். ஒருவரின் வீட்டின் முன் நின்ற அவரது கார் அடுத்த தெருவில் போய் நின்றது. 'இங்கு சாஸ்திரம் பார்க்கப்படும்' என்று எழுதப்பட்டு ஒரு வீட்டின் முன் இருந்த விளம்பரம் நடு வயலில் நின்று கொண்டிருந்தது. இப்படி பல இடமாற்றங்கள்.
 
வருடா வருடம் ஒரு ராத்திரியில் மட்டும் இப்படி நடந்து கொண்டேயிருந்தது.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரசோதரன் said:

தூங்கா நகரங்கள் என்றும் சில இருக்கின்றன தான். மதுரையைச் சொல்வார்கள்.

நியூயோர்க்கும் ஒரு தூங்காநகரம் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

நியூயோர்க்கும் ஒரு தூங்காநகரம் தான்.

நியூயோர்க் தூங்காத நகரம் என இலங்கையிலேயே  படித்துள்ளேன். அதே போல் நிமிடத்திற்கு நிமிடம் கொலைகளும் நடந்து கொண்டிருக்குமாமே? உண்மையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நியூயோர்க்கும் ஒரு தூங்காநகரம் தான்.

👍.....

நியூயோர்க்கும் தூங்குவதில்லை என்று தான் சொல்வார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

சிவராத்திரிக்கு பல நாட்கள் முன்னரேயே வீச்சு ஊஞ்சல்கள் கட்டி ஆட ஆரம்பித்து விடுவோம். சில ஊஞ்சல்கள் பெரியவை. பல பேர்கள் ஒன்றாக இருந்து ஆடலாம். பாட்டு சுத்தமாக வராதவர்களும் ஒரு கூச்சநாச்சம் இல்லாமல் பாடுவதற்கு இந்த வீச்சு ஊஞ்சல்கள் ஒரு நல்ல இடமும் கூட. ஊஞ்சல் கயிறு அறுந்து, பலகையுடன் சேர்ந்து பாடிக் கொண்டிருந்த மனிதர்களும் பறந்து போய் விழுந்த நிகழ்வுகளும் உண்டு. 

இந்த வீச்சு ஊஞ்சலை நம்ம ஊரில் அன்ன ஊஞ்சல் என்று சொல்லிறவை...இந்த ஊஞ்சலை இரண்டுபக்கமும் கயிற்றைபிடித்தபடி நின்று உதையிறவை தான் கீரோக்கள்.. சறத்தையும் அவிட்டுவிட்டிட்டு .காற்று அதை  அமுக்க அமுக்க உதைவினம்..நடுவிலை இருக்கிறவை பயத்திலையே பாட்டுப் பாடத்துவங்கிவிடுவினம்..ஆண் .. பெண்  வேறுபாடுகிடையாது..விகல்பமும் கிடையாது...நினைத்தாலே இனிக்கும்

ஒருவர் மட்டும் ஆடும் ஊஞ்சலை பிள்ளை ஊஞ்சல் என்று அழைப்பினம்...இருப்பவரை இருத்திவிடூ குருவி நுழைஞ்சு  ஊஞ்சலை ஆட்டுவதில் அலாதி இன்பம்.. 

ரசோதரன் உங்கள்  குரு ங்கதைகள் மூலம் ஊர்நினைவை கிளறுகின்றீஈறீர்கள்... இதன்மூலம் கிடைக்கும் இன்பத்தின்மூலம் என் ஆசைகளை அசைபோடவேண்டியதுதான்... தொடருங்கள் .. அவாவுடன் உள்ளேன்..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அதே போல் நிமிடத்திற்கு நிமிடம் கொலைகளும் நடந்து கொண்டிருக்குமாமே? உண்மையா?

மிகைப்படுத்தப்பட்ட செய்தி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

 

இந்த வீச்சு ஊஞ்சலை நம்ம ஊரில்அன்ன ஊஞ்சல் என்று சொல்லிறவை...இந்த ஊஞ்சலை இரண்டுபக்கமும் கயிற்றைபிடித்தபடி நின்று உதையிறவை தான் கீரோக்கள்.. சறத்தையும் அவிட்டுவிட்டிட்டு .காற்று அதை  அமுக்க அமுக்க உதைவினம்..நடுவிலை இருக்கிறவை பயத்திலையே பாட்டுப் பாடத்துவங்கிவிடுவினம்..ஆண் .. பெண்  வேறுபாடுகிடையாது..விகல்பமும் கிடையாது...நினைத்தாலே இனிக்கும்

ஒருவர் மட்டும் ஆடும் ஊஞ்சலை பிள்ளை ஊஞ்சல் என்று அழைப்பினம்...இருப்பவரை இருத்திவிடூ குருவி நுழைஞ்சு  ஊஞ்சலை ஆட்டுவதில்அலாதி இன்பம்.. 

❤️....

அன்ன ஊஞ்சல் என்னும் பெயர் மிக அழகாகவும், பொருத்தமாகவும் இருக்கின்றது..... இப்பொழுது தான் முதன்முதலாக கேள்விப்படுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரசோதரன் said:

பொழுது விடிந்தவுடன், சில வீடுகள் அல்லோலகல்லோலப்படும். சில வீடுகளின் படலைகளைக் காணவில்லை என்று தேடுவார்கள். ஒருவரின் வீட்டின் முன் நின்ற அவரது கார் அடுத்த தெருவில் போய் நின்றது. 'இங்கு சாஸ்திரம் பார்க்கப்படும்' என்று எழுதப்பட்டு ஒரு வீட்டின் முன் இருந்த விளம்பரம் நடு வயலில் நின்று கொண்டிருந்தது. இப்படி பல இடமாற்றங்கள்.

இந்தப்படலைவிடயம் எங்கள் ஊரிலும் இருந்திருக்கிறது. அதுவும் சிவராத்திரி காலத்தில் என்பதையெல்லாம் பார்க்கும் போது சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. என்ன ஒற்றுமை பாருங்கள். எங்களுக்குப் பிடிக்காதவரின் வீட்டுப் படலை சிவராத்திக்கு மறுநாள், ஊர்க்கிணற்றின் துலாவில் தொங்கிக் கொண்டிருக்கும். பரம வைரிகள் இருவரில் ஒருவர் வீட்டு ஆடு  மற்றையவர் வீட்டில் கட்டப் பட்டிருக்கும்.

இப்படி எத்தனையோ. ஆனாலும் பெண்கள் விடயத்தில் கண்ணியம் காத்தோம்.  சிவராத்திரி விரதத்தை ஊர்க் கோழிக் கறியுடன் முடித்து வைப்போம்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kavi arunasalam said:

சிவராத்திரி விரதத்தை ஊர்க் கோழிக் கறியுடன் முடித்து வைப்போம்.

🤣.......

இதுவும் அதே தான்............ நான் வளர்த்து வந்ததில் ஒன்றையே இன்னுமொரு குரூப் அமுக்கிக் கொண்டு போய் ஆக்கிச் சாப்பிட்டு விட்டார்கள் ஒரு ராத்திரியில்.............

சாக்கு ஒன்றால் மூடி அமுக்கினதாக பல வருடங்களின் பின் சொன்னார்கள் சம்பந்தப்பட்டவர்கள்........😃 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kavi arunasalam said:

இந்தப்படலைவிடயம் எங்கள் ஊரிலும் இருந்திருக்கிறது. அதுவும் சிவராத்திரி காலத்தில் என்பதையெல்லாம் பார்க்கும் போது சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. என்ன ஒற்றுமை பாருங்கள். எங்களுக்குப் பிடிக்காதவரின் வீட்டுப் படலை சிவராத்திக்கு மறுநாள், ஊர்க்கிணற்றின் துலாவில் தொங்கிக் கொண்டிருக்கும்.

எங்கள் ஊரிலும் படலை காவியள் இருந்தவை! இப்ப பொடியள் போனோடை மினக்கெடுவதாலும் மக்கள் படலைகளை பாரமாகவும் இலகுவில் கழற்ற முடியாதவாறு போடுவதாலும் கழட்டுவதில்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

எங்கள் ஊரிலும் படலை காவியள் இருந்தவை! இப்ப பொடியள் போனோடை மினக்கெடுவதாலும் மக்கள் படலைகளை பாரமாகவும் இலகுவில் கழற்ற முடியாதவாறு போடுவதாலும் கழட்டுவதில்லை!

🤣.......

படலை காவிகள்........ இதையே தலைப்பாக வைத்திருக்க வேண்டும்....🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.