Jump to content

முதியோருடன் ஒரு அலசல்: "மனித பார்வை [Human vision]"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
முதியோருடன் ஒரு அலசல்: "மனித பார்வை [Human vision]" / பகுதி 01
 
 
உலக சுகாதார நிறுவனம் (World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் [October] மாதம் இரண்டாவது வியாழக்கிழமை வரும் தேதியை உலக கண் பார்வை தினமாக அறிவித்து, கண் நலம் பற்றிய செய்திகளை பரப்புகிறது. எனவே நாமும் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்த மனித பார்வையை பற்றிய இந்த கட்டுரையை மிகவும் இலகுவாக சாதாரண மக்களுக்கும் மற்றும் முதியோருக்கும் புரியக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற ஒரு நோக்கில் எழுதி சமர்ப்பிக்கிறோம்.
 
"பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்"
 
என்கிறார் கவியரசு கண்ணதாசன். வானில் சிறகடிக்கும் பறவையை போல தானும் பறக்க வேண்டும் என்ற அவாவால், பல முயற்சிகளை மேற்கொண்டு, படிப்படியாக விமானம் உருப்பெற்றது என்பது வரலாறு. அது போலவே, மனிதன், எப்படி எம் கண் தொழிற்படுகிறது என கண்டு, அதை மையமாக வைத்து, எல்லா வகையான நிழற்படக் கருவி [கேமரா] மற்றும் அது போன்ற பல சாதனங்களை படைத்தான்.
 
கண் உண்மையில் மிகவும் உணர்திறன் கொண்ட மற்றும் மென்மையான உறுப்பு [most sensitive and delicate organ] ஆகும். இது உலகத்தை காணவும் மற்றும் எமது மூளை பெரும் செய்திகளில், கிட்ட தட்ட 4/5 பகுதிகளுக்கு பொறுப்பாக உள்ளது. அதனால் தான் மற்ற புலன்களிலும் விட, இது முதன்மை பெறுகிறது எனலாம். உதாரணமாக இருட்டில் இருந்து கொண்டு ஒரு பூட்டை திறந்து பாருங்கள். அப்போது தெரியும் பார்வையின் அவசியம். எனவே ஐந்து புலன்களிலும் பார்வை மிக முக்கியமான ஒன்றாகும். ஆகவே பார்வை எப்படி தொழிற்படுகிறது என சுருக்கமாக கூறின் - 'நாம் பார்ப்பது நம் கண்களின் வழியே ஒரு செய்தியாக நமது மூளைக்குச் செல்லுகிறது. அங்கு அந்த செய்தி மூளையினால் – நீள, அகலங்கள், குறுக்கு, நெடுக்குத் தோற்றங்கள், வண்ணங்கள் என்று எல்லாம் – அலசப்பட்டு நாம் பார்க்கும் பொருளை நம்மால் அறியமுடிகிறது எனலாம்.
 
நாம் இதுவரை கூறியதில் இருந்து, பார்வை என்ற புலன் உணர்ச்சி கண்ணின் வழியாக உண்டாகக் காரணி ஒளி ஆகும். ஆகவே ஒளியின் தன்மைகள், பண்புகள், போன்றவற்றை சுருக்கமாக பார்ப்போம்.
 
ஒளி ஒரு வெற்றிடத்தினூடாகவும் அல்லது வேறொரு ஓர் ஒளிபுகும் ஊடகத்தில் இருந்து இன்னொரு ஓர் ஒளிபுகும் ஊடகத்தினுள் பயணிக்கக் கூடியது. அதனால் தான் நாம் சந்திரன், சூரியன் மற்றும் விண்மீன்களை பார்க்கக் கூடியதாக உள்ளது. இது ஒரு மின்காந்த அலையாகும். ஒரு வெற்றிடத்தில் 300,000 கிமீ / வி [299 792 458 m / s] வேகத்தில் நகரக்கூடியது. இதுவே, எதாவது ஒன்று நகரக் கூடிய மிக அதிக வேகமாகும். அணு மற்றும் மூலக்கூறுகளை ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலைக்கு சூடேற்றும் பொழுது ஒளி சக்தியை வெளியிடக்கூடியவை. உண்மையில் ஒளியை நாம் காண முடியாது, ஆனால் அதன் தொடர்பு அல்லது எதிர் விளைவுகளை மட்டுமே உணர முடியும்.
 
பிரபஞ்சத்தின் படைப்பில் மனிதனுக்கு அழகு சேர்ப்பது, குறிப்பாக முகத்திலேயே அழகான பகுதி, எதுவென்றால் கண்கள் என்றுதான் அனைவரும் கூறுவோம். அதுவும் அடர்த்தியான‌ கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மேலும் அதிகரிக்கும். உணர்வு உறுப்பைச் சார்ந்த கண்கள் நமது உடலின் கண்ணாடி ஆகும். நிழற்படக்கருவியிலுள்ள பிம்பத்தேக்கியைப் (film) போன்று இயங்கும், விழித்திரை (ஒளிமின் மாற்றி / retina), கண்ணின் பின்புறத்தில் உள்ளது. நம் கண்களின் இந்த பகுதியில் மில்லியன் கணக்கான செல்கள் உள்ளன [கம்பு செல்கள் (ROD CELLS) & கூம்பு செல்கள் (CONE CELLS)], அவை ஒளி உணர்திறன் கொண்டவை மற்றும் அவை நரம்பு தூண்டுதலின் வடிவத்தில் ஒளி தகவல்களை மாற்றும் திறன் கொண்டவை, இதனால் இவை மூளைக்கு பரவும்போது, நாம் எதையாவது பார்க்கிறோம் என்பதை புரிந்து கொள்கிறோம். இங்கு நாம் ஒளியின் எதிர்விளைவுளின் நன்மையை காண்கிறோம்.
 
நாம், நம்மை சுற்றி உள்ள பொருட்களை எம் கண்ணால் பார்க்கிறோம். எனினும், ஒரு இருண்ட அறையில் எதையும் நாம் பார்க்க முடிவதில்லை. ஏனென்றால், நாம் பார்க்க இருக்கும் பொருளில் இருந்து ஒளி கட்டாயம் எம் கண்ணுக்கு வரவேண்டும். அப்பதான் அதை பார்க்க முடியும். மேலும் மொத்த அல்லது முழுமையான பிரதிபலிப்பு அல்லது எதிரொளிப்பு [Total or complete reflection], நாம் பார்க்க வேண்டிய பொருளை காட்டாது. காரணம் வெவ்வேறு [ஒளிவிலகல் குறிப்பெண்கள் -Refractive indexes - கொண்ட] ஊடகங்களின் குறுக்கே ஒளி செல்லும் பொழுது, ஒரு குறிப்பிட்ட எல்லைக் கோணத்தை விடப் பெரிய கோணத்தில், அது மற்ற ஊடகத்திற்குள் புக எத்தனிக்கும் பொழுது, அது கடந்து செல்ல முடியாத ஒரு நிலைக்கு வந்து, அது முற்றிலும் பிரதிபலிக்கிறது அல்லது திரும்பி தன் முதல் ஊடகத்திற்குள்ளேயே போகிறது. ஆகவே அதை நாம் பார்க்க இயலாமல் போகிறது.
 
மனித கண்கள் மூன்று அடிப்படை நிறங்களை உணரக் கூடியனவாக இருக்கின்றன. அவை சிவப்பு, பச்சை, நீலம் ஆகும். ஆகவே கண்ணுக்குப் புலப்படும் நிறமாலையிலுள்ள நிறங்கள் சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, நீலம் , கரு நீலம், உதா [Red, orange, yellow, green, blue, indigo and violet] ஆகும்.
 
சாதாரண மனிதனின் கண், ஒரு பொருளை பார்க்கும் பொழுது, அது கீழே கொடுக்கப்பட்ட ஒரு வரிசையில் தொழிற்படுகிறது
 
1] நாங்கள் பார்க்கும் பொருள் ஒளியை பிரதிபலிக்கிறது.
 
2] கண்ணின் முன் பகுதியில் உள்ள கருவிழிப்படலம் [கார்னியா / கருவிழி / cornea] ஊடாக ஒளி கண்ணுக்குள் நுழைகிறது.
 
3] ஒளி கண்ணின் நீர்மயவுடநீர் [aqueous humour] ஊடாக சென்று, கண் பாவைக்குள் [Pupil] நுழைந்து கண்ணின் வில்லையை [lens] அடைகிறது.
[கண்ணின் முன்புற உள் பகுதியில், கருவிழி மற்றும் கண் வில்லைக்கு இடையில் அமைந்துள்ள பெட்டியில் அடைக்கப்பட்டுள்ள திரவத்தை நீர்மயவுடநீர் [நீர் நகைச்சுவை / aqueous humour] என்பர். இது ஒரு திரவ பிளாஸ்மாவின் [a transparent water-like fluid similar to plasma] வகையாகும். இது விழி முன்னறை மற்றும் விழி பின்னறை என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது]
 
4] கண் வில்லை [Lens / a transparent biconvex structure in the eye] இருபுற குவி அமைப்பை கொண்டது. தொலைவு மற்றும் அண்மை ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளி கற்றையை, கண்ணின் பின் உள்ள விழித்திரையில் [(Retina] விழச் செய்ய தானியங்கியாக கண் வில்லை தன் குவி அமைப்பை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது.
 
5] கண்ணாடியுடனீர் [ vitreous body, It is often referred to as the vitreous humour or simply "the vitreous"] என்பது கண்ணின் பாவைக்கும் விழித்திரைக்கும் இடையே உள்ள பகுதியில் நிறைந்த தெளிவான திரவம் ஆகும். இது நிறமற்ற, ஒளி ஊடுருவக்கூடிய ஜெலட்டின் திரவம். இது அளவு மொத்த கண்ணின் அளவில் ஐந்தில் நான்கு பங்கு அளவு கொண்டதாகும். இது விழிக்கோளம் அல்லது கண் விழியின் [eyeball] சுற்று வடிவத்தை [round shape] பராமரிக்கிறது
 
6] ஒளி அதன் பின், கண்ணின் பின்புறத்தை அடைந்து, விழித்திரை [retina] தாக்குகிறது. விழித்திரை என்பது நமது கண்ணில் உட்கடைசி உறையாகும். இது மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். கருவிழிப்படலம், திரவம், வில்லை, கூழ்ம திரவம் வழியாக வரும் ஒளியானது இதில் படுகிறது. இந்த ஒளி சில மின்வேதி மாற்றங்களை உண்டு செய்து மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது.
 
7] இறுதியாக, மூளையின் பெருமூளைப் புறணியில் [cerebral cortex] உள்ள பார்வைப் புறணி (காட்சி புறணி / visual cortex), விழித்திரையினால் அனுப்பப்பட்ட துாண்டுதல்களின் [impulses] உட்பொருளை அறிந்து, அதை எமக்கு வெளிப்படுத்துகிறது அல்லது அந்த குறிப்பிட்ட விம்பத்தை உருவாக்கி, நாம் பார்க்கத் தருகிறது.
 
12496067_10205681427577742_6274524108014922711_o.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=13d280&_nc_ohc=NuPil_4dPPoQ7kNvgEswB0H&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCgzc9pkvuwtccicMKu7UjXL8iYG7mgxo8KVS1fURqbJQ&oe=66BF5137
 
[படம், நானும் அண்ணாவும், அண்ணாவை பார்க்க அவரின் நாட்டுக்கு சென்றபொழுது] 
 
[மூலம்:
 
ஆங்கிலத்தில் என் அண்ணா,
கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம்
 
மொழிபெயர்ப்பு:
 
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி 02 தொடரும்
302281773_10221522503354736_6697485794051490523_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=DVOnxFWtE7UQ7kNvgH4J5vy&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYCUsxLHFQuxGiWk9SBNbpWuRzl0RfXzbKQmWw5kY2dNPQ&oe=669D8C2C 301980782_10221522504274759_7756391005785695711_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=KyOlozaZWG4Q7kNvgGxbfAL&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYA8sSQ8uuGpkqSz90tN2hb2i8TvUsJMYHQeX4XvKlzIbw&oe=669D8B2B 301996102_10221522504834773_2347158572271970588_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=4v9IyE-ufzoQ7kNvgF_sFN7&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYAYQq1SoORw1iHFmbEBOG1Y78E2Gg9TXOMCzVc5DMW5fA&oe=669DAE0A 301902926_10221522504234758_4799762713210678948_n.jpg?stp=dst-jpg_p417x417&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=yRrJrCZ9od0Q7kNvgFmoxwY&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYDy8Kdd34CEDdDyoMd6oICAYyU1pOBqOCyxtTWuwM4HsQ&oe=669D8CAF
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, kandiah Thillaivinayagalingam said:

பகுதி 02 தொடரும்

தொடருங்கள் காத்திருக்கிறோம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முதியோருடன் ஒரு அலசல்: "மனித பார்வை [Human vision]" / பகுதி 02
 
 
உங்கள் கண்கள் உலகின் ஜன்னல்கள். கண்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் போது, அது உங்களுக்கும் மற்றும் உங்கள் உடலுக்கும் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் ஒவ்வொரு நாளும் செயல்படுவதற்கு பார்வை பெரும் பங்காற்றுகிறது. பார்வைக் குறைபாடுகள் (Visual impairment) தொடங்கும் பொழுது நீங்கள் கண்டிப்பாக கண் மருத்துவருடன் கலந்தாலோசிக்க வேண்டும். அதிலும் நீரிழிவு நோய் [diabetes] இருப்பவர்கள் கட்டாயம் ஒரு ஒழுங்காக மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும்.
 
பார்வைக் குறைபாடுகளில் (Visual impairment) பொதுவானதும் மற்றும் வயது தொடர்பான கண் பிரச்சினைகளை பற்றி இனி ஆராய உள்ளோம். அவைகளில் முதன்மையானவை
 
1] வெள்ளெழுத்து அல்லது கிட்ட பார்வைக் குறைவு [Presbyopia],
 
2] கண் அழுத்த நோய் (Glaucoma),
 
3] வறண்ட கண்கள் [dry eyes],
 
4] வயதுசார் விழித்திரை தேய்மானம் அல்லது சிதைவு [age related macular degeneration],
 
5] கண்புரை [cataract], &
 
6] தற்காலிக தமனி அழற்சி [ஜெயண்ட் செல் ஆர்க்டிடிஸ் / temporal arteritis or Giant cell arteritis] ஆகும்.
 
முதியோர்களின் கண் பார்வையை பாதிக்கும் இவைகளின் தாக்கங்களை சுருக்கமாக பார்ப்போம்
 
1] வயதுசார் விழித்திரை தேய்மானம் [age related macular degeneration] -- மங்கலான பார்வை, விம்பத்திரிவு [image distortion], விழித்திரையின் நடுவிலுள்ள குருட்டுத்தன்மை [central scotoma].
 
2] கண் அழுத்த நோய் [Glaucoma] -- பார்வை நரம்பு சேதமாவதால் பார்வை இழப்பு நிலைக்கு விரைந்து முன்னேறுவதும், பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு செல்ல முடியாததுமான ஒரு கண் நோய் ஆகும். இதனால், சிறிது சிறிதாக கண்பார்வை குறைவு ஏற்படுகிறது
 
3] கண்புரை [cataract] -- நீரிழிவு நோய் போன்றவற்றின் விளைவாகவும், கண்களில் ஏற்பட்ட காயங்களின் விளைவாகவும் கண்புரை ஏற்படலாம். மங்கலான பார்வை, கண் பிரதிபலிப்பு அல்லது கூசுதல் [glare], ஒரு கண்ணில் மட்டும் ஏற்படும் இரட்டை பார்வை அல்லது இரட்டை நோக்கு குறைபாடு [monocular diplopia] ஆகும்
 
[டிப்ளோபியா [diplopia] நோயாளி என்பது, அவர் அருகில் உள்ள பொருள் இரண்டு உருவங்களாக தோன்றும் ஒரு காட்சி குறைபாடு ஆகும். இது இரண்டு வகையாகும். அதில் ஒன்றுதான் ஒரு கண்ணில் மட்டும் ஏற்படும் இரட்டை பார்வை குறைபாடு ஆகும்]
 
4] நீரிழிவுசார் விழித்திரைக் கோளாறு [diabetic retinopathy] -- மங்கலான பார்வை, வீரியமான ஒளிபுகாநிலைகள் [கண் மிதவைகள் / floaters], காட்சி புலம் இழப்பு அல்லது குறைபாடு [உங்கள் காட்சி புலத்தில், ஒரு பகுதியை இழத்தல், உதாரணமாக பக்கப்பார்வையிழப்பு / Visual field loss is when you have lost an area of vision in your visual field], மோசமான இரவு பார்வை.
 
[உங்கள் கண்களில் மிகவும் சிறிய புள்ளி போன்ற மிதவைகள் (Floaters), கண்களுக்குள் உள்ள பகுதிகளில் மிதந்து கொண்டிருக்கும். சில மிதவைகள் உங்கள் பார்வையில் நிழல்களாகத் தோன்றலாம். இவை உங்கள் கண்களில் உள்ள திரவத்தில் இருப்பதால் நீங்கள் நகரும் போது இவையும் நகரும். இதனால் உங்கள் பார்வை பாதிக்கப்படும். இவை வயது தொடர்பான மாற்றங்களால் ஏற்படலாம். கண்களில் சேரும் தூசிகள், மற்றும் கண்ணில் உள்ள திரவங்களும் இதற்கு காரணம். இவை கண்களில் காயம் மற்றும் கண் கட்டிகள் ஏற்படும் போதும் உண்டாகலாம்]
 
கண் தனக்கு வேண்டிய பிராணவாயுவை [ஆக்ஸிஜன் / oxygen] கண்ணில் உள்ள நீர் கலந்த திரவத்தின் [aqueous] மூலம் பெறுகிறது. மேலும் கண்ணின் கருவிழிக்கும், வில்லைக்கும் மற்றும் விழித்திரைப்படலத்துக்கும் [கதிராளி; கருவிழித்திரை] உணவூட்டுதல், [கார்னியா, லென்ஸ் மற்றும் ஐரிஸ்], வில்லையினால் வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்களை அகற்றுதல், உள்விழி அழுத்தத்தை [intraocular pressure] கட்டுப்படுத்துதல் அல்லது சீர்செயிதல், நோய் எதிர்ப்பாற்றல் வழங்குதல் மற்றும் கண்ணின் வடிவத்தை பராமரித்தல் போன்றவை இவைகளின் வேலைகளாகும்.
 
ஒரு ஆச்சிரியம் என்னவென்றால், மூளையில் இருக்கும் பகுதிகளில் கண் ஒன்றே, நேரடியாக பார்க்கக் கூடியது. உதாரணமாக, கண்களில் சொட்டு மருந்து ஊற்றி, 'டைலடேஷன்' [Dilatation] எனப்படும் விரிவாக்கம் செய்து, ஒரு கண்அகநோக்கி [ஆப்தல்மஸ்கோப் / ophthalmoscope] மூலம் நேரடியாக கண்களில் உள்ள நரம்புகளை முழுமையாக கண் மருத்துவரால் பார்க்க முடியும். கண்களில் என்ன கோளாறு இருக்கிறது என்பதை இப்படித்தான் கண் பரிசோதனை செய்து அறிகிறார்கள்.
 
நீங்கள் பூமியை எடுத்துக்கொண்டால், அது ஒவ்வொரு மைலுக்கும் எட்டு அங்குலம் வளைகிறது. எனவே உங்கள் கண், தரையில் இருந்து ஐந்து அடி உயரத்தில் இருக்கிறது என்று வைத்தால், நீங்கள் பார்க்க கூடிய ஆக்க கூடுதலான தொலைதூர பூமியின் விளிம்பு மூன்று மைலாகும்.
 
எமது கண்ணில் உள்ள வில்லை ஒரு குவி வில்லையாகும் [convex lens]. இது நடுவில் தடிமனாகவும் ஓரங்களில் மெல்லியதாகவும் இருக்கும். மனிதர்கள் பலதரப்பட்ட பொருட்களை, நிறங்களை பார்க்கும் இயல்பு உள்ளவர்கள். கட்புலனாகும் நிறமாலை [visible spectrum] என்பது, மின்காந்த நிறமாலையில் [electromagnetic spectrum] உள்ள மனிதக் கண்ணால் பார்க்கக்கூடிய நிறமாலைப் பகுதியாகும். இந்த அலைநீள எல்லையுள் அடங்கும் மின்காந்தக் கதிர்வீச்சு [Electromagnetic radiation] "கட்புலனாகும் ஒளி" அல்லது வெறுமனே "ஒளி" [visible light or simply light] எனப்படுகின்றது. பொதுவான மனிதக் கண், வளியில் 380 தொடக்கம் 780 நானோமீட்டர் [nanometres / 0.000000001 m] அலைநீளம் கொண்ட கதிர்வீச்சுக்களைப் பார்க்கக் கூடியது. ஆகவே ஒரு பொருளில் இருந்து இந்த அலை நீளத்தில் வெளியிடப்படும் ஒளி, எங்கள் கண்ணில் நுழைந்து, கண் வில்லையினூடாக கடந்து, எங்கள் கண்களுக்கு உள்ளே உள்ள விழித்திரையில் விழும் பொழுது, நாம் பொருட்களை காண்கிறோம் எனலாம்.
 
ஆகவே விழித்திரையில் பொருட்களின் விம்பம் முதலில் சரியாக விழவேண்டும். அப்ப தான் பொருட்கள் எமக்கு தெரியும். எனவே தான், கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் பொதுவாக கண்ணாடி அணிகிறோம். உதாரணமாக, கிட்டப் பார்வை எனும் பார்வை குறைபாட்டில் அருகில் உள்ள பொருட்கள் தெளிவாகத் தெரியும். ஆனால், தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாகத் தெரியும். இந்தக் குறைபாடு உள்ள கண்களில் ஒளியானது விழித்திரைக்கு முன்னதாகவே குவியும். நடுவில் மெல்லியதாகவும் ஓரங்களில் தடிமனாகவும் உள்ள குழி வில்லை (கான்கேவ் லென்ஸை / concave lens) இதற்கு பயன்படுத்தப் படுகிறது. அதே போல, தூரப் பார்வை எனும் குறைபாட்டில், விழித்திரையைத் தாண்டி அதன் பின்னால் குவியும். இதற்கு நடுவில் தடிமனாகவும் ஓரங்களில் மெல்லியதாகவும் உள்ள குவி வில்லை (கான்வெக்ஸ் லென்ஸ் / convex lens) அணிய வேண்டும்.
 
மனிதன் பெறத்தக்க அறிவுகளுள் ஒன்று கண்ணின் வழியாகப் பெறப்படும் பார்வைப் புலனாகும். இதை தொல்காப்பியர், தனது நூற்பாவில்,
 
“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”
 
என்று 'நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே' என குறிப்பிடுகின்றார். அதே போல, மனித அறிவோடு, கண் நெருங்கிய தொடர்புடையது என்பதை திருவள்ளுவர், கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்: கல்லாதார் முகத்தின்கண்ணே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லப்படுவர் என
 
“கண்ணுடையர் என்பர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்”
(திருக்குறள் – 393)
 
என்று கூறியிருப்பதன் மூலம் நன்குணர முடிகிறது. உறுப்புகளில் முதலிடம் பெறுகின்ற கண்ணை, ஒருவர் தாம் மிக அதிகமாக நேசிக்கும் காதலருக்கும், அவர் வழியாக ஈன்றெடுக்கும் குழந்தைகட்கும் நிகராகக் கருதத் தொடங்கினர். எனவே தான் காதலரை அன்பொழுக அழைக்கின்ற போதும், குழந்தையை அன்போடு விளிக்கும் போதும், “கண்ணே” என்றழைக்கும் மரபு உண்டாயிற்று. உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் மாதவி, கோவலனை “கண்மணி அனையான்” எனக் குறிப்பிட்டிருப்பது கருதத்தக்கது.
 
“வருந்துயர் நீக்கு எனமலர்க்கையின் எழுதி
கண்மணி யனையாற்குக் காட்டுக என்றே
மண்உடை முடங்கல் மாதவி யீந்ததும்”
 
(சிலம்பு – புறஞ்சோர் இறுத்தகாதை 74-76)
 
அதேபோல, தாலாட்டு பாடல் ஒன்று
கண்ணான கண்ணே கண்ணுறங்கு – என்
கானகத்து வண்டுறங்கு”
 
என கூறுகிறது. இப்படி பெருமை பெற்ற கண்ணை, அறிவின் நுழைவாயில் என்று கூறுவது மிகவும் பொருத்தமானது என்று எண்ணுகிறேன். ஆகவே, உடல் உறுப்புகளில், அறிவின் திறவுகோலாக விளங்குவது கண்கள் ஆகையால், அதை முழுமையாக அறிந்து பாது காப்பது மிக மிக அவசியம்.
 
 
[மூலம்:
 
ஆங்கிலத்தில் என் அண்ணா,
கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம்
 
மொழிபெயர்ப்பு:
 
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
206521409_10219469654074787_7988579204669142736_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=XS79aClw1GcQ7kNvgECBFtR&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCn_eLGcxdqzxoRYce8y0mTsRaEAgyk5OH3YNwMz986vw&oe=66C0726E  203664187_10219469654314793_4006202005396557143_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=bZ6UGOckcN8Q7kNvgElL63b&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYBuTbEhzfqpzrmXW2Wp-p2UhSW4tlzCYXnj-xD1lywfWw&oe=66C054FA  205982697_10219469654634801_622244511320850109_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=rBRRgmzbUtsQ7kNvgEr6hwb&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYDgkRLlN0nNXT5aiZklU4zgA7ip1EttBOvtYGuM4u9qgQ&oe=66C03E4C
  • Like 1
Link to comment
Share on other sites

  • நியானி changed the title to முதியோருடன் ஒரு அலசல்: "மனித பார்வை [Human vision]"


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • Canada  உங்களை அன்புடன் வரவேற்கிறது.  (நான்  பொல்லுடன் காத்திருக்கின்றேன் 😀)
    • சுமந்திரன் பெட்டி வாங்கிவிட்டார், தன்னிச்சையாக முடிவு எடுத்தது விடடார், தேர்தலில் மோசடி செய்து வென்று விட்டார்  என்று செல்லும்  ஒரு சில புலம்பெயர்ந்தவர்கள், உசுப்பேத்தும் தமிழ் ஊடகங்களின் செய்திகள்  மற்றும் தமது குறுகிய வட்டத்துக்குள் உள்ள சமூக ஊடக தகவல்களை வைத்துக்கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரையோடிக் கொண்டு, சமாந்திர உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கின்றார்கள், அது அவர்களின் சனநாயக உரிமையாகும்.
    • நத்தனியாகுவுக்கு எதிராக ரெல் அவிவில் ஊர்வலம்  
    • Published By: DIGITAL DESK 3 02 SEP, 2024 | 02:36 PM   தமிழரசு கட்சியானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (01)  கூடி வவுனியாவில் முடிவு எடுத்ததன் அடிப்படையில், தமிழரசு கட்சியானது ஒற்றுமை இல்லாமல் தமிழர்களை பிரிவுக்கும் அல்லது தமிழர் இந்த நிலைக்கு போவதற்கும் காரணமாக இருக்கின்றது என வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதியான அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வவுனியாவில் நிறைவேற்றப்பட்ட தமிழரசு கட்சியின் தீர்மானம் குறித்து, சமூகமட்ட பொது அமைப்பின் பிரதிநிதி என்ற வகையில் அவரிடம் இதுகுறித்து கருத்து வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு இன்று வரைக்கும் தமிழரசுக் கட்சி தமிழருடைய உரிமைகளை மீட்பதற்கு உளரீதியாக செயல்படவில்லை. வாய் ரீதியாக மக்களுக்கு ஒன்றை சொல்வதும் அரசாங்கத்திற்கு ஒன்றை சொல்வதுமாக இருக்கின்றது. ஒட்டுமொத்த கட்சியாக இந்த முடிவை எடுத்திருந்தால் நாங்கள் வரவேற்றிருப்போம். ஆனால் கட்சியின் தலைவர் ஒன்றினை கூறுகின்றார், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஒன்றினை கூறுகின்றார், பல உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தமிழ் மக்களின் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் குலைப்பதற்கான அடித்தளமாகத் தான் நாங்கள் இதனை பார்க்கின்றோம். தமிழரசு கட்சியை எடுத்து பார்ப்போமேயானால் சிவஞானம் சிறீதரன், குகதாசன் ஆகியோர் உட்பட்ட கிளிநொச்சி மற்றும் திருகோணமலை கிளைகளினால் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் அதனை எதிர்க்கின்றனர். இவ்வாறு இருந்தால் தமிழர்களுடைய நிலை என்ன? தமிழர்களை கூறு போட்டு, தமிழர்களுடைய இருப்புகளை அழிப்பதற்கு ரணிலோ, சஜித்தோ, அனுரவோ அல்லது நாமல் ராஜபக்சவோ தேவையில்லை, எமது கட்சித் தலைவர்களே போதும். தமிழ் சிவில் சமூகமாக நாங்கள் எடுத்த பொது வேட்பாளர் என்ற முயற்சியை ஆதரித்து, எதிர்காலத்தில் இவ்வாறான புல்லுருவிகளையும், முண்டு கொடுப்பவர்களையும் நிராகரிப்பதற்கு நாங்கள் தமிழர் சமூகமாக ஒன்றுபட வேண்டும். வாக்குப் போடுவது மக்களாகிய நாங்கள். ஆனால் இவர்கள் எப்போது மக்களை சந்தித்து, மக்களது கருத்துக்களை கேட்டு தீர்மானம் எடுத்தார்கள்? ஆகவே இவர்கள் மக்களது பிரதிநிதிகள் என்று கூறி எவ்வாறு சர்வதேச சமூகங்களிடம் பேசப் போகின்றார்கள்? வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் கூட்டமானது பிரிவினையை காட்டுகின்றது. எனவே மக்களே நீங்கள் இந்த தமிழரசுக் கட்சியை நம்பாதீர்கள். நாங்கள் சுயமாக சிந்தித்து, எங்களுக்கு இருக்கின்ற வாக்குரிமை பலத்தினால் ஒன்றிணைந்து செயற்படுவோம். எமது கட்டமைப்புக்குள் வருமாறு நாங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியையும் அழைக்கின்றோம். தங்களுடைய சுயலாபத்துக்காகவும், தங்களது மதுபான நிலைய அனுமதிப் பத்திரத்துக்காகவும், தாங்கள் கோடிகளை சம்பாதிப்பதற்காகவும் தமிழ்மக்களை எதிர்காலத்தில் விற்றுப் பிழைப்பது சாத்தியமற்றது. 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அது வெளிச்சத்துக்கு வரும். அப்பொழுது இந்த அரசியல் காட்சிகளும், பேரம் பேசுபவர்களும் புரிந்து கொள்வார்கள். எனவேதான் நாங்கள் கூறுகின்றோம். இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு சங்கு சின்னத்திற்கு வாக்களிப்போம், எமது ஒற்றுமை நிலைநாட்டுவோம் அதுவே எமக்கான தீர்வு என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/192636
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.