Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் தாக்குதல் திட்டத்தை குழப்ப முனையும் படையினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தாக்குதல் திட்டத்தை குழப்ப முனையும் படையினர்

-விதுரன்-

வன்னியில் கடந்த இரு வாரங்களாக கடும் சமர் நடைபெற்று வருகிறது. வவுனியா - மன்னார் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளுக்கப்பால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைய படையினர் பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் விடுதலைப் புலிகளின் கடுமையான பதில் தாக்குதல் அந்த முயற்சிகளை முறியடித்து வருகின்றது.

வடக்கில் பருவமழை பொழியத் தொடங்கிவிட்டது. மழை வீழ்ச்சி கடுமையாக இல்லாத போதும் ஆங்காங்கே பரவலாக ஓரளவு மழை பெய்து வருகிறது. கடும் மழை பொழிய முன்னர் வவுனியா மற்றும் மன்னாரில் விடுதலைப் புலிகளின் பகுதிகளினுள் முடிந்தவரை நுழைந்துவிட படைத்தரப்பு முயலுகின்றது. எனினும் அது சாத்தியப்படுவதாகத் தெரியவில்லை.

கடும் மழை பெய்யும் காலத்தில் யாழ். குடாநாட்டின் மீது முற்றுகைப் போரொன்றைத் தொடுக்க புலிகள் முயலக் கூடுமென படைத்தரப்பு அஞ்சுகிறது. மன்னாரிலிருந்து மேற்குக் கரையோரத்தால் யாழ். குடாநாட்டுக்கு தரைவழிப் பாதையொன்றை திறக்கும் விதத்தில் பாரிய படை நடவடிக்கைக்கு அரசு முயன்று வருகிறது.

கடந்த இரு வாரங்களாக படையினர் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற போதும் எதுவும் சாத்தியப்படவில்லை. தினமும், வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகளை அண்டி நடைபெறும் மோதல்களில் படையினர் பலத்த இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். புலிகளுக்கு பெரும் சேதமேற்படுவது போல் படைத் தரப்பு கூறிவந்தாலும் படையினரும் பலத்த சேதங்களைச் சந்தித்து வருகின்றனர்.

தற்போதைய நிலையில் வடக்கில் புலிகளின் நகர்வு எவ்வாறிருக்குமென்பதை படையினரால் ஊகிக்க முடியாதுள்ளது. யாழ். குடாநாட்டை கைப்பற்ற புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுக்கலாமென அஞ்சும் படையினர், மணலாறு பகுதியிலும் அவர்கள் பெருந்தாக்குதலைத் தொடுக்கலாமெனக் கருதுகின்றனர்.

இதனால் புலிகள் தாக்குதல் சமரொன்றை ஆரம்பிப்பதை தடுத்து நிறுத்துவதற்காக அவர்களைத் தற்காப்பு நிலையில் வைத்திருக்க வேண்டிய கட்டாய தேவை படையினருக்குள்ளது. பாரிய படை நடவடிக்கை மூலம் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை மூலம் அல்லது தினமும் பல்வேறு பகுதிகளிலும் அவர்களது நிலைகள் மீது சிறுசிறு தாக்குதல்களை நடத்துவதன் மூலம் அவர்களது கவனம் தாக்குதல் சமரிலிருந்து தற்காப்பு நிலைக்கு மாற்றம் பெற்று விட வேண்டுமென்பதில் படையினர் தீவிர கவனமாயுள்ளனர்.

அதேநேரம், வன்னிப் பகுதியில் தினமும் தாங்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கான பதில் தாக்குதல்கள் எப்படியிருக்கின்றன என்பதை படையினர் தற்போது நன்கறிவர். வன்னிக்குள் ஒரு அங்குல நிலத்தையேனும் இழக்கத் தாங்கள் தயாரில்லையென்பதை இந்தப் பதில் தாக்குதல் மூலம் புலிகள் உணர்த்தி வருகின்றனர்.

மன்னாரிலிருந்து கரையோரமாக விடத்தல் தீவு, பள்ளமடு சென்று அங்கிருந்து கிளிநொச்சியின் கரையோரப் பிரதேசமான முழங்காவில், ஆலங்கேணியூடாக பூநகரியை சென்றடைந்துவிட்டால் குடநாட்டுக்கான மாற்றுத் தரைவழிப் பாதையை திறந்துவிடுவதுடன் பூநகரியிலிருந்து புலிகள் குடாநாட்டின் மீது மேற்கொண்டுவரும் ஆட்லறித் தாக்குதலையும் இல்லாது செய்துவிட முடியுமென படைத்தரப்பு கருதுகிறது.

யாழ். குடாநாட்டுக்கு இன்று பூநகரி மற்றும் அதனுடன் அண்டியிருக்கும் கல்முனைப் பகுதிகள் பெரும் அச்சுறுத்தலாயுள்ளன. இந்தப் பிரதேசங்களில் புலிகளின் பீரங்கிப் படையணிகள் மிகவும் வலுவாக நிலை கொண்டுள்ளன. இங்குள்ள புலிகளின் ஆட்லறித் தளங்களை அழிக்க இந்தப் பகுதி நோக்கி படையினர் தினமும் ஆட்லறி ஷெல்களையும் பல்குழல் ரொக்கட்டுகளையும் ஏவிவருவதுடன் கடும் விமானத் தாக்குதலும் நடைபெற்று வருகின்றன.

எனினும் இந்தத் தாக்குதல்களை வெற்றிகரமாகச் சமாளித்தவாற புலிகள் தங்களது நடவடிக்கைகளை இங்கு தீவிரப்படுத்தியுள்ளதாகவே படையினர் கருதுகின்றனர். படையினரின் ஷெல் தாக்குதல், பல்குழல் ரொக்கட் தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதல்களுக்கு மத்தியில் ஆட்லறி ஷெல்களை மிகப் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தியும் அவற்றை நிலைமைக்கேற்ப இடத்திற்கிடம் நகர்த்தியும் விரைந்த செயற்பாடுகள் மூலம் படையினரின் கடும் தாக்குதல்களுக்கு மத்தியில் பொருட் சேதங்களை தவிர்த்து வருகின்றனர்.

யாழ். குடாவை புலிகள் இலக்கு வைப்பதை நன்கறிந்த நிலையிலேயே அவர்களது கவனத்தை திசை திருப்பும் நோக்கில் மன்னாரில் படையினர் பாரிய நகர்வு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். குடாநாட்டுக்கான கரை வழி விநியோகப் பாதையென்பது பூநகரி ஊடாகவே திறக்கப்பட வேண்டுமென்பதால் இந்தப் படை நடவடிக்கையை தடுத்து நிறுத்தாவிடில் பூநகரியை இழப்பதுடன் அதன் மூலம் குடாநாடு மீதான முற்றுகையே இல்லாது போய்விடுமென புலிகள் அச்சமடைய வேண்டுமெனவும் அதனால் தற்போது அவர்களது கவனத்தை குடாநாட்டிலிருந்து மன்னார் பக்கம் திருப்பி விடவேண்டுமெனவும் படையினர் கருதுகின்றனர்.

படைத்தரப்பை பொறுத்தவரை, புலிகளின் திட்டமிட்ட வலிந்த தாக்குதல்கள் படையினருக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன் புலிகள் தங்கள் நோக்கத்தையும் பெரும்பாலும் நிறைவேற்றியுள்ளனர் என்பதையும் அறிவர். வடக்கு போர் முனை இன்று, கரணம் தப்பினால் மரணமென்ற நிலையிலுள்ளதால் புலிகள் வலிந்த தாக்குதலொன்றை நடத்துவதற்கு இடமளித்துவிடக் கூடாதென்பதில் படைத்தரப்பு மிகுந்த கவனமாயுள்ளது.

தற்போதைய நிலையில் யாழ். குடாநாட்டில் புலிகள் பாரிய தாக்குதல்களைத் தொடுப்பதைத் தடுப்பதற்காக கிளாலி, முகமாலை மற்றும் வடமராட்சி கிழக்கில் நாகர்கோவில் பகுதியில் தினமும் கடும் ஷெல் தாக்குதல்களும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்களும் நடைபெற்று வருகிறது.

இந்தத் தாக்குதல் மூலம் முன்னரங்க நிலைகளிலும் அதற்கப்பாலும் புலிகள் பெருமளவில் ஒன்றுகூடுவதைத் தடுக்கவும் போர்த் தளபாடங்களை குவித்து இலகுவான விநியோகங்களுக்கான ஏற்பாடுகளை நிறுத்தவும் படைத்தரப்பு முயல்கிறது. இதனால் குடாநாட்டின் பல்வேறு படைமுகாம்களிலுமுள்ள ஆட்லறிகளதும் பல்குழல் ரொக்கட் செலுத்திகளதும் இலக்குகள் கிளாலி மற்றும் முகமாலை பகுதிகளை மையமாக வைத்தேயுள்ளன.

குடாநாட்டின் மீதான முற்றுகையை புலிகள், பூநகரி மற்றும் கல்முனையிலுள்ள ஆட்லறிகள் மூலம் மேற்கொள்ள முனைவதாகக் கருதும் படைத்தரப்பு, முகமாலை, கிளாலி முன்னரங்க நிலைகள் மீது திடீர் தாக்குதலொன்றை பெருமெடுப்பில் நடத்தி அந்த முன்னரங்க நிலைகளை கொடிகாமம் வரை பின்னகர்த்தி விட்டால் அவர்களது ஆட்லறித் தளங்களும் நன்கு முன்நோக்கி வந்துவிடுமெனவும் கருதுகின்றனர்.

இதனால் பூநகரிக் கல்முனைப் பகுதியிலும் முகமாலைப் பகுதியிலும் படையினர் தங்கள் கவனத்தை முழு அளவில் செலுத்தியுள்ளனர். கல்முனைப் பகுதியிலிருந்தே தற்போது புலிகள் பலாலி மற்றும் காங்கேசன்துறையை நோக்கி ஆட்லறி ஷெல்களை ஏவுவதாக படையினர் கருதுகின்றனர். பூநகரியிலிருந்து ஆட்லறி ஷெல்களை ஏவுமளவிற்கு புலிகளிடம் நீண்டதூர ஆட்லறிகளில்லை என்பதும் படையினருக்குத் தெரியும்.

கல்முனை பகுதி மிகவும் குறுகலான பிரதேசமென்பதால் ஷெல் தாக்குதலை நடத்திவிட்டு தொடர்ந்தும் ஆட்லறிகளை அங்கு வைத்திருக்க முடியாது. அவற்றை அங்கு நீண்டநேரம் வைத்திருந்தால் படையினர் ஷெல், பல்குழல் ரொக்கட் மற்றும் விமானத் தாக்குதல் மூலம் அழித்து விடுவரென்பது புலிகளுக்குத் தெரியும். இதனால் குடாநாட்டின் மீதான முற்றுகையின் போது பலாலி விமானப் படைத் தளத்தையும் காங்கேசன்துறை துறைமுகத்தையும் நிலையாகச் செயலிழக்கச் செய்வதாயின் முகமாலையில் முன்னரங்க நிலைகள் தகர்க்கப்பட்டு நீண்ட தூரத்தை புலிகள் கைப்பற்றுவதன் மூலமே அவர்களால் தங்கள் ஆட்லறிகளை முன்நகர்த்தி பலாலி மற்றும் காங்கேசன்துறை பகுதிகள் மீது வசதியாகத் தாக்குதல்களை நடத்த முடியுமென படைத்தரப்பு கருதுகிறது.

மன்னார் கரையோரமாக பெருமளவு பிரதேசங்களை கைப்பற்றுவதன் மூலம் மேற்கு கரையோரத்தில் கடற்புலிகளின் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்திவிட முடியுமென படைத்தரப்பு கருதுகிறது. இது தமிழ்நாட்டுடனான புலிகளின் தொடர்புகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிடுமென படையினர் கருதும் அதேநேரம், குடாநாட்டை புலிகள் கைப்பற்றிவிட்டால் அவர்களது கடல் ஆதிக்கம் வெகுவாக அதிகரித்து விடுமெனவும் படையினர் கருதுகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் குடாநாட்டின் மீதான புலிகளின் முற்றுகையை தடுக்க படையினர் பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் புலிகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக மன்னார் பகுதியில் தினமும் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர்.

யாழ். குடாநாட்டைப் போன்றே புலிகளின் கவனம் மணலாறு பகுதியிலுமுள்ளதாக படையினர் கருதுகின்றனர். வடக்கு - கிழக்கை துண்டாடும் விதத்தில் மணலாறு பகுதியில் பெருமளவு சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு பல படை முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. மணலாறு பகுதியை புலிகள் கைப்பற்றுவார்களானால் அது திருகோணமலையின் பாதுகாப்புக்கு பேராபத்தாகிவிடுமென்பது படையினருக்கு நன்கு தெரியும். இதனால் மணலாறு பகுதியையும் பாதுகாக்க வேண்டிய தேவை படையினருக்குள்ளது.

மன்னாரில் தினமும் மேற்கொள்ளப்படும் சிறு சிறு தாக்குதல்கள் மூலம் புலிகளை களமுனைக்கு இழுத்து அவர்களுக்கு எந்தளவுக்கு சேதங்களை ஏற்படுத்த முடியுமோ அந்தளவுக்கு சேதங்களை ஏற்படுத்திவிட படையினர் முனைகின்றனர். இந்தப் படைநகர்வுகளின் போது புலிகளுக்கும் கடுமையாகப் பதிலடி கொடுத்து வருவதால் தினமும் அங்கு கடும் மோதல்கள் நடைபெறுகின்றன. இதன் மூலம் புலிகளின் கவனத்தை மன்னார் பக்கம் திசைதிருப்பி வைத்துள்ளதாக படையினர் கருதுகின்றனர்.

இதேநேரம், புலிகள் குடாநாட்டில் பாரிய தாக்குதலைத் தொடுத்தால் புலிகளுக்கு கடும் நெருக்கடிகளைக் கொடுக்கும் விதத்தில் மன்னாருக்கு வடக்கே கரையோரப் பகுதியில் கடும் தாக்குதலைத் தொடுக்கவும், புலிகள் மணலாறுப் பகுதியில் பாரிய தாக்குதலைத் தொடுத்தால் குடாநாட்டில் முகமாலைப் பகுதியிலும் மன்னாருக்கு வடக்கேயும் பாரிய தாக்குதலைத் தொடுக்கவும் படையினர் முற்படக் கூடும். அதற்கேற்ப படையினர் முழு ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவற்றையெல்லாம் புலிகளும் நன்கறிவர். அவர்கள் வசம் போதிய ஆயுதங்களோ வெடிபொருட்களோ இல்லையெனக் கூறும் படைத்தரப்பு வன்னியில் தினமும் சந்திக்கும் இழப்புகள் மூலம், அந்தப் பிரசாரம் பொய்யென்பது நன்கு தெளிவாகிறது. புலிகளின் பலம் குறித்து மிகவும் குறைத்துக் கூறி அவர்களையும் தமிழ் மக்களையும் மனோரீதியில் பலவீனப்படுத்தும் முயற்சியே இந்தப் பிரசாரங்களாகும்.

கிழக்கை புலிகளின் பிடியிலிருந்து முழுமையாக விடுவித்து விட்டோமெனவும் இதன் மூலம் படையினர் மிகவும் வலுவான நிலையிலிருப்பது போன்றதொரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டு விட்டதால் அவர்களால் இனிப் போரிட முடியாதென்பது போன்றும் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

கிழக்கை போல் வடக்கையும் மிக விரைவில் கைப்பற்றிவிடுவோமெனவும் புலிகளின் முதுகெலும்பு முறிக்கப்பட்டு வருவதாகவும் பெரும் பிரசாரங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் தான் மன்னாரில் மடுப்பகுதியை கைப்பற்ற 18 தடவைகள் பைடயினர் முயற்சித்தும் எதுவுமே நடைபெறவில்லை. அகோர ஷெல் தாக்குதல்கள் மூலம் தினமும் மக்களை இடம்பெயரச் செய்ததைத் தவிர வேறெதனையும் படையினர் செய்ததாகத் தெரியவில்லை.

இவ்வாறு களநிலைமையிருக்கையில் புலிகள் தொடர்ந்தும் மௌனம் சாதித்தே வருகின்றனர். அவர்கள் எங்கு, எப்போது தாக்குதலைத் தொடுக்கப்போகின்றார்களென்பத

புலிகளின் தாக்குதல் திட்டத்தை குழப்ப முனையும் படையினர் புலிகளின் திட்டமென்ன? படையினர் குழப்பினால் புலிகள் குழம்பிவிடுவார்களா?

எங்கே? எப்பொது? எப்படி? இது எம் உயர் தலைவனுக்கு மட்டும் தெரிந்த ரிசி மூலம். விழி சுட்டும் திசைநோக்கிச் செல்ல நமது படை தயார். வெற்றிச் செய்திகளை ஆவணப்படுத்த கள உறவுகளே தயாரகுங்கள்.

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.