Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புதிதாக வந்தவர்கள்
--------------------------------
அந்த வீட்டின் முன்னால் அவ்வளவு ஆட்கள் இதுவரை கூடினதே இல்லை. இருபது வருடங்களுக்கு மேலாக இதே தெருவிலேயே, ஒரே வீட்டிலேயே நான் இருக்கின்றேன். அந்த வீடும், அங்கு இருப்பவர்களும் அதைவிட இன்னும் அதிக காலமாக அங்கே இருக்கின்றார்கள். அங்கு இருப்பவர்கள் இருவரும் வயதான கணவன் மனைவி. நாங்கள் இங்கு குடிவரும் போதே அவர்கள் வயதானவர்களாக இருந்தார்கள். சில வருடங்களில், வருடம் முழுவதும் கூட, அவர்களின் வீட்டிற்கு எவரும் வருவதில்லை. ஆட்கள் வந்த வருடங்களில் கூட ஓரிருவரே இதுவரை வந்து போயிருக்கின்றனர். 
 
ஆரம்பத்தில் அவர் என்னுடன் அவ்வளவாகப் பழகவில்லை. பிள்ளைகளும், நானும் ஒருநாள் தெருவில் பந்து விளையாடிக் கொண்டிருந்தோம். பந்து அவர்களின் வீட்டு யன்னலில் பட்டால் என்ன நடக்கும் என்று கேட்டார். யன்னல் உடைந்து போய்விடும் என்று சொன்னேன். போலீஸைக் கூப்பிடப் போகின்றேன் என்று போனார். ஆனால் போலீஸ் வரவில்லை. அவரின் மனைவி அவரை அன்று தடுத்திருக்கக்கூடும். ஆனாலும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பழக ஆரம்பித்தார். அவசரங்களுக்கு என்னை அழைப்பதை விட, அவருக்கு வேறு தெரிவுகளும் இருக்கவில்லை. வயதானால் பல அவசரங்கள் திடீர் திடீரென்று வந்து சேர்ந்தும் விடுகின்றன.
 
இரண்டு பிள்ளைகள் என்றார். இந்த ஊரில் இருக்கும் மிகவும் நல்ல பாடசாலை ஒன்றில் படித்து, மிகவும் சிறந்த பல்கலைகளுக்கு போய், இப்பொழுது மிகப்பெரிய உத்தியோகங்களில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் குடும்பங்களாக இருக்கின்றார்கள் என்றார். பல படங்களையும் காட்டினார். பிள்ளைகள் வாங்கிய விருதுகளையும் பார்க்கக் கொடுத்தார். என்னுடைய பிள்ளைகளையும் நான் அப்படியே ஆக்க வேண்டும் என்றும் சொன்னார். அவரின் வீட்டின் யன்னல் இன்னும் ஒரு தடவை கூட உடைக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்க.
 
அவரின் வீட்டின் முன் கூட்டம் கூடிய நாளுக்கு முதல் நாள் எங்களிடம் சொல்லி விட்டே போயிருந்தார். சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு அருகிலேயே ஒரு இடத்தில் ஒரு வாரம் தங்கப் போகின்றோம் என்று சொல்லியிருந்தார். தினமும் மருத்துவமனைக்கு போய் வருவதில் இருக்கும் சிரமங்களைச் சொன்னார். தாங்கள் திரும்பி வரும் வரை அவர்களின் வீட்டைக் கவனித்துக் கொள்ள சொல்லியிருந்தார்.
 
கூட்டத்தில் போய் என்னவென்று விசாரித்தேன். அந்த வீட்டை விற்கப் போட்டிருப்பதாகச் சொன்னார்கள். 
 
அவர்களை நான் அதன் பின்னர் காணவேயில்லை. மகன்களில் ஒருவர் அந்த வீட்டை விற்றார் என்றார்கள். தாயையும், தந்தையையும் மருத்துவமனையில் இருந்து தன்னுடனேயே கூட்டிச் சென்று விட்டதாகவும் சொன்னார்கள். வீட்டில் இருந்த பொருட்களை சிலர் வந்து தங்களிடையே பிரித்து எடுத்துக் கொண்டு போனார்கள்.
 
மூன்று நாட்களில் அந்த வீடு விற்கப்பட்டது என்றனர். பலத்த போட்டிகளுக்கு இடையில் ஒரு இளம் தம்பதிகள் வாங்கியிருந்தனர்.
 
என் பிள்ளைகள் இருவரும் பல்கலை, பின்னர் வேலை என்று வெளியில் போய்விட்டனர். நாங்கள் இருவர் ஆகினோம். புதிதாக வந்த முன் வீட்டில் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. கடகடவென்று வளர்ந்து, இரண்டு வயதிலேயே 'குட் மார்னிங்' என்று சொல்ல ஆரம்பித்தது அந்தக் குழந்தை. அப்படியே அந்த வருடமே ஒரு தம்பி பாப்பாவும் அங்கே புதிதாக வந்தார்.
 
ஒரு நாள் வீட்டின் முன் வேலை செய்து கொண்டிருந்த போது, அந்த இளம் தம்பதிகள் வந்தனர். இந்தப் பகுதியில் எந்த முன்பள்ளி நல்லது, என்னுடைய பிள்ளைகள் எந்த முன்பள்ளிக்கு போனார்கள் என்று விசாரித்தனர்.
 
அவ்வளவு தான் வாழ்க்கை. 
  • கருத்துக்கள உறவுகள்

எமக்கும் வந்த புதிதில் பிள்ளைகளை எங்கே படிப்பிப்பது என்று பெரும் போராட்டமே.அந்த காலங்களில் திருமணமானவர்களே மிகவும் குறைவு.

திருமணமான ஓரிரு குடும்பத்துக்கும் எமது பிள்ளைகளை விட வயதில் குறைந்தவர்கள்.

உயர்தர படிப்புக்கு எங்கே விடுவது?நல்ல பாடசாலைகளை எப்படி தெரிவு செய்வது?பல்கலைக்கு விண்ணப்பிப்பது?பல்கலைக்கான பணம் திரட்டுவது என்று மிகவும் கஸ்டப்பட்டோம்.

பின்னாள்களில் எம்மை கேட்டுகேட்டு எத்தனையே பேர் வழிநடத்தினார்கள்.

நாங்களும் எமக்கு தெரிந்த தெரியாத எல்லாமே நேரகாலம் பார்க்காமல் சொல்லிக் கொடுத்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரசோ சார்.. வெளிநட்டில் ..இது வீட்டுக்கு வீடுசார்...தொடர்க..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, alvayan said:

ரசோ சார்.. வெளிநட்டில் ..இது வீட்டுக்கு வீடுசார்...தொடர்க..

ஒரு கல்யாணம் செய்து, வீடு வாங்கி, ஒன்றோ சிலவோ பிள்ளைகளும் பிறந்தால், அவ்வளவு தான் எவரினதும் வாழ்க்கை போல.... 
புதிது என்று எதுவும்  இல்லையோ...😀
 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரசோதரன் said:

ஒரு கல்யாணம் செய்து, வீடு வாங்கி, ஒன்றோ சிலவோ பிள்ளைகளும் பிறந்தால், அவ்வளவு தான் எவரினதும் வாழ்க்கை போல.... 
புதிது என்று எதுவும்  இல்லையோ...😀
 

நம்மினத்தை பொறுத்தவரை...புதிதாக வராது...வாழையடி வாழையாக என்பதுபோல...எது ஊர்...எந்தப் பள்ளிக்கூடம்..எந்த யூனிவர்சிட்டி..  டாக்டரோ , எந்திரியோ...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரசோதரன் said:

கூட்டத்தில் போய் என்னவென்று விசாரித்தேன். அந்த வீட்டை விற்கப் போட்டிருப்பதாகச் சொன்னார்கள். 

ஏறக்குறைய உங்கள் அனுபவம் போல் எனக்கும் கிடைத்திருக்கிறது.

எனது அயல் வீட்டீல் தனியாக வசித்து வந்த பேராசிரியர் ஸ்ராபிள் இறந்து போக அடுத்த நாளேவீடு என்ன விலைக்கு விற்கப் போகிறார்கள்?” என்ற கேள்வியுடன் பலர் வந்தார்கள்.

எனது மகனின் மனைவியின் தாயாருக்கு குடலில் கான்ஸர். இன்னும் சில மாதங்கள்தான் என காலத்தை குறித்துக் கொடுத்து விட்டார்கள். வீட்டில் வைத்து அவரைப் பராமரிப்பது என முடிவு செய்து கடந்த சனிக்கிழமை வைத்தியசாலையில் இருந்து அழைத்து வந்தால், ‘வீட்டை வாங்க நாங்கள் ரெடிஎன வாசலில் நாலைந்து பேர் நிற்கிறார்கள். ஆக பூமி விட்டுப் போகும் போது, நாம் இருந்த இடம் வேறு யாருக்கோ சொந்தமாகி விடுகிறது.

உங்களுக்கென்ன, இப்பொழுதுதானே பிள்ளைகள் பலகலைக் கழகம் போகிறார்கள். இன்னும் காலம் இருக்கிறது. நான் எல்லாவற்றையும் முடித்து விட்டுவிசாவுக்காக காத்திருக்கிறேன்.

அறுபதுகளுக்குப் பிறகு, பொழுது விடிகிறது தெரிகிறது. வீட்டில் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து விட்டுப் பார்ததால் மேற்கே சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது. காலம் வேகமாகப் பறக்கிறது. இதற்குள் ரசோதரன் புளியைக் கரைத்து வயிற்றுக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறார்😄

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

அறுபதுகளுக்குப் பிறகு, பொழுது விடிகிறது தெரிகிறது. வீட்டில் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து விட்டுப் பார்ததால் மேற்கே சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது. காலம் வேகமாகப் பறக்கிறது

எனக்கு இப்பவே அப்படித்தான் இருக்கிறது கவி ஐயா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

நம்மினத்தை பொறுத்தவரை...புதிதாக வராது...வாழையடி வாழையாக என்பதுபோல...எது ஊர்...எந்தப் பள்ளிக்கூடம்..எந்த யூனிவர்சிட்டி..  டாக்டரோ , எந்திரியோ...

👍..........

நீங்கள் சொல்வது போலவே தான் பல சமயங்களில் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும், ஆரம்பத்தில், 'நாங்கள் உங்களைப் போல இல்லை.......... எங்கள் வாழ்க்கை வேறு மாதிரியானது........' என்றே இளையவர்களும், புதியவர்களும் தங்கள் வாழ்க்கைகளை ஆரம்பிக்கின்றனர்.

ஆனால் பின்னர் எல்லோரும் சுற்றுவது என்னவோ அதே பழைய செக்கைத் தான்............ எங்கள் ஊர் வேம்படியில் அந்த நாளைய பெரிய செக்கு உரல் ஒன்றை ஒரு ஓரத்தில் போட்டு வைத்திருக்கின்றார்கள். அது ஒரு குறியீடு போல...............🤣

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

அறுபதுகளுக்குப் பிறகு, பொழுது விடிகிறது தெரிகிறது. வீட்டில் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து விட்டுப் பார்ததால் மேற்கே சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது. காலம் வேகமாகப் பறக்கிறது. இதற்குள் ரசோதரன் புளியைக் கரைத்து வயிற்றுக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறார்😄

🤣.................

வெறுமனே எந்த நேரமும் வீட்டிலிருக்கும் உப்பு, புளிப் பிரச்சனைகளை பற்றி எழுதினால், அது ஒரு உருப்படியான கதையாகாது என்று காலம் காலமாக சொல்கின்றார்கள். கதை என்றால் அதற்குள் ஒரு அகத்தேடல், ஆன்மீகத் தேடல் இருக்க வேண்டுமாம்..........🙃.

சரி, நாங்களும் கலந்து எழுதித்தான் பார்ப்பமே என்று பார்த்தால்........ அது வாசிப்பவர்களின் வயிறுகளை கலக்கி விடும் போல இருக்குதே..........🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

சரி, நாங்களும் கலந்து எழுதித்தான் பார்ப்பமே என்று பார்த்தால்........ அது வாசிப்பவர்களின் வயிறுகளை கலக்கி விடும் போல இருக்குதே..........🤣

எழுபதுக்கு மேலே இருந்தால் கலக்கம் தெரியும்.

உப்பு, புளி இல்லாவிட்டால் ‘சப்’ என்று இருக்கும். தாராளமாகக் கலந்து தாருங்கள்.  என்ன, சில நேரங்களில் யதார்த்தமானவை கசக்கத்தான் செய்யும். அதற்காக உங்களை குறை சொல்ல முடியாது.

குறுங்கதைகள் நன்றாகவே இருக்கின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.