Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் தேவைக்கமைய தமிழர்களால் வாக்களிக்க முடியாது - அரசியல் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் காட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
07 SEP, 2024 | 06:22 PM
image

(நா.தனுஜா)

நாட்டின் சிங்கள மக்கள் கடந்த காலங்களில் தமிழர்களை நசுக்கும் சிங்கள ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தனர் எனவும், ஆகவே அநுரகுமார திஸாநாயக்க கூறுவதைப்போன்று சிங்கள மக்களுக்கு எது தேவையோ அதற்கேற்றவாறு தமிழ் மக்களால் வாக்களிக்கமுடியாது எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அண்மையில் யாழ்ப்பாணத்தில் மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:  

'நாட்டின் பெரும்பான்மை மக்கள் மாற்றத்தை வேண்டிநிற்கும் இவ்வேளையில் யாழ் மக்களான நீங்கள் மாத்திரம் அதற்கு எதிராக எவ்வாறு செயற்படுவீர்கள்? இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தீர்மானம் அந்த மாற்றத்துக்கு எதிரான தீர்மானமாக மாறியது ஏன்? யாழ்ப்பாணத்தில் புத்திஜீவிகள், கற்றறிந்தவர்கள் இருக்கிறார்கள். மாற்றத்துக்கு எதிராக யாழ் மக்களை வழிநடத்தும் அரசியலை நீங்கள் ஏற்றுக்கொள்ளாதீர்கள். அத்தகைய தீர்மானம் தவறானது என்பதை நீங்கள் உங்கள் மக்களுக்கு எடுத்துக்கூறுங்கள். நாங்கள் வெற்றிபெறுவோம். தெற்கில் இலட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்று நாம் வெற்றிபெறுவோம். ஆனால் அந்த வெற்றியின், மாற்றத்தின் பங்குதாரர்களாக நீங்களும் இணைந்துகொள்ளுங்கள். மாறாக அந்த மாற்றத்துக்கு எதிரானவர்களாக நீங்கள் மாறிவிடாதீர்கள்.'

தென்னிலங்கை சிங்கள மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு விரோதமாக தமிழ் மக்கள் செயற்படக்கூடாது எனும் தொனியில் அமைந்த அநுரகுமார திஸாநாயக்கவின் இக்கருத்து தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுபற்றிக் கருத்து வெளியிட்ட புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிங்கள மக்கள் கடந்த காலங்களில் தமிழர்களை நசுக்கும் சிங்கள ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவே வாக்களித்து வந்திருப்பதாகவும், எனவே சிங்களவர்களுக்கு எது தேவையோ அதற்கேற்றவாறு தமிழர்களால் வாக்களிக்கமுடியாது எனவும், மாறாக எது சரியோ அதற்கே வாக்களிக்கமுடியும் எனவும் தெரிவித்தார். அதேபோன்று தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு குறித்த உத்தரவாதத்தை யாரேனுமொரு வேட்பாளர் வழங்கியிருந்தால் தாம் அதுபற்றிப் பரிசீலித்திருப்போம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்து தொடர்பில் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், வடக்கில் மக்கள் முன்பு உரையாற்றுகின்ற அநுரகுமார திஸாநாயக்க, 'தெற்கில் மக்கள் விரும்பும் மாற்றத்துக்கு எதிராக நின்றதாக நீங்கள் அடையாளப்படுத்தப்படுவதை விரும்புகின்றீர்களா?' எனக் கேட்கின்றார். அதாவது அவர்களுக்கு (தேசிய மக்கள் சக்திக்கு) ஆதரவான நிலைப்பாட்டை தமிழ் மக்கள் எதிர்க்கக்கூடாது என்ற எச்சரிக்கையே அதுவாகும். அதுமாத்திரமன்றி சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி மேற்கொண்ட தீர்மானத்தையும் அவர் கேள்விக்கு உட்படுத்துகின்றார்.  இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானவையாகும். ஆகையினாலேயே மக்கள் விடுதலை முன்னணி இன்னமும் மாற்றமடையவில்லை என்று நாம் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றோம். எனவே இதுகுறித்து நாட்டுமக்கள் விழிப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும்' என்று குறிப்பிட்டார்.

அதேபோன்று 'அநுரகுமார திஸாநாயக்கவின் கூற்றுப்படி தமிழர்களுக்கென எந்தவொரு அரசியல் இலக்குகளும் இல்லை. அவர்கள் தமது அரசியல் கோரிக்கைகளை மறந்துவிட்டு, நீதிக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கவேண்டும்' என்று விசனம் வெளியிட்டிருக்கும் சட்டத்தரணியும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான சஞ்சுலா பீற்றர், 'ஏனைய சிங்கள அரசியல் கட்சிகளைப் போலன்றி, தேசிய மக்கள் சக்தி மாறுபட்டது என்று கூறுவதை இனியேனும் நிறுத்துங்கள்' என்று வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/193096

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசியல் கட்சிகளின் முதன்மை வேட்பாளர்கள் மூவரும் ஏதோ வகையில் இனவாதிகளே. இவர்களில்  எவராவது தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு தருவார்கள் என மனமார சொல்லவில்லை. சிலர்  நேரடியாக இனவாதத்தை கக்கி வருகிறார்கள். சிலர் நாசுக்காக சொல்லி வருகிறார்கள். குறிப்பாக ரனிலை பற்றி தமிழ் மக்களுக்கு எந்த நல்ல அபிப்பிராயமும் இல்லை. இவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தாலும் விட்டாலும் தீர்வு பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அல்லது  வழமை போல் பேசியே காலத்தை கடத்துவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

நாட்டின் பெரும்பான்மை மக்கள் மாற்றத்தை வேண்டிநிற்கும் இவ்வேளையில் யாழ் மக்களான நீங்கள் மாத்திரம் அதற்கு எதிராக எவ்வாறு செயற்படுவீர்கள்?

சிங்கல மக்கள் வெனிசுலா மாதிரி மாற்றம் வேண்டும் என்று இவரிடம் சொன்னவர்களா

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

தெற்கில் இலட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்று நாம் வெற்றிபெறுவோம்.

இதை முன்பு  எங்கோ கேட்டமாதிரி இருக்கே! சரி, வெற்றி பெற பாராட்டுக்கள். பிறகு ஏன் தமிழர் வாக்கு அளிக்க வேண்டுமென்று அச்சுறுத்தல் என்பதுதான் விளங்கவில்லை. அந்த வெற்றியல் பங்குதாரர்களாக இருப்பதில் நமக்கு என்ன நன்மை? கடந்த காலத்திலும் அதை செய்த நம்மை அளித்தீர்களே மறந்து விடுவோமா என்ன? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனுரகுமார யாழ்ப்பாணத்தில் இனவாத கருத்து எதனையும் வெளியிடவில்லை, ஊழல் அற்ற அரசாங்கம் என்ற விடயத்தில் அவருக்கு முழுமையான ஆதரவு – சுமந்திரன்

Published By: RAJEEBAN   08 SEP, 2024 | 07:56 AM

image
 

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கருத்தினை வெளியிடவில்லை என தெரிவித்துள்ள  நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ஊழல் அற்ற அரசாங்கம் என்ற மாற்றத்தினை விரும்புகின்றோம், இந்த முயற்சியில் நாங்கள்  அனுரகுமார திசநாயக்கவின் பக்கம் நிற்கின்றோம் அதனை ஆதரிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

தென்பகுதி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள். இந்த தேர்தல் மூலம் அந்த மாற்றம் வரும், ஆனால் வடபகுதி மக்கள் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை என தென்பகுதி மக்கள் தெரிவிக்க கூடும் என யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்திருந்தார்.

அவர் இந்த சொற்களை பயன்படுத்தி இதனை தெரிவித்தவேளை பலர் உடனடியாக இது கோட்டாபய ராஜபக்சவின்  கூற்றை நினைவுபடுதுகின்றது என தெரிவித்தனர்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச நான்  அனைவரும்  எனது வெற்றியின் பங்குதாரர்களாகயிருக்கவேண்டும் என விரும்பினேன், ஆனால் வடபகுதி மக்கள் இந்த வெற்றியில் என்னுடன் இணைந்துகொள்ளவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

வடபகுதி மக்களிற்கு அவ்வேளை உணர்வொன்று காணப்பட்டது, அது சரியானது என நிரூபிக்கப்பட்டது ஏனென்றால் கோட்டாபய ராஜபக்சவை தெரிவு செய்த தென்பகுதி மக்களே அவரை துரத்தினார்கள்.

நாங்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம், விரும்புகின்றோம், 70 வருடங்களிற்கு மேலான ஆட்சிமுறையில் மாற்றங்கள் ஏற்படவேண்டும்.

கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் கோருகின்ற மாற்றம் இல்லை.

நாங்கள் அந்த மாற்றத்தினையும் கோருகின்றோம்.

ஊழல் அற்ற அரசாங்கம் என்ற மாற்றத்தினை விரும்புகின்றோம், இந்த முயற்சியில் நாங்கள் தோழர் அனுரகுமார திசநாயக்கவின் பக்கம் நிற்கின்றோம் அதனை ஆதரிக்கின்றோம்.

நாங்கள் அவருக்கு இந்த விடயத்தில் முழுமையாக ஆதரவை வழங்குகின்றோம்,  ஊழலை ஒழிப்பதில் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம். இது குறித்து எந்த கேள்வியும் இல்லை.

வெவ்வேறு பகுதிகளில் வசிக்கின்ற மக்கள், வெவ்வேறு மொழிகளை வசிக்கின்ற மக்கள், அவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் குறைந்தவர்களாகயிருக்கலாம் ஆனால், அவர்களிற்கும் அரசாங்க அதிகாரங்களிற்கான சமமான அணுகல் காணப்படும் மாற்றத்தை விரும்புகின்றோம்.

இதுவே உண்மையான மாற்றமாகயிருக்கும்.

தோழர் அனுரகுமார இனவெறி உணர்வுகளுடன் இந்த கருத்தினை வெளியிட்டார் என நான் கருதவில்லை,

அவரை எனக்கு நன்கு தெரியும், அவர் இனவாத உணர்வுகள் அற்ற மனிதர், அவர் இந்த நாட்டில் இனவாதத்தை ஒழிப்பதற்கு தீவிர முயற்சிகளை எடுத்துள்ளார், இந்த விடயத்தில் எங்களிற்கு வேறு உணர்வுகள் வித்தியாசமான உணர்வுகள் இல்லை,

நாங்கள் வேறு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருக்கலாம் ஆனால் இந்த விடயத்தில் நாங்கள் இணைந்திருக்கலாம்.

https://www.virakesari.lk/article/193102

  • கருத்துக்கள உறவுகள்

மதில்மேல் இருக்கிற இந்தப்பூனை எந்தப்பக்கம் தாவும் என்று தெரியவில்லையே? அனுரா கூறிய கருத்துக்கு இவர் விளக்கம் கொடுக்க எப்படி முடிந்தது? மொத்தத்தில் எல்லா கட்சிகளும் இனவாத பிரச்சனையில் ஒரே கொள்கை, அதில் இவர் பங்குதாரர் அவ்வளவே. ரணில் உறுதியளித்தார் என்கிறார், ரணிலோ அப்படி ஏதும் நடக்கவில்லை என்றவுடன் நாமல் இவர் வீட்டுக் கதவை தட்டினார். அப்புறம் சஜித் என்கிறார், இப்போ அனுராவுக்கு வக்காலத்து? மக்கள் எந்தப்பக்கம் என்று தெரியாமலேயே கொப்புக்கு கொப்பு தாவித்திரியிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் எனது உரை குறித்த விமர்சனங்களிற்கு சுமந்திரன் தெளிவான பதிலை வழங்கிவிட்டார் – அனுரகுமார

08 SEP, 2024 | 07:35 PM
image
 

யாழ்ப்பாணத்தில் தான் ஆற்றிய உரை குறித்த விமர்சனங்களிற்கு பதிலளித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க நடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் ஏற்கனவே தகுந்த பதிலை தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரன் சரியான பதிலை ஏற்கனவே வழங்கியுள்ளதால் நான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதிலளிக்கவேண்டியதில்லை என அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

இனவாதத்தை கிளறியமைக்காக ரணில் விக்கிரமசிங்கவே மன்னிப்பு கோரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/193179

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

அனுரகுமார யாழ்ப்பாணத்தில் இனவாத கருத்து எதனையும் வெளியிடவில்லை

பெரும்பான்மை சிங்கள மக்கள் இவரை விரும்பினால் யாழ்பாணத்து  மக்களும் அப்படி தான்  விரும்ப   வேண்டும் என்பது அவர்களது கட்சி கொள்கை ஏதோச்சதிகார கருத்து .தமிழ் மக்கள் இம்முறை வாக்கு   இவருக்கும் இல்லை தமிழ் பொது வேட்பாளருக்கும் இல்லை என்பதை காட்டுவார்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.