Jump to content

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த யாழ். மாணவியை நேரில் சந்தித்து பாராட்டிய ஜனாதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல் என்னும் தலைப்பின் கீழான போட்டியிலேயே இந்த சாதனையை படைத்துள்ளார்.

இணையத்தளம்  ஊடாக விண்ணப்பித்து 10 பாதணிகளை  ஒன்றன் மேல் ஒன்றாக 59 செக்கன்களில் அடுக்கி  குறித்த சாதனையை புரிந்துள்ளார்.

கடந்த மே மாதம் 20ஆம்  திகதி கொடிகாமத்தில் உள்ள வீட்டில் இரு சாட்சிகள் முன்னிலையில்  கின்னஸ் உலக சாதனை சட்டதிட்டங்களுக்கு அமைவாக குறித்த சாதனை நிகழ்வு காணொளியாக பதிவு செய்யப்பட்டு  இணையத்தினுடாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

மூன்று மாதங்களின் பின் world guiness assesment commity மூலம் இதன் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு 28/8/2024  அன்று நிகழ்வு கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் குறித்த மாணவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதே வேளை கின்னஸ் சாதனை படைத்த மாணவியை அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக அழைத்து சாதனை சான்றிதழைப் பார்வையிட்டு பாராட்டியிருந்தார்.

https://thinakkural.lk/article/309201

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வியாதி இலங்கையிலும் பரவத் தொடங்கிவிட்டது. 

எதற்கும் பிரயோசனம் அற்ற விடயங்களில் சாதனை புரிவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ☹️

இந்திய வியாதி இலங்கையிலும் பரவத் தொடங்கிவிட்டது. 

எதற்கும் பிரயோசனம் அற்ற விடயங்களில் சாதனை புரிவதில் எனக்கு உடன்பாடு இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பிள்ளை தன்னால் முடியுமானதை செய்து பெயர் எடுத்துள்ளது. சப்பாத்து அடுக்குவது உங்களுக்கு சரிவராவிட்டால் வேறு ஏதாவது வித்தியாசமாக செய்து பார்க்கலாமே. ஐடியா தேவை என்றால் தரலாம். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதனைகள் செய்தால் மட்டும் போதாது, அவை வெளியேயும் உலகிற்கு தெரியவேண்டும். பலருக்கும் தெரியா விட்டால் அது என்ன சாதனை...... ஆழிக்குமரன் ஆனந்தன் எத்தனை சாதனைகள் செய்தார். நாங்களும் அவர் பின்னால் டிஸ்கோ ஆடுகின்றோம், சைக்கிள் ஓடுகின்றோம், நீந்துகின்றோம், மிதக்கின்றோம், பின்னால் நடப்பது, கயிறடித்தல்,.............. என்று திரிந்தோம். அவர் ஒரு முன்மாதிரி.

இந்தப் பிள்ளைக்கு நல்ல நேரம். தேர்தல் நேரம், ஒவ்வொரு வாக்கும் ஒரு பொன் என்று பலரும் வீடு தேடி வருவார்கள். ஒரு சாதனையில் இருந்து பல சாதனை முயற்சிகள் உருவாகக்கூடும்.

சமீபத்தில் என்று நினைக்கின்றேன். கவிஞர் இசை அவர்கள் கவிதை எழுதுவதில் ஒரு உலக சாதனை செய்துள்ளதாகச் சொன்னார்கள். ஒரு சிறு வட்டத்திற்குள்ளே மட்டுமே இது தெரிந்திருந்தது. தூணிலும் துரும்பிலும் சமூக ஊடகங்கள் இருக்கும் இந்தக் காலத்தில் கூட இந்தச் சாதனை வெளியே வரவில்லை. கவிஞர் இசை அற்புதமான ஒரு தற்காலக் கவிஞர். எனக்கு விளங்கிய அவரின் கவிதைகள் உலகத் தரமானவை. எனக்கு விளங்காதவை அதை விட தரமானவையாக இருக்கவேண்டும்........😀. ஆனாலும் அவரையும் ஆட்களுக்கு அவ்வளவாகத் தெரியாது, அவரது சாதனையையும் தெரியாது............

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

சாதனைகள் செய்தால் மட்டும் போதாது, அவை வெளியேயும் உலகிற்கு தெரியவேண்டும். பலருக்கும் தெரியா விட்டால் அது என்ன சாதனை...... ஆழிக்குமரன் ஆனந்தன் எத்தனை சாதனைகள் செய்தார். நாங்களும் அவர் பின்னால் டிஸ்கோ ஆடுகின்றோம், சைக்கிள் ஓடுகின்றோம், நீந்துகின்றோம், மிதக்கின்றோம், பின்னால் நடப்பது, கயிறடித்தல்,.............. என்று திரிந்தோம். அவர் ஒரு முன்மாதிரி.

இந்தப் பிள்ளைக்கு நல்ல நேரம். தேர்தல் நேரம், ஒவ்வொரு வாக்கும் ஒரு பொன் என்று பலரும் வீடு தேடி வருவார்கள். ஒரு சாதனையில் இருந்து பல சாதனை முயற்சிகள் உருவாகக்கூடும்.

சமீபத்தில் என்று நினைக்கின்றேன். கவிஞர் இசை அவர்கள் கவிதை எழுதுவதில் ஒரு உலக சாதனை செய்துள்ளதாகச் சொன்னார்கள். ஒரு சிறு வட்டத்திற்குள்ளே மட்டுமே இது தெரிந்திருந்தது. தூணிலும் துரும்பிலும் சமூக ஊடகங்கள் இருக்கும் இந்தக் காலத்தில் கூட இந்தச் சாதனை வெளியே வரவில்லை. கவிஞர் இசை அற்புதமான ஒரு தற்காலக் கவிஞர். எனக்கு விளங்கிய அவரின் கவிதைகள் உலகத் தரமானவை. எனக்கு விளங்காதவை அதை விட தரமானவையாக இருக்கவேண்டும்........😀. ஆனாலும் அவரையும் ஆட்களுக்கு அவ்வளவாகத் தெரியாது, அவரது சாதனையையும் தெரியாது............

  

அவரது கவிதை தேர்தல் காலத்தில் வந்திருக்கிறதா?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

அவரது கவிதை தேர்தல் காலத்தில் வந்திருக்கிறதா?

🤣..........

எங்களோட சேர்ந்து தமிழின் நிலையும் இப்படியாகி விட்டதே, ஐயா............. தேர்தல் நாட்களில் மட்டும் கவனிப்பார்கள்........

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆழ்ந்த அனுதாபங்கள். தந்தையாரின் ஆன்மா அமைதியில் இளைப்பாறுவதாக! 
    • கந்தையா.... அண்ணை, இந்தச் சகதி பிடித்த செய்திக்குள் இருந்து வெளியே வாருங்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு... இன்னும் ஐந்து நாட்களே உள்ளது. அதை விட்டிட்டு இதற்குள் நின்று உழன்று கொண்டிருக்காதீர்கள். தேர்தல் செய்திகளுக்குள் போய் உங்கள் தரமான கருத்துக்களை வையுங்கள். 😂 அதுதான்... தற்போது முக்கியம். 👍
    • பெரும்பாலும் இந்த  மீனவர்கள் கூலிக்கு வேலை செய்பவர்கள், இந்த தமிழக அரசியல்வாதிகள்தான் முதலாளிகளாக இருப்பார்கள், இந்த முதலாளிகள் மீன் வளங்களை அழித்து சிறிய மீனவர்களின் வாழ்வாதாரத்தினை கேள்விக்குறியாக்கியமையால் தற்போது கூலிக்கு எல்லை தாண்டி மீன் பிடித்தலில் ஈடுபட்டு இலங்கை கடல் வளத்தினை அழிக்கிறார்கள், இவர்களுடன் சேர்த்து அந்த தமிழக அரசியல்வாதி முதலாளிகளுக்கும் தண்டனை (முதலாளிக்கு அதிக தண்டனை விதித்தால் பிரச்சினை முடிவுக்கு வரலாம்) வழங்கவேண்டும்.
    • தாங்கள் தேர்தலை பகிஷ்கரிப்பது என்றாகிவிட்டது, பின் யார் யாருக்கு வாக்களித்தால் இவருக்கென்ன?ஏன் சஜித்தின் வாக்கு குறைகிறது என அழுகிறார்? அவர் ஒற்றையாட்சி பிரதிநிதி இல்லையா? ஒவ்வொருவரின் கபட நாடகமும் வெளிவருகிறது. அளிக்கப்பட்ட வாக்குகளையே மாற்றி முடிவை வெளியிடுகிறார்கள், இவர் பகிஷ்கரித்தால்; இவரின் வாக்கு பத்திரமாக வெற்றிடமாக அறிவிக்கப்படுமா? 
    • உடலுறவு குற்றச்செயல். இல்லை  அதில் ஆண்களும் பெண்களும்  விரும்பி ஈடுபடுகிறார்கள்   அவர் சொந்த மகளுடன். ஈடிபட்டது தான்  மிக மிக   பிழையான குற்றம்  இந்த குற்றத்தை எப்படி தடுப்பது  ??  அதாவது ஒவ்வாத உடலுறவை எப்படி??தடுப்பது    அவர் உடலுறவு கொள்வதற்கான வழியை,.வாய்ப்புகள் எற்படுத்தி கொடுப்பது தான்   இங்கே மிக முக்கியம்  அவரின் மகளும் பாதுகாப்பு கிடைக்கும்   ஐரோப்பாவில் விபசாரம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது  இதனால் இங்கே பெண்கள் இரவு பன்னிரெண்டு மணிக்கும் தன்னம்  தனியாக பயமின்றி சுதந்திரமாக திரிகிறார்கள். [சுவீடனில். ஆண். விபசாரம் உண்டு”   ]ஆனால் இலங்கை இந்தியா,.....போன்ற நாடுகளில் ஒரு பெண். நடுசாமத்தில். தனியாக உலவி வர முடியாது   ஏன்??    முடியாது    இது முற்றிலும் உண்மை நான் எற்றுகொள்கிறேன் 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.